படத்தின் மீது கிளிக் செய்து முழுமையாக பார்க்கவும்..
'அய்யோ... முப்பருவ தேர்வுமுறை கிடையாதா?' என, 10ம் வகுப்பு சென்றிருக்கும்
மாணவர்கள் பதறுகின்றனர். '25 சதவீத இட ஒதுக்கீட்டுல, என் பிள்ளைக்கு சீட்
கிடைச்சிடுமா?' என, இலவச கட்டாய கல்விச்சட்டத்தின் கீழ்
விண்ணப்பித்திருக்கும் ஏழை பெற்றோர் கலங்குகின்றனர். இப்படி, மாணவர்களை பதற
வைத்து, ஏழைப் பெற்றோரை கலங்க வைத்து, பள்ளிகள் தொடங்கி இருக்கும்
நிலையில், கல்வியில் உள்ள குறைபாடுகளையும், புதிய கல்வியாண்டு
எதிர்நோக்கும் சீர்திருத்தங்களையும் பட்டியலிடுகின்றனர் கல்வியாளர்கள்.
டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பில்,
பங்கேற்காமல், 'ஆப்சென்ட்' ஆனவர்கள், கடைசி வாய்ப்பாக, இன்று முதல், 13ம்
தேதி வரை நடக்கும் முகாம்களில் கலந்து கொள்ளலாம்' என, டி.ஆர்.பி.,
(ஆசிரியர் தேர்வு வாரியம்) அறிவித்து உள்ளது.
ஓய்வூதியம் தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள,
'அரசாணை 363'ஐ எதிர்த்து, ஓய்வூதியதாரர்கள்
வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அங்கீகாரம் பெற்ற நர்ஸிங் கல்லூரிகள் பட்டியல்: தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சில் இணையதளத்தில் வெளியீடு.
தமிழகத்தில்
அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 6, 7 மற்றும் 8 போன்ற
வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கு புவியியல் வரைப்படதிறன் (Map Skill
Training) """"அறிவோம் அகிலத்தை"" என்ற பயிற்சி மாவட்ட அளவில் விடுபட்ட
ஆசிரியர்களுக்கு பயிற்சி
குமரி
மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்த 3 பள்ளிகளின்
தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மேலும் 12 ஆசிரியர்கள் மீது
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கிரீன்
கார்டு என்ற முறையை அமல்படுத்தி, வாடிக்கையாளர்களை குழப்புவதோடு,
அலைகழிப்பதாகவும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி மீது புகார்
எழுந்துள்ளது.
தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய,
மாவட்ட கல்வி அதிகாரிக்கான முதல்நிலைத்
தேர்வில், விண்ணப்பித்தவர்களில், 50 சதவீதம் பேர், 'ஆப்சென்ட்'
ஆகியுள்ளனர்.
கல்வி உரிமைச் சட்டத்தை முழுமையாக
அமல்படுத்த வலியுறுத்தியும், தனியார் பள்ளிகளில் நடைபெறும்
கட்டணக் கொள்ளையை தடுத்க வலியுறுத்தியும் மாநில
முழுவதும் ஜூன் 11 ல் கல்வி
அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக இந்திய மாணவர் சங்கம்
அறிவித்துள்ளது.
மதுரையில்
இடைநிலை ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் மாவட்ட செயலாளர்
ஜெயக்கொடி தலைமையில் நடந்தது. சட்ட செயலாளர் வெங்கடேசன்,
தலைமையாசிரியர்கள் கிறிஸ்டோபர் ஜெயசீலன், நவநீதகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகம் எம்.எட். படிப்பு
தொடங்குவதற்காக தேசிய ஆசிரியர் கல்வி
கவுன்சிலில் (என்.சி.டி.இ.) தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் போலியானது என்ற சர்ச்சை கிளம்பியதைத்
தொடர்ந்து, அது குறித்த செய்தி
தினமணி நாளிதழில் (ஜூன் 7) வெளியானது. இதைத்
தொடர்ந்து, தற்போது எம்.எட்.
படிப்பு குறித்த பிரமாணப் பத்திர
தகவல் இணையதளத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.
அரசு
பள்ளி மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி, வாழ்க்கையிலும் வெற்றி இலக்கை
எட்டும் வகையில் ஆலோசனை வழங்க, வரும் 16ம் தேதி முதல்'நடமாடும் ஆலோசனை
மையம்' உடுமலையில் செயல்படதுவங்குகிறது. பள்ளி மாணவர்களின் குடும்ப
சூழ்நிலை, அவர்களை சுற்றியுள்ள சமூகப் பிரச்னைகள், மாணவர்களுக்கும்
ஆசிரியர்களுக்குமான இடைவெளி ஆகியவற்றால், மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். இதன் வெளிப்பாடு சமூகத்தின் மீதும், பள்ளியின் மீதும் வெறுப்பை ஏற்படுத்துகிறது.
அரசு
உதவிபெறும் பள்ளிகள், மாணவர் சேர்க்கை மற்றும் சான்றிதழ் வழங்குதல்
தொடர்பாக, மறைமுக கட்டாய கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வரும் நிலையில்,
சம்பந்தப்பட்ட மாணவர் அல்லது பெற்றோர் மாவட்ட நிர்வாகத்திடம் புகார்
அளிக்கலாம்" என, நாமக்கல் மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.
இலவச
கல்வி ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட குழந்தைகள் மற்றும் கட்டணம் செலுத்தாத
குழந்தைகளை, பிரித்து பார்த்தல், தரையில் அமரவைத்தல், வகுப்பறைக்கு வெளியே
நிற்க வைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும், மெட்ரிக் பள்ளிகள் மீது,
நடவடிக்கை எடுக்கப்படும்' என, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் எச்சரித்துள்ளது.
மாவட்ட கல்வி அதிகாரிகள் பணிக்கான முதல்நிலை
தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை 9 ஆயிரம் பேர் எழுதினார்கள்.
விண்ணப்பித்தவர்களில் 50 சதவீதத்திற்கு மேல் எழுத வரவில்லை.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்களை பங்கேற்க
செய்யும் வகையில், புதிய கல்வி முறை அமைந்துள்ளதால், பள்ளிகள் தோறும்
"சூழல் கிளப்"புகளை உருவாக்க வேண்டும்" என, மாவட்ட கல்வி அதிகாரி
அறிவுறுத்தியுள்ளார்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், வரும்
கல்வியாண்டு முதல் தமிழ் மொழியை முதல் பாடமாக கொண்டு தேர்வெழுத வேண்டும்
என்ற அறிவிப்புக்கு,'தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள்
நலச்சங்கங்கள்' வரவேற்பு தெரிவித்துள்ளன.
விளையாட்டுக்கென, பள்ளிக்கல்வி துறை சார்பில்,
தனியாக நிதி ஒதுக்கப்படாததால், பள்ளிகள் சார்பில் மாணவர்களின் பங்கேற்பு
குறைவாக இருக்கிறது. பள்ளிக் கல்வித் துறை மூலம், விளையாட்டு,
இளம்செஞ்சுருள் சங்கம், சாரணர், சாரணீயர் இயக்கம் உட்பட பல்வேறு
பிரிவுகளுக்கு சேர்த்து, பள்ளிகளுக்கு குறிப்பிட்ட தொகை அனுப்பப்படுகிறது.
இதில் விளையாட்டுக்கு இவ்வளவு தொகை என, தனியாக குறிப்பிடுவதில்லை.
1.தமிழகத்தில்
எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை
நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக்
கண்டால் உடனே RED Society...யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள்.
அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.
'ரமணா’ கதாபாத்திர திருச்சி பேராசிரியர் ஜான்குமார் ஓய்வுபெற்றார்: சமூக வலைதளங்களில் அழுது புரண்ட அபிமானிகள்...!
#தற்காலிகமாக மின் இணைப்பு பெற முடியுமா?
பொது இடங்களிலோ, மின் இணைப்பு இல்லாத தனியார் இடங்களிலோ நிகழ்ச்சிகள்,
விழாக்கள் நடத்தும்போதும், கட்டிடங்களுக்கு கட்டுமானப் பணிகள்
மேற்கொள்ளும்போதும் மின்சாரம் தேவை எனில் தற்காலிக இணைப்பு பெறமுடியும்.
இதற்கு சம்பந்தப்பட்ட பகுதி அதிகாரியை தொடர்புகொள்ளலாம்.
வீடு அல்லது வணிக மின் இணைப்புக்கு விண்ணப்பப் படிவம் 1ல் விண்ணப்பிக்கவும்.
1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு...
தப்புங்க தப்பு,,,
ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு... இதாங்க
சரி...
பொறியியல் கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள் முன்
பின் தெரியாதவர்களின் ஆலோசனையை கேட்க வேண்டாம் என, பொறியியல் சேர்க்கை
செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் பேசினார்.
2013 ஆகஸ்ட் மாதம் 17, 18 ஆம் தேதிகளில் புதிய ஆசிரியர்களை தேர்வுசெய்யும் பொருட்டு டெட் தேர்வு நடைபெற்றது. இதில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் என 27000 பேர் தேர்வு பெற்றனர். இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. பிப்ரவரியில் பணிநியமன ஆணை வழங்கப்படும் என எதிர்பார்த்த வேலையில் முதலமைச்சர் 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு அறிவித்தார். அப்போது கூடுதலாக 45000 ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர்.
அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களை போட்டித் தேர்வு மூலம் நியமனம்
செய்யும் நடைமுறை தற்போது பின்பற்றப் படுகிறது. 2011-12ம் ஆண்டுக்கு,
முதுநிலை ஆசிரியர்கள் தேர்வு நிறைவுற்று, 3,000-க்கும் மேற் பட்டோருக்கு
2013 ஜனவரி மாதம் நியமன ஆணை வழங்கப்பட்டது.
உபரி பணியிட மாறுதல்களை முற்றிலுமாக கைவிட
வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 12-ம் தேதி
தூத்துக்குடி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது
என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் முடிவு
செய்யப்பட்டது.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், பி.எட். சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் நாளை முதல் வினியோகம் செய்யப்பட உள்ளன.
வேப்பங்கொட்டையை மாணவி மீது வீசிய, எட்டாம்
வகுப்பு மாணவனை கண்டித்ததே, மாணவியரை ஆபாச படம் பிடித்ததாக, ஆசிரியர் மீது,
வீண்பழி சுமத்தியது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வரும், 16ம் தேதி, பி.இ., 'ரேங்க்' பட்டியல்
வெளியிடப்படுகிறது. இதற்கு, மூன்று நாளுக்கு முன், பிளஸ் 2 மறு மதிப்பீடு
முடிவு வெளியிடப்படும்,'' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன்
தெரிவித்தார்.
List of Register Numbers of candidates who have been admitted
provisionally for the Certificate Verification and Counselling (II
Phase)