சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வின், தென் மண்டலத்திற்கான தேர்வு
முடிவுகள் நேற்று வெளியானது. சென்னை மண்டலத்தில், ஆண்கள், 99.85 சதவீதமும்,
பெண்கள் 99.91 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர்.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
ஜூன் 3ல் பள்ளிகள் திறப்பு: படிக்கட்டு பயணம் தடுக்கப்படுமா?
பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தான
நிலையில் பயணிக்கும், மாணவர்களை தடுத்து நிறுத்த, சம்பந்தப்பட்ட துறையினர்
நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்வில் மாற்றம்: மத்திய அரசு முடிவு
மாநிலங்களில் பணியாற்றும் அதிகாரிகளை, சீனியாரிட்டி அடிப்படையில்,
ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளாகப் பதவி உயர்த்தும் நடைமுறையில்
மாற்றம் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் இன்று வழங்கல்
பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் இன்று முதல், அந்தந்த பள்ளிகளில்
வழங்கப்படுகிறது. 2012-13ம் ஆண்டிற்கான பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், கடந்த
மார்ச் 1ம் தேதி முதல், 27ம் தேதி வரை நடந்தது. இதன் முடிவுகள் கடந்த, 9ம்
தேதி வெளியிடப்பட்டது.
ஐ.ஏ.எஸ். பதவிக்கான தேர்வில் 40 சதவீதம் பேர் ஆப்சென்ட்
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயம் (யு.பி.எஸ்.சி.,) நடத்தும்,
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பணிகளுக்கான, சிவில் சர்வீஸ் முதல்
நிலைதேர்வு, நேற்று நடந்தது. இத்தேர்வை, தமிழகத்தில் இருந்து, 30 ஆயிரம்
பேர் எழுதினர். விண்ணப்பித்தவர்களில், 40 சதவீதம்பேர், ஆப்சென்ட் ஆயினர்.
தமிழக தொடக்க நடுநிலைப்பள்ளிகள் கோடை விடுமுறைக்குபின் பள்ளி த்திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு - ராஜ் நியூஸ் செய்திகள்
கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் ஜூன்_3 ல் திறக்க தொடக்கக்கல்வி இயக்கம் ஏற்கனவே உத்திர விட்ட நிலையில் தமிழகத்தில் இந்த ஆண்டு கத்திரி வெயில் பல ஊர்களில் 110*F தாண்டியது.
ஜப்பானில் உதவித்தொகையுடன் படிப்பு
ஜப்பானில் உள்ள கல்வி, கலாச்சாரம், விளையாட்டு, அறிவியல் மற்றும்
தொழில்நுட்ப அமைச்சகம், ஜப்பானில் உள்ள சிறப்பு பயிற்சி கல்லூரி,
தொழில்நுட்பக் கல்லூரி, பல்கலைகள் (இளநிலை படிப்பு) போன்றவற்றில் சேர
விரும்பும், சர்வதேச மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறது.
மே 28, 29ம் தேதிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு
பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், பணியிட
மாறுதலுக்கான கலந்தாய்வு, வரும், 28, 29ம்தேதிகளில் நடக்கும் என, பள்ளி
கல்வித் துறை அறிவித்துள்ளது.
புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்க கருத்துரு கோரி உத்தரவு
மாண்புமிகு தமிழக முதல்வரின் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட பள்ளிகள் இல்லாத 54 குடியிருப்பு பகுதிகளில் புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்க கருத்துரு கோரி - தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு
முதுகலை ஆசிரியர், இளநிலை உதவியாளர் பணி நியமன கலந்தாய்வு
பள்ளி கல்வித் துறையில், முதுகலை, தாவரவியல் ஆசிரியர், 196 பேர் மற்றும்
இளநிலை உதவியாளர்கள் 310 பேர் பணி நியமன கலந்தாய்வு, நாளை (27ம்தேதி),
"ஆன்-லைன்" மூலம், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில்
நடக்கிறது.
ஆங்கிலத்தில் தேர்வு: கலை அறிவியல் கல்லூரிகளுக்கு உத்தரவு
"மாணவ, மாணவியர், ஆங்கில மொழி தொடர்பு திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்,
இதனால், அதிக வேலை வாய்ப்புகளை பெற முடியும்" என, நூதனமாக ஒரு காரணத்தைக்
கூறி, வரும் கல்வி ஆண்டில் இருந்து, அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும்,
"அசைன்மென்ட்" மற்றும் தேர்வுகளை, ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என, தமிழக
அரசு உத்தரவிட்டுள்ளது.
கலை, அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்
தமிழகத்தில் நடப்பாண்டில், கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர,
மாணவர்களிடையே அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. கலை அறிவியல் கல்லூரிகளில்,
மாணவர் சேர்க்கை ஓரிரு வாரங்களில் துவங்க உள்ளதால், விண்ணப்ப விற்பனை சூடு
பிடித்துள்ளது.
ஆசிரியர் பயிற்சி: மே 27 முதல் விண்ணப்பம் வினியோகம்
"ஆசிரியர் பயிற்சி படிப்புகளில் சேர்வதற்கு, நாளை (27ம் தேதி) முதல்
விண்ணப்பங்கள் வழங்கப்படும்" என, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி
நிறுவன இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு
ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பணிகளுக்காக நடத்தப்படும், சிவில்
சர்வீசஸ் தேர்வு, இன்று நடக்கிறது. இதில், தமிழகத்தில், 30 ஆயிரம் பேர்
உட்பட, நாடு தழுவிய அளவில், 7 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுத
உள்ளனர்.
மருத்துவம், பொறியியல் படிப்புக்கு ஒரே நாளில் நுழைவு தேர்வு
பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கு, அகில இந்திய அளவிலான
நுழைவுத் தேர்வுகள், ஒரே நாளில் நடத்தப்படுவதால், போட்டியாளர்கள், ஏதாவதொரு
தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பள்ளி துவங்கும் நாளிலேயே (03.06.2013) மாணவர் நலத்திட்ட பொருட்கள் வழங்க ஆணை
1 முதல் 8 வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளித் துறைக்கான 2013-14ஆம்
கல்வியாண்டிற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள்
மற்றும் சீருடைகளை 27.05.2013 முதல் 31.05.2013க்குள் அலுவலர்களுகு அளித்து
பள்ளி துவங்கும் முதல் நாளான 03.06.2013 அன்றே மாணவர்களுக்கு வழங்கி
04.03.2013 அன்றுக்குள் அறிக்கை அனுப்பு தொடக்கக்கல்வி இயக்ககம்
தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனம்: தமிழ்வழி முன்னுரிமை கோரியவர்களில் பலர் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கவில்லை
2,800-க்கும் அதிகமான முதுநிலைப் பட்டதாரி
ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வு கடந்த
ஆண்டு நடத்தப்பட்டது. இதில் தமிழ் வழி முன்னுரிமை கோரியவர்களுக்காக
சான்றிதழ் சரிபார்ப்பில், பெரும்பாலானோர் உரிய சான்றிதழ்களை
சமர்ப்பிக்கவில்லை. எனவே, தமிழ் வழி முன்னுரிமை இடங்கள் நிரம்பவில்லை.
PG Botany - Appointment Counseling on 27.05.2013
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி ஆசிரியர் தேர்வு
வாரியத்தால் முதுகலை தாவரவியல் ஆசிரியர் பணியிடங்களுக்காக தேர்வு
செய்யப்பட்ட 196 பணிநாடுநர்களுக்கும், தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையத்தால் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 310
பணிநாடுநர்களுக்கும் 27.05.2013 அன்று பணி நியமன கலந்தாய்வு இணையதளத்தில்
(Online) அனைத்து முதன்மைக்கல்வி அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது.
பிளஸ் 2 மாணவர்கள் கல்வி தகுதியை பள்ளியிலேயே பதிய ஏற்பா
தமிழகம் முழுவதும், பிளஸ் 2 மாணவர்கள், தங்கள் கல்வித் தகுதியை, பள்ளி
வளாகங்களிலேயே, இணையதளம் மூலம், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய,
பள்ளி கல்வித்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அதிகாரிகள்
ஏற்பாடு செய்துள்ளனர்.
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 முடிவுகள் 27ம் தேதி வெளியீடு
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள், 27ம் தேதி வெளியாகிறது.
எனினும், சென்னை மண்டலத்திற்கான தேர்வு முடிவுகள் மட்டும், முன்கூட்டியே,
இன்று காலை வெளியாகலாம் என, பள்ளி நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் புதிதாய் 17 பொறியியல் கல்லூரிகள்: ஏ.ஐ.சி.டி.இ.
"தமிழகத்தில், புதிதாக, 17 பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி
வழங்கப்பட்டுள்ளன" என ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் மான்தா கூறினார். ஏழு
பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் பி.பார்ம்., கல்லூரிகள் துவங்கவும்,
அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.