Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
காலக்கெடு தாண்டியும் அறிக்கை தராத ஓய்வூதிய ஆய்வுக்குழு மீது அதிருப்தி : முதல்வருக்கு ஆசிரியர்கள் மனு
காலக்கெடு தாண்டியும் அறிக்கை சமர்ப்பிக்காத ஓய்வூதிய ஆய்வுக்குழு மீது
அதிருப்தி அடைந்த ஆசிரியர் கூட்டமைப்பினர் முதல்வர் ஜெ.,விடம் புகார்
தெரிவித்துள்ளனர். ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து
செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
ஜூலை 15-இல் காமராஜர் பிறந்த நாள்: கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட உத்தரவு
முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ஆம் தேதியை கல்வி
வளர்ச்சி நாளாகக் கொண்டாட வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை
உத்தரவிட்டுள்ளது.
பி.சி., எம்.பி.சி. வகுப்பு கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பைச்
சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
200 பள்ளிகளைத் தரம் உயர்த்த வேண்டும்
தமிழகத்தில் 200 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்த
வேண்டுமென தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்
குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கொல்கத்தாவில் ஹெல்மெட் அணியவில்லை என்றால் பெட்ரோல் இல்லை
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் ஹெல்மெட் அணியவில்லை
என்றால் பெட்ரோல் கிடையாது என்ற புதிய விதியை அம்மாநில அரசு
அமல்படுதியுள்ளது.
"பாதுகாப்பான பயணம் வாழ்க்கை பாதுகாப்பு" என்ற சாலை
பாதுகாப்பு திட்டத்தை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த
வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். அப்போது, இருசக்கர வகன ஓட்டிகள்
தலைக்கவசம் அணியாமால் பயணம் செய்வது பற்றி கவலை தெரிவித்தார். மேலும், சாலை
விபத்தை தடுக்க கடுமையான விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் கோரிக்கை
விடுத்தார்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு ("நீட்') அடுத்த ஆண்டு...!
நீண்ட இழுபறியைத் தாண்டி, நாடு முழுவதும் உள்ள அரசு
மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு
("நீட்') அடுத்த ஆண்டு முதல்கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
3 சூரியன் கொண்ட விசித்திர கிரகம்: விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு.
அண்டவெளியில் 3 சூரியன்கள் கொண்ட விசித்திர உலகத்தை விண்வெளி
ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இங்கு மூன்று முறை சூரிய உதயம்
மற்றும் அஸ்தமனம் நிகழ்வதால் மனிதர்களின் ஆயுள் அதிகமாக இருக்கலாம் என்றும்
அனு மானித்துள்ளனர்.
ஜூலை 12, 13 தேதிகளில் வங்கிகள் செயல்படாது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இணைப்பு, வங்கிகளை தனியார் மயமாக்கல் போன்ற
மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்தும், வாராக்கடனாக நிலுவையில் உள்ள 13
லட்சம் கோடி ரூபாயை வசூலிக்க அதிரடி நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்தியும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய
வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்து இருந்தது.
ஸ்மார்ட்போன்கள் வெடிக்குமா...?
நவீன யுகத்தின் தொழில்நுட்ப அடையாளமாக மாறிப்போன ஸ்மார்ட்போன்கள் ரொம்பவும்
ஆபத்தானவை. சார்ஜ் ஏற்றிய போது ஸ்மார்ட்போன் வெடித்து விட்டது, போன்
பேசியபடி சார்ஜ் செய்தபோது வெடித்து விட்டது...’ என ஸ்மார்ட்போன்களை
புதிதாக பயன்படுத்த ஆரம்பிப்பவர்களை பலர் பயமுறுத்துகிறார்கள்.
ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும்: பள்ளிக் கல்வி அமைச்சர் உத்தரவு.
ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று
மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி அமைச்சர்
பா.பெஞ்சமின்உத்தரவிட்டுள்ளார்.
வரவிருக்கும் தேசிய கல்விக் கொள்கை'யில்...இனி 6-ம் வகுப்பில் இருந்து ஆங்கிலக் கல்விதான்!'
மத்திய
அரசு கொண்டு வரவிருக்கும் தேசிய கல்விக் கொள்கை குறித்து, பொதுமக்களிடம்
கருத்துகளைக் கேட்டுள்ளது மனிதவள மேம்பாட்டு அமைச்சகம். 'வருகிற 31-ம்
தேதிக்குள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் எனச் சொல்லியிருக்கிறது மத்திய
அரசு. இதுகுறித்து மாநில அரசு மௌனமாக இருப்பது வேதனையளிக்கிறது'
என்கின்றனர் கல்வியாளர்கள்.
பணி உயர்வு: கல்வித் துறை ஊழியர்கள் கோரிக்கை
பணி மூப்பு அடிப்படையில் பணி உயர்வு
வழங்க வேண்டும் என்று பள்ளி, கல்வித் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில்
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பள்ளி கல்வித் துறை சங்க நிர்வாகிகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நா.அருள்முருகனிடம் அளித்த கோரிக்கை மனு:
TET நிபந்தனை ஆசிரியர்கள் - தமிழக முதலமைச்சருக்கு வேண்டுதல் மடல்:
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின்மேலான பார்வைக்காக...
வணக்கம்.
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நிபந்தனைகளுடன் 23.08.2010 க்குப் பிறகு அரசு, அரசு உதவி பெறும்,சிறுபான்மையினர் பள்ளிகளில் முறையாக நியமனம் பெற்று தமிழகம் முழுவதும்பணியாற்றி வரும் சுமார் மூவாயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் வாழ்வாதார பாதுகாப்புவேண்டி எழுதும் கடிதம்.
"மூட்டுவலி போக்கும் முடக்கத்தான் கீரை"
நம்மில் பலரும் மூட்டுவலியினால் (ஆர்த்ரைடிஸ்)
அவதிப்படுகிறோம். இதற்கான மூலகாரணம், நாம் அறியவேண்டியது ஒன்று. நாம்
சிறுவயதில் ஓடியாடி விளையாடுகிறோம். சிறு வயதில் சிறுநீர் கழிக்க
வேண்டுமானால் உடனடியாக செய்து விடுகிறோம்.
பி.எட். சேருவதற்கே ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியம்
பி.எட். சேருவதற்கே ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியம்: கல்வித் தரத்தை மேம்படுத்த கல்வியாளர்கள் யோசனை
உயர் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு:தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கலாம்
உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்காக நடைபெறும் நுழைவுத் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
புள்ளியியல் ஆய்வாளர் பணி: யூபிஎஸ்சி அறிவிப்பு
இந்திய உள்துறை அமைச்சகத்தின் பொது பதிவாளர்
அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள 17 புள்ளியியல் ஆய்வாளர்கள்
பணியிடங்களுக்கான அறிவிப்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்
வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேசிய மருந்து தயாரிப்பு கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பணி
நிப்பெர் என அழைக்கப்படும் தேசிய மருந்து
தயாரிப்பு கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல்
சூப்பிரவைசர் மற்றும் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணியிடங்களுக்கு தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
செப்டம்பர் மாத இறுதிக்குள் ஆதார் எண் கொடுக்காவிட்டால் சமையல் கியாஸ் மானியம் ரத்து மத்திய அரசு திட்டவட்ட அறிவிப்பு.
வங்கி மற்றும் கியாஸ் ஏஜென்சிகளிடம் செப்டம்பர் மாத இறுதிக்குள் ஆதார் எண்
கொடுக்காவிட்டால் சமையல் கியாஸ் மானியம் ரத்து செய்யப்படும் என்று மத்திய
அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. நேரடி மானிய திட்டம் நாடுமுழுவதும் உள்ள
சமையல் கியாஸ் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசு மானிய விலையில் கியாஸ்
சிலிண்டர் வழங்கி வருகிறது.
ஒரு பணியாளரின் பணிப் பதிவேட்டில் இருக்க வேண்டிய பதிவுகள்
1. முதல் பக்கத்தில் உங்களைப் பற்றிய முழு விபரம் இருக்க வேண்டும்.,
பெயர்,
தந்தை பெயர், முழுவிலாசம், கல்வித் தகுதி, மதம், இனம், தாய்மொழி போன்ற
விபரங்கள். அத்துடன் மருத்துவத் தகுதிச் சான்றிதழும் இணைக்கப்பட்டிருக்க
வேண்டும்.
2. பணி நியமன முழு விபரம்.
திருநங்கைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு: 6 மாதங்களில் அரசு முடிவெடுக்க வேண்டும்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் திருநங்கைகளுக்கு வாய்ப்பு அளித்தல், இட
ஒதுக்கீடு செய்தல் ஆகியவை குறித்து 6 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும்
என்று தமிழக சமூக நலத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவது சம்பந்தமான அரசாணையை செயல்படுத்தக்கோரி வழக்கு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பரிசீலிக்க, ஐகோர்ட்டு உத்தரவு.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவது சம்பந்தமாக 2009–ம்
ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை செயல்படுத்தக்கோரி தொடர்ந்த வழக்கில்
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பரிசீலிக்க, மதுரை ஐகோர்ட்டு
உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தியேட்டர்களில் பள்ளி மாணவர்களுக்கு இலவச திரைப்படம் கலெக்டர் தகவல்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தியேட்டர்களில் பள்ளி மாணவர்களுக்கு இலவச
திரைப்படம் காண்பிக்கப்படும் என்று கலெக்டர் ஞானசேகரன் தெரிவித்தார்.
தமிழகத்தில் 2 ஆயிரம் பணியிடங்கள் காலி:ராணுவத்துக்கு ஆள் எடுக்கும் பணி அடுத்த மாதம் நடைபெறும் ராணுவ அதிகாரி தகவல்.
சென்னை, தமிழகத்தில் ராணுவத்துக்கு ஆள் எடுக்கும் பணி அடுத்தமாதம்(ஆகஸ்டு)
நடக்கிறது என்று ராணுவ பிரிகேடியர் டால்வி அறிவித்துள்ளார்.
கல்லூரிகளில் உளவியல் ஆலோசகரை நியமிக்கவேண்டும் கல்லூரி முதல்வர்களுக்கு இயக்குனரகம் சுற்றறிக்கை.
சென்னை,உளவியல் ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு காண கலை அறிவியல்
கல்லூரிகளில் உளவியல் ஆலோசகரை நியமிக்க வேண்டும் என்று அனைத்து கல்லூரி
முதல்வர்களுக்கும் கல்லூரி கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பி
உள்ளது.
7 PC - குறைந்தபட்ச அடிப்படை சம்பள உயர்வு நிர்ணயம் செய்ய குழு - வேலைநிறுத்தம் தள்ளிவைப்பு
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 7வது ஊதியக்குழு பரிந்துரைத்த படிகள் தள்ளுபடியை கைவிட வேண்டும் உட்பட 36 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் ஜூலை 11ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்க உள்ளதாக அறிவித்தனர்.
பிளஸ்-2 முடித்தவர்களுக்கு கடலோர காவல்படையில் பணி
இந்திய கடலோர காவல்படை, ஆயுதப்படைப் பிரிவின் ஒரு அங்கமான இந்தியன் கோஸ்ட்
கார்டு படைப்பிரிவில் நேவிக் (ஜெனரல் டியூட்டி)-01/2017 பயிற்சியுடன் கூடிய
பணியில் சேருவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு இந்திய குடியுரிமை
பெற்ற, திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
'பாரா மெடிக்கல்' படிப்பு ஓரிரு நாளில் விண்ணப்பம்
மருத்துவம் சார்ந்த, 'பாரா மெடிக்கல்' படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம்
குறித்த அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும்' என, மருத்துவக் கல்வி
இயக்ககம் தெரிவித்துள்ளது.
நீட்' தேர்வு: மாணவர்களைத் தயார்படுத்த தனியார் பள்ளிகள் திட்டம்.
நீண்ட இழுபறியைத் தாண்டி, நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள்,
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.
இடங்களுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு ("நீட்') அடுத்த ஆண்டு முதல்கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
'ஆயாக்களுக்கான மரியாதை கூட இல்லை':மழலையர் பள்ளி ஆசிரியைகள் கவலை.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில், துப்புரவு பணி செய்யும் ஆயாக்களுக்கு
இருக்கும் மரியாதைகூட, எங்களுக்கு இருப்பதில்லை' என, மழலையர் பள்ளி
ஆசிரியைகள் கவலை தெரிவித்துள்ளனர்.