நோபல் பரிசு பெற்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டின்
முன்வைத்த உலகப் பிரபலமான, 'பொது சார்பியல் கொள்கை', இந்த வாரம்
நுாற்றாண்டு காண்கிறது. நுாறு ஆண்டுகளுக்கு முந்தைய இதே நவம்பர் இறுதி
வாரத்தில் ஒரு நாள், ஐரோப்பாவே போரின் பிடியில் சிக்கியிருந்த நேரத்தில்,
இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின், தன், பொது சார்பியல் கொள்கையை
விளக்கும் அந்த சமன்பாட்டை எழுதினார்.
1st Mid Term Test Q & A
Latest Updates
Public Exam Questions 2024
விசாலினி என்னும் விருட்சம் !!!
அல்வாவுக்கு மட்டுமல்ல, அறிவுக்கும் திருநெல்வேலி தான் என்று, உலக அரங்கில்
உரக்கச் சொல்லியவர். 13 வயதிற்குள், 5 உலக சாதனைகள், 12 சர்வதேச கணினிச்
சான்றிதழ்கள் பெற்றவர். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம்
அவர்களின் பாராட்டை, தன் 3 வயதிலேயே பெற்றவர். தன் வீடு முழுவதையும்
பரிசுக்கோப்பைகள், கேடயங்கள், சான்றிதழ்கள், மற்றும் பதக்கங்களால்
நிறைத்து இருப்பவர்.
30 லட்சம் பேருக்கு காஸ் மானியம் 'கட்!'
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய்
நிறுவனங்களுக்கு, தமிழகத்தில், 1.60 கோடி வீட்டு சமையல்காஸ் சிலிண்டர்
வாடிக்கையாளர் உள்ளனர். மத்திய அரசு, மானிய செலவை குறைக்க, ஜனவரி மாதம்,
நேரடி மானிய திட்டத்தை அறிமுகம் செய்தது.இத்திட்டத்தின் கீழ்,
வாடிக்கையாளர், சந்தை விலையில், சிலிண்டர் வாங்க வேண்டும். பின், அதற்கான
மானியம், அவரின் வங்கி கணக்கில் வரவுவைக்கப்படும். தற்போது, ஆண்டுக்கு, 12
சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
ஆசிரியர்கள் மறியல் போராட்டம்டிச., 1ல் மனு அளிக்க 'ஐாக்டோ' முடிவு
ஆசிரியர்களின், 15 அம்ச கோரிக்கை குறித்தும், டிச., 28ம் தேதி மறியல்
போராட்டம் குறித்தும், வரும் 1ம் தேதி ஜாக்டோநிர்வாகிகள், தலைமைச்
செயலகத்தில் மனு அளிக்க உள்ளனர்.பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து,
மத்திய அரசுக்கு இணையான இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம், ஆசிரியர்களுக்கு
பாதுகாப்பு சட்டம், தமிழை முதல் பாடமாக்க அரசாணை உள்ளிட்ட, 15 அம்ச
கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழுவான ஜாக்டோ,
கடந்த பிப்ரவரி முதல் போராட்டம் நடத்துகிறது.
வேலூர் மாவட்டத்தில் - பள்ளியின் பூட்டை உடைத்து கணினி, தொலைக்காட்சி பெட்டிகள் திருட்டு
ஆம்பூர் அருகே ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் பூட்டை உடைத்து
கணினி, தொலைக்காட்சிப் பெட்டிகள் திருடுபோனது குறித்து போலீஸார் விசாரித்து
வருகின்றனர்.
பிளஸ் 2 இடைநிலைத் தேர்வில் ஆங்கிலம், கணிதத்தில் அதிகமானோர் தோல்வி: ஆசிரியர்களுக்கு சிறப்பு கற்பித்தல் பயிற்சி
மதுரை மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற இடைநிலைத் தேர்வுகளில்
ஆங்கிலம், கணிதத்தில் அதிகமான மாணவர்கள் தோல்வியடைந்திருப்பது
தெரியவந்துள்ளது.
31.12.2015 இல் D.A 119%
01-01-2016 - ல் அகவிலைப்படி உயர்வு 6%கூடுதல் (119% + 6%) = D.A 125%.
கணக்கீட்டுக்காக எடுத்துக்கொள்ளும் ஊதியம்:
NMMS தேர்வு விண்ணப்ப அறிவிப்பு
NMMS தேர்வு விண்ணப்ப அறிவிப்பு:
தற்போது எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் எழுதலாம்SC / ST மாணவர்கள் 7ம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்களும், மற்ற மாணவர்கள் 55% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
தற்போது எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் எழுதலாம்SC / ST மாணவர்கள் 7ம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்களும், மற்ற மாணவர்கள் 55% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
Who get 3rd Incentive Eligible?
யாருக்கெல்லாம் 3வது ஊக்க ஊதிய உயர்வு பொருந்தும்
- இயக்குநரின் செயல்முறை
Incentive Qualified details for All type of Posts & 3rd Incentive Regarding Proceeding
அனைத்து வகை ஆசிரியர்களின் ஊக்க ஊதியம் வழங்குதல் தொடர்பான இயக்குநரின் தெளிவுரை Date: 20/11/2015
Thanks to Mr. Dhanaraj.RTI Letter Regarding Promotion
ஒரே கல்வியாண்டில் வெவ்வேறு பல்கழைக்கழத்தில் இரண்டு பட்டங்களை படிக்கலாம். அதை பணிப்பதிவேட்டில் பதிவு செய்து பணப்பயன் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும்.. ஆனால் இரண்டு பட்டங்களின் தேர்வுகால அட்டவணை மட்டும் ஒன்றாக இருக்கக் கூடாது (RTI-பதில்).
Click Here & Download RTI Letter (PDF Format)
10th Study Material - Social Science
New Study Material
- Social Science | Mini Study Material | Mr. B. Srinivasan - Tamil Medium
- Social Science | Mini Study Material | Mr. B. Srinivasan - English Medium
Part Time Teachers This Month Salary Regarding - SPD Proceeding
பகுதி நேர பயிற்றுநர்கள் நவம்பர் 2015 மாதத்தில் குறைவாக பணி செய்த நாட்களை டிசம்பர் 2015 மற்றும் ஜனவரி 2015 மாதத்தில் ஈடு செய்ய வேண்டும் - மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்.
5/11/2016* காலக் கெடுவை நோக்கி கானல் நீர் ஆசிரியர்கள்...
2016 நவம்பர் மாதம் இதே நாள்...
இதே நேரம்... பணியில் உள்ள 3000 பட்டதாரி ஆசிரியர்களின் பணியும் , வாழ்க்கையும் கேள்விக்குறி..???
இதே நேரம்... பணியில் உள்ள 3000 பட்டதாரி ஆசிரியர்களின் பணியும் , வாழ்க்கையும் கேள்விக்குறி..???
நாளை முதல் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு; தென் மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது மேற்கு நோக்கி
நகரும்போது நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய
வாய்ப்பு உள்ளது.
தேர்வு நேரத்தில் இடமாற்றம் ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி
அரையாண்டுத் தேர்வு நேரத்தில், அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களை பணியிட
மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளதால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வருடாந்திர பணியிட மாற்றம் மற்றும் உபரி
ஆசிரியர்கள் கலந்தாய்வு கடந்த மாதம் தான் முடிந்தது. ஆசிரியர்கள் புதிய
இடத்துக்கு சென்று, பாடங்களை நடத்துகின்றனர்.
செய்முறை பயிற்சி தேர்வு உண்டா 10ம் வகுப்பு மாணவர்கள் குழப்பம்
அறிவியல் செய்முறை புத்தகம் வழங்காததால், அதற்கான பயிற்சி தேர்வு நடைபெறுமா
என்ற குழப்பம், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.சமச்சீர் கல்வி
பாடத்திட்டம் துவங்கிய பின், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, அறிவியல்
ஆய்வகத்தில், செய்முறை பயிற்சியும், செய்முறை தேர்வும் நடத்தப்படுகிறது.
இதற்காக, 75 மதிப்பெண், 'தியரி'க்கும், 25 மதிப்பெண் அறிவியல் செய்முறை
பயிற்சிக்கும் தரப்படுகிறது.
மின் கட்டணம் உயருமா? நவ.,30ல் தெரியும்
மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து, வரும், 30ம் தேதி நடக்கும், மின்
வாரிய இயக்குனர் குழு கூட்டத்தில், முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. மின்
வாரிய தலைவர், தொழில், நிதி, எரிசக்தி துறைகளின் செயலர்கள், மின்
உற்பத்தி, மின் பகிர்மானம், மின் திட்டம் ஆகியவற்றின் இயக்குனர்கள்,
தமிழ்நாடு மின் வாரிய இயக்குனர் குழுவில் உள்ளனர்.
அரசு பள்ளிகளில் 3 வகை பயிற்சி
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச் முதல் வாரம் துவங்க
உள்ளது. பிளஸ் 2 தேர்வில், நான்கு ஆண்டுகளாக அரசு பள்ளி மாணவர்கள், மாநில
ரேங்க் பெறவில்லை; தேர்ச்சி சதவீதத்திலும், பின்தங்கினர். 10ம் வகுப்பு
தேர்வில் மட்டும், மாநில ரேங்க் பெற்று, ஆறுதல் அளித்தனர்.ஒவ்வொரு ஆண்டும்,
20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்தும், அரசு பள்ளிகள் தேர்ச்சியில்
பின்தங்குவது, பள்ளி கல்வித் துறை அதிகாரிகளுக்கு, தலை
மாணவர்களிடம் உறுதிமொழிஎழுதி வாங்கும் கல்வித்துறை
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக, மாணவர்களிடம்,
புதிதாக உறுதிமொழி எழுதி வாங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு
மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச் முதல் வாரத்தில் பொதுத்தேர்வு நடக்க
உள்ளது. இதற்காக, மாணவர்களிடம், புதிதாக உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து
வாங்கி, தேர்வுத் துறைக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு புது கட்டுப்பாடு
அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள்,
தேர்வில் அதிக மதிப்பெண் பெற, மூன்று வகை சிறப்பு பயிற்சி அளிக்கப்பட
உள்ளது. பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச் முதல் வாரம்
துவங்க உள்ளது. பிளஸ் 2 தேர்வில், நான்கு ஆண்டுகளாக அரசு பள்ளி மாணவர்கள்,
மாநில ரேங்க் பெறவில்லை; தேர்ச்சி சதவீதத்திலும், பின்தங்கினர்.
ஜே.இ.இ., மெயின் தேர்வு அறிவிப்பு
பிளஸ் 2 மாணவர்கள் தேர்வுக்கு பின், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான,
ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - ஐ.ஐ.எஸ்., மற்றும் ஐ.ஐ.ஐ.டி., உள்ளிட்டவற்றில்
சேர, ஜே.இ.இ., எனப்படும் ஒருங்கிணைந்த பொது நுழைவுத் தேர்வை, இரண்டு
கட்டமாக எழுத வேண்டும்.முதல் கட்டமாக, பிரதானத் தேர்வையும், பின்,
'ஜே.இ.இ., அட்வான்ஸ்டு' தேர்வையும் எழுத வேண்டும்.