Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
இன்று சிவில் சர்வீஸ் தேர்வு: 9.45 லட்சம் பேர் எழுதுகின்றனர்
யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும், சிவில்
சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு, நாடு முழுவதும் இன்று நடக்கிறது. 71
நகரங்களில் உள்ள, 2,000 தேர்வு மையங்களில், 9.45 லட்சம் பேர் இந்த தேர்வை
எழுதவுள்ளனர். கடந்த 2011ல், சிவில் சர்வீஸ் தேர்வில், 'சிசாட்' என்ற
திறனறி தேர்வு நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது.
வாட்ஸ் அப் டிப்ஸ்
வாட்ஸ்
அப் செயலி தொடர்ந்து தன்
பயனாளர்களுக்கான வசதிகளை அதிகப்படுத்திக் கொண்டே
செல்வதால், அதன் பயனாளர்கள் எண்ணிக்கையும்
அதிகரித்து வருகிறது. டெக்ஸ்ட் அனுப்புவது, இலவசமாக அழைப்புகளை மேற்கொள்வது
போன்ற புதிய வசதிகள், பலரை
இதன் பக்கம் திரும்ப வைத்துள்ளது.
இறுதியாகத் தெரிந்த வரை, 80 கோடி
பேர் இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி
வருகின்றனர்.
TET Teachers Appointment - கள்ளர் நலத்துறை அலுவலகத்தில் கலந்தாய்வு-பணிநியமன ஆணை வழங்கல்
கள்ளர் நலத்துறை பள்ளிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட 48 ஆசிரியர்களுக்கு
தற்போது மதுரை கள்ளர் நலத்துறை அலுவலகத்தில் கலந்தாய்வு நடத்தப்பட்டு
பணிநியமன ஆணைகள் வழங்கப்படடு வருகின்றன.
1,390 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் : பணி நிரவலில் உபரி ஆசிரியர்களை மாற்றுவதில் குளறுபடி
தமிழக அரசு தொடக்கப் பள்ளித் துறையில், கலந்தாய்வு மூலம், 1,390
ஆசிரியர்கள் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.தமிழக அரசு
பள்ளிகளில் பணியாற்றும், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு, கடந்த,
8ம் தேதி முதல் நடந்து வருகிறது. தொடக்கப் பள்ளி ஆசிரியர் கலந்தாய்வு, பல
கட்டங்களாக நடக்கிறது. இதில், 230 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், 376
பட்டதாரி ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னையில் அதிகக் கட்டணம் எந்தப் பள்ளிக்கு?:
இதுவரை
கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதில் மிக அதிகமாக சென்னை கோபாலபுரத்தில் உள்ள
நேஷனல் பப்ளிக் பள்ளிக்கு எல்.கே.ஜி. வகுப்புக்கு ரூ.38,800 ஆகவும், பிளஸ் 2
வகுப்புக்கு ரூ.43,300 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல,
இந்தப் பள்ளிக்கு 2017-18-ஆம் கல்வியாண்டில் எல்.கே.ஜி. வகுப்புக்கு
ரூ.46,948 ஆகவும், பிளஸ் 2 வகுப்புக்கு ரூ.52,393 ஆகவும்
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2 ஆண்டு டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை நீக்க மத்திய அரசு திட்டம்
டிப்ளமோ இன்ஜினியரிங்கில், இரண்டு ஆண்டு
படிப்பை நீக்க, கல்லுாரிகளுக்கான தேசிய அங்கீகார வாரியமான - என்.பி.ஏ.,
முடிவு செய்துள்ளது. தரம் உயர்த்தப்பட்ட புதிய டிப்ளமோ படிப்பு குறித்த,
வரைவு திட்டத்தையும் அறிவித்துள்ளது.
வகுப்பு புறக்கணிப்பு: பேராசிரியர்கள் முடிவு
அரசு கல்லுாரிகளில் பணியாற்றும், 2,000
பேராசிரியர்களுக்கு, மூன்று மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால்,
பேராசிரியர்கள் வகுப்புகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
கணினி மூலமே வருமான வரி 80 வயதினருக்கு உத்தரவு
வருமான வரி கணக்கை, கணினி மூலம் தாக்கல்
செய்வது, 80 வயது உட்பட்டோருக்கு கட்டாயம்' என, வருமான வரித்துறை
அறிவித்துள்ளது.வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் மதிவாணன் வெளியிட்டுள்ள
அறிக்கை:
பள்ளி கேன்டீன்களில் பீட்ஸா, பர்கர் சிப்சுக்கு விற்க தடை
பீட்ஸா, பர்கர், சிப்ஸ், கேக், குளிர்பானம், பிஸ்கட் போன்ற
நொறுக்குத்தீனிகளை, நாடு முழுவதும் உள்ள பள்ளி கேன்டீன்களில் விற்க,
விரைவில் தடை விதிக்கப்பட உள்ளது.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நலத்துறை அமைச்சகம் நியமித்த, 10
உறுப்பினர்கள் உயர்மட்டக்குழு, பள்ளிகளில் விற்கக்கூடிய உணவு பொருட்கள்
குறித்து ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை சமர்ப்பித்து உள்ளது.
வீர மரணமடைந்த ராணுவ வீரர் உடலுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி அஞ்சலி செலுத்தினார்.
கடந்த 18-ஆம் தேதி இந்திய-சீன எல்லை
கண்காணிப்பின்போது, தவாங் மாவட்டத்தில் ஏரியல் ஆபரேஷன் பால்கான் என்ற
மலையில் இருந்து மற்றொரு மலைக்கு வான்வழி கம்பி வடம் அமைக்கும் பணியில்
அண்ணாமலையும், அவரது குழுவைச் சேர்ந்த ராணுவ வீரர்களும் ஈடுபட்டிருந்தனர்.
ஓணம் பண்டிகை; கோவை, நீலகிரி திருப்பூருக்கு உள்ளூர் விடுமுறை
ஓணம் பண்டிகைக்கு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் அறிக்கை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும், 28ம் தேதி, ஒரு நாள் மட்டும் கோவை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக, செப்., 12ம் தேதி, பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 29 வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்: சபாநாயகர் தகவல்
ஆகஸ்ட் 24-ம் தொடங்கி செப்டம்பர் 29 வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் கூறியுள்ளார்.மானியக் கோரிக்கைகளை நிறை வேற்றுவதற்காக தமிழக சட்டப்பேரவை வரும் 24-ம் தேதி கூடும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆக.31 கடைசி நாள்
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
2018 வரை 3 ஆண்டுகளுக்கு தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டணம் நிர்ணயம்: நீதிபதி சிங்காரவேலு கமிட்டி அறிவிப்பு
2015 முதல் 2018 வரை அடுத்த 3 கல்வி ஆண்டுகளுக்கு தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருப் பதாக நீதிபதி எஸ்.ஆர்.சிங்கார வேலு கமிட்டி அறிவித்துள்ளது.
ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்று அளிக்க 28-ம் தேதிவரை வாய்ப்பு
வாழ்நாள் சான்று அளிக்க ஓய்வூதியதாரர்களுக்கு வரும் 28-ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அஞ்சலக சேமிப்பு கணக்குடையவர்கள் ஏடிஎம்முக்கு விண்ணப்பிக்கலாம்: மண்டல அஞ்சல் தலைவர் தகவல்
அஞ்சலக சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது:
SABL Study Materials For 1 to 5 Standards
- Tamil SABL Achivement (Standard 1 to 4) - Tamil Medium
- English SABL Achivement (Standard 1 to 4) - Tamil Medium
- Maths SABL Achivement (Standard 1 to 4) - Tamil Medium
- Science SABL Achivement (Standard 1 to 4) - Tamil Medium
- Social Science SABL Achivement (Standard 1 to 4) - Tamil Medium
- FA(a) All Subjects SABL Achivement (Standard 1 to 4) - Tamil Medium
- FA(b) All Subjects SABL Achivement (Standard 1 to 4) - Tamil Medium
- Explanation For SABL Achivement (Standard 1 to 4) - Tamil Medium
Thanks to Mr. ப.சரவணன் MA.B.ED; Ph.D; NET; HDCA;
மாநகராட்சிப் பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தாமதம்:
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வருகின்றன.சென்னை
மாநகராட்சி சார்பில் 32 மேல்நிலைப் பள்ளிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பள்ளிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும் என்று கடந்த 2
ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இப்போது 2 ஆண்டுகள் ஆகியும் 13
மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் மட்டுமே கண்காணிப்புக் கேமராக்கள்
பொருத்தப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.