ஜேக்டோ கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டத்தில், விடுப்பு எடுத்துபங்கேற்றால், நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஆசிரியர்களுக்கு கல்வித் துறை
எச்சரிக்கை விடுத்துள்ளது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு 12 வயது குழந்தைகளும் சேரலாம்: டிச.12 வரை வயது வரம்பு சலுகை
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்குவதற்கான வயது வரம்பு சலுகை
டிசம்பர் 2-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சிறப்பு
முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக சென்னை வடக்கு கோட்ட அஞ்சல்துறை
அறிவித்துள்ளது.இதுதொடர்பாக சென்னை வடக்கு கோட்ட முதுநிலை அஞ்சல்
கண்காணிப்பாளர் கி.ரவீந்திரன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்
கூறியுள்ளதாவது:
கல்வி அதிகாரிகள் ஆய்வில் 'இடித்த' கணக்கு - மாணவர்களை கணக்கெடுக்க கல்வித்துறை செயலர் சபீதா உத்தரவு
சென்னையில் நடந்த அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில்
இந்தாண்டு அரசு பள்ளிகள் மொத்த மாணவர்களுக்கும், வழங்கப்பட்ட இலவச நோட்டு,
புத்தகங்கள் எண்ணிக்கைக்கும் ஏராளமான வித்தியாசம் இருந்ததால் அதிகாரிகள்
அதிர்ச்சியுற்றனர். இதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகள் வாரியாக வருகை
பதிவேட்டில் பதிவான மாணவர்கள் எண்ணிக்கையை கணக்கெடுக்க கல்வித்துறை செயலர்
சபீதா உத்தரவிட்டுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி முதல்முறையாக தாய்சேய் நல அலுவலர் காலி பணியிடம் நிரப்புகிறது 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: தமிழக சுகாதாரத்துறையில்
இதுவரை தாய்சேய் நல மருத்துவ அலுவலர் பணியிடங்கள் நிரப்பட்டு வந்தன.
முதல்முறையாக இந்த பணியிடங்களை நிரப்பி தருமாறு சுகாதாரத்துறை
டிஎன்பிஎஸ்சியை கேட்டுக் கொண்டது. இதைத் தொடர்ந்து தாய் சேய் நல மருத்துவ
அலுவலர் பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது.
குரூப் 2 தேர்வு: ஆகஸ்ட் 5-இல் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு
குரூப் 2 தேர்வில் தேர்வானவர்களுக்கு இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு,
ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
மழலையர் பள்ளிக்கான விதிமுறைகள் பதிலளிக்க நான்கு வாரம் அவகாசம்
மழலையர் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் குறித்து பள்ளிகள் தரப்பில்
பதிலளிக்க, நான்கு வாரம் அவகாசம் அளித்து, சென்னை உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் என்பவர் தாக்கல் செய்த
மனுவில், 'தமிழகத்தில் பல மழலையர் பள்ளிகள், அனுமதியின்றி நடந்து
வருகின்றன; அதிக கட்டணம் வசூலிக்கின்றன. அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட
வேண்டும்' என, கோரப்பட்டது.
பெட்ரோல்,டீசல் விலை ரூ.4 குறைவு.
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவிற்கு கடுமையாக
வீழ்ச்சி அடைந்ததை அடுத்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய்
நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இந்த விலைக் குறைப்பு விரைவில் அமலுக்கு வர
உள்ளதாக கூறப்படுகிறது.
TV Flash News:
*ஆசிரியர் கலந்தாய்வு மாறுதல் விண்ணப்பம் இன்று முதல்(31.07.15) விண்ணபிகலாம் தமிழக அரசு அறிவிப்பு
*மேல்நிலை,உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் முதன்மைக்கல்வி அலுவகத்தில் விண்ணப்பிக்க கடைசி நாள் 7.08.2015
விண்டோஸ்-10 பதிப்புக்கு அமோக வரவேற்பு: வெளியான 24 மணி நேரத்தில் ஒன்றரை கோடி பேர் பதிவிறக்கம் செய்தனர்
மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ்-10 பதிப்பு வெளியான இருபத்திநான்கு மணி நேரத்தில் சுமார் ஒன்றரை கோடி பேர் தமது கம்ப்யூட்டர்களை இலவசமாக தரம் உயர்த்திக் கொண்டுள்ளனர்.
அப்துல் கலாம் விருது
"டாக்டர்.அப்துல் கலாம்' அவர்களின் பிறந்தநாளை "இளைஞர் எழுச்சிநாள்" ஆக கொண்டாட முதலமைச்சர் செல்வி . ஜெயலலிதா அவர்கள் உத்தரவு - ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் "டாக்டர். அப்துல் கலாம் விருது" என்ற விருதும் வழங்கப்படும்
அக்.15 இளைஞர் எழுச்சி நாள்; அப்துல் கலாம் பெயரில் விருது- தமிழகஅரசு அறிவிப்பு
விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணாக்கர் நலன் ஆகியவற்றிற்கு
பாடுபட்டு வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஒவ்வோர் ஆண்டும்
சுதந்திர தினத்தன்று அப்துல் கலாம் பெயரில் விருது வழங்கப்படும் என தமிழக
முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு விதிமுறைகளில் மாற்றம் ?
ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு
விதிமுறைகளில் மாற்றம். ஒரு பணியிடத்தில் ஒரு
கல்வி ஆண்டு
பணியாற்றி இருந்தால்
போதும். கலந்தாய்வில்
கலந்துகொள்ளலாம் எனவும்,
பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் பணியாற்றிவரும் உதவி பேராசிரியர்களின் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்: கல்லூரி கல்வி இயக்குனருக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை:
பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் 6 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த 19
உதவி பேராசிரியர்களின் பணி நியமனத்துக்கு கல்லூரி கல்வி இயக்குனர் ஒப்புதல்
அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை
நுங்கம்பாக்கத்தில் உள்ள பெண்கள் கிறிஸ்துவ கல்லூரி முதல்வர், சென்னை
ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், எங்கள் கல்லூரியில் 19
உதவி பேராசிரியர்களை பல்வேறு தேதிகளில், சட்டவிதிகளை பின்பற்றி
நியமித்தோம்.
இந்திய ராணுவத்தில் சேர இன்று முதல் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்
இந்திய ராணுவத்தில் சேருவதற்கு இணையம் மூலம் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) முதல்
விண்ணப்பிக்கலாம்.இணையம் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு ஆள்சேர்ப்பு
முகாமில் பங்கேற்க அனுமதிக் கடிதம் அனுப்பப்படும். சென்னை, திருவள்ளூர்,
காஞ்சிபுரம், வேலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய ஏழு
மாவட்டங்கள், புதுச்சேரி மாநிலத்தில் உள்ளவர்களும் ராணுவ ஆள் சேர்ப்பு
முகாமில் பங்கேற்கலாம். இதற்கான தேர்வு வரும் செப்டம்பர் 4 முதல் 13 ஆம்
தேதி வரை நடைபெறுகிறது.
சித்தா, ஆயுர்வேத படிப்புக்குவிண்ணப்பிக்க இன்றே கடைசி
சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவ படிப்புகளுக்கு
விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டுள்ளது.