நீட் தேர்வு எழுத நெல்லையிலிருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு செல்லும்
மாணவ, மாணவிகளுக்கு காலையில் ஒரு பேருந்தும் மாலையில் கூடுதலாக இரண்டு
பேருந்தும் இயக்கப்படும்;
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு
தமிழகத்திலேயே நீட் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளி
கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நாடு
முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் 2018-19-ம்
ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை (‘நீட்’)
சி.பி.எஸ்.இ. (மத்திய கல்வி வாரியம்) நடத்துகிறது.