மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழக மாணவர்களை காக்க
2 சட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தகவல்
தெரிவித்துள்ளன.
சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்
தேர்வில் 100 சதவீத தேர்ச்சி இலக்கை அடைய ‘ஸ்பார்க்’ என்ற திட்டத்தை
மாநகராட்சி நிர்வாகம் தொடங்கி யுள்ளது.
வங்கக்
கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலையின் காரணமாக தென் தமிழக
கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு
மையம் அறிவித்துள்ளது.
ஆண்டுக்கு
ஆண்டு மாணவர் சேர்க்கை குறைந்து வரும் காரணத்தால் வருகிற 2017-18
கல்வியாண்டில் கல்லூரியை முழுவதுமாக இழுத்து மூடும் முடிவில் 10 பொறியியல்,
தொழில்நுட்பக் கல்லூரிகள் இருப்பது தெரியவந்துள்ளது.
ஈரோடு, ''பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால், உரிமம் இல்லாத
கடைகளுக்கு, 'சீல்' வைக்கப்படும்; உரிமம் இருப்பின் ரத்து செய்யப்படும்,''
என, ஈரோடு கலெக்டர் பிரபாகர் எச்சரித்துள்ளார்.
கோவை, 'உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும், வேட்பாளர்களின் சொத்து
விபரங்களை, இணையத்தில் வெளியிட வாய்ப்பு இருக்கிறதா' என, மாநில தேர்தல்
கமிஷன் கருத்து கேட்டு வருகிறது.