Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

திருவண்ணாமலை மாவட்டத்தில் தியேட்டர்களில் பள்ளி மாணவர்களுக்கு இலவச திரைப்படம் கலெக்டர் தகவல்.

          திருவண்ணாமலை மாவட்டத்தில் தியேட்டர்களில் பள்ளி மாணவர்களுக்கு இலவச திரைப்படம் காண்பிக்கப்படும் என்று கலெக்டர் ஞானசேகரன் தெரிவித்தார்.

தமிழகத்தில் 2 ஆயிரம் பணியிடங்கள் காலி:ராணுவத்துக்கு ஆள் எடுக்கும் பணி அடுத்த மாதம் நடைபெறும் ராணுவ அதிகாரி தகவல்.

        சென்னை, தமிழகத்தில் ராணுவத்துக்கு ஆள் எடுக்கும் பணி அடுத்தமாதம்(ஆகஸ்டு) நடக்கிறது என்று ராணுவ பிரிகேடியர் டால்வி அறிவித்துள்ளார்.

கல்லூரிகளில் உளவியல் ஆலோசகரை நியமிக்கவேண்டும் கல்லூரி முதல்வர்களுக்கு இயக்குனரகம் சுற்றறிக்கை.

         சென்னை,உளவியல் ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு காண கலை அறிவியல் கல்லூரிகளில் உளவியல் ஆலோசகரை நியமிக்க வேண்டும் என்று அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் கல்லூரி கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

7 PC - குறைந்தபட்ச அடிப்படை சம்பள உயர்வு நிர்ணயம் செய்ய குழு - வேலைநிறுத்தம் தள்ளிவைப்பு

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 7வது ஊதியக்குழு பரிந்துரைத்த படிகள் தள்ளுபடியை கைவிட வேண்டும் உட்பட 36 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் ஜூலை 11ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்க உள்ளதாக அறிவித்தனர்.  
 

பிளஸ்-2 முடித்தவர்களுக்கு கடலோர காவல்படையில் பணி

இந்திய கடலோர காவல்படை, ஆயுதப்படைப் பிரிவின் ஒரு அங்கமான இந்தியன் கோஸ்ட் கார்டு படைப்பிரிவில் நேவிக் (ஜெனரல் டியூட்டி)-01/2017 பயிற்சியுடன் கூடிய பணியில் சேருவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு இந்திய குடியுரிமை பெற்ற, திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

'பாரா மெடிக்கல்' படிப்பு ஓரிரு நாளில் விண்ணப்பம்

மருத்துவம் சார்ந்த, 'பாரா மெடிக்கல்' படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் குறித்த அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

நீட்' தேர்வு: மாணவர்களைத் தயார்படுத்த தனியார் பள்ளிகள் திட்டம்.

            நீண்ட இழுபறியைத் தாண்டி, நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு ("நீட்') அடுத்த ஆண்டு முதல்கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

'ஆயாக்களுக்கான மரியாதை கூட இல்லை':மழலையர் பள்ளி ஆசிரியைகள் கவலை.

        சென்னை மாநகராட்சி பள்ளிகளில், துப்புரவு பணி செய்யும் ஆயாக்களுக்கு இருக்கும் மரியாதைகூட, எங்களுக்கு இருப்பதில்லை' என, மழலையர் பள்ளி ஆசிரியைகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இசை தொகுப்பில் பள்ளி மனப்பாடப் பாடல்கள் : எஸ்.சி.இ.ஆர்.டி., தயாரிப்பு.

          தமிழகத்தில் அரசு துவக்கப் பள்ளி மனப்பாடப் பாடல்களை மாணவர்கள் எளிதில் கற்கும் வகையில், ஆடியோ- வீடியோ வடிவிலான பாடல்களின் இசை தொகுப்பை, மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,) தயாரித்துள்ளது. 
 

மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி.

      ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எனப்படும் எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு, ஓராண்டிற்கான ஆரம்பகட்ட கம்ப்யூட்டர், 'ஹார்டுவேர்' இலவச பயிற்சி முகாம் ஆக., 1ல் துவங்குகிறது. 
 

ஓய்வூதியம் பெறுபவர்கள் வங்கி கணக்கு துவக்குவதுகட்டாயம்:தபால் அலுவலகம் மூலம் பணம் இனி கிடைக்காது

         ஓய்வூதியம் பெறுபவர்கள் இனி கட்டாயம் வங்கிக்கணக்கு துவங்கி இருந்தால் மட்டுமே, அவர்களுக்கு உதவித்தொகை கிடைக்கும். 
 

பெண் கல்வி; பின்னுக்கு செல்லும் வடமாநிலங்கள்

          வட மாநிலங்களில் பெண் குழந்தைகளின் கல்வி சதவீதம் குறைவாக உள்ளதாக புள்ளி விபர ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. 2014ம் ஆண்டு ஆய்வறிக்கையின்படி, கல்வி நிலை குறித்து ஆய்வு நடத்தப்பட்ட 21 முக்கிய மாநிலங்களில் குஜராத் 20வது இடத்தில் உள்ளது. 
 

அரசு பள்ளி பிளஸ் 1 வகுப்பில் 800 இடங்கள்...காலி! அரியூர் பள்ளியில் மாணவர் சேர்க்கை ரத்து.

           புதுச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 800 பிளஸ் 1 இடங்கள் காலியாக உள்ளன. பொதுத் தேர்வில் தொடர்ந்து தேர்ச்சி சதவீதம் குறைந்த, அரியூர் அரசு மேல்நிலைப் பள்ளி யில், இந்தாண்டு மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டது. 

தமிழகத்தில் 4 நகரங்களில் ‘நெட்’ தகுதித் தேர்வு: ஜூலை 10ல் நடக்கிறது.

           அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தகுதித் தேர்வு தமிழகம் முழுவதும் வருகிற 10ம் தேதி நடக்கிறது. அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணி, பி.எச்டி படிக்க இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித் தொகை பெற ‘நெட்’ தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

விரைவில் அறிவிப்பு:ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு.

          பணியிட மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் நடத்தப்படும்.

SCERT-DIET Lectures Study Material

NEW SCERT DIET Lectures Study Material
  • Educational Study Material | Nisha Coaching

12th New Study Materials - Computer Science

12th New Study Materials:
  • Computer Science | June - Monthly test Question Paper and Key | Mr. T. Thirumalai

10th Study Material - Science Unit Test QP

10th New Study Material
  • Science | Unit Test Question Paper | Mr. Sivakumar

துணைவேந்தர்கள் இல்லாத முப்பெரும் பல்கலைக்கழகங்கள்: முடங்கும் உயர்கல்வி!!!

        உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழகம் முதலிடம் பிடித்திருப்பதாக தமிழக ஆட்சியாளர்கள் பெருமைப்படும் வேளையில், தமிழகத்தில் உயர்கல்வி முற்றிலுமாக முடங்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தின் மூன்று பெரிய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிகளும் காலியாக  கிடப்பது தான் இதற்குக் காரணம் ஆகும். இந்த விஷயத்தில் தமிழக அரசின் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.

தமிழ்வழி பொறியியல் படிப்பில் 1,257 இடங்கள் காலி: இதுவரை 121 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர்-வேலைவாய்ப்பு இல்லை என்று மாணவர்கள் தயக்கம்.

        பொறியியல் கலந்தாய்வு தொடங்கி 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், தமிழ்வழி சிவில், மெக்கானிக்கல் படிப்பில் இதுவரை 121 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். 1,257 இடங்கள் காலியாக உள்ளன. தனியார் துறையில் வேலைவாய்ப்பு குறைவாக இருப்பதால் தமிழ்வழி பிரிவில் சேர மாணவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

சென்னை 'நேத்ரோதயா' கல்லூரியில ஏழை மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பி.எட். கல்வி

        சென்னை முகப்பேரில் உள்ள நேத்ரோதயாகல்வியியல் கல்லூரியில் ஏழை மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பி.எட். கல்வி இலவசமாக அளிக்கப்படுகிறது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 650-க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி கல்லூரிகள் செயல்படுகின்றன.

அரசு பள்ளிகளில் காலியிடங்கள்: 1,250 சிறப்பாசிரியர்கள் நியமனம் எப்போது?- 2 ஆண்டு கடந்தும் நடவடிக்கை இல்லை

         அரசு பள்ளிகளில் போட்டித்தேர்வு மூலமாக சிறப்பாசிரியர்களை நிய மிப்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டு கிட்டதட்ட 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் காலியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படவில்லை.அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளி களில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர்கள் பணியாற்றி வரு கிறார்கள்.
 

சிறுசேமிப்புக்கு வட்டி அஞ்சல் துறை புதிய அறிவிப்பு.

       அஞ்சலக சிறுசேமிப்புக்கான வட்டி விகிதங்கள் இனி 3 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும்.இது தொடர்பாக மத்திய பத்தி ரிகை தகவல் அலுவலகம் வெளி யிட்ட செய்திக்குறிப்பு:

FLASH NEWS அரசு ஊழியர்களின் காப்பீடு திட்டம் நீட்டிப்பு.அரசு ஊழியர்களின் மாத சந்தா ரூ.180 ஆக நிர்ணயம்

              தமிழக அரசு பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை 4 ஆண்டுகளுக்கு நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், திட்டம் ஜூனில் முடிந்ததால் சில பயன்களுடன் காப்பீடு திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

CPS - 245 நபர்களுக்கு பணப்பலன் வழங்கப்பட்டுள்ளதென தகவல்

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 245 நபர்களுக்கு பணப்பலன் வழங்கப்பட்டுள்ளதென தகவல்

இந்த ஆண்டில் டிசம்பர் மாதம் ஒரு விநாடி கூடுதலாக இருக்கும்!

இந்த ஆண்டில் கூடுதலாக ஒரு விநாடியை சேர்க்க சர்வதேச நேரத்தைக் கணக்கிட்டு வரும் அமெரிக்கக் கடற்படை வானாய்வு அமைப்பு முடிவு செய்துள்ளது.
ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரமும், அணுவியல் நேரமும் மாறாமல் இருக்க வேண்டியது அவசியம். அதனால் பூமியின் மெதுவான சுழற்சியால் ஏற்படும் தாமதத்தை சர்வதேச நேரத்தில் சேர்க்கிறார்கள்.

ஒருங்கிணைந்த பாடத் திட்டம் நடைமுறைக்கு வருமா?

             புதிய பட்டப் படிப்புகள், வேறுபட்ட பாடத் திட்டங்களால் எழும் சிக்கல்களுக்குத் தீர்வு காண உருவாக்கப்பட்ட "ஒருங்கிணைந்த பாடத் திட்டம்' நடைமுறைக்கு வருவது எப்போது என்ற எதிர்பார்ப்பு கல்வியாளர்களிடையே எழுந்துள்ளது.

அரசு பணியாளர் மருத்துவ காப்பீட்டு திட்டம்: 2020ம் ஆண்டு வரை நீட்டித்து முதல்வர் உத்தரவு

          அரசு பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, 2020ம் ஆண்டு வரை நீட்டித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 

மத்திய அரசு ஊழியர் 'ஸ்டிரைக்': 4 மாதங்களுக்கு ஒத்திவைப்பு

           மத்திய அரசின், ஏழாவது ஊதிய கமிஷன் பரிந்துரைகள் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அறிவித்திருந்த வேலை நிறுத்தத்தை, ஊழியர்கள், தற்காலிகமாக, நான்கு மாதங்களுக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

வேளாண் பல்கலையில் கலந்தாய்வு

           வேளாண் பல்கலையில் நடந்த, நான்காம் நாள் கலந்தாய்வில், 432 இடங்கள் நிரப்பப்பட்டன. கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், பொதுப்பிரிவு, நான்காம் நாள் கலந்தாய்வுநேற்று நடந்தது; 1,154 பேர் அழைக்கப்பட்டதில், 439 பேர் பங்கேற்ற நிலையில், 432 பேர், விருப்பமான பாடங்களை தேர்வு செய்தனர். 

மாணவர்கள் மோதல் எதிரொலி : 10 ஆசிரியர்கள் மாற்றம்

           வந்தவாசி அருகே அரசு பள்ளி மாணவர்கள் இடையேயான மோதலால், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட, 10 ஆசிரியர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர்.
 

மாணவியருக்கான 'உதான்' திட்டம் - ஜூலை 13 வரை அவகாசம்

           பிளஸ் 2 தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறும், 1,000 மாணவியரை தேர்வு செய்து, அவர்கள் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்றவற்றில், பி.இ., - பி.டெக்., போன்ற இன்ஜி., படிப்புகளில் சேர்ந்து, இலவசமாக படிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.இதற்காகவே, மத்திய அரசில், 'உதான்' என்ற திட்டம் செயல் படுத்தப்படுகிறது.
 

மெட்ரிக் பள்ளிகள் இயக்குனராக கருப்பசாமி நியமனம்

         தமிழக பள்ளிக் கல்வித் துறையில், மெட்ரிக் பள்ளிகள் இயக்ககத்துக்கு, புதிய இயக்குனராக கருப்பசாமி நியமிக்கப்பட்டுள்ளார். 
 

வாக்காளர்கள் விபரம் சரிபார்க்கும் பணி துவக்கம்

     தமிழகத்தில், வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி, மே மாதம் துவக்கப்பட்டது. அதன்படி, 'தகுதியுள்ள அனைவரையும், வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்; தவறுகளை களைய வேண்டும்;  
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive