Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை விவரங்களை பதிவிறக்கம் செய்யலாம்

       ஓய்வூதியம், ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை தொடர்பான விவரங்களை இணையதளத்தில் (http://218.248.44.30/ecsstatus/) இருந்து பதிவிறக்கலாம் செய்து கொள்ளலாம். இது குறித்து கருவூலத் துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவல்: அனைத்து ஓய்வூதியர்களது ஓய்வூதியம், ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை தொடர்பான விவரங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

குரூப் 2 ஏ தேர்வுக்கு 8.5 லட்சம் பேர் மனு

           தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ பதவிக்கான தேர்வுக்கு, 8.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழக அரசு துறையில் காலியாக உள்ள, 1,947 நேர்காணல் இல்லாத காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், வரும், 24ல் எழுத்துத் தேர்வு நடக்கிறது. இந்தத் தேர்வுக்கு, 8.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 

ஜன.,18 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவக்கம் :ஆசிரியருக்கு "பிரிண்ட் அவுட்' விண்ணப்பம் வழங்கல்

           மக்கள் தொகை விபரத்தை உறுதிப்படுத்த சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு கணக்கெடுப்பிற்கான "பிரிண்ட் அவுட்' விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுவிட்டது. ஜன.,18 முதல் இப்பணியை ஆசிரியர்கள் துவக்குகின்றனர். 

30 ஆயிரம் TET ஆசிரியர்கள் தவிப்பு

            பள்ளிக் கல்வி மற்றும் தொடக்க கல்வித் துறையில் நியமிக்கப்படும் அரசு பள்ளி ஆசிரியர்கள், அவர்களின் முதல் இரண்டாண்டு பணியை, பயிற்சியாக கணக்கிட வேண்டும். அந்த பயிற்சிக்கான சான்றிதழை வழங்கி, பணிமூப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும்.

குரூப் 2 ஏ தேர்வுக்கு 8.5 லட்சம் பேர் மனு.

         தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ பதவிக்கான தேர்வுக்கு, 8.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.தமிழக அரசு துறையில் காலியாக உள்ள, 1,947 நேர்காணல் இல்லாத காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், வரும், 24ல் எழுத்துத் தேர்வு நடக்கிறது. 

கட்டணத்துக்காக மாணவர்களின் சான்றிதழ் பறிப்பு!: தனியார் கல்லூரிகளுக்கு யு.ஜி.சி., எச்சரிக்கை.

         கட்டண பாக்கிக்காக மாணவர்களின் சான்றிதழை பிடித்து வைத்துக் கொள்ளும், கல்லுாரி மற்றும் பல்கலை கழகங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பல்கலை கழக மானிய குழுவான, யு.ஜி.சி., எச்சரித்துள்ளது.

பிளஸ் 2 செய்முறை தேர்வு: 14 பாடங்களுக்கு அறிவிப்பு.

          பிளஸ் 2வில், 14 பாடங்களுக்கான செய்முறை தேர்வை, பிப்., 5 முதல், 25க்குள் நடத்தி முடிக்க, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

DEEO சஸ்பெண்ட்.

         பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாக, தர்மபுரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

CPS இல் மேலும் ஒரு வழக்கு திண்டுக்கல் மாவட்டம்

      தென்னம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியையாக CPSஇல் பணியாற்றி ஓய்வு பெற்று 3ஆண்டுகளாகியும் எவ்விதமான ஓய்வூதியமும் வழங்கப்படவில்லை. எனவே.,ஓய்வூதியம் வழங்கும்படி கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடுக்கப்பட்டு உள்ளது.

திண்டுக்கல் எங்கெல்ஸ்.

Breaking News

        Breaking News:பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 85 காசுகளும் குறைப்பு.

பொங்கல் பண்டிகையின் வரலாறு மற்றும் விதிமுறைகள் - படையல் பூஜை செய்திட உகந்த நல்ல நேரம்

          தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள். இந்த நன்னாளிலே சுப ஓரைகளில் சூரிய பகவானுக்கு பூஜை செய்தால், அஷ்ட லஷ்மிகளும் நம் வீட்டில் வாசம் செய்யும், நம்மை காக்கும். மன்மத வருடம், தை மாதம் முதல் நாள் 15.1.2016 வெள்ளி அன்று பொங்கல் பானை வைத்து பொங்கல் பொங்கவும், சூரியனுக்கு படையல் பூஜை செய்திடவும் உகந்த நல்ல நேரம் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை பொங்கல் வைத்து வழிபடலாம். 

பொங்கல் ஸ்பெஷல் : வகை வகையான பொங்கல் மற்றும் வடை RECIPES

பொங்கல் -வடை கோலங்கள் !

தேவையானவை: அரிசி – 250 கிராம், வெல்லம் – 500 கிராம், நெய் – 100 மில்லி, வறுத்த முந்திரி – 20, ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, உலர்ந்த திராட்சை – 20, பால் – 200 மில்லி, குங்குமப்பூ – ஒரு சிட்டிகை.
 

மூலத்துறை அரசுப்பள்ளியின் முத்தான மாணவர்கள்...மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ...

       கோவை மாவட்டத்தில் உள்ள மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி' சுட்டிகள் சுனில்குமார் & கோகுல் ஆகியோர் மீண்டும் 'விஜய் தொலைக்காட்சி'யில் வரும் ஞாயிறு(17-01-16) மாலை 7:00 மணிக்கு "ஒரு வார்த்தை ஒரு லட்சம்"... நிகழ்ச்சியின் காலிறுதிச் சுற்றில் விளையாட உள்ளார்கள்...

குரூப் 2ஏ தேர்வு: நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கலாம்; டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

      குரூப் 2ஏ தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இது குறித்து தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெ.சோபனா வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

கம்ப்யூட்டர் தெரிந்தால் தான் இனி மத்திய அரசு வேலை!

          அரசு பணிகளில், எழுத்தர்களுக்கு பதில், நவீன தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தத் தெரிந்த, நிர்வாக உதவியாளர்களை பணியில் சேர்க்க,மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு பணிகளில், எல்.டி.சி., எனப்படும், கீழ்நிலை எழுத்தர், யூ.டி.சி., எனப்படும், உயர்நிலை எழுத்தர் பணிகள் உள்ளன. மத்திய அரசின் செயலக பணிகளின் முதுகெலும்பாக இப்பணியாளர்கள் திகழ்கின்றனர். இவர்களுக்கு பதில், கம்ப்யூட்டர் உள்ளிட்ட நவீன சாதனங்களை பயன்படுத்தத் தெரிந்த இளைஞர்களை, நிர்வாக உதவியாளர் பணியில் சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை விவரங்களை பதிவிறக்கம் செய்யலாம்

         ஓய்வூதியம், ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை தொடர்பான விவரங்களை இணையதளத்தில் (http:218.248.44.30ecsstatus) இருந்து பதிவிறக்கலாம் செய்து கொள்ளலாம்.

 

'ப்ளே ஸ்கூல்'களுக்கு கட்டணம் நிர்ணயம்

         'ப்ளே ஸ்கூல்' எனப்படும், கே.ஜி., முதல், 3ம் வகுப்பு வரையிலான மழலையர் பள்ளிகளுக்கான கட்டணத்தை, நீதிபதி சிங்காரவேலர் கமிட்டி நிர்ணயம் செய்ய உள்ளது. 
 

அரசு உதவி பெறும் பள்ளி அங்கீகாரம் வழங்க கெடு

           அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான, அங்கீகார பிரச்னையை சரிசெய்யும்படி, மாவட்ட அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனர் உத்தர விட்டுள்ளார்.

சான்றிதழ் சரிபார்ப்பு : ஆசிரியர்கள் 'டிமிக்கி'

     சேலம் மாவட்டத்தில் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாமல், பல ஆசிரியர்கள் டிமிக்கி கொடுத்து வருகின்றனர். ஒரிஜினல் சான்றிதழ்களை சமர்ப்பிக்காத ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களின் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

Group 2 A Hall ticket download

இன்ஜி., மாணவர் சேர்க்கை பிப்ரவரியில் ஆலோசனை

          தமிழகத்தில், அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 535க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, சென்னை, அண்ணா பல்கலையில், மாணவர் சேர்க்கை நடத்தப்படும். மொத்தம், 2.15 லட்சம் பி.இ., - பி.டெக்., படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்படுவர்.

10ம் வகுப்பு ஆசிரியர்களுக்கும் வாக்காளர் பட்டியல் மற்றும் ரேஷன் அட்டை விபரம் சேகரிக்கும் பணி!

                    பத்தாம் வகுப்பு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கும், வாக்காளர் பட்டியல் மற்றும் ரேஷன் அட்டை விவரம் சேகரிக்கும் பணி வழங்கியிருப்பது, ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை உருவாகியுள்ளது.

பங்குச்சந்தையில் ஓய்வூதிய தொகை அரசு ஊழியர்கள் அதிர்ச்சி

          ராமநாதபுரம்;பல நாடுகளில் பங்கு சந்தையில் முதலீடு செய்யப்பட்ட, அரசு ஊழியர் ஓய்வூதிய நிதியில் சரிவு ஏற்பட்டுஉள்ளது. இதனால் தமிழகத்தில் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

ஏழாவது ஊதியக் கமிஷன் பரிந்துரையை செயல்படுத்த உயர்நிலைக் குழு

            ஏழாவது ஊதியக் கமிஷன் பரிந்துரையை செயல்படுத்த உயர்நிலைக் குழுவை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் 47 லட்சம் பேர், ஓய்வூதியதாரர்கள் 52 லட்சம்பேரின் ஊதியத்தை மாற்றியமைப்பதற்காக அமைக்கப்பட்ட 7வது ஊதியக் கமிஷன் தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. 
 

ரயில்வேயில் 18ஆயிரம் பணிக்கு தேர்வு:விண்ணப்பிக்க ஜன.25 கடைசி

         மதுரை:மத்திய ரயில்வே துறையில் 18 ஆயிரத்து  காலிப்பணியிடங்களை நிரப்ப, தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜன.,௨௫ க்குள் 'ஆன் லைன்' மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித் தொகை தேர்வு பிப்.27-க்கு ஒத்திவைப்பு

        எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி உதவித் தொகைக்கான தேர்வு பிப்ரவரி 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

RTI Letter - பள்ளிக்கல்வி துறையில் 01.04.2003க்கு பிறகு நியமனம் செய்யப்பட்டு ஓய்வு பெற்ற மற்றும் மரணம் அடைந்தவர்கள் பற்றிய விபரங்கள் பள்ளிக்கல்வி இயக்ககத்தில் இல்லை

       CPS -பள்ளிக்கல்வி துறையில் 01.04.2003க்கு பிறகு நியமனம் செய்யப்பட்டு ஓய்வு பெற்ற மற்றும் மரணம் அடைந்தவர்கள் பற்றிய விபரங்கள் பள்ளிக்கல்வி இயக்ககத்தில் இல்லை.தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் பதில்

10–ம் வகுப்பு மாணவர்கள் தமிழுக்கு பதில் தெலுங்கில் தேர்வு எழுத அனுமதிகேட்டு வழக்கு அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு

       கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தின்படி முதல் பாடமாக தமிழில் தேர்வு எழுதுவதற்கு பதில், தெலுங்கு மொழியில் தேர்வு எழுத அனுமதிகேட்டு மாணவர்கள் தொடர்ந்த வழக்கிற்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கருவூல இணையதளத்தில் (Web pay roll) ஆதார் எண் உள்ளீடு செய்தல் - செயல்முறைகள்

     தொடக்கக்கல்வி--கருவூல இணையதளத்தில் (Web pay roll) ஆதார் எண் உள்ளீடு செய்தல்-தொடர்பு அலுவலர் (Nodal Officer) நியமனம் செய்து ஆணை வழங்குதல் - செயல்முறைகள்-நாள்;11 .01.2016 

குழந்தைகளை கவனிக்க பெண்களுக்கு 5 நாள் 'லீவு'-மத்திய அரசு முடிவு

        குழந்தைகளை கவனித்து கொள்ள, பெண் ஊழியர்கள், ஐந்து நாட்கள் விடுமுறை எடுக்க மத்திய அரசு அனுமதி அளிக்க உள்ளது.

அரசு ஐ.டி.ஐ.,க்களில் பயிற்சியாளர் வேலை

          அரசு ஐ.டி.ஐ.,க்களுக்கு, 329 இளநிலை பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு, பிப்., 1க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.தமிழக அரசின் வேலைவாய்ப்பு துறையின் கீழ் செயல்படும், அரசு ஐ.டி.ஐ.,க்களில் காலியாக உள்ள, 329 இளநிலை பயிற்சியாளர் இடங்களை நிரப்ப அரசு முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு, பிப்., 1க்குள், 'ஆன்லைன்' மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
 

10ம் வகுப்பு மாணவர்களுக்கு 'அ, ஆ' தெரியவில்லை அரசு பள்ளிகளில் நடந்த ஆய்வில் அதிகாரிகள் அதிர்ச்சி

         அரசு பள்ளிகளில் படிக்கும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, 'அ, ஆ' போன்ற தமிழ் எழுத்துக்களே தெரியாதது ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால், கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive