Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேர்வுத்துறைக்கு புதிய இயக்குனர்

         தமிழக அரசு தேர்வு துறையின் புதிய இயக்குனராக, வசுந்தரா தேவி நியமிக்கப்பட்டுள்ளார்.அரசுத் தேர்வுத்துறையின் இயக்குனராக பணியாற்றிய தேவராஜன், கடந்த ஜூலையில் ஓய்வுபெற்றதை அடுத்து, காலியாக இருந்த பதவிக்கு, தமிழ்நாடு ஆசிரியர் வாரிய உறுப்பினர் செயலர் வசுந்தரா தேவி நியமிக்கப்பட்டுள்ளார்.
 

தேசிய உதவித்தொகை தகுதி தேர்வு ஜன. 23ல் நடக்கிறது

        எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி படிப்பு உதவி தொகை தகுதித்தேர்வு ஜன.,23ல் நடக்கிறது.ஒன்பதாம் வகுப்பு முதல்பிளஸ் 2 வரை தேசிய வருவாய் வழி படிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு மாதந்தோறும் 500 ரூபாயை மத்திய அரசு வழங்குகிறது.
 

பிளஸ் 2, 10ம் வகுப்புக்கு விரைவில் தேர்வு?

          நடப்பு கல்வியாண்டு, பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வுகளை, முன்கூட்டியே நடத்த, கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.வரும், 2016ல், தமிழக சட்டசபை தேர்தல் வருவதால், பொதுத் தேர்வுகளை, முன்கூட்டியே நடத்த, கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.


கிறிஸ்துமஸ் விடுமுறை பள்ளிகளுக்கு உண்டா?

        சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்ட, மழை விடுமுறையை கணக்கில் கொண்டு, அரையாண்டு தேர்வு, ஜனவரிக்கு மாற்றப்பட்டது. அதன் பின், தேர்வு மற்றும் விடுமுறை குறித்து, எந்த அறிவிப்பும் இல்லை.இந்நிலையில்,நான்கு மாவட்டங்களில், 14ம் தேதி முதல், வகுப்புகள் துவங்கியுள்ளன. எனவே, கிறிஸ்துமஸ், மீலாடி நபி மற்றும் புத்தாண்டு விடுமுறை உண்டா என, பள்ளிகள் எதிர்பார்ப்பில் உள்ளன.


நிவாரண நிதிக்கு ஒரு நாள் ஊதியம்: தமிழக அரசு புதிய உத்தரவு

        முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள்ஒரு நாள் ஊதியத்தை அளிப்பதற்கான உத்தரவில் சில நடைமுறைகளை தமிழக அரசு எளிதாக்கியுள்ளது.மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஒரு நாள் ஊதியத்தை அளிக்கதமிழக அரசு டிசம்பர் 13-இல் ஒரு உத்தரவு பிறப்பித்தது.


அனைத்து வகையான வங்கிகணக்கு தொடங்குவதற்கும்'பான்' எண் கட்டாயமாக்கப்படுகிறது

       அனைத்து வகையான வங்கிகணக்கு தொடங்குவதற்கும்'பான்' எண்கட்டாயமாக்கப்படுகிறது என மத்தியநிதி அமைச்சர்அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.அனைத்து வகையான வங்கிகணக்கு தொடங்குவதற்கும்'பான்' எண்கட்டாயமாக்கப்படுகிறது என மத்தியநிதி அமைச்சர்அருண்ஜெட்லிதெரிவித்துள்ளார்.


ஜாக்டோ : டிசம்பர் போராட்ட தேதி மாற்றம்.

               மழை பாதிப்பு காரணமாக இம்மாத இறுதியில் நடைபெற இருந்த தொடர் மறியல் போராட்டம் ஜனவரி 30,31,பிப்ரவரி1 ஆகிய நாட்களில்  நடைபெறும் மாநில ஜாக்டோ முடிவு.

லேப்-டாப் கணக்கெடுப்பு: தலைமை ஆசிரியர்கள் அதிர்ச்சி

            அரசு பள்ளிகளில் வினியோகிக்க வழங்கிய அரசின் இலவச லேப்- டாப் பதுக்கப்படுவதாக எழுந்த தகவலால் கணக்கெடுக்க பள்ளிக்கல்வித்துறைஉத்தரவிட்டுள்ளது.பிளஸ் 2 மாணவர்களுக்கு 2011 முதல் அரசின் இலவச லேப்- டாப் வழக்கப்படுகிறது. ஒவ்வொரு கல்வியாண்டிலும், பிளஸ் 2 முடித்தவர்களுக்கு வழங்கப்பட்டது. 

SSA & RMSA head festival Advance Regarding

          SSA: அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் KH & BC & KI தலைப்புகளில் கீழ் சம்பளம் பெறும் ஆசிரியர்கள்,உடற்கல்விஆசிரியர்கள் இளநிலை உதவியாளர்கள் மற்றும் ஆய்வக உதவியாளர்களுக்கு விழா முன்பணம் வழங்குதல் சார்பு.

அடுத்தடுத்து தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி? தமிழக அரசு தெளிவான அறிவிப்பை வெளியிட கோரிக்கை

    சென்னையில் கடந்த மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாகப் பள்ளிகள் நீண்ட விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், அடுத்தடுத்து தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் மாணவர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக தொடர்ந்து 33 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறைஅறிவிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 14 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.


உயர் கல்வித்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரனை

      அரசு, அரசு உதவி பெறும், அரச உதவி பெறாத கலை மற்றும் அறிவியல் ககல்லூரிகளில் மாணவர் சேர்கையில் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறிப்பிட்டுள்ளன.

900 PG POST DECEMBER MONTH PAY ORDERS

மாணவர்கள் தாங்களாக முன்வந்து வெள்ள நிவாரண நிதி வழங்கினால் மட்டுமே பள்ளிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும், கட்டாயப்படுத்தாதீர் - தலைமையாசிரியர்களுக்கு எச்சரிக்கை

     'வெள்ள நிவாரணத்திற்காக பணம் வசூலிக்க மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது,' என, தலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் மாவட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் பொருள் உதவி, முதல்வர் பெயரில் வெள்ள நிவாரண நிதி அனுப்பி வருகின்றனர். 


தள்ளிப்போகும் TET - அடுத்த அடி...

அடுத்த அடி... (வளரூதியம், ஊக்க ஊதியம்)
       ஆசிரியர் தகுதி தேர்வு நிபந்தனைகளுடன் பணியில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களின்  வளரூதியம், ஊக்க ஊதியம் (increments and incentives) முறையான அறிவிப்பு இல்லாமல் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

மனநல ஆலோசனை கூற10 நடமாடும் மருத்துவ குழு

         பள்ளி மாணவர்களுக்கு, மனநல ஆலோசனை வழங்கும் பணியில், 10 நடமாடும் மருத்துவக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன.வெள்ளம் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் மாவட்டங்களில், நோய் பாதிப்புகளைத் தடுக்க, சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.


அரையாண்டு தேர்வு வேண்டாம் பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை - முதல்வர் தனிப்பிரிவில் மனு

       'பள்ளிகளில், அரையாண்டு தேர்வு நடத்தாமல், ஆண்டு இறுதித்தேர்வு மட்டும் நடத்த வேண்டும்' என, தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இச்சங்கம் சார்பில், முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில், கோரிக்கை மனு அளித்த பின், சங்கத் தலைவர் அருமைநாதன் கூறியதாவது:

SSA - பயிற்சி முக்கியம் பாடம் முக்கியமல்ல!

         அனைவருக்கும் கல்வி இயக்கக திட்டம் என்ற, எஸ்.எஸ்.ஏ., மூலம், 8ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள்; அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் என்ற, ஆர்.எம்.எஸ்.ஏ., மூலம், 9, 10ம் வகுப்பு ஆசிரியர்கள்; மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் மூலம், பிளஸ் 1, பிளஸ் 2 ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சிகள் தரப்படுகின்றன.

NMMS ஊக்கத்தொகை தேர்வில் சிக்கல்

      பள்ளிக் கல்வி முடிக்கும் வரை, இடைநிற்றல் இல்லாமல் படிக்க, உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. இதற்காக, தேசிய திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு, எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுவோருக்கு, மாதம், 500 ரூபாய் வீதம், பிளஸ் 2 முடிக்கும் வரை வழங்கப்படும். 

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி - மாற்று திறனாளிகளுக்குஅவகாசம்

           மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் உள்ள, காது கேளாதோர் மற்றும் பார்வையற்றோர் அரசு சிறப்புப் பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் துணை விடுதி காப்பாளர் பணியிடங்களுக்கு, விண்ணப்பங்கள் அனுப்ப, கடைசி தேதி, 15ம் தேதி என, அறிவிக்கப்பட்டிருந்தது.  இப்போது, 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

பி.எப்., பணத்தை உடனே எடுக்கலாம்!

         பி.எப்., சந்தாதாரர்கள், அவர்களது கணக்கில் இருந்து பணம் எடுக்க, புது வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இதுகுறித்து, பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலக வட்டாரம் கூறியதாவது:ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும், பி.எப்., தொகைக்கு, பொது கணக்கு எண் எனப்படும், யு.ஏ.என்., வழங்கப்படுகிறது. 

மனநல ஆலோசனை கூற10 நடமாடும் மருத்துவ குழு

     பள்ளி மாணவர்களுக்கு, மனநல ஆலோசனை வழங்கும் பணியில், 10 நடமாடும் மருத்துவக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன.வெள்ளம் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் மாவட்டங்களில், நோய் பாதிப்புகளைத் தடுக்க, சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த மாவட்டங்களில், நீண்ட விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறந்துள்ளன. 

சத்துணவு அமைப்பாளர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

       வேலூர் மாவட்ட சத்துணவு மையங்களில் அமைப்பாளர் பணிக்கு தகுதியானவர்கள் வியாழக்கிழமை (டிச.17) முதல் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive