Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பணிநிரவலால் பதறும் 2 ஆயிரம் ஆசிரியர்கள்: 'கவுன்சிலிங்' நடத்தப்படுமா

      மாநிலம் முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்- மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, உபரி ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேர், கலந்தாய்வு இல்லாமல் விரைவில் பணிமாற்றம் செய்யப்பட உள்ளதால் கலக்கமடைந்துள்ளனர். 

தேர்வு நேரத்தில் இடமாற்றம் ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி

        அரையாண்டுத் தேர்வு நேரத்தில், அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளதால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வருடாந்திர பணியிட மாற்றம் மற்றும் உபரி ஆசிரியர்கள் கலந்தாய்வு கடந்த மாதம் தான் முடிந்தது. ஆசிரியர்கள் புதிய இடத்துக்கு சென்று, பாடங்களை நடத்துகின்றனர். 

செய்முறை பயிற்சி தேர்வு உண்டா 10ம் வகுப்பு மாணவர்கள் குழப்பம்

      அறிவியல் செய்முறை புத்தகம் வழங்காததால், அதற்கான பயிற்சி தேர்வு நடைபெறுமா என்ற குழப்பம், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.சமச்சீர் கல்வி பாடத்திட்டம் துவங்கிய பின், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, அறிவியல் ஆய்வகத்தில், செய்முறை பயிற்சியும், செய்முறை தேர்வும் நடத்தப்படுகிறது. இதற்காக, 75 மதிப்பெண், 'தியரி'க்கும், 25 மதிப்பெண் அறிவியல் செய்முறை பயிற்சிக்கும் தரப்படுகிறது. 

இடை நின்ற மாணவர்களின் பட்டியல் தயாரிக்க உத்தரவு

      பள்ளிகளில், 8ம் வகுப்புக்குள் படிப்பை நிறுத்திய மாணவர் பட்டியலை கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின், கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தின் படி, 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், இலவசமாக, கட்டாயம் கல்வி வழங்க வேண்டும்; இதற்கு மத்திய அரசு மூலம் நிதி உதவி அளிக்கப்படுகிறது. 

பட்டாசு ஆலைகளின் தீ விபத்தை தடுக்க தானியங்கி தீயணைப்பான்: 9ம் வகுப்பு மாணவன் கண்டுபிடிப்பு

     பட்டாசு ஆலையில் ஏற்படும் வெடி விபத்தை தடுக்கவும், அங்கு பணிபுரியும் தொழிலாளியை பாதுகாக்கவும் தானியங்கி தீயணைப்பான் மாதிரி வடிவமைப்பை ஜமீன் சல்வார்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 9 ம் வகுப்பு மாணவன் ஜெயக்குமார் கண்டுபிடித்துள்ளார்.

மின் கட்டணம் உயருமா? நவ.,30ல் தெரியும்

        மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து, வரும், 30ம் தேதி நடக்கும், மின் வாரிய இயக்குனர் குழு கூட்டத்தில், முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. மின் வாரிய தலைவர், தொழில், நிதி, எரிசக்தி துறைகளின் செயலர்கள், மின் உற்பத்தி, மின் பகிர்மானம், மின் திட்டம் ஆகியவற்றின் இயக்குனர்கள், தமிழ்நாடு மின் வாரிய இயக்குனர் குழுவில் உள்ளனர்.

அரசு பள்ளிகளில் 3 வகை பயிற்சி

        பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச் முதல் வாரம் துவங்க உள்ளது. பிளஸ் 2 தேர்வில், நான்கு ஆண்டுகளாக அரசு பள்ளி மாணவர்கள், மாநில ரேங்க் பெறவில்லை; தேர்ச்சி சதவீதத்திலும், பின்தங்கினர். 10ம் வகுப்பு தேர்வில் மட்டும், மாநில ரேங்க் பெற்று, ஆறுதல் அளித்தனர்.ஒவ்வொரு ஆண்டும், 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்தும், அரசு பள்ளிகள் தேர்ச்சியில் பின்தங்குவது, பள்ளி கல்வித் துறை அதிகாரிகளுக்கு, தலை
குனிவை ஏற்படுத்தியது. 

92 ஆசிரியர் பணியிடம்விண்ணப்பங்கள் வரவேற்பு

       மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படும், அரசு சிறப்பு பள்ளிகளில், 92 ஆசிரியர் பணியிடங்கள் உட்பட, 105 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாணவர்களிடம் உறுதிமொழிஎழுதி வாங்கும் கல்வித்துறை

         பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக, மாணவர்களிடம், புதிதாக உறுதிமொழி எழுதி வாங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச் முதல் வாரத்தில் பொதுத்தேர்வு நடக்க உள்ளது. இதற்காக, மாணவர்களிடம், புதிதாக உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து வாங்கி, தேர்வுத் துறைக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு புது கட்டுப்பாடு

        அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், தேர்வில் அதிக மதிப்பெண் பெற, மூன்று வகை சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச் முதல் வாரம் துவங்க உள்ளது. பிளஸ் 2 தேர்வில், நான்கு ஆண்டுகளாக அரசு பள்ளி மாணவர்கள், மாநில ரேங்க் பெறவில்லை; தேர்ச்சி சதவீதத்திலும், பின்தங்கினர். 

ஜே.இ.இ., மெயின் தேர்வு அறிவிப்பு

        பிளஸ் 2 மாணவர்கள் தேர்வுக்கு பின், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - ஐ.ஐ.எஸ்., மற்றும் ஐ.ஐ.ஐ.டி., உள்ளிட்டவற்றில் சேர, ஜே.இ.இ., எனப்படும் ஒருங்கிணைந்த பொது நுழைவுத் தேர்வை, இரண்டு கட்டமாக எழுத வேண்டும்.முதல் கட்டமாக, பிரதானத் தேர்வையும், பின், 'ஜே.இ.இ., அட்வான்ஸ்டு' தேர்வையும் எழுத வேண்டும். 

ஆன்லைனில் மார்க்!: சி.பி.எஸ்.இ., அறிமுகம்

       பிரதமரின், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தில், அனைத்து துறைகளையும் கணினிமயமாக்க, நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன் படி, கல்வித் துறையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி சேவை பிரிவைத் துவக்கி, பாடம் நடத்துதல்; மாணவர்களின் கல்வித் திறனை ஆய்வு செய்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாள்களிலும் நுழைவுத் தேர்வுப் பயிற்சி

      அரசுப் பள்ளி மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுப் பயிற்சி வகுப்புகள் அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை நாள்களிலும் நடத்தப்பட உள்ளன. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில், தமிழகம் முழுவதும் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகள் கடந்த மாதம் தொடங்கப்பட்டன.

விஐடி பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

         விஐடி பி.டெக் பொறியியல் பட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு விண்ணப்ப விநியோகத்தை வேந்தர் ஜி.விசுவநாதன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார். விஐடி பல்கலைக்கழகத்தின் வேலூர், சென்னை வளாகங்களில் நிகழாண்டு பி.டெக் பொறியியல் பட்டப்படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு விண்ணப்பங்கள் நாடு முழுவதிலும் 92 தலைமை தபால் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

5,000 சத்துணவு கூடம் மழையால் 'அவுட்'

      கனமழையால், 32 மாவட்டங்களில், 5,000 சத்துணவு கூடங்கள் சேதமடைந்துள்ளன. பத்து நாட்களுக்கும் மேலாக, கொட்டித் தீர்த்த மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களில், சத்துணவு கூடங்களில் தண்ணீர் புகுந்தது. மேற்கூரையில் தேங்கிய தண்ணீரால், சுவர்களில் கசிவு ஏற்பட்டது. இதனால், அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள்சேதமடைந்தன.

நவம்பர் 30-ல் பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் வெளியீடு


       பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடத்தப்பட்ட தேர்களின் முடிவுகள் நவம்பர் 30-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த அக்டோபர் 23 முதல் நவம்பர் 20 வரை தேர்வுகள் பாலிடெக்னிக்கல்லூரிகளில் தேர்வுகள் நடத்தப்பட்டது. இத்தேர்வுகளின் முடிவுகள் நவம்பர் 30-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.தேர்வு முடிவுகளை அறிய http://www.tndte.org.in/ மற்றும் http://intradote.tn.nic.in/ என்ற இணையதளத்தில் அறியலாம்.

ஐ.ஏ.எஸ்., அதிகாரியை எதிர்த்து பேச்சு: 22 தலைமை ஆசிரியருக்கு 'மெமோ'

       கல்வி ஆய்வு கூட்டத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா குல்கர்னியை எதிர்த்து பேசி, வெளிநடப்பு செய்த, 22 தலைமை ஆசிரியர்களுக்கு, ஒழுங்கு நடவடிக்கை குற்றச்சாட்டின் கீழ், 'நோட்டீஸ்' கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றல் திறன் குறித்த ஆய்வு கூட்டம், திருவண்ணாமலை மாவட்டம்,செய்யாறில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த மாதம் நடந்தது; 100 தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

"wi-fi"ஐ விட நூறு மடங்கு அதிவிரைவான வயர்லெஸ் டெக்னாலஜி "li-fi"

தற்போது பயன்படுத்தும் "wi-fi"ஐ  விட நூறு மடங்கு அதிவிரைவான வயர்லெஸ் இன்டர்நெட் டெக்னாலஜி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் "li-fi" ஆகும். இதன் சிறப்பு,  ஒரு நொடிக்கு 1ஜிகாபைட் டேட்டாக்களை அனுப்பக்கூடியது என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? 

7-வது ஊதியக் குழு பரிந்துரைக்கு எதிராக ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்...

       தஞ்சாவூர்: 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் வழங்கப்பட்ட 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையில் குறைந்தபட்ச ஊதியம் அறிவிக்க்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே நடைமுறையில் இருந்த வீட்டு வாடகைப்படி உள்ளிட்டவையும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டினர்.

பதவி உயர்வுக்கு ஆபத்து - என்ன சொல்கிறது 7-வது ஊதியக் குழு?

    ஏழாவது ஊதியக் குழு தன் அறிக்கையை 19.11.2015-ல் மத்திய நிதியமைச்சரிடம் வழங்கி, பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தியது. அன்று முதல், ஊடகங்களும் சமூக வலைதளங்களும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிக அளவில் ஊதிய உயர்வு வழங்கப்படுவதைப் போல ஒரு தோற்றத்தை உருவாக்குகின்றன. ஆனால், உண்மை நிலை என்ன?

குரூப்- 3 பணி தேர்வு பட்டியல் வெளியீடு: டிச.14-ல் சான்றிதழ் சரிபார்ப்பு

          கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர், நிலைய தீயணைப்பு அலுவலர் (நேர்காணல் உடைய பணிகள்), தொழிற்கூட்டுறவு சங்கங்களின் உதவி மேற்பார்வையாளர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை பண்டக காப்பாளர் (நேர்காணல் இல்லாத பணிகள்) ஆகிய பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த சார்நிலைப்பணிகளுக்கான எழுத் துத்தேர்வு (குரூப்-3 தேர்வு) கடந்த 4.8.2012 அன்று நடத்தப்பட்டது.
 

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு விண்ணப்பிப்போர் அரசு இ-சேவை மையங்களில் பதிவு செய்ய வசதி



     தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்போர் அரசு இ-சேவை மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

12th Physics Study Material

10th Tamil Study Material

Prepared by Mr. Saravanan A

12th Computer Science Full Portion Test

Prepared by Mr. K. SHANMUGAM MSC., B.ED.,

12th Study Material - Physics

Prepared by Mr. RAJENDRAN M,

10th Social Science Study Material

CCE English Study Material

Prepared by Mr. N.ELANGOVAN

சென்னையில் 24 பள்ளிகளுக்கு வரும் 29-ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு

        சென்னையில் 24 பள்ளிகளுக்கு வரும் 29-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிற பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு:


DECEMBER MONTH TRAINING FOR PRIMARY AND UPPER PRIMARY TEACHERS.

டிசம்பர் மாதம் Training.. மாதம்....
  • IED Training : - (30.11.2015)to (4.12.2015) - 5 days IED TRAINING for primary teachers
Another 5 days IED training for upper primary teachers 
Another 5 days IED training for Angan wadi

இடை நிற்றல் குழந்தைகள் அதிகரிப்புஎன்னதான் செய்கிறது எஸ்.எஸ்.ஏ.,?

         வெளி மாவட்டங்களுக்கு பணிக்கு செல்லும் பெற்றோரால், பாதியில் படிப்பு முடக்கப்படும் ஏழை மாணவர்களின் பிரச்னைக்கு, இன்னும் தீர்வு கிடைத்தபாடில்லை. 

ஆசிரியர்கள் பி.எப்., கணக்கு மாயம் 81 அதிகாரிகளுக்கு 'நோட்டீஸ்'

      மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில், ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கு விவரம் காணாமல் போனதாக புகார் எழுந்து உள்ளது.
 

தென் கிழக்கு வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி: நாளை முதல் 2 நாள்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு

      தென் கிழக்கு வங்கக் கடல், அதை ஒட்டிய பகுதியில் நீடிக்கும் மேலடுக்குச் சுழற்சியானது, அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெறும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

குறைந்த மதிப்பெண் மாணவர்களுக்காக வெற்றிப்படி! மாநகராட்சி பள்ளிகளில் சிறப்பு வகுப்பு

        கோவை மாநகராட்சி பள்ளிகளில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்காக, 'வெற்றிப்படி' என்ற, சிறப்பு வகுப்பு துவங்கப்பட்டுள்ளது.
 

சென்னையில் 24 பள்ளிகளுக்கு வரும் 29-ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு

      சென்னையில் 24 பள்ளிகளுக்கு வரும் 29-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிற பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive