Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ரயில் பயணத்தில் பிரச்னையா இலவச எண் '182' இருக்கு!கமிஷனர் தகவல்

'ரயில்களில் பயணிக்கும்போது, பயணிகளுக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், இலவச எண்ணான '182'ஐ அழைத்தால், உடனடியாக ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் உதவுவார்கள்'' என அதன் கமிஷனர் சங்கர்குட்டி தெரிவித்தார்.தீபாவளியை முன்னிட்டு, பட்டாசு போன்ற வெடிபொருட்களை ரயில்களில் கொண்டு வரக்கூடாது என, மதுரை ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

புதிய பென்ஷன் சேமிப்பு: ரூ.ஒரு லட்சம் கோடி: தமிழகம் 'மிஸ்சிங்'

         மத்திய ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் நிர்வகிக்கும் புதிய பென்ஷன் திட்டத்தின் சேமிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதில் தமிழக அரசு ஊழியர்களிடம் பிடித்த தொகை மட்டும் செலுத்தப்படவில்லை.அரசு ஊழியர்கள், பொது நிறுவன தொழிலாளர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. தொடர்ந்து மேற்குவங்காளம், திரிபுரா மாநிலங்களை தவிர்த்து மற்ற மாநில அரசுகளும் செயல்படுத்தின. தமிழகத்தில் 2003 ஏப்., 1 க்கு பின் பணியில் சேர்ந்த ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். அதன்பின் மத்திய, மாநில அரசுகள் ஊழியர்களின் ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை பிடித்து, மத்திய ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்தில் செலுத்தி வருகின்றன.

நமது இ-மெயில்களுக்கு பதிலளிக்கும் கூகுளின் ஸ்மார்ட் ரிப்ளை விரைவில் அறிமுகம்

ஹய்யா, ஜாலி: நமது இ-மெயில்களுக்கு பதிலளிக்கும் கூகுளின் ஸ்மார்ட் ரிப்ளை விரைவில் அறிமுகம்       நமது இ-மெயில்களுக்கு எளிதில் பதிலளிக்கும் விதமாக ‘ஸ்மார்ட் ரிப்ளை’ என்ற புதிய அம்சத்தை இவ்வார இறுதியில் கூகுள் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த புதிய அம்சம் நமக்கு வரும் மெயில்களை ஆழமாக படித்தபின்னர் என்ன பதிலளிக்கலாம்? என மூன்று பதில்களை வெளிப்படுத்தும்.
இதில் ஒன்றை நமக்கு வந்த மெயிலுக்கான பதிலாக தேர்வு செய்துகொள்ளலாம். நமது நேரத்தை மிச்சம் செய்துகொள்ள இந்த புதிய சிறப்பம்சம் உதவும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மீனாட்சி அம்மன் கோயிலில் ஓசோன் படலம் பற்றி தகவல்

       மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள பூகோள சக்கரத்தில், ஓசோன் படலம் பற்றிய அரிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.ஓசோன் படலம் சேதமடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, டில்லி பசுமை தீர்ப்பாயத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. பதிலளித்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், 'ஓசோன் படலம் சேதமடைவது சர்வதேச பிரச்னை' என்றது. இம்மனு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை, நீதிபதி சுதந்தர்குமார் தலைமையிலான பசுமை தீர்ப்பாய பெஞ்ச் கடிந்து கொண்டது.

சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர்

சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர்
உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக டி.எஸ்.தாக்கூர் நியமிக்கப்படுகிறார்.
தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள எச்.எல்.தத்துவின் பதவிக்காலம் வருகிற டிசம்பர் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய தலைமை நீதிபதியை நியமிக்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வந்தது. இந்த பதவிக்காக மூத்த நீதிபதியான டி.எஸ்.தாக்கூரை தற்போதைய தலைமை நீதிபதி தத்து பரிந்துரை செய்திருந்தார்.  

லேப் - டாப்' பதுக்கல் பள்ளிகளுக்கு உத்தரவு

'தமிழக அரசின் இலவச திட்டத்தில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள்; பாலிடெக்னிக் மாணவர்களுக்கு, 'லேப் - டாப்' வழங்கப்படுகிறது. கடந்த, 2013 - 14 கல்வி ஆண்டில், பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு வழங்கியது போக, மீதி உள்ளவற்றை திருப்பி அனுப்புமாறு, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

கணிதத் திறனறிவுத் தேர்வில் பங்கேற்க 18-க்குள் மாணவர்கள் பதிவு செய்யலாம்

         வேலூர் மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெறவுள்ள கணிதத் திறனறிவுத் தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் வருகிற 18-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இதுகுறித்து மாவட்ட அறிவியல் அலுவலர் (பொறுப்பு) ஜெ.ஆர்.பழனிசுவாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தேசிய திறனாய்வு தேர்வு எழுதுவோர் அதிகரிப்பு

        பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மத்திய அரசு மூலம், ஆராய்ச்சி படிப்பு வரை உதவித் தொகை வழங்க, தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. மாநில அளவில் நடக்கும் முதல் கட்ட தேர்வில், முதல், 300 இடங்களில் வருபவர்கள் தேசிய தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

வேலைவாய்ப்பு பதிவு மூப்பு: கட்-ஆஃப் தேதி விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு

         மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படும் பணியிடங்களுக்கான கட்-ஆஃப் தேதி விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் மூலம் அவ்வப்போது நிரப்பப்படும் பணியிடங்களுக்கான பதிவு மூப்பு கட்-ஆஃப் தேதி விவரங்கள் www.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

அரசு ஊழியருக்கான பி.எஸ்.என்.எல். கட்டணச் சலுகையில் 75 சதவீதம் குறைப்பு

         அரசு ஊழியர்களுக்கு பி.எஸ்.என்.எல். (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) நிறுவனம் வழங்கி வந்த தொலைபேசி கட்டணச் சலுகைகள் 75சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளன. முன்னறிவிப்பின்றி எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பொறியியல் மாணவியர் உதவித்தொகை அறிவிப்பு

        நடப்பு கல்வியாண்டில், பி.இ., - பி.டெக்., மற்றும் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவியர், 4,000 பேருக்கு, மத்திய அரசின், 'பிரகதி' திட்டத்தில், உதவித் தொகை வழங்கப்படுகிறது.

பி.எட்., படிப்பில் புதிய மாற்றம் தொடர் மதிப்பீட்டு முறை அறிமுகம்!

பி.எட்., படிப்பில், புதிய பாடத்திட்டம் அமலாகியுள்ள நிலையில், சி.சி.இ., எனப்படும், தொடர் மற்றும் விரிவான மதிப்பீட்டு முறையும், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவுப்படி, நாடு முழுவதும் பி.எட்., படிப்பு இரண்டுஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. 

நவ. 8-இல் தேசிய திறனாய்வுத் தேர்வு 1.50 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்

     தமிழகம் முழுவதும் 387 தேர்வு மையங்களில் நடைபெறும் தேசிய திறனாய்வுத் தேர்வை (என்.டி.எஸ்.இ.) 1.50 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இந்தத் தேர்வு வருகிற ஞாயிற்றுக்கிழமை(நவ.8) நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்விக்கான உதவித் தொகை வழங்குவதற்காக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

மாணவர்களின் தன்மைக்கேற்ற கற்பித்தல் அவசியம்

       மாணவர்களின் தன்மைக்கு ஏற்ப அவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும் என்றார் தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அலுவலர் இரா. திருவளர்செல்வி.

தமிழகத்தில் பருவமழை தொடக்கம் : மழைக்கால நோய்களில் இருந்து தப்பிப்பது எப்படி?

          வடகிழக்கு பருவமழை காரணமாக சீதாஷ்ண நிலை திடீர் திடீரென மாறி வருகிறது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தோர், குழந்தைகள், நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும், சாலைகளில் தேங்கும் மழைநீர் மற்றும் கழிவு நீர் மூலம் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, மழைக்காலங்களில் எச்சரிக்கையாக இருப்பது எப்படி என்பது குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

பெரியார் பல்கலை. தொலைநிலைக் கல்வி மாணவர் சேர்க்கை: யு.ஜி.சி-யின் உத்தரவுக்கு இடைக்கால தடை

சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வியில் 2015-16-ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை கூடாது என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிதது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது

போலி தொலைபேசி அழைப்புகளால் பாலிசிதாரர்கள் ஏமாற வேண்டாம்: எல்.ஐ.சி. நிறுவனம் எச்சரிக்கை

எல்.ஐ.சி. தொடர்பாக வரும் போலி தொலை பேசி அழைப்புகளால் பாலிசிதாரர்கள் ஏமாற வேண்டாம் என அந்நிறுவனம் எச்சரித்து உள்ளது.

ரயிலில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு ‘மொபைல் அப்ளிகேஷன்’ விரைவில் அறிமுகம்

ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக விரைவில் மொபைல் ஆப் (செயலி) அறிமுகப்படுத்தப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.

தீபாவளிக்கு முதல் நாள் நவ., 9ம் தேதி, பள்ளிகளுக்கு விடுமுறை உண்டா?

தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான, நவ., 9ம் தேதி, பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்' என, மாணவர், பெற்றோர் மற்றும் ஆசிரியர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.வரும், 10ம் தேதியான செவ்வாய் கிழமை அன்று, தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் உளவியல் ரீதியாக தயாராக வேண்டும்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை, உளவியல் ரீதியாக தயார்படுத்த வேண்டும்' என, அனைத்து பள்ளிகளையும், தேர்வுத்துறை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

மாணவர்கள் குறைந்த அரசு பள்ளிகளில் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் இடமாற்றம்

மாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளில் பணியாற்றிய பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணிநிரவல் மூலம் மாறுதல் செய்யப்படுகின்றனர். கடந்த 2012 ம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில், அரசு பள்ளிகளில் 6,7,8 ம் வகுப்புகளுக்கு உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி பாடங்களுக்கு மாநிலம் முழுவதும் 16, 549 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 

ஆசிரியர்களை கேவலமாக சித்தரிக்கும் பள்ளிக்கூடம் போகாமலே படத்துக்கு தடைவிதிக்க வேண்டும்

ஆசிரியர் பணியை கேவலப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கூடம் போகாமலே படத்தை எதிர்த்து சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆவடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கல்யாண சுந்தரம் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் 86.66 லட்சம் பேர்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 86 லட்சத்து 66 ஆயிரத்து 755 ஆக உள்ளது. இதில், 44 லட்சத்து 16 ஆயிரத்து 497 பேர் பெண்களாவர்.

கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க தமிழக அரசு ஆணை

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கடந்த 5 மாதங்களாக ஊதியமின்றி பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் 10 மாதங்களுக்கு மட்டும் கௌரவ விரிவுரையாளர்கள் பணியில் அமர்த்தப்படுவர். 

ஜாதி, வருமான சான்றிதழ் பள்ளிகளில் மையங்கள்

பள்ளி மாணவர் களுக்கு, ஜாதி, வருமான மற்றும் இருப்பிட சான்றிதழ் வழங்க, தாலுகாவுக்கு, நான்கு பள்ளிகளில் ஒருங்கிணைந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பள்ளிகளில் சான்றிதழ் மையங்கள்

கடந்த சில ஆண்டுகளாக, பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, ஜாதி உட்பட பிற சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முகாமைத் தவறவிடும் மாணவர்கள், அரசு அதிகாரிகளிடம் கையொப்பம் பெற்று, சான்றிதழ் வாங்கினர். 

"பிளஸ் 2 மாணவர்களுக்கு இரு மாதங்களுக்குள் மடிக்கணினிகள்'

நிகழாண்டில் (2015-16) பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக் கணினிகள் இரு மாதங்களில் வழங்கப்பட்டுவிடும் என கல்வித் துறை அதிகாரிகள் கூறினர். 


தமிழ்நாடு காவல் துறையில் ஆய்வு உதவியாளர் பணி.

தமிழ்நாடு காவல்துறையில் நிரப்பப்பட உள்ள ஆய்வு உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


வருமான வரித்துறை எச்சரிக்கை

வருமான வரி தாக்கல் விவரங்கள் மற்றும் அது தொடர்பான ரகசிய எண்கள், குறிப்புகளை, மொபைல் போன் அல்லது இ - மெயில் வாயிலாக மோசடியாளர்கள் கேட்க வாய்ப்பு உள்ளது; அந்த தகவல்களை, யார் கேட்டாலும் தெரிவிக்க வேண்டாம்' என, வரி செலுத்துவோரை, வருமான வரித்துறை உஷார்படுத்தியுள்ளது.


தமிழ்நாடு அரசில் 859 கால்நடை பாரமரிப்பு உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறையில் நிரப்பப்பட உள்ள 859 கால்நடை பாரமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கு நிரப்ப தகுதியுள்ளோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


08.10.2015 . போராட்டத்தில் மாநில அளவில் கலந்து கொண்டோர் விவரம் (-இயக்குனரிடமிருந்து பெறப்பட்ட தகவல்)

தொடக்கக் கல்வியில் உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை - 1,12,742
* அதில் பள்ளிக்கு சென்றவர்கள்- 33,061
* வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள்- 79,681
* பங்கேற்றோர் % -70.68 %

தீபாவளிக்கு முன் ஆசிரியர்களுக்கு ஊதியம் அளிக்க வலியுறுத்தல்

தீபாவளிக்கு முன்னதாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்றச் சங்கம் கோரியுள்ளது.

பெரியார் பல்கலை. தொலைநிலைக் கல்வி மாணவர் சேர்க்கை: யு.ஜி.சி-யின் உத்தரவுக்கு இடைக்கால தடை

சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வியில் 2015-16-ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை கூடாது என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிதது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

08.10.2015 . போராட்டத்தில் மாநில அளவில் கலந்து கொண்டோர் விவரம் (-இயக்குனரிடமிருந்து பெறப்பட்ட தகவல்)

தொடக்கக் கல்வியில் உள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை - 1,12,742
* அதில் பள்ளிக்கு சென்றவர்கள்- 33,061
* வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள்- 79,681
* பங்கேற்றோர் % -70.68 %

Removal of Grade Pay System in 7th Pay Commission – A detailed report

Removal of Grade Pay System in 7th Pay Commission – A detailed reportWill the removal of Grade Pay System by the 7th Pay Commission help Central Government employees? – This is the topic of this article.“Unconfirmed reports say that the 7th Pay Commission is very likely to recommend the abolishing of the Grade Pay System introduced by the 6th Pay Commission.


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive