மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை முழுமைப்படுத்தும் விதமாக மாநில
அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் புதுவை மத்திய பல்கலைக்கழக கருத்தரங்க
கூடத்தில் காலை 10 மணிக்கு நடக்கிறது.மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை
அமுல்படுத்த திட்டமிட்டுள்ளது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
12th New Study Material - Model Exam Question
- Chemistry | Public Exam Model Question | Mr. K. Manivannan - Tamil Medium
- Chemistry | PTA Model Exam Question | Mr. K. Manivannan - Tamil Medium
அசல் பிறப்புச் சான்றிதழை தருமாறு மாணவர்களை வற்புறுத்தக் கூடாது: சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு உத்தரவு
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மாணவர்களின் அசல் பிறப்பு சான்றிதழைத் தருமாறு
வற்புறுத்தக் கூடாது என சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
முதல்வரை சந்திக்க அனுமதி தராவிட்டால் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்: சங்க மாநிலத் தலைவர் தகவல்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித் துவ பேரவை, கடந்த 2
நாட்களாக உதகையில் நடை பெற்றது. மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வி தலைமை
வகித்தார்.செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு எப்போது
முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பிய பின், பட்டதாரி
ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் 2015 ஆகஸ்ட் 12 முதல் 31 வரை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு,
பொதுமாறுதல் கலந்தாய்வு நடந்தது. பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் பொது
மாறுதல் கலந்தாய்வு இன்னும் நடக்கவில்லை.
கியாரண்ட்டி என்றால் என்ன? , வாரண்ட்டி என்றால் என்ன?
கியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’
என்பது எல்லோருக்கும்
தெரிந்ததே. ‘வாரண்ட்டி’ என்பதும் கிட்ட த்தட்ட
அதே பொருளைக்
குறிக்கும் சொல்தான். ஆனால் சட்டத்தின் பார்
வையில் ‘கியாரண்டி’ என்றால் ‘பொருளை
மாற்றிக் கொடுப்பது,’
வாரண்டி என்றால்
‘சர்வீஸை’க்
குறிப்பது.
தமிழகத்தின் கல்வி முன்னேற்றத்துக்கு மதிய உணவு திட்டமே காரணம்
தமிழகத்தின் கல்வி முன்னேற்றத்துக்கு மதிய உணவு திட்டமே காரணம்: 'நம் கல்வி நம் உரிமை' நூல் வெளியீட்டு விழாவில் என்.ராம் தகவல்
தி இந்து' தமிழ் நாளிதழும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்திய 'நம் கல்வி நம் உரிமை' நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் பங்கேற்றோர் (இடமிருந்து): பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, எழுத்தாளர் எஸ்.வி.வேணுகோபாலன், அறிவியல் இயக்க மாநிலத் தலைவர் எஸ்.மோகனா, 'தி இந்து' குழுமத் தலைவர் என்.ராம் | படம்: க.ஸ்ரீபரத்.தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு மதிய உணவுத் திட்டமே காரணம் என ‘தி இந்து' குழுமத்தின் தலைவர் என்.ராம் தெரிவித்தார்.
ABDUL KALAM BIRTHDAY CELEBRATE ON 15.10.2015
தொடக்கக்கல்வி-அப்துல் கலாம் பிறந்த நாளான அக்டோபர்-15ஆம் நாளை "இளைஞர் எழுச்சி நாளாக கடைப்பிடிக்கவும் பள்ளிகளில் பேச்சுப்போட்டி&கட்டுரைப்போட்டி நடத்திடவும் இயக்குநர் உத்தரவு!!!
ஆயிரம் திரைபடங்கள் கண்ட'கின்னஸ் நாயகி' ஆச்சி மனோரமா காலமானார்
அதிக படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்த நடிகை மனோரமா, 72,
மாரடைப்பால் நேற்று இரவு மரணம் அடைந்தார். பிரபல நடிகை மனோரமா சென்னை,
தி.நகரில் வசித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே அடிக்கடி உடல்நலக்
குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு, மனோரமாவுக்கு
மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள
தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில்,
மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர். நள்ளிரவு, 11:20 மணிக்கு, சிகிச்சை
பலனின்றி இறந்தார்.
பல்கலை பேராசிரியர்கள் மூலம் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி
மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு,
பல்கலை பேராசிரியர்கள் மூலம், பயிற்சி அளிக்கும் புதிய திட்டம் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், பள்ளிக் கல்வி துறையின் கீழ் உள்ள, அரசு
பள்ளிகளில் மட்டும், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 42 லட்சம் மாணவர்கள்
படிக்கின்றனர். சென்னை தவிர, மற்ற மாவட்டங்களில், தனியார் பள்ளிகளை விட,
அரசு பள்ளிகளில் தான் மாணவர்கள் எண்ணிக்கை அதிகம். ஆனால், தேர்வுகளில்
தேர்ச்சி சதவீதம், தனியார் பள்ளிகளை விட குறைவாக உள்ளது.
இன்று வாக்காளர் சிறப்பு முகாம்
''அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், இன்று வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற
உள்ளது,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா
தெரிவித்தார். இது குறித்து, அவர் கூறியதாவது: வாக்காளர் பட்டியலில்
பெயர்களை சேர்த்தல், நீக்கல் போன்ற பணிகளுக்காக, ஏற்கனவே இரண்டு சிறப்பு
முகாம்கள் நடந்துள்ளன. இன்று அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், மூன்றாவது
சிறப்பு முகாம், நடைபெற உள்ளது.
அரசு கலைக்கல்லூரிகளில் நீடிக்கும் ஆசிரியர் பற்றாக்குறை
தமிழகத்தில்
உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், ஆமை வேகத்தில் நடக்கும்,
உதவி பேராசிரியர் பணி நியமனத்தால், 40 சதவீத ஆசிரியர் பணியிடங்கள்
காலியாகவே உள்ளன. 'கெஸ்ட் லெக்சரர்' பணியிடங்களும் முழுமையாக நிரப்பாததால்,
கற்பித்தல் பணிகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஆன்–லைன் விற்பனைக்கு எதிர்ப்பு: மருந்து கடைகள் 14–ந்தேதி அடைப்பு
ஆன்–லைனில் மருந்துகள் விற்பனை செய்வதற்கு தற்போது தடை உள்ளது. இந்த
சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.ஆன்–லைனில்
மருந்து விற்பனையை அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தி வருகிற 14–ந்தேதி
(புதன் கிழமை) நாடு முழுவதும் மருந்து கடைகள் அடைக்கப்படுகிறது.தமிழகத்தில்
40 ஆயிரம் மருந்து கடைகள் உள்ளன.
பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் இலவச அடிப்படை இணைய வசதி: ஏர்செல் நிறுவனம் அறிமுகம்
ஏர்செல் தொலைதொடர்பு சேவை நிறுவனம் இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை,
தமிழ்நாடு வட்டத்தை சேர்ந்த அனைத்து பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கும்
இலவச அடிப்படை இணைய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
உங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்களை இனி 'கூகுள் ட்ரைவ்'வில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்
ஐபோன் பயனாளிகள் தங்களது 'ஐகளவுட்'டில் தங்களது வாட்ஸ்அப் மெசேஜ்களை
சேமித்து வைத்துக்கொள்வதை போல ஆண்ராய்டு பயனாளிகள் இனி தங்களது வாட்ஸ்அப்
மெசேஜ்கள் அனைத்தையும் 'கூகுள் ட்ரைவ்'வில் பரிமாற்றம் செய்து சேமித்து
வைத்துக்கொள்ளலாம்.
TNPSC: டிசம்பர் 27-ல் குரூப்- 2ஏ எழுத்துத் தேர்வு
தமிழக அரசு துறைகளில் உதவியாளர் மற்றும் அதற்கு இணையான பதவிகளை
நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வு நடத்தப்படுகிறது.
இத்தேர்வினை பட்டதாரிகள் எழுதலாம். எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றாலே
போதும். ஏதேனும் ஒரு துறையில் அரசு பணி உறுதி. காரணம், நேர்முகத்தேர்வு
எதுவும் கிடையாது.
தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு முடிவுகள் அக்.12-இல் வெளியீடு
தட்டச்சு, சுருக்கெழுத்து உள்ளிட்ட தொழில்நுட்பப் பாடங்களின் தேர்வு
முடிவுகள் திங்கள்கிழமை (அக். 12) வெளியிடப்படும் என, தொழில்நுட்பக் கல்வி
இயக்ககம் அறிவித்துள்ளது.
அரசு பள்ளிகளில் கணினி கல்வி சாத்தியமா...!!!
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில்
பயிலும்ஏழை,எளிய,கிராமப்புற மாணவர்களை கருத்தில் கொண்டு ஒன்று முதல்
பத்தாம் வகுப்புவரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாயப்படமாக கொண்டுவர
வேண்டும்.அரசு பள்ளியில் பயிலும் ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் கல்வித்
தரத்தை உயர்ந்தும் நோக்கிலும் அரசு பள்ளி மற்றும் மாணவர்களின் எதிர்
காலத்தை கருத்தில் கொண்டு "ஆரம்ப கல்வி முதல் (ஒன்றாம் வகுப்பிலிருந்து
பத்தாம்வகுப்பு வரை)கணினி கல்வியாக கட்டாயக்கல்வியாக கொண்டுவர வேண்டும் .
பி.எட். படிப்பில் சேர 2-வது கட்ட கலந்தாய்வு: 14 முதல் 16-ந்தேதி வரை நடக்கிறது
பி.எட். படிப்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகளில்
சேருவதற்கு மாணவ-மாணவிகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு முடிந்தது. 2-வது
கட்ட கலந்தாய்வு சென்னை காமராஜர் சாலையில் உள்ள லேடி வெலிங்டன் பி.எட்.
கல்லூரி வளாகத்தில் 14-ந் தேதி தொடங்குகிறது. அன்று காலை 9 மணிக்கு
மாற்றுத்திறனாளிகளுக்கும், முன்னாள் ராணுவத்தினர்களுக்கும், கணிதம் படித்த
மாணவிகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.