சமீபத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் அடிப்படையில்
தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்குப் பத்து நாள் உண்டு உறைவிடப் பயிற்சி
அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பயிற்சி இதுவரை தமிழுக்கு
ஒதுக்கப்படவில்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது. தமிழ்தானே! என்கிற
ஏளனம்தான் இன்றுவரை பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் அதிகமானோர் தேர்ச்சி
அடையாததற்குக் காரணம்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர் சங்கங்களின்
கூட்டமைப்பான, 'ஜாக்டோ' கூட்டுக்குழுவின், உயர்நிலைக் குழு கூட்டம்
திருச்சியில் நடந்தது. இதுகுறித்து, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற
பொதுச்செயலர் மீனாட்சி சுந்தரம் வெளியிட்ட அறிக்கை:
துறை ரீதியாக தங்களுக்கு ஏற்படும் குறைபாடுகள் குறித்து பிரதமரிடம்
நேரடியாக முறையிடுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று
ராணுவம், துணை ராணுவப் படைகளின் அதிகாரிகள் உள்பட அனைத்து மத்திய அரசு
ஊழியர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர்-2015
நினைவில் நிறுத்த சில தினங்கள்
5- ஆசிரியர் தினம்
7- மன்னிப்பு தினம்
பிளஸ் 2 காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 10-ஆம் தேதியும், பத்தாம் வகுப்புத் தேர்வு செப்டம்பர் 14-ஆம் தேதியும் தொடங்க உள்ளது. இந்தத்
தேர்வுகள் செப்டம்பர் 25-ஆம் தேதி நிறைவடைகிறது. அதன் பிறகு, செப்டம்பர்
26 முதல் அக்டோபர் 2 வரை பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்படுகிறது என
அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொருட்கள்,
சேவைகளுக்கான கட்டணங்களை நேரடியாகச் செலுத்துவதற்குப் பதிலாக,
'எலக்ட்ரானிக் பேமென்ட்' எனப்படும், கடன் அல்லது பண அட்டைகளைப் பயன்படுத்தி
பணத்தை செலுத்துவோருக்கு சலுகைகள் வழங்க, மத்திய அரசு முடிவு
செய்துள்ளது. 'நெட் பேங்கிங்' எனப்படும், வங்கிகளின் இணையதளம் வழியாக பணம்
செலுத்துவது, அதே முறையில், அவரவர் மொபைல் போன்கள் மூலம் பணம் செலுத்தும்,
'மொபைல் பேங்கிங்', ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கியின் கணக்கிற்கு
இணையதளம் மூலம் பணத்தை மாற்றும் வழிமுறை போன்றவை மூலம் பணம் செலுத்துவதை,
மத்திய அரசு ஊக்குவிக்கிறது.
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளில் 2014-15-ஆம் கல்வியாண்டில்
ஒரு மாணவருக்கான செலவுத் தொகை விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்தப்
பள்ளிகளில் ஒரு மாணவருக்கு ரூ.32,263 செலவாகிறது. இதில் அரசு மானியமாக
ரூ.25,898 வழங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் 40 பேர் மாவட்ட கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.தமிழகத்தின்
அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 20 பேர், மேல்நிலைப்பள்ளி
தலைமையாசிரியர்கள் 20 என 40 பேர் மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் அதற்கு
இணையான மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, மெட்ரிக்.,பள்ளி ஆய்வாளர்
பணியிடங்களுக்கு பதவி உயர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை:கல்வித்துறையில் கட்டாய கல்வி, மாணவர்
கற்றல் திறன், பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும்
நோக்கத்தில், அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) மற்றும்
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டங்கள் (ஆர்.எம்.எஸ்.ஏ.,)
ஏற்படுத்தப்பட்டன.முறையே 2002 மற்றும் 2009ம் ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்த
இத்திட்டங்களுக்கு ஆண்டிற்கு ரூ.ஆயிரம் கோடிக்கு மேல் மத்திய அரசு, மாநில
அரசுகள், 75:25 விகிதத்தில் நிதி ஒதுக்கீடு செய்கின்றன.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, வரும், 5ம் தேதி, ஆசிரியர்தினம்
கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஆசிரியர்களை
தேர்வு செய்து, அவர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன், 'நல்லாசிரியர்' விருது
வழங்கப்படுகிறது.
தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2
பொதுத்தேர்வுகளை நடத்தும், அரசு தேர்வுகள் துறை இணையதளம், தனியார்
நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதால், தேர்வு மற்றும் துறை ரீதியான
ரகசியங்கள் கசியும் அபாயம் உள்ளது.
அண்ணாமலை பல்கலைக் கழக பதிவாளர் டாக்டர்
ஆறுமுகம், தாக்கல் செய்த மனு:யு.ஜி.சி., உத்தரவுப்படி, 1979 - 80ல்,
அண்ணாமலை பல்கலையில், தொலைதுார கல்வி துவங்கப்பட்டது. நாடு முழுவதும், 89
மையங்கள் மூலம், தொலைதுார கல்வி வழங்கி வருகிறோம். கடந்த மாதம், 14ம் தேதி,
டில்லியில் உள்ள, யு.ஜி.சி.,யின் தொலைதுார கல்வி அமைப்பு, எங்களுக்கு ஒரு
உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில்
இதுவரை 22 லட்சத்து 19 ஆயிரத்து 866 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள்
வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் முக்கூர்
என்.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் விற்பனை, கட்டுமானப்
பணிகள் போன்றவற்றில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகக் கூறி அலுவலர்
சங்கத்தினர் தொடர் போராட்டம் காரணமாக பல்கலைக்கழகத்தின் தேர்வுக்
கட்டுப்பாட்டு அலுவலர் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதலாமாண்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். வகுப்புகள் செவ்வாய்க்கிழமை (செப்.1) தொடங்க உள்ளன.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மூன்றாம் கட்டக் கலந்தாய்வு
செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என அதிகாரிகள்
தெரிவித்தனர். சென்னை உள்பட 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2,257
எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியின்
தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 85 பி.டி.எஸ். இடங்கள் என அனைத்திலும் மாணவர்
சேர்க்கைக்கான இரண்டு கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது.
தமிழகத்தில் சித்தா,
ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்காக, ஆறு அரசு
மருத்துவக் கல்லுாரிகளில், 336 இடங்களும்; 21 சுயநிதி கல்லுாரிகளில்,
1,143 இடங்களும் உள்ளன. மொத்தமுள்ள, 1,479 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் பணி, ஜூலை, 31ல் முடிந்தது; 5,100 பேர்
விண்ணப்பித்து உள்ளனர்.
பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வருகிற செப்.,02 அன்று காலை 10.00 மணி முதல் செப்.,09 வரை தாங்கள், தேர்வெழுதிய தேர்வு மையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு தேர்வாணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவுமுதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாயும் டீசல் விலை லிட்டருக்கு 50 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது.
பிஎப் கணக்கில் இருக்கும் இருப்புத் தொகை, கடைசியாக செலுத்திய மாத சந்தா
விவரங்களை செல்போன் மூலம் அறிந்து கொள்வதற்காக யுனிவர்சல் அக்கவுன்ட் எண்
வழங்கப்பட்டு வருகிறது என வருங்கால வைப்பு நிதி அலுவலகம்
தெரிவித்துள்ளது.இதுகுறித்து, தாம்பரத்தில் உள்ள வருங்கால வைப்பு நிதி
முதலாவது முதன்மை மண்டல ஆணையர் மூ.மதியழகன் வெளியிட்டுள்ள செய்திக்
குறிப்பில் கூறியிருப்பதாவது:
வாட்ஸப் வெர்ஷன் 2.12.5 நிறைய புது வசதிகளை கொண்டு வந்திருப்பது மகிழ்ச்சி
என்றாலும் இது நிறைய பிரச்சினைகளை கொண்டு வரும் என்பது மாற்றுக்கருத்தல்ல.
இது எப்படி என்றால் இந்த வகை வெர்ஷன் உங்களின் அனைத்து
வீடியோக்களையும்பத்திரமாக கிளவுட்டில் சேமித்து வைக்கும்.
சமையல் எரிவாயு உருளைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் புதிய வசதியை
மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் டெல்லியில் தொடக்கி
வைத்தார்.இதன் மூலம், இணையதளம் மூலம் வாடிக்கையாளர்கள் இனிமேல் புதிய
சமையல் எரிவாயு உருளை இணைப்புகள் கோரி விண்ணபிக்கலாம்.
English Study Material
Prepared by T.BALAGANESAN,
மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது வருங்கால வைப்புநிதியில் இருந்து முன்பணம் பெற முடியாமல் தவித்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
‘பிளட் மூன்’ என்பது பொதுவாக பேரழிவிற்கு எச்சரிக்கையளிக்கும் கடவுளின்குறியீடாக பல்வேறு சமூகத்தைச் சார்ந்த மக்களால் கருதப்படுகிறது.
பள்ளிக்கல்வி -
பள்ளிகள் 2015/2016 கல்வி ஆண்டிற்கான இரண்டாம் பருவ பாடபுத்தகங்களை
"தமிழ்நாடு பாடநூல் கழகம்" இணையதளத்தில் "ONLINE" பதிந்து, புத்தகங்களை
பெற்றுக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது - இயக்குனர் செயல்முறைகள்
வருவாய்த் துறையின் சேவை மக்களுக்கு விரைந்து கிடைத்திடும் வகையில்
நடப்புஆண்டில் 16 கோடி ரூபாய் செலவில் 16 புதிய வட்டங்கள் உருவாக்கப்படும்
என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது முகனூல் பதிவில்
கூறியிருப்பதாவது:மக்களோடு என்றும் தொடர்பில் இருக்கும் நோக்கத்தில்
M.K.Stalin என்ற செல்போன் செயலி சேவையை நான் தொடங்குகிறேன்.
அரசின் இலவச நலத்திட்டத்திற்கு தனி உதவியாளர் மற்றும் ஆதார் அட்டை பணியை வருவாய்துறையினரிடம் ஒப்படைக்க கோரி தலைமை ஆசிரியர் சங்கத்தினர் போராட முடிவு செய்துள்ளனர்.
அரசு வழங்கிய கம்ப்யூட்டர், இன்டர்நெட் உள்ளிட்ட வசதிகள் இருந்தபோதும், பள்ளி மாணவர்கள் குறித்த புள்ளி விபரங்களை ஆன்-லைனில் சேர்க்கும் பணிக்காக ஆசிரியர்கள் தனியார் இன்டர்நெட் மையங்களில் தவம் கிடக்கின்றனர்.
சத்தியமங்கலம் பகுதியில் உள்ள மலைகிராம குழந்தைகளுக்கு, முழுமையான கல்வி கிடைக்காத நிலை நீடித்து வருகிறது. இதனால் மலைகிராம குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.