தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-2 பதவிக்களுக்கான போட்டித் தேர்வு வரும் 26 ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.இத்தேர்வுக்கு மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களின் முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
ஆக.,1ல் ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு?
ஆசிரியர்கள்
எதிர்பார்த்த பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஆக.,1 அல்லது
2ம் தேதி துவங்க வாய்ப்பு உள்ளது. இந்தாண்டு கலந்தாய்வு நிபந்தனை தொடர்பாக
ஆசிரியர்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம் !
CEO Transfer list.
- KANCHEEPURAM SSA CEO Seethalakshmi to CEO tiruvellore,
- R.Boopathy TRB DD to CEO vellore,
- Anitha CEO Chennai ADDL charge Trb DD,
- Kasthuri Bai SSA CEO Vellore to CEO Nagapattinam,
- Arul mozhi devi SSA CEO Cuddalore to DD DPI
ஆசிரியர்களுக்கு கடிவாளம் அவசியம் தீர்வு என்ன?
ஒழுங்கீனமாக நடந்து கொண்ட, இரு தலைமை ஆசிரியர்கள் உட்பட நான்கு ஆசிரியர்கள் மீது, கல்வித்துறை சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க, நடவடிக்கையை கடுமையாக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.விடலை பருவம் எனப்படும், பதின் வயதுகளில் மாணவ, மாணவியர், தெரிந்தோ, தெரியாமலோ தவறு செய்வது இயல்பு; புகை பிடித்தல், மது அருந்துதல், காதல் வயப்படுவது இப்பருவ வயதின் வெளிப்பாடு. சமீபத்தில், கோவையில் பள்ளி மாணவி ஒருவர், மதுபோதையில், ரோட்டில் கலாட்டா செய்து, பரபரப்பை ஏற்படுத்தினார்.
மாணவர்கள் மோதல் தடுக்க கவுன்சிலிங்
பள்ளி மாணவர்களிடையே மோதல்கள் ஏற்படுவதை தடுக்க மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை சார்பில் கவுன்சிலிங்க் கொடுக்கப்பட்டு வருகிறது.
பத்தாம் வகுப்பு தேர்வு வினாத்தாளில் மாற்றம்: பள்ளி கல்வி இயக்குனர் பேட்டி
"இந்தாண்டு
பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு வினாத்தாளில் மாற்றம் செய்யப்பட உள்ளது"
என பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார்.மதுரையில் மண்டல
அளவிலான கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியர்கள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற
அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
TNPSC தேர்வு விவரம் இணையதளத்தில் வெளியீடு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்படும், பணி நியமனம் மற்றும் துறைகள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 மாணவர்களின் ரேஷன், ஆதார் எண் சேகரிப்பு
நடப்பு
கல்வி ஆண்டில், பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியரின் ரேஷன் அட்டை,
ஆதார் அட்டை மற்றும் மொபைல் போன் விவரங்களை சேகரிக்க, அரசு தேர்வுகள் துறை
உத்தரவிட்டு உள்ளது.இதன்படி,
'அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி கள், தங்கள் பள்ளி பிளஸ் 2
மாணவர்களின் விவரங்கள் அடங்கிய உறுதிமொழி படிவத்தை, உடனடியாக தயாரிக்க
வேண்டும்' என, தேர்வுத் துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தராதேவி தெரிவித்து
உள்ளார்.
ஓய்வூதிய திட்ட கணக்கில் குளறுபடி: பல ஆயிரம் கோடி ரூபாய் 'அம்போ!'
பங்களிப்பு
ஓய்வூதியமான -- சி.பி.எஸ்., திட்டத்தில், கணக்கு எண் குளறுபடியால், 50
ஆயிரம் அரசு ஆசிரியர்களின் ஓய்வூதியம் கேள்விக்குறியாகி உள்ளது. பலருக்கு,
ஓய்வூதியமே கைக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டு உள்ளது.
ஆடிப் பெருக்கு தருமபுரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு சைக்கிள்தாமதமின்றி வழங்க உத்தரவு
அரசு
மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச
சைக்கிள்களை, தாமதமின்றி வழங்கும்படி, அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு: மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யலாம்
CLICK HERE TO DOWNLOAD.....
பத்தாம்
வகுப்பு சிறப்பு துணைத் தேர்வை எழுதிய மாணவர்கள் தங்களது தாற்காலிக
மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம் என
அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.அரசுத்
தேர்வுகள் இயக்ககத்தின் www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலிருந்து
தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் வெள்ளிக்கிழமை (ஜூலை 24) முதல்
பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு பதில் பெற்றோர் மருத்துவ கலந்தாய்வில் அனுமதி
'மருத்துவ படிப்புக்கான, தேசிய மறு நுழைவுத்தேர்வு இன்று நடப்ப தால்,
மாநில கலந்தாய்வில், மாணவர்களுக்கு பதில், பெற்றோர் பங்கேற்கலாம்' என,
மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண்: விடைத்தாளை மீண்டும் திருத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
ஆசிரியர் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் பெற்றவரது விடைத்தாளை மீண்டும் திருத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
சித்தா, ஆயுர்வேத படிப்பு: விண்ணப்பம் பெற இன்றே கடைசி
தமிழகத்தில், இந்திய மருத்துவ படிப்புகளுக்காக, ஆறு அரசு மருத்துவக்
கல்லுாரிகளில், 336 இடங்கள்; 21 சுய நிதி கல்லுாரிகளில், 1,143 இடங்களும்
உள்ளன. மாணவர் சேர்க்கை விண்ணப்ப வினியோகம், ஜூன், 29ம் தேதி முதல் நடந்து
வருகிறது.விண்ணப்பம் பெற இன்று, கடைசி நாள். இதுவரை, 4,400க்கும் மேலான
விண்ணப்பங்கள் வினியோகிக்கப் பட்டுள்ளன; 3,800 விண்ணப்பங்கள்
சமர்பிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை சமர்பிக்க, வரும், 31ம் தேதி வரை
அவகாசம் உள்ளது.
+2 தேர்வில் சிறந்த மதிப்பெண்ணுடன் மாணவ, மாணவியரை தேர்ச்சி பெற வைப்பதே ஆசிரியர்களின் தலையாய பணி! இயக்குநர் பேச்சு
தொடர்ந்து கற்கும் ஆசிரியரால் மட்டுமே,
பள்ளியில் மாணவர்களுக்கு பாடங்களை சிறப்பாக கற்பிக்க முடியும்,''என, தமிழக
பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், திருச்சியில் பேசினார்.திருச்சி,
பாரதிதாசன் சாலையில்உள்ள
கேம்பியன் பள்ளியில், தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை மண்டல அளவிலான
ஆய்வுக் கூட்டம், பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தலைமையில்
நடந்தது.
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் CPS தொகையை செலுத்தாத தமிழக அரசு: தகவல் உரிமை சட்டத்தில் அம்பலம்
ஆசிரியர்கள்
மற்றும் அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம்
செய்யப்பட்ட 5,000 கோடி ரூபாயை தமிழகஅரசு மத்திய அரசிடம் செலுத்தவில்லை
என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
10 லட்சம் 'ஆடிட்டர்'கள் தேவையாம்படிப்பவர்களுக்கு அடிக்கிறது யோகம்!
''இந்தியாவில்,
ஐந்து ஆண்டுகளுக்குப் பின், 10 லட்சம் ஆடிட்டர்கள் தேவைப்படுவர்,'' என,
ஐ.சி.ஏ.ஐ., துணைத்தலைவர் தேவாரெட்டி தெரிவித்தார்.
மாணவிகளின் உயர் கல்விக்கான "உதான்' திட்டம்: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 3 கடைசி நாள்
மத்திய
அரசின் உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் மாணவிகள் சேரும் வகையில்
நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் பயிற்சித் திட்டமான "உதான்' திட்டத்தின்
கீழ் பயன்பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.இதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 3 கடைசித் தேதியாகும்.
தமிழகத்தில் 75 கல்வி அலுவலர் பணியிடங்கள் காலி
தமிழகத்தில்
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.) அளவில் 10 பணியிடங்களும்,
மாவட்டக் கல்வி அலுவலர் (டி.இ.ஓ.) அளவில் 65 பணியிடங்களும் பல மாதங்களாக
காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என
தலைமையாசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எந்த அரசுப் பள்ளியும் மூடப்படவில்லை- பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி
தமிழகத்தில் எந்த அரசுப் பள்ளியும் மூடப்படவில்லை என்று பள்ளிக் கல்வித்
துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.சென்னை, அசோக் நகர் பெண்கள்
மேல்நிலைப் பள்ளியில் மாணவியருக்கு இலவச சைக்கிள்வழங்கும் விழா
வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு
வருமான சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கலால், சிறுபான்மைப் பிரிவு
பள்ளி மாணவர்கள், கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட், 15ம் தேதி வரை
கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
ஒழுங்கு நடவடிக்கை எச்சரிக்கை நடுக்கத்தில் ஆசிரியர்கள்.
'பள்ளிகளில் செயல்முறை, படைப்பாற்றல் கல்விமுறையை பின்பற்றாவிட்டால்
ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என தொடக்கக் கல்வித்துறை
எச்சரித்துள்ளது.அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 4 ம் வகுப்பு
வரை செயல்வழி கல்விமுறை செயல்படுத்தப்பட்டது.
பள்ளி கல்வித்துறை மீது கலை ஆசிரியர்கள் புகார்.
இடமாறுதல் "கவுன்சிலிங்' உத்தரவில், ஆசிரியர்களை பள்ளி கல்வித்துறை
பழிவாங்குவதாக, கலை ஆசிரியர் நலச்சங்கம் புகார் தெரிவித்துள்ளது.
சென்னை பல்கலை உடனடித் தேர்வு முடிவு வெளியீடு.
சென்னை பல்கலை பட்டப்படிப்புக்கான உடனடித் தேர்வு முடிவுகள், இன்று
வெளியிடப்படுகின்றன. இதுகுறித்து, சென்னைப் பல்கலை வெளியிட்ட அறிவிப்பில்,
'இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளுக்கு, ஜூலையில் நடந்த உடனடித் தேர்வு
முடிவுகள், இன்று, results.unom.ac.in/, www.unom.ac.in என்ற பல்கலை
இணையதளத்தில் வெளியிடப்படும்' என, கூறப்பட்டுள்ளது.
இறப்பு சான்றிதழ் அளித்தால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்க வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு
உறவினர்கள் இறப்பு சான்றிதழ் அளித்தால் மட்டுமே இறந்தவர்கள் பெயரை
வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா
தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்
கூறியிருப்பதாவது:
பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிக்காக ரூ 233 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் செந்தில் பாலாஜி
பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு, மிதிவண்டிகள் வழங்க 233 கோடி ரூபாய் நிதி
ஒதுக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி
தெரிவித்துள்ளார்.கரூர் மாவட்டத்தில் 12 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு
அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.