Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
"பாஸ்போடலைனா செத்துடுவோம்!' - அரசு பள்ளியில் அவலம்!
"எங்கள் பள்ளி ஆசிரியர்கள் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டு அனைவரையும்
தேர்ச்சி பெற வைக்கவில்லை. எங்களை திட்டமிட்டு தேர்ச்சி பெறாமல்
செய்துவிட்டார்கள். ஏன் எங்களை தேர்ச்சி பெறவைக்கவில்லை என கேட்டதற்கு,
உங்களை துணி இல்லாமல் காவல்துறையிடம் அழைத்துச்செல்வோம் என்று கடுமையாக
மிரட்டுகிறார்கள். அதனால் நாங்கள் மிகவும் மன உளைச்சல் அடைந்துள்ளோம். எனவே
இவ்விஷயத்தில் தலையிட்டு இன்று மாலை 4.30 மணிக்குள் பன்னிரெண்டாம்
வகுப்பில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் தூக்குப்போட்டு
தற்கொலை செய்துகொள்வோம்.”
தற்போது பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்த தீர்மானம்
கர்நாடகாவில், 7ம் வகுப்பு மாணவர்களின் கல்வித்திறனை மதிப்பிட, தகுதி
தேர்வு நடத்த ஆலோசித்து வரும் கல்வித்துறை, தற்போது, ஆசிரியர்களுக்கும்
தகுதித்தேர்வு நடத்த தீர்மானித்துள்ளது. ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை
அறிய முன்வந்துள்ள கல்வித்துறை, மாநிலத்தில் உள்ள துவக்கப்பள்ளி
ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்த தீர்மானித்துள்ளது
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., தரவரிசை வெளியீடு 200க்கு 200 'கட் - ஆப்' எடுத்து 17 பேர் முதலிடம்
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பு கலந்தாய்வுக்கான தர
வரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 200க்கு 200 'கட் - ஆப்'
மதிப்பெண் எடுத்து 17 பேர் முதலிடம் பெற்றுள்ளனர்.
கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடைத்தரகர்கள் வசூல் வேட்டை போலீசில் புகார் செய்ய முதல்வர்கள் முடிவு
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பெரும்பாலும்
முடிந்துவிட்ட நிலையில் 'சீட்' வாங்கித் தருவதாக இடைத்தரகர்கள் பெற்றோரிடம்
வசூல் வேட்டை நடத்துகின்றனர். இதுகுறித்து போலீசில் புகார் செய்ய கல்லூரி
முதல்வர்கள் முடிவு செய்துள்ளனர்.கல்லூரிகளில், புதிய கல்வியாண்டுக்கான
முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
தொழிற்கல்வி ஆசிரியர்கள் பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்
சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஈரோட்டில் நடந்தது. மாவட்ட தலைவர்
ஆறுமுகம் தலைமை வகித்தார். பணி நிறைவு ஆசிரியர்கள் ராமசாமி, செங்கோட்டையன்,
விஸ்வநாதன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பின்னர் நடந்த
பொதுக்குழு கூட்டத்தில், பொது செயலாளர் நேரு ஆகியோர் பேசினார்.
வேளாண்மைப் படிப்புகளில் சேர 29 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ஜூன் 20-இல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு
தமிழகத்தில்
வேளாண்மைப் படிப்புகளில் சேர 29,825 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதையடுத்து, ஜூன் 20-ஆம் தேதி (சனிக்கிழமை) தரவரிசைப் பட்டியல்
வெளியிடப்படுகிறது.
பள்ளிக்கு தாமதமாக வந்த 7 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசுபள்ளி ஆசிரியர்கள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். செங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இறைவணக்கம்
முடிந்தபிறகு தாமதமாக வந்த 7 ஆசிரியர்கள்மீது மாவட்ட கல்வித்துறை அலுவலர்
இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
TET பொருந்தாது: சிறுபான்மை பள்ளிகளுக்கு- சென்னை உயர் நீதிமன்றம் ஆணை...
TET பொருந்தாது: சிறுபான்மை பள்ளிகளுக்கு- சென்னை உயர் நீதிமன்றம் ஆணை...
Click Here & Download Court Judgement Copy
பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு நாடு முழுவதும் இலவச ரோமிங்:இன்று முதல் அமல்
பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு நாடு முழுவதும் இலவச ரோமிங் இன்று முதல்
அமலுக்கு வருகிறது.இதுகுறித்து கடந்த 2ம் தேதி மத்திய தொலைதொடர்புத் துறை
அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நுகர்வோரின்
தீவிரமான பிரச்னையாக கருதப்படும் "பாதியிலேயே அழைப்பு துண்டிக்கப்படும்'
(கால் டிராப்) விவகாரத்துக்கும் தீர்வு காண முயற்சி எடுக்கப்பட்டு
வருகிறது.
இந்தியாவில் வெளியாகியுள்ள 7 ஸ்மார்ட்போன்கள்
ஸ்மார்ட்போன் வாங்க ஆர்வமாக உள்ளீர்களா? இதுதான் தருணம்,கிட்டத்தட்ட 7 வகையானஸ்மார்ட்போன்கள் கடந்த ஒரு மாதத்திற்குள் இந்திய சந்தையில் களமிறங்கியுள்ளன.அவற்றை பற்றிய சில அலசல்கள்.
அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு செல்லாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
வினாத்தாள் மற்றும் விடைகள் முன்கூட்டியே வெளியான விவகாரம் மற்றும் பல்வேறு
புகார்கள் காரணமாக சர்ச்சையில் சிக்கியதையடுத்து நாடு முழுவதும் நடைபெற்ற
அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு செல்லாது என்று உச்சநீதிமன்றம் இன்று
அதிரடியாகதீர்ப்பளித்துள்ளது
அரசு பள்ளி ஆசிரியர்களின் காலில் விழுந்து பாராட்டிய தொழிலதிபர்
மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள்
உயர்நிலைப் பள்ளியில் பத்து, பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் மூன்று
இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
வலைதளம் மூலம் சம்பள பட்டியலில் பதிவு செய்யாத ஆசிரியர்களின் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு
தொடக்கக் கல்வி - வலைதளம் மூலம் சம்பள பட்டியலில் பதிவு செய்யாத ஆசிரியர்களின் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு
தணிக்கை சார்பான அறிவுரைகள் வழங்குதல் சார்பு
பள்ளிக்கல்வி - தணிக்கை - பள்ளிகளின் செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தணிக்கை சார்பான அறிவுரைகள் வழங்குதல் சார்பு
தமிழர்களின் விளையாட்டு எத்தனை என்பது தெரியுமா ?
விளையாட்டு என்றால் கிரிக்கெட் என்பதும் சில இடங்களில் கால்பந்து கொஞ்சம்
பணம் சேர்ந்து விட்டால் காலை இறகுபந்து விளையாடுவதும் அப்படியே இல்லை
என்றாலும் கணினியில் Ww விளையாடுவதும் இது தான் விளையாட்டு என்றாகி விட்டது
.
பட்டதாரிகளுக்கு ஐடிபிஐ வங்கியில் உதவி மேலாளார் பணி
மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் தொழிற்துறை வளர்ச்சி வங்கியான ஐடிபிஐ
வங்கியில் காலியாக உள்ள 500 உதவி மேலாளர் பணியாளர் பணியிடங்களை நிரப்ப
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
10th Study Material for 1st Midterm Exam
Tamil Study Material
Thanks to Mr. R. Damoodiran, GHRSS, Melatur.TNPSC: குருப் 4 சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடக்கம் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்துக்குள் நுழைய கடும் கட்டுப்பாடு
குருப்4 சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடங்குகிறது. தேர்வாணைய
அலுவலகத்திற்குள் விண்ணப்பதாரர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று
டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
CPS-மதுரை உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல்
CPS திட்டத்தில் ஓய்வு பெற்றோர் மற்றும் மரணம் அடைந்தோருக்கு CPS தொகையை வழங்குமாறு மதுரை உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தகவல்-திரு.எங்கெல்ஸ்
தகவல்-திரு.எங்கெல்ஸ்
கழிப்பறைகளை பராமரிக்க துப்புரவாளர் நியமனம்
சென்னை:தமிழக
சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதா, 110வது விதியின் கீழ் வெளியிட்ட
அறிவிப்பில், 'அரசு தொடக்க, நடுநிலை நகராட்சி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்
பள்ளிகளின் கழிப்பறைகளை பராமரிக்க, உள்ளாட்சி துப்புரவு பணியாளர்கள்
நியமிக்கப்படுவர். இதற்கு, 160.70 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்' என்று தெரிவித்திருந்தார்.
அம்மா சிமெண்ட் குடோன்களில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
திருவாரூர்
மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அம்மா சிமென்ட் வழங்கும் திட்ட குடோன்களில்
உதவியாளராக பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்கலா ம் எனத் தெரிவித்துள்ளார்
மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.
தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
தனியார் பள்ளிகளில் 25 சதவீத இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு இன்று முடிகிறது.மத்திய
அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி சிறுபான்மை அந்தஸ்து பெற்ற
பள்ளிகள் தவிர தனியார் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ.,
பள்ளிகளில், மொத்த இடங்களில் 25 சதவீதத்தை 6 முதல் 14 வயது வரையிலான மாணவர்களுக்கு இலவசமாக ஒதுக்க வேண்டும்.
தனியார் பள்ளி கல்விக் கட்டண புகார்:விசாரிக்க சி.இ.ஓ.,க்களுக்கு அதிகாரம்
தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணப்
புகார்கள் குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளான - சி.இ.ஓ.,க்கள்
விசாரிக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.தமிழகத்தில் பள்ளி
மற்றும் கல்லுாரிகளில், புதிய கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து
வருகிறது. பல்வேறு தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணய கட்டணத்தை விட, கூடுதல்
கட்டணத்தை வசூலிப்பதாக, புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு
தமிழகத்தில்,
20 அரசு மருத்துவக் கல்லூரிகளும், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரியும்
உள்ளன. இவற்றில், மாநில ஒதுக்கீட்டிற்கு, 2,257 எம்.பி.பி.எஸ்., - 85
பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. சுயநிதிக் கல்லூரிகளில், 580 இடங்கள் உள்ளன.
இந்த இடங்களுக்கான, மாணவர் சேர்க்கை முதற்கட்ட கலந்தாய்வு, வரும் 19ம் தேதி
துவங்குகிறது.பிளஸ் 2 மறுகூட்டல் முடிவு கள் குறித்த, 'சிடி'யை, பள்ளிக்
கல்வித் துறை, 12ம் தேதி மருத்துவக் கல்வி இயக்கத்தில் வழங்கியது.