Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
ஆய்வக உதவியாளர் தேர்வு 'ரிசல்ட்' தாமதமாக வாய்ப்பு
ஆய்வக உதவியாளர் பதவிக்கான தேர்வில், கணினி
வழி விடைத்தாள் திருத்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வழக்கு நிலுவையில்
உள்ளதால், தேர்வு முடிவுகள் வெளியாவது தாமதமாகும் என, தகவல் வெளியாகி
உள்ளது.தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளின் ஆய்வகங்களில் காலியாக உள்ள, 4,362
உதவியாளர் பணி இடங்களுக்கு, நியமன நடவடிக்கை துவங்கி உள்ளது. எழுத்துத்
தேர்வு, மே, 31ம் தேதி நடந்தது; 8.84 லட்சம் பேர், தேர்வு எழுதினர்.
பொதுமாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை வெளியிட வேண்டும்.
ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணையை உடனே வெளியிட
வேண்டும்' என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம்
திண்டுக்கல்லில் நடந்தது. மாநில துணைத் தலைவர் திருநாவுக்கரசு தலைமை
வகித்தார்.
சிங்கப்பூர் பள்ளியில் தமிழாசிரியர் பணிக்கு அண்ணாமலைப் பல்கலையில் வளாகத் தேர்வு.
சிங்கப்பூர் பள்ளியில் தமிழாசிரியர்களாக பணியாற்ற முதன் முறையாக அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல்துறையில் வேலைவாய்ப்பு முகாம்
நடத்தப்படுகிறது.
கல்லூரிகளில் பேராசிரியர் பணி: தகுதிக்கும் திறமைக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்- ஜி.கே.வாசன் கோரிக்கை.
கல்லூரிகளில் பேராசிரியர் பணியிடங்கள் போட்டித் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நடைபெறும் போதுதான் திறமை மிக்க பேராசிரியர்களை நியமிக்க முடியும் என
தமிழக அரசுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் முதன்முறையாக பார்வையிழந்த தமிழக பெண் ஐ.எப்.எஸ். அதிகாரியாக நியமனம்.
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த சார்லஸ், மேரி பத்மஜா தம்பதிகளின் மகள் என்.எல்.பினோ செடின். (வயது 24) பார்வையிழந்த பெண். இவர்
பார்வையிழந்தோருக்கான சிறுமலர் பள்ளியில் பள்ளிபடிப்பை முடித்தார்.
TNPSC நேர்காணல் தேர்வு: தெரிவிப் பட்டியல் வெளியீடு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் பல்வேறு அரசுப் பணிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வில் தகுதிபெற்று, நேர்காணலுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இந்தப் பட்டியலை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
போலி மாணவர்கள் விவகாரம்: 'பாஸ்வேர்டு' மாற்ற உத்தரவு
கல்வித் துறை அலுவலகங்களில் உள்ள கணினியில்,
'பாஸ்வேர்டை' மாற்றுமாறு, உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழக கல்வித்
துறையில், 10க்கும் மேற்பட்ட இயக்குனரகங்கள் உள்ளன.
'இலவச லேப் - டாப் இப்போதைக்கு கிடைக்காது'
'தமிழக அரசு சார்பில், பிளஸ் 2 மாணவ,
மாணவியருக்கு வழங்கப்படும் இலவச, 'லேப் - டாப்' வினியோகம் துவங்க, மேலும்
சில மாதங்களாகும்' என, தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் தெரிவித்து
உள்ளனர்.
'மேத்ஸ், பயாலஜி' குரூப்பில் சேர ஆர்வம் குறைந்தது
கடந்த ஆண்டு, உயிரியல் தேர்வு கடினமாக
வந்ததின் எதிரொலியாக, பிளஸ் 1 சேர்க்கையில், 'மேத்ஸ், பயாலஜி' பிரிவில்
சேரும் ஆர்வம், மாணவர்களிடையே குறைந்துள்ளது.
வரும் 24ம் தேதி 'ஸ்டிரைக்' வங்கி ஊழியர்கள் முடிவு
பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளை
இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, வரும், 24ம் தேதி, ஒருநாள், நாடு முழுவதும்,
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்கின்றனர்.
தமிழ்வழி மாணவர்களுக்கே மாநில அரசின் பாராட்டு, பரிசுதமிழ் ஆசிரியர்கள் வலியுறுத்தல்
தமிழ்வழி மாணவர்களுக்கே பொதுத் தேர்வில்
மாநில முன்னிலை இடங்களுக்கான பரிசு மற்றும் மருத்துவம், பொறியியல்
படிப்பில் முன்னுரிமை தர வேண்டும் என, அரசுப் பள்ளி தமிழ் ஆசிரியர்கள்
வலியுறுத்தியுள்ளனர்.
கணினி பட்டதாரிகளுக்கு ஆசிரியர் கவுன்சிலிங் எப்போது?
தமிழக அரசு பள்ளிகளில், கணினி ஆசிரியர்
நியமனத்தில், கலப்பு திருமணம் புரிந்தோர் பிரிவினர், 133 பேருக்கான
கவுன்சிலிங்கிற்கு, தடை கோரியது தொடர்பான வழக்கு விசாரணை, உயர்
நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.
என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது; மாணவர்கள், பெற்றோர்கள் நிற்க பந்தல் அமைக்கும் பணி தீவிரம்
என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது. கலந்தாய்வுக்கு
வரும் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் நிற்க பந்தல்கள் அமைக்கும் பணி
தீவிரமாக உள்ளது.
TNPSC : ஒரே நாளில் 3 துறைகளின் தேர்வு முடிவுகள்
அறநிலையத்துறை செயல் அலுவலர் பணி உள்ளிட்ட மூன்று துறைகளின் பணி
நியமனத்துக்கான தேர்வு முடிவுகளை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான
டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.* அறநிலையத்துறை
செயல் அலுவலர் பதவிக்கு, 2013ல் நடந்த எழுத்துத் தேர்வில், 49 பேர்
தேர்ச்சி பெற்றுள்ளனர். வரும், 23ம் தேதி நேர்முகத் தேர்வு நடக்கிறது.
இளநிலை ஆராய்ச்சியாளர் தகுதித் தேர்வு:காரைக்குடியில் ஜூன் 21ல் நடக்கிறது
இளநிலை ஆராய்ச்சியாளர்,விரிவுரையாளர் தேசிய
தகுதி தேர்வு, வரும் 21ம் தேதி காரைக்குடியில் 'சிக்ரி' சார்பில்
அமைக்கப்பட்டுள்ள 9 மையங்களில் நடக்கிறது.
கல்லூரியில் காலியிடங்களுக்கு சீட்டு போடும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மூன்றாம் கட்ட கவுன்சிலிங் இழுபறி
காரைக்குடி:அரசு அறிவியல் மற்றும் கலை
கல்லுாரிகளில் முதலாமாண்டு சேர்ந்த மாணவர்கள், இன்ஜி., நர்சிங் படிப்புக்கு
செல்வதால், அந்த காலியிடங்களை மூன்றாம் கட்ட கவுன்சிலிங் மூலம் நிரப்ப
அரசு கல்லுாரிகள் முடிவு செய்துள்ளன. இதை அறிந்த அரசியல் கட்சியினர் அந்த
இடங்களுக்கு சிபாரிசு கடிதம் அனுப்பி வருகின்றனர்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு
சிதம்பரம்
அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட
படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி ஜூன் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசுப் பள்ளியில் மாணவர், ஆசிரியர் விகிதம் 8:2.
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை என கூறும் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு ஆரம்பப் பள்ளிகளில், எட்டு
மாணவர்களுக்கு, இரு ஆசிரியர் உட்பட நான்கு ஊழியர்கள் பணியாற்றும் கூத்து
புதுச்சேரியில் அரங்கேறி வருகிறது.
கல்லூரி தேர்வில் குழுவாக அமர்ந்து காப்பியடித்த மாணவ மாணவிகள்.
கல்லூரி தேர்வில் குழுவாக அமர்ந்து காப்பியடித்த மாணவ மாணவிகள் சமஸ்திபுர்:
பீகாரில், கல்லூரி தேர்வில், பங்கேற்ற மாணவர் மற்றும் மாணவிகள்
புத்தகங்களை கொண்டு வந்து காப்பியிடித்து அனைவரையும்
அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.
மருத்துவ நுழைவு தேர்வு வினாத்தாள் லீக் ஆன வழக்கில் 15ம் தேதி தீர்ப்பு.
மருத்துவ நுழைவு தேர்வு வினாத்தாள் லீக் ஆன வழக்கில் 15ம் தேதி தீர்ப்பு
புதுடில்லி: மருத்துவ நுழைவுத்தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே லீக் ஆன
வழக்கில், வரும் 15ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சுப்ரீம் கோர்ட்
கூறியுள்ளது.
கல்வித்துறை செயலாளர் ஆணை வெளியீடு
மாண்புமிகு தமிழக முதலவர் அவர்களின் சட்டமன்ற அறிவிப்புக்கிணங்க அரசு பள்ளகளின் கழிப்பறை களை சுத்தம் செய்யும் பணி நகர மற்றும் ஊராட்சி உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைத்து கல்வித்துறை செயலாளர் ஆணை வெளியீடு
Department Permission Application For Government Housing Loan
வீடு கட்ட, அரசுக்கடன் பெற அரசுப் பணியாளர் துறை அனுமதி கோரும் விண்ணப்பம்
Thanks to Mr. Sambasivam.
Thanks to Mr. Sambasivam.