Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
அனைத்து ஆசிரியர்களுக்கும் CRC & BRC பயிற்சி.
அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் (எஸ்.எஸ்.ஏ.,) வாயிலாக, ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி, நடப்பாண்டு முதல், அனைத்து
ஆசிரியர்களுக்கும் விரிவுப்படுத்தப்பட உள்ளது.
பொம்மைகளை வைத்து பாடம் நடத்தும்அரசுப்பள்ளி ஆசிரியர் .
![](https://lh3.googleusercontent.com/-eyHEcixExgg/VXR7xtiFj_I/AAAAAAAADOc/fZYyqiu9Bm8/%25255BUNSET%25255D.jpg%20width=)
நாம் மறந்துவிட்ட பாரம்பரிய கலைகளில் பொம்மல்லட்டாமும் ஒன்று .அதைமீட்டெடுத்து பள்ளி மாணவர்களுக்கு கற்பித்தல் உரமூட்டி வருகிறார் அரசு பள்ளிஇடைநிலை ஆசிரியரான தாமஸ் ஆண்டனி .
தட்கல் முறையில் விண்ணப்பிக்கும் முறை
அதேஇ - பத்தாம் வகுப்பு சிறப்பத் துணைத்தேர்வு - 09/06/2015 மற்றும் 10/06/2015 ஆகிய நாட்களில் தட்கல் முறையில் விண்ணப்பிக்கும் முறை - இயக்குனர் செயல்முறைகள்
மாணவர்களுக்கு சத்துணவு சாப்பிடும் முன் கை கழுவ வசதியாக சோப்பு தர உத்தரவு
சத்துணவு சாப்பிடும் முன், மாணவர்கள் கை
கழுவ வசதியாக, கட்டாயம் சோப்பு வாங்கி வைக்கவும், சாப்பிடுவதற்கு
துருப்பிடிக்காத, ஸ்டீல் தட்டுகள் வாங்கி வைக்கவும், மத்திய அரசு
உத்தரவிட்டுள்ளது.மத்திய அரசின் மதிய உணவுத் திட்டம் மற்றும் தமிழக அரசின்
சத்துணவுத் திட்டத்தில், தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகளில், 10ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு மதிய உணவு இலவசமாக
வழங்கப்படுகிறது.
இலவச புத்தக வாகன வாடகை உயர்வு:தலைமை ஆசிரியர்கள் குழப்பம்
இலவச
பாடப்புத்தகங்களை ஏற்றி வரும் செலவு, கடந்த ஆண்டை காட்டிலும் 10 சதவீதம்
வரை அதிகரித்துள்ளதால், அவற்றை எப்படி ஈடுகட்டுவது என,” தலைமை ஆசிரியர்கள்
குழப்பத்தில் உள்ளனர்.பள்ளிக்கல்வித்துறை
சார்பில், விலையில்லா புத்தகம், நோட்டு, புத்தகபை, காலணி, கணித உபகரண
பெட்டி, கிரையான் உள்ளிட்ட 14 பொருட்கள் வழங்கப்படுகின்றன. இவற்றை
'சம்பந்தப்பட்ட ஸ்டோர் பாயிண்ட்' எனப்படும், அலுவலகங்களிலிருந்து,
பள்ளிகளுக்கு எடுத்து வருகின்றனர்.
பள்ளிகளில் அனுமதியின்றி கூடுதல் வகுப்புகள் :ஆய்வு நடத்த இயக்குனரகம் உத்தரவு
தனியார் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு
முதல், பிளஸ் 2 வரை, அனுமதிக்கு அதிகமாக கூடுதல் வகுப்புகளை துவங்கி
உள்ளதாக புகார்கள் வந்துள்ளதால், திடீர் ஆய்வு நடத்த, மெட்ரிக்இயக்குனரகம்
உத்தரவிட்டு உள்ளது. புதிய கல்வியாண்டை ஒட்டி, அரசு, அரசு உதவிபெறும்
மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதில், சில
தனியார் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, அனுமதியை மீறி,
கூடுதல் எண்ணிக்கையில் மாணவர்களை சேர்த்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
பரவலாகும் ஆங்கிலம்; பரிதவிக்கும் அன்னைத்தமிழ்!
ஆங்கில
மொழித்துறை துவங்க அனுமதி கோரும் கல்லூரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள்
அதிகரித்துவரும் நிலையில், சொற்ப அளவிலான கல்லூரிகளே தமிழ்த்துறை துவங்க
ஆர்வம் காட்டி வருகின்றன.
பிளஸ் 2 மறுமதிப்பீடு, மறுகூட்டல் நிறைவு
மதுரை, கோவையில் நடந்த பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் பணிகள் நிறைவுற்றது.பிளஸ்
2 தேர்வு முடிவுகள் வெளியான பின் மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண்
சான்றுகள் வழங்கப்பட்டன. இதன்பின் மே 8 முதல் மறுகூட்டல் மற்றும்
விடைத்தாள் நகல் கோரி ஒரு லட்சம் விண்ணப்பங்கள் தேர்வுத்துறைக்கு
வரப்பெற்றன.சென்னையை
தவிர்த்து இந்தாண்டு முதன்முறையாக மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்காக மதுரை
மற்றும் கோவையில் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.
பணி பாதுகாப்புக் கோரி சிறப்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
மதுரையில் பணி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில அளவில் சிறப்பு ஆசிரியர்கள்
ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களுக்கு கடும் தண்டனை:ஒரே நாளில் 80 பேர் டி.சி. பெற்றனர்
திருச்சி ஜீயபுரம் அருகேயுள்ள தனியார் உயர்
நிலைப்பள்ளியில் பள்ளி தாளாளரின் காரில் மாணவியின் பெயர்
கிறுக்கப்பட்டிருந்ததால், பள்ளி நிர்வாகம் 150 மாணவ, மாணவிகளை
முழங்காலிட்டு பலமணி நேரம் நிற்கவைத்தனர். இதை கண்டித்து 80 மாணவ, மாணவிகள்
மாற்றுச் சான்றிதழை பெற்றுக் கொண்டு வெளியேறினர்.
ஜூன் 10-ஆம் தேதிக்குள் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் விண்ணப்பிக்க அழைப்பு
குன்னூரில் செயல்பட்டுவரும் அரசினர்
தொழிற்பயிற்சி நிலையத்தில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்காக
பொருத்துநர், கடைசல், கம்மியர், மின்சாரப் பணியாளர் ஆகிய 2 ஆண்டு
படிப்புகளுக்கும், 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்காக கம்பியாள்,
தச்சர், பற்ற வைப்பவர் படிப்புகளுக்கும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு
வருகின்றன.
உண்டு உறைவிடப் பள்ளிகள் ஜூலை மாதத்தில் தொடங்கும்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னையில் இரண்டு உண்டு உறை விடப் பள்ளிகள் ஜூலை மாதத்தில் தொடங்கும்
என்று மாநகராட்சி அறிவித் துள்ளது.சென்னையில் உண்டு உறைவிடப் பள்ளிகள்
தொடங்கும் என்று கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட் டிருந்தது. அதன்படி
உண்டு உறைவிடப் பள்ளிகளாக மேம்படுத்த நான்கு மாநகராட்சிப் பள்ளிகள்
தேர்ந்தெடுக்கப்பட்டன.
'முழுநேர ஆசிரியராக பணியமர்த்த வேண்டும்'
பகுதிநேர ஆசிரியர்களை, முழுநேர ஆசிரியர்களாக நியமனம் செய்ய, தமிழ்நாடு
அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றினர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலால் ஆசிரியர் 'கவுன்சிலிங்' தாமதம்
ராமநாதபுரம்:ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி
இடைத்தேர்தலால் பணியிட மாறுதல் 'கவுன்சிலிங்' தாமதம் ஆவதாக ஆசிரியர்கள்
கலக்கம் அடைந்துள்ளனர்.
பள்ளி மாணவர்களுக்கு 'ரோபோ' பயிற்சி
சென்னை:பள்ளிப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு 'ரோபோ' இயக்கம் குறித்து
அண்ணா பல்கலையில் வரும் 13- 14ம் தேதிகளில் இரண்டு நாட்கள் பயிற்சி
நடக்கிறது.
மொபைலில் பேசும்போது இணைப்பு துண்டித்தால் கூடுதல் ‘டாக்டைம்’: டிராய் திட்டம்
மொபைலில் பேசும்போது திடீரென இணைப்பு துண்டிக்கப்பட்டால்,
அந்தஅழைப்புக்கான கட்டணத்தை வாடிக்கையாளர் கணக்கிலேயே திரும்ப சேர்க்க
டிராய் திட்டமிட்டுள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு : ஜூன் 3வது வாரத்தில் பி.எட். தேர்வு முடிவு
தமிழகத்தில் பிஎட் விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்ததால், ஜூன்
3வது வாரத்தில் பிஎட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிகிறது.
600-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் நிகழாண்டும் ஆங்கில வழிக் கல்வி இல்லை
திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
அரசுப் பள்ளிகளில் 600-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் நிகழாண்டும் ஆங்கில
வழிக் கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என சமூக ஆர்வலர்கள்
குற்றம்சாட்டுகின்றனர்.அரசுப் பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்களை சேர்க்க
வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டும், மெட்ரிக். பள்ளிகளில் பெறப்படும்
கூடுதல் கட்டணத்தில் இருந்து ஏழைப் பெற்றோர்களை பாதுகாக்கும் வகையிலும்
அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியை 2012-13-ஆம் கல்வி ஆண்டில் தமிழக
அரசு அறிமுகப்படுத்தியது.
கணினி இயக்க தெரியாத ஆசிரியர்களுக்கு மீண்டும் பயிற்சி தர கல்வித்துறை உத்தரவு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி
மாணவர்களின் விவரங்களை, கணினியில் பதிவேற்ற ஆசிரியர்கள் திணறுவதால்,
அவர்களுக்கு மீண்டும் கணினி பயிற்சி அளிக்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
600-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் நிகழாண்டும் ஆங்கில வழிக் கல்வி இல்லை
திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 2
ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் 600-க்கும் மேற்பட்ட பள்ளிகளில்
நிகழாண்டும் ஆங்கில வழிக் கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என
சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும் இலவச மாணவர் சேர்க்கை?
மத்திய இடைநிலை கல்வி வாரியமான
சி.பி.எஸ்.இ., மற்றும் இந்திய இடைநிலை சான்றிதழ் கல்வி - ஐ.சி.எஸ்.இ.,
பள்ளிகளிலும், 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், இலவச மாணவர் சேர்க்கையை
கட்டாயம் நடத்த வேண்டுமென்று, தமிழக திட்டக்கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
ஆண்டறிக்கை தாக்கல் செய்யாத 615 சங்கங்கள் நீக்கம்:பதிவுத்துறை நடவடிக்கை
மூன்று ஆண்டுகளுக்கு மேல், ஆண்டறிக்கை
தாக்கல் செய்யாத, 615 சங்கங்களை அதற்கான பதிவு பட்டியலில் இருந்து
நீக்குவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.