Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குழந்தைப் பருவத்தை ஒடுக்கும் சட்டத் திருத்தம்; தமிழ் நேசன்

        சிறார் தொழிலாளர் (தடுப்பும் கட்டுப்பாடும்) சட்டம் 1986-ல் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது பல சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்புகிறது.

புத்தகத்துக்கு குட்பை : கணினி மூலம் மாணவர்களுக்கு கல்வி புதிய திட்டம் துவக்கம்

         கர்நாடக மாநில அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புத்தகம் இல்லாமல் கணினி மூலம் பாடம் நடத்தும் புதிய திட்டத்தை கல்வி இயக்குனரகம் மேற்கொண்டுள்ளது. பொதுவாக அரசு பள்ளிகளில் தரமான கல்வி கிடைப்பதில்லை என்பதால், வசதிப்படைத்தவர்கள் தொடங்கி கூலி வேலை செய்வோர் வரை தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறார்கள்.

பாடப்புத்தகம் தாண்டி பயில்வோம்

          எப்பொழுதோ நிகழ்ந்ததை நிகழ்ந்தவாறு இப்பொழுதும் நாம் அறிந்து கொள்ள உதவுவது புத்தகங்கள். எங்கோ நடந்ததை கண்டுபிடித்து அதை இங்குள்ள  நமக்கு எடுத்து விளக்குபவை நூல்களே.
 

'கட் ஆப்' குறைந்தவர்களுக்கு கலை அறிவியல் 'பெஸ்ட்'

           இன்ஜினியரிங் கட் ஆப் கடந்த ஆண்டை விடவும், அதிகரிக்கும் என எதிர்பார்க்கும் நிலையில், குறைந்த, கட் ஆப் வைத்திருக்கும் மாணவர்கள், கலை, அறிவியல் பாடங்களை தேர்வு செய்வது நல்லது என, கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

2014-ஆம் ஆண்டுக்கான சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுகள்.

         2014-ஆம் ஆண்டுக்கான சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை பொறியியல் படிப்புகள் மீது குறைந்து வரும் ஆர்வம்: டான்செட் தேர்வில் 19 ஆயிரம் பேர் பங்கேற்பு

         முதுநிலை பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) தமிழகம் முழுவதும் 15 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
 

இன்று முதல் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை மாணவர்களே பதிவிறக்கம் செய்யலாம்

          பிளஸ் 2 மாணவர்கள் திங்கள்கிழமை (மே18) முதல் தங்களது தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

சிவில் சர்வீசஸ் தேர்வு: அறிவிப்பு ஒத்திவைப்பு

         ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான, சிவில் சர்வீசஸ் முதல் நிலைத்தேர்வு அறிவிப்பு, திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

துணை ராணுவ படை பிரிவுகளில் 11 ஆயிரம் பெண்களுக்கு வேலை

              மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் துணை ராணுவப் படையில், கூடுதலாக, 11 ஆயிரம் பெண்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, இந்த படைகளில், குறைந்தபட்சம், 5 சதவீதம் பேராவது, பெண்களாக இருக்க வேண்டும் என்ற இலக்கு எட்டப்படும்.

பள்ளி திறந்த முதல் நாளில் புத்தகத்துடன் சீருடை: பொறுப்புகளை பட்டியலிட்டது கல்வித்துறை

          வரும் கல்வி ஆண்டில், பள்ளிகள் துவங்கும் முதல் நாள் அன்றே, மாணவ, மாணவியருக்கு விலையில்லா பாடநூல், சீருடை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பொறுப்புகளை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது.

பிளஸ் 2 மதிப்பெண்:மாணவ, மாணவியர் நேரடியாக 'டவுண்லோடு' செய்யலாம்

               பிளஸ் 2 தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, மாணவ, மாணவியர், நேரடியாக பதிவிறக்கம் செய்யும் வசதி, இன்று முதல் அறிமுகமாகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள், கடந்த 7ம் தேதி வெளியானது. இந்த ஆண்டு தேர்வு முடித்தோருக்கு, நேரடியாக மதிப்பெண் சான்றிதழ் வழங்காமல், முதற்கட்டமாக கல்லூரிகளைப் போன்று, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அறிமுகமாகி உள்ளது. இந்த சான்றிதழ், மே 7ம் தேதி முதல், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்டு, மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டன. 
 

எல்.கே.ஜி., இலவச சேர்க்கைக்கு அரசு உதவி மறுப்பு : 1 முதல் 9ம் வகுப்பு வரையே சேர்க்க முடியும்

          'தமிழகத்தில், கல்வி உரிமைச் சட்ட விதிகளுக்கு முரணாக, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., மாணவர் சேர்க்கைக்கு, நிதி அளிக்க முடியாது' என, மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. 

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு நாளை 'ரிசல்ட்?'

               நடப்பு கல்வியாண்டுக்கான, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள், மார்ச் 2ம் தேதி துவங்கின. 10ம் வகுப்புத் தேர்வுகள், மார்ச் 26ம் தேதியும், பிளஸ் 2 தேர்வுகள், ஏப்., 20லும் முடிந்தன. 
 

அரசு மருத்துவ கல்லூரிகளில் 450 இடங்கள்: நடப்பாண்டில் அனுமதி கிடைக்குமா?

          அரசு மருத்துவக் கல்லூரிகளில், கூடுதலாக, 450 எம்.பி.பி.எஸ்., இடங்களைப் பெற, அரசு முயற்சித்து வந்த நிலையில், இந்த ஆண்டில் அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு, மாணவர்களிடம் எழுந்துள்ளது.

ஜூன் முதல் வாரத்தில் பிளஸ் 1 துணைத்தேர்வு

          நடந்து முடிந்த, பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாதோருக்கு, ஜூன் முதல் வாரத்தில் சிறப்பு துணைத் தேர்வு நடத்த, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.

குழந்தையர் வளர்ப்பு

* அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது.

* கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது.

* குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது.

அண்ணாமலை பல்கலையில் விண்ணப்பம் விற்பனை துவக்கம்.

        சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், 2015 - 16ம் கல்வி ஆண்டுக்கான, ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விற்பனை துவங்கின.பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தில், நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு, நிர்வாக சிறப்பு அதிகாரி சிவ்தாஸ் மீனா தலைமை தாங்கி, முதல்விற்பனையை துவக்கி வைத்தார்.
 

பொது சேவை மையங்கள் இன்று இயங்கும்.

       அரசின் பல்வேறு சான்றுகளை அளிக்கும் பொது சேவை மையங்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 17) செயல்படும் என்று அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பொது சேவை மையங்கள் தமிழகம் முழுவதும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள் உள்பட முக்கிய அரசு அலுவலகங்களில் செயல்பட்டு வருகின்றன.
 

10-ம் வகுப்பில் 50 சதவீத மாணவர்கள் தோல்வி: மத்திய பிரதேசத்தில் தொடரும் அவலம்

         மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த வாரம் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. மொத்தம் 11 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வில் 49.7 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். மீதமுள்ள 50.3 சதவீத மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்துள்ளனர்.

தரமற்ற பொறியியல் கல்லூரிகளை மூட வேண்டும் - அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.ஆனந்தகிருஷ்ணன்

   மாணவர்களுக்கு தரமில்லாத கல்வியளிக்கும் பொறியியல் கல்லூரிகளை தயங்காமல் மூட வேண்டும் என, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.ஆனந்தகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
 

ரேசன் கார்டுதாரர்களிடம் மொபைல் எண் சேகரிக்க உத்தரவு

               ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தில், கா ர்டுதாரர் மொபைல் எண் மற்றும் தற்போதைய வயது விவரங்களை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கமான ரேஷன் கார்டுக்கு மாற்றாக, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. உடற்கூறு பதிவுகளை உள்ளடக்கிய ஆதார் பதிவு பணி நிறைவு பெற்றதும், அதன் புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு, 'ஸ்மார்ட்' கார்டு தயாரிக்க திட்டமிடப்பட்டது. ஆதார் பணி நிறைவு பெறாததால், மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு உள்தாள் இணைக்கப்பட்டுள்ளது.

தானே மாநகராட்சி நடவடிக்கை முதலாம், இரண்டாம் வகுப்பு குழந்தைகள் புத்தகப்பை கொண்டு செல்ல வேண்டியதில்லை

          தானே: பள்ளி குழந்தைகள் சுமந்து செல்லும் புத்தகப் பையின் எடையை குறைப்பது குறித்து மாநில அரசு பரிசீலித்து வரும் நிலையில் வரும் கல்வியாண்டில் இருந்து முதலாம் மற்றும் இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் புத்தகப் பையை அன்றாடம் சுமந்து வர வேண்டியதில்லை என்று தானே மாநகராட்சி அறிவித்துள்ளது.
 

சென்னை அரசு பள்ளியில் சேர மாணவர்கள் அச்சம்: தலைமை ஆசிரியர், கழிப்பறை, குடிநீர் இல்லை

         தலைமை ஆசிரியர், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல், சென்னையில் ஒரு அரசு பள்ளி உள்ளது. இப்பள்ளியில், மாணவர்களை சேர்க்க, பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர். இதுவரை ஒரு விண்ணப்பம் கூட யாரும் வாங்கவில்லை.

SGT / Spl Tr to BT Tamil Promotion Panel Regarding...

         அரசு/நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இடைநிலை/சிறப்பாசிரியர் பணியிலிருந்து பட்டதாரி (தமிழ்) ஆசிரியர் பதவி உயர்வு அளிக்க அரசாணை எண்.95 பள்ளிக்கல்வி (பகஇ) துறை நாள் 05.05.2015ன்படி தகுதிவாய்ந்தவர்களின் விவரம் கோருதல்

கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கு இன்று (மே 17) முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

     கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கு இன்று  (மே 17) முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பொன்னேரி மீன்வளக் கல்லூரியில் இளங்கலை மீன்வளப் பட்டப்படிப்பு


        பிளஸ் 2 முடித்தோர், பொன்னேரி மீன்வளக் கல்லூரியில், இளங்கலை மீன்வளப் பட்டப்படிப்பு - பி.எப்.எஸ்.ஐ.,யில் சேரலாம்; ஆராய்ச்சிக்கான சிறந்த கட்டமைப்பு வசதிகளும் உள்ளதாக, கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

10ம் வகுப்பு துணை தேர்வு அட்டவணை

10ம் வகுப்பு துணை தேர்வு அட்டவணை

26-6-15-மொழிப்பாடம்1

27-6-15-மொழிப்பாடம்2

'கல கல வகுப்பறை' உருவாக்குவது எப்படி: அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

           மாணவர்களுக்கு பிடித்தமான 'கல கல வகுப்பறை' உருவாக்குவது குறித்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான மூன்று நாள் பயிற்சி மதுரையில் நேற்று துவங்கியது.

பள்ளிக்கல்வி பணிகளை முடக்கிய வழக்குகளை முடிக்க உத்தரவு: 500க்கும் மேற்பட்ட வழக்குகளால் கல்வி துறை ஸ்தம்பிப்பு

           பள்ளி கல்வித் துறை பணிகளை முடக்கியுள்ள, 500 வழக்குகளை, ஓரிரு மாதங்களில் முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு, கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இ.பி.எப்., பணம் இனி 20 நாளில் கிடைக்கும்

          'வருங்கால வைப்பு நிதியான - இ.பி.எப்.,பில் இருந்து, பணம் எடுக்க விண்ணப்பிக்கும் தொழிலாளர்களுக்கு, 20 நாட்களில் பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஆணையர் ஜாலான் தெரிவித்துள்ளார்.

தமிழக பாட திட்டம் தரம் உயர்கிறது: தேசிய புத்தகங்களுடன் ஒப்பிடும் பணி துவக்கம்

           மத்திய பாடத்திட்டத்தின் படி, தமிழக பாடத்திட்டத்தை தரம் உயர்த்த தமிழக பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த முதற்கட்ட ஆய்வுப்பணி துவங்கி உள்ளது.

மேல்நிலையில் பருவத்தேர்வு முறை: பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை

          'மேல்நிலை வகுப்புகளில் பருவத்தேர்வு (செமஸ்டர்) முறையை கொண்டு வரவேண்டும்' என முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கல்லூரியை எப்படி தேர்வு செய்வது

              பொதுவாக, மெக்கானிக்கல், சிவில், EEE., ECE., மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பிரிவுகளே, மாணவர்களுக்கு மிகவும் தெரிந்த பிரிவுகள். இது தவிர பல பிரிவுகள் உள்ளன. அதேசமயத்தில், நாம் எந்தக் கல்லூரியில் சேர்கிறோம் என்பதும் மிக முக்கியம். முன்னணி நிறுவனங்கள், நேர்முகத் தேர்விற்கு வரும் கல்லூரிகளை தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனம்.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive