Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ப்ளஸ்2 தேர்வு முடிவு வெளியாவதால் பெற்றோரே உஷார்: தற்கொலை, மாயமாவதை தடுக்க போலீசார் எச்சரிக்கை

     தமிழகத்தில், ப்ளஸ் 2 தேர்வு முடிவு, இன்று வெளியாகும் நிலையில், மாணவ, மாணவியர் தற்கொலை செய்வது, மாயமாவதை தடுக்க, பெற்றோரை, போலீசார் உஷார் படுத்தி உள்ளனர். மாணவ, மாணவியர் மாயமானால் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்க வேண்டு கோள்விடுத்துள்ளனர்.

இன்று பிளஸ் 2 'ரிசல்ட்'; திறக்கிறது புதிய பாதை!

       பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள், கல்லுாரி படிப்புக்கு அடி எடுத்து வைக்கவும், மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யவும், முக்கிய அடித்தளமான, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. பி.இ., மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் நேற்று துவங்கியது. கோவை மாவட்டத்தில், நான்கு மையங்களில் சேர்த்து, 4,732 விண்ணப்பங்கள், முதல் நாளில் விற்றுத்தீர்ந்தன.

பி.இ.,இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை: டிப்ளமோ ஆறு பருவ தேர்வு கணக்கீடு

        "பி.இ.,பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு கடந்த ஆண்டுகளில், டிப்ளமோ படிப்பின் ஐந்து மற்றும் ஆறாம் பருவ தேர்வு மட்டுமே கணக்கிடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஒன்று முதல் ஆறு பருவ தேர்வு முடிவு மதிப்பெண் அடிப்படையிலேயே ரேங்க் பட்டியல் வெளியிடப்படும்” என இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை செயலாளர் மாலா தெரிவித்தார்.
 

ஆங்கில வழி கல்வி: விளம்பரம் செய்ய உத்தரவு

  'அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி இருப்பது தொடர்பாக, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என, தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும், தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: மே 8, 9 தேதிகளில் விண்ணப்பிக்கலாம்

     தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள் மே 8, 9 தேதிகளில் சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in  என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்துகொண்டு, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். 

 

'மதிப்பெண் குறைவு என திட்ட வேண்டாம்': மீண்டும் ஜெயிக்க '104'ல் ஆலோசனை

 'மதிப்பெண் குறைவு என, மாணவர்களை, பெற்றோர் திட்ட வேண்டாம்' என, பெற்றோருக்கு, '104' சேவை மையம் அறிவுறுத்தி உள்ளது.

ஆய்வக உதவியாளர்பணிக்கு 9 லட்சம் பேர் விண்ணப்பம் கடைசி நாளில் கூட்டம் அலைமோதியது

ஆய்வக உதவியாளர் பணிக்கு 4 ஆயிரத்து 362 பேர் எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர். இந்த பணிக்கு தமிழ்நாடு முழுவதும் 9 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.ஆய்வக உதவியாளர்


பிளஸ் 2: மதுரை மாவட்டம் 92.87 சதவீதம் தேர்ச்சி


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் மதுரை மாவட்டத்தில் 92.87 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மதுரை, சிஇஓ., பள்ளியை சேர்ந்த சந்தோஷ் என்ற மாணவர் 1200க்கு 1185 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.
 

இன்ஜி., கல்லூரி விவரங்கள் வெளியீடு: 'கட் - ஆப்' வரிசை பட்டியல் இன்று வெளியாகும்

       அண்ணா பல்கலை மற்றும் அதன் இணைப்புக் கல்லூரி பாட விவரங்கள் மற்றும் கட்டண விவரங்கள், அண்ணா பல்கலை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இக்கல்லூரிகளின் கடந்த ஆண்டு ஜாதி வாரியான, 'கட் - ஆப்' பட்டியல் இன்று வெளியாகிறது.

பிளஸ் 2 உயிரியல் தேர்வு: 195 மதிப்பெண் பெற முடியாது என்ற கவலையில் விடைத்தாள் முழுவதையும் அடித்த மாணவி

     பிளஸ் 2 உயிரியல் தேர்வில் 195 மதிப்பெண் பெற முடியாது என்று கருதி, மாணவி ஒருவர் விடைத்தாள் முழுவதையும் பேனாவில் அடித்து கோடு போட்டுள்ளார்.

பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வுகளில் மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சிபெற காரணம் என்ன?

         ஒவ்வொரு ஆண்டும் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும்போது மாணவிகளே அதிக தேர்ச்சி விகிதம், மதிப்பெண்பெற்றதாக செய்திகள் வெளியாவது தொடர்கதையாகி விட்டது. இதனால் அறிவாற்றலில் மாணவர்கள் சற்று பின்தங்கியவர்கள் போல மீடியாக்களும், பொதுமக்களும் பார்க்கின்றனர்.

விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்குமே 8ம் தேதி முதல் விண்ணப்பம் - தேர்வுக் கட்டண விபரம்

            இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்ட அறிவிப்பு: விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு, மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்கள், தேர்வு மையங்கள் மூலமும் விண்ணப்பிக்கலாம். 

பிளஸ்–2–வில் 100 சதவீத மதிப்பெண் பெற மாணவர்கள் மேற்கொண்ட புதிய தந்திரம்

            சரியாக எழுதிய விடையை கோடுபோட்டு அடித்து பிளஸ்–2–வில் 100 சதவீத மதிப்பெண் பெற மாணவர்கள் மேற்கொண்ட புதிய தந்திரம் அதிகாரிகளின் நடவடிக்கையால் வெளிச்சத்துக்கு வரும் புதிய மோசடி

நாளை பிளஸ்–2 தேர்வு முடிவு: எந்த பாடத்திற்கும் கருணை மதிப்பெண் இந்த வருடம் இல்லை

நாளை பிளஸ்–2 தேர்வு முடிவு: எந்த பாடத்திற்கும் கருணை மதிப்பெண் இந்த வருடம் இல்லை
    பிளஸ்–2 தேர்வு இந்த ஆண்டு எழுதிய மாணவர்களுக்கு அதிஷ்டம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
 
கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது இந்த வருடம் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்கள் மிக கடினமாக இருந்தன.
 

என்ஜினீயரிங் பொது கவுன்சிலிங் ஜூலை 1–ந்தேதி தொடங்குகிறது

என்ஜினீயரிங் பொது கவுன்சிலிங் ஜூலை 1–ந்தேதி தொடங்குகிறது
என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு ஜூலை 1–ந்தேதி தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் 538 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் உள்ள 1 லட்சத்து 80 ஆயிரம் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றை சாளர முறையில் நிரப்புகிறது.

ஆய்வக உதவியாளர் தேர்வு: விண்ணப்பிக்க இன்றே கடைசி

       அரசு பள்ளிகளில், 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். நேற்று மாலை வரை,  தமிழகம் முழுவதும், 7.30 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இன்றே கடைசி நாள் என்பதால், கடந்த இரு தினங்களாக, தேர்வுத் துறை சேவை மையங்களில், கட்டுக்கடங்காத கூட்டம் உள்ளது.
 

பள்ளி ஆய்வக உதவியாளர் பணி: பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்

     'அரசுப் பள்ளிகளில் 4,360 ஆய்வக உதவியாளர் நியமனத்தை சர்ச்சையின்றி, நேர்மையாக நடத்த வேண்டும்' என முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர்களை நியமிப்பதற்கான எழுத்துத்தேர்வு மே 31ல் நடக்கிறது.
 

இதர பிற்படுத்தப்பட்டோரின் 'கிரீமி லேயர்' உச்சவரம்பை உயர்த்த பரிந்துரை: ரூ.6 லட்சத்திலிருந்து ரூ.10.50 லட்சமாக ஆக்க தேசிய கமிஷன் விருப்பம்

       'ஓ.பி.சி., எனப்படும், இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களை சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில், 'கிரீமி லேயர்' உச்சவரம்பை, தற்போதைய, ஆறு லட்சம் ரூபாயில் இருந்து, 10.50 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும்' என, பிற்படுத்தப்பட்டோருக்கான தேசியக் கமிஷன், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
 

14ம் தேதி தற்காலிக மதிப்பெண் பட்டியல் வினியோகம் பிளஸ் 2 முடிவுகள் நாளை வெளியாகிறது

      பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. அதை இணைய தளத்தில் பார்க்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்வு எழுதிய மாணவ, மாணவர்கள் தாங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள இன்டர்நெட் சென்டரில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும், வரும் 14ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றுகளை அந்தந்த பள்ளியில் பெற்றுக் கொள்ள தேர்வுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.  

விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்குமே 8ம் தேதி முதல் விண்ணப்பம் - தேர்வுக் கட்டண விபரம்

      இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்ட அறிவிப்பு: விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு, மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்கள், தேர்வு மையங்கள் மூலமும் விண்ணப்பிக்கலாம். 

நாளை பிளஸ் 2 'ரிசல்ட்' : 14ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

          தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை வெளியாகிறது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, வரும் 14ம் தேதி முதல், மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.பிளஸ் 2 தேர்வு, மார்ச் 5ம் தேதி துவங்கியது; மார்ச், 31ம் தேதி முடிந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 8.43 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள், நாளை காலை 10:00 மணிக்கு வெளியாகிறது.

25 சதவீத இடஒதுக்கீடு: மே 19 வரை விண்ணப்பங்களை விநியோகிக்க தனியார் பள்ளிகளுக்கு அரசு உத்தரவு

          கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டுக்கு மே 19 வரை விண்ணப்பங்களை பெற்றோருக்கு இலவசமாக விநியோகிக்க வேண்டும் என, தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை உத்தரவிட்டார்.

அக்னி நட்சத்திரம் - 'வெயிலில் செல்லாதீங்க': டாக்டர்கள் அறிவுரை

        'அக்னி நட்சத்திரம் துவங்கி உள்ளதால், பகல் நேரத்தில், வெயிலில் செல்ல வேண்டாம்; அதிகளவில், நீர் ஆகாரங்களை அருந்த வேண்டும்' என, டாக்டர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். 

ஒரே நேரத்தில் 14 புத்தகங்கள் வெளியிட்டு சிவகாசி பள்ளி ஆசிரியை சாதனை !

        சிவகாசி காரனேசன் துவக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாகப் பணிபுரியும் இடைநிலை ஆசிரியை, கவிஞர் மாலாபிரியதர்ஷினி ஒரே நேரத்தில் 14 புத்தகங்கள் வெளியிட்டு எழுத்தாளர்கள் மத்தியில் சிறந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி சாதனை படைத்துள்ளார்.
 

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கிராமங்களில் 5 ஆண்டு கட்டாய பணி புதிய சட்டம் கொண்டுவர மாநில அரசு தீவிரம்

          பொதுவாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கிராமப்புறங்களில் பணியாற்ற வேண்டும் என்றால் வேப்பங்காயை சாப்பிடுவது போல கசப்பான ஒன்றாகும். இதனை தவிர்ப்பதகாக அவர்கள், உடல்நிலை சரியில்லை எனவும், குடும்ப சூழ்நிலையை காரணம் காட்டியும் நகர்ப்புறங்களில் பணியாற்ற வாய்ப்பை ஏற்படுத்தி கொள்வது வாடிக்கையாக அரங்கேறி வருகிறது

TET தேர்வை ரத்து செய்வது கூடாது - மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை

        ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்வது கூடாது,கல்வி உரிமை சட்டப்படி மாணவர்களை சேர்க்காத பள்ளிகள் மீது நடவடிக்கை: மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை

பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்களது பொதுகுணம்

அசுவினி: செல்வந்தர், புத்திசாலி, விவாதம் செய்பவர், ஆடம்பர பிரியர், பக்திமான்,கல்விமான், பிறருக்கு அறிவுரை சொல்பவர்.

பூகம்பத்தை முன்கூட்டியே கணிக்க முடியும்!

      நொறுங்கி வீழ்ந்த கட்டிடங்களின் முன்பாக செல்ஃபி எடுத்துக்கொள்பவர்கள், பாதிக்கப்பட்ட அப்பாவிகளின் பசியை மூலதனமாக்கி உணவுகளை கொள்ளை விலைக்கு விற்பவர்கள்... இவர்கள் எல்லோரையும் விட மோசமானவர்கள் வதந்தி பரப்புகிறவர்கள். நாசாவில் சொன்னார்கள், நாங்குனேரியில் சொன்னார்கள் என ‘அடுத்த பூகம்பம் இன்னும் 24 மணி நேரத்தில் வரும்’ என செல்போனி லும் இணையத்திலும் இந்தியா முழுக்க வதந்தி பரப்பினார்கள் பலர். பூகம்பத்தைக் கணிக்க முடியுமா?

வில்லங்கமான வாகனச் சட்டம்! அறிவோம் அனைவரும்

அபராதம்... சிறை... லைசென்ஸ் பறிப்பு...வாகன முடக்கம்...

       ஒவ்வொரு 4 நிமிடத்துக்கும் ஒரு இந்தியர் சாலை விபத்தில் உயிரிழக்கிறார். தினமும் சுமார் 360 பேர். கடந்த 10 ஆண்டுகளில் 46 லட்சம் பேர் சாலை விபத்துகளில் படுகாயமடைந்து தங்கள் வாழ்வைத் தொலைத்திருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே ஒரு மத்திய அமைச்சரை சாலை விபத்துக்கு பலி கொடுத்தது நரேந்திர மோடி அரசு. ‘‘விபத்துகளைத் தடுக்க புதிய சட்டம் வரும்’’ என அப்போதே சொன்னார் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி. 

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய ஆபிஸ் 2016-ன் முன்னோட்ட பதிப்பு அறிமுகம்


மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய ஆபிஸ் 2016-ன் முன்னோட்ட பதிப்பு அறிமுகம்

    மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது புதிய ஆபிஸ் 2016-ன் முன்னோட்ட பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

MAT நுழைவுத்தேர்வை ஏற்றுக்கொள்ளும் மேலாண்மை கல்லூரிகளின் பட்டியல்

  மேனஜ்மென்ட் ஆப்டிடியூட் எனப்படும் தேசிய நுழைவுத்தேர்வு மேட், அனைத்திந்திய ஆப்டிடியூட் டெஸ்டிங் சர்வீஸ் (AIMATS), ஆண்டுதோறும் நடத்தி வருகின்றது.

தேர்வில் காப்பி அடித்ததாக மாட்டிய போலீஸ் ஐ.ஜி.

கேரளாவில் சட்டத் தேர்வில் காப்பி அடித்ததாக போலீஸ் ஐ.ஜி. டி.ஜே. ஜோஷ் சிக்கினார். 

      கேரள மாநிலம் திருச்சூர் ஐ.ஜி.,யாக இருப்பவர் ஜோஸ். அங்குள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு (எல்.எல்.எம்.,) படித்து வந்தார். கொச்சி கலமச்சேரியிலுள்ள செயின்ட் பால்ஸ் கல்லூரியில் கிரைம் 2ம் தாள் தேர்வெழுதிய ஜோஸ், பிட் அடித்ததை தேர்வறை கண்காணிப்பாளர் கண்டுபிடித்தார். இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடமும் புகார் அளித்தார். கேரள ஐ.ஜி., ஒருவர் தேர்வில் பிட் அடித்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்தியாவில் 5 முதல் 10% குழந்தைகள் ஆஸ்துமா நோயால் பாதிப்பு

  இந்தியாவில் 5 முதல் 10 சதவீதம் குழந்தைகள் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக இந்திய குழந்தை மருத்துவர்கள் (சென்னை கிளை) செயலாளர் டாக்டர் சோமந்தரம் தெரிவித்தார்.

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி நடப்பதை விளம்பரப்படுத்த இயக்குநர் உத்தரவு

    அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி வகுப்பு இருப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி களுக்கு இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive