Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சமூக அறிவியலில் கேள்விகள் எளிமை: பத்தாம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சி

          'பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் வினாக்கள் மிக எளிதாக இருந்தன,' என மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு குறுகிய கால கணினி பயிற்சி: கோடை விடுமுறையில் வழங்க அண்ணா பல்கலை. சிறப்பு ஏற்பாடு

         கோடை விடுமுறையில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு குறுகிய கால கணினிப் பயிற்சி அளிக்க அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

உங்கள் PF கார்டு நீங்களே டவுன்லோட் செய்து கொள்ளலாம்!

        பணியாளர் வைப்பு நிதி ஆணையம் பணியார்களது சம்பளத்தில் குறிபிட்ட தொகையை பிடித்து வைப்பு நிதியாக பாரமரித்து ஓய்வுகாலத்திலோ அல்லது பணியில் இருக்கும்போதோ நிதி தேவையை சமாளிக்க உதவும் அமைப்பாக இருந்து வருகிறது. 

கல்வித்துறையில் விஷக்கொடுக்கு!

           அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது, நவீன மயத்திற்கான ஒரு திறவுகோல் ஆகும். இந்தத் திறவு கோலைத் திறந்து திறமையாகப் பயன்படுத்த அறிவாளிகளும், தொழில் நுட்ப நிபுணர்களும் அவசியம். அறிவியல் தொழில்நுட்பம் என்பது ஒட்டு மொத்த கல்வித் துறையின் ஒரு அங்கம்.
 

TET தொடர்பான வழக்கு: அரசு பதிலளிக்க மேலும் ஒருவாரம் காலஅவகாசம் கேட்டு மனு.

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் வருகிற 13.04.2015 அன்று கோர்ட் எண்.7ல் வழக்கு எண்.9ஆவதாக விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையில் 
GO 25 & GO 71 க்கு பதிலளிக்க அரசு மேலும் ஒருவாரம் காலஅவகாசம் கேட்டு மனு அளித்துள்ளததாக தகவல்.

அரசு லாவண்யா தொடுத்த GO 29க்கு மட்டுமே Counter கொடுத்துள்ளது.
மற்ற GO 71 GO 25 க்கு மட்டுமே Time one week கேட்டுள்ளது.

இலவச பேருந்து பயண அட்டைகளை முன்கூட்டியே வழங்க மாணவ, மாணவிகளின் முழு விவரங்களும் ஆன்லைனில் பதிவு

இலவச பேருந்து பயண அட்டைகளை முன்கூட்டியே வழங்கும் வகையில் மாணவ, மாணவிகளின் முழு விவரங்களும் ஆன்லைனில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் கணிப்பொறி ஆசிரியர்கள் மூலம் செய்து வருவதாக முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்தார்.

80 வயதை தாண்டினாலும் ‘மறுமணம் ஆகவில்லை’ என சான்றிதழ் அளித்தால் தான் ஓய்வூதியம்-மூத்த குடிமக்கள் அவதி

80 வயதை தாண்டினாலும் ‘மறு மணம் ஆகவில்லை’ என சான்றிதழ் அளித்தால் தான் ஓய்வூதியம் வழங்கப்படும் என தமிழக அரசு வெளியிட்டு உள்ள புதிய உத்தரவினால் மூத்த குடிமக்கள் நாள்தோறும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

விடைத்தாள் மதிப்பீடு ஊதியத்தை உயர்த்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை

பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு கூடுதல் தொகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

GO 29/ 14,02.2014 என்றால் என்ன, அதற்க்கு ஏன் உச்சநீதி மன்றத்தில் அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்????????????

GO 29 என்பது TNTET மதிப்பெண்ணுக்கு WTGE கொடுப்பதை பற்றி அறிவித்தது. இதில் 4 Points- கள் இருக்கிறது.

பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள்: மே முதல் வாரத்தில் விநியோகம் By dn, சென்னை

தமிழகத்தில் உள்ள 550க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வில் பங்கேற்க மே மாதம் முதல் வாரத்தில் விண்ணப்ப விநியோகம் துவங்க உள்ளது.

விளையாட்டு விடுதியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

விளையாட்டு விடுதியில் சேர்ந்து படிக்க தகுதியானவர்கள் விண்ணப்பிக் கலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.

திங்கட்கிழமை பெட்ரோல் கிடைக்குமா?

பெட்ரோல், டீசல் கொள்முதலை நிறுத்த, 'பங்க்' உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

முடிந்து போன தேர்வுக்கு பாடப்புத்தகம் விற்பனை

சென்னை, டி.பி.ஐ., வளாகத்திலுள்ள பாடநூல் விற்பனை மையத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 புத்தகங்களுக்குப் பதில், தேர்வுகள் முடிந்த, மூன்றாம் பருவ புத்தகங்களை விற்றனர்.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் தாமதம் தலைமையாசிரியர்களுக்கு 'நோட்டீஸ்'

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு, போதிய ஆசிரியர்கள் வராததால், திருத்தும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.

இபிஎப்ஓ: புதிய ஓய்வூதியதிட்டம் தற்காலிகமாக நிறுத்தம்


இபிஎப்ஓவின் புதிய ஓய்வூதியதிட்டம் தற்காலி்கமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இது குறித்து அவ்வமைப்பு தெரிவித்திருப்பதாவது: 

படிப்பை பாதியில் கைவிடும் குழந்தைகள் எண்ணிக்கை குறைந்தது

இந்தியாவில், பள்ளிப்படிப்பை பாதியில் கைவிடும் குழந்தைகள் எண்ணிக்கை, 90 சதவீதம் குறைந்துள்ளது.

செல்போன்களுக்கான ரோமிங் கட்டணம் குறைப்பு: டிராய் அதிரடி முடிவு

செல்போன் கட்டணங்களுக்கான ரோமிங் கட்டணங்களை இன்று டிராய் குறைத்து உத்தரவிட்டுள்ளது.

பழங்குடியினத்தைசேர்ந்த பட்டதாரிகளுக்கு 15 மாவட்டங்களில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி 30–ந்தேதிக்குள்பதிவு செய்யவேண்டும்

பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியின அல்லது மலை சாதி வகுப்பைச்சேர்ந்த பட்டப்படிப்புடன் பி.எட். முடித்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஆசிரியர் தகுதிதேர்வு எழுதுவதற்கு 40நாட்களுக்கு இலவச பயிற்சியை அளிக்க முடிவு செய்தார். 

10ம் வகுப்பு தேர்வு நாளை முடிகிறது 23 முதல் கோடை விடுமுறை துவக்கம்

          பத்தாம் வகுப்புக்கு நாளையும், மற்ற வகுப்புகளுக்கு, 22ம் தேதியும் தேர்வுகள் முடிகின்றன. தொடக்கப் பள்ளிகள் தவிர மற்ற வகுப்புகளுக்கு, 23ம் தேதி முதல் கோடை விடுமுறை துவங்குகிறது.

பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்

undefined
      முதுபெரும் எழுத்தாளர் ஜெயகாந்தன் உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், ஜெயகாந்தன்,80, 1934ல் பிறந்த இவர், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். பின், 14 வயதில் வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலேயே தங்கிய ஜெயகாந்தனுக்கு, மறைந்த தலைவர் ஜீவாவின் நட்பு கிடைக்க, முறைப்படி தமிழ் இலக்கணம் மற்றும் இலக்கியம் கற்றுத் தேர்ந்தார். எழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய விமர்சகர், நாவலாசிரியர், வசனகர்த்தா, திரைப்பட இயக்குனர் என, பன்முக திறமையை வெளிப்படுத்தினார். அவர் எழுதிய, 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற நூல் மிகவும் பிரபலமானது.

அரசு மேல்நிலைப்பள்ளிகள் 22-ந் தேதி முடிவடைகிறது கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ந் தேதி திறக்கப்படும்

         அரசு மேல்நிலைப்பள்ளிகள் 22-ந் தேதியுடன் முடிவடைகின்றன. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ந் தேதி திறக்கின்றன என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

ஒரு நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் ஆகும் செல்போன் பேட்டரி: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு- வீடியோ இணைப்பு

        அமெரிக்காவின் ஸ்பான் போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒருநிமிடத்தில் முழுவதுமாக சார்ஜ் ஆகும் புதிய ரக பேட்டரியை கண்டுபிடித்துள்ளனர்.
 

ரியல் எஸ்டேட் மசோதா: வீடு வாங்க அறியவேண்டிய 5 அம்சம்

      ரியல் எஸ்டேட் கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு மசோதா, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு செவ்வாய்க்கிழமை மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

கவனிக்குமா அரசு...? வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தும் தேசிய குத்துச்சண்டை வீராங்கனை ரிஷு மிட்டல்!

undefined
     பதக்கம் வென்ற தேசிய குத்துச்சண்டை வீராங்கனை  ரிஷு மிட்டல் தனது பொருளாதார தேவைக்காக வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்துகிறார்.
ஹாரியானாவைச் சேர்ந்த தேசிய குத்துச்சண்டை வீராங்கனை ரிஷு மிட்டல்,  தனது சகோதரருடன் கைத்தல் மாவட்டத்தில் வசித்து வருகிறார். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த மிட்டல், பயிற்சியாளரின் உதவியுடன் குத்துச்சண்டை விளையாட்டில் பயிற்சி மேற்கொண்டார்.
 

ஆசிரியர்களின் அசல் சான்றிதழ்களை பள்ளி நிர்வாகம் வாங்கி வைத்துக்கொள்ளலாமா?

பொதுவாக, பணியில் சேரும் ஆசிரியர்களின் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்களையும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் வாங்கி தங்கள்வசம் வைத்துக்கொள்கின்றன. 
 

"பள்ளி பாடத் திட்டத்தில் வாழ்க்கைத்திறன் கல்வி அவசியம்'

        மாணவர்கள் கல்வி கற்பதுடன் வாழ்வில் சிறந்து விளங்குவதற்கு பள்ளி பாடத் திட்டத்தில் வாழ்க்கைத்திறன் கல்வி அவசியம் என்று சென்னையில் நடைபெற்ற வாழ்க்கைத்திறன் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
 

பொறியியல், தொழில்நுட்ப கல்லூரி அனுமதி புதுப்பிப்பு: 31 விண்ணப்பங்கள் நிராகரிப்பு

         தமிழகத்திலிருந்து அனுமதியைப் புதுப்பிக்கவும், புதிய கல்லூரி தொடங்க அனுமதி கோரியும் விண்ணப்பிக்கப்பட்ட 31 விண்ணப்பங்களை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் நிராகரித்துள்ளது.
 

கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமப்புற கடன் கூட்டுறவு வங்கி-தெரிந்து கொள்ளுங்கள்

கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமப்புற கடன்
        கூட்டுறவு வங்கி 100 ஆண்டு கால வரலாறு உடையது. கூட்டுறவு வங்கிகள் இந்திய நிதி முறையில் பங்கு வகிக்கின்றது. அதன் பணிகளை செவ்வனே செய்தல், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தல், நிறைய அலுவலகங்கள் மூலம் பணிகளைச் செய்வது போன்றவை இதில் அடங்கும்.
 

போலி சாதிச்சான்றிதழ் கொடுத்து அரசை ஏமாற்றி ஆசிரியை வேலை பெற்ற பெண் சான்றிதழை ரத்து செய்து திருவள்ளூர் உதவி கலெக்டர் உத்தரவு

        போலி சாதிச்சான்றிதழை கொடுத்து அரசை ஏமாற்றி ஒரு பெண் வேலையில் சேர்ந்துள்ளார். அவரது சான்றிதழை ரத்து செய்து திருவள்ளூர் உதவி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
 

மதுரை காமராஜர் பல்கலை. புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய குழு: தமிழக அரசு உத்தரவு

           மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கான தெரிவுக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து உயர் கல்வித் துறைச் செயலர் அபூர்வா வெளியிட்ட உத்தரவு:

தனித் தேர்வர்கள் பொதுத்தேர்வுக்கு ஏப்ரல் 15 முதல் விண்ணப்பிக்கலாம்

              எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வுக்கு ஏப்ரல் 15 முதல் 21 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என, அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பள்ளி மாணவர்களுக்கு ஏப்.25-இல் மாதிரி வடிவமைப்பு பயிலரங்கம்

           தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான மாதிரி வடிவமைப்பு குறித்த பயிலரங்கம் வரும் 25,26-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

உதவிப் பேராசிரியர் நேரடி நியமனம்: தேர்வானோர் பட்டியல் வெளியீடு

         உதவிப் பேராசிரியர் நேரடி நியமனத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின்  trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்தப் பட்டியல் இடம்பெற்றுள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive