பல துறைகளில் பணி வாய்ப்புகளை
சாத்தியமாக்கும் படிப்புகள், தனக்கான பொழிவை என்றுமே இழப்பதில்லை. அவற்றில்
ஒன்றுதான் ஆங்கில இலக்கியம்.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணை வழங்க கலந்தாய்வு : வரும் 28ம் தேதி நடக்கிறது
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 1,789 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வருகிற 28-ஆம் தேதி பணி நியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
TET தேர்வு நடத்தப்படாததன் காரணம் என்ன?-நன்றி புதிய தலைமுறை
திறமையான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து
மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்க வேண்டும் என்பதற்காகவே
ஆசிரியர் தகுதித்
தேர்வு அறிமுகம்
செய்யப்பட்டது. இருப்பினும் கடந்த ஆண்டும் இந்த
ஆண்டும் ஆசிரியர்
தகுதித் தேர்வு
பற்றிய அறிவிப்பே
வெளிவராமல் உள்ளது.
'பியூன்' வேலைக்கு விண்ணப்பித்த எம்.எல்.ஏ., மகன்: தகுதி, திறமை இருந்தால் தான் பணி நியமனமாம்
ராஜஸ்தானில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வின்
மகன், மாநில அரசு அலுவலகத்தில், 'பியூன்' வேலைக்காக விண்ணப்பித்த செயல்,
பொதுமக்கள் மத்தியில் மட்டுமின்றி, அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பாக
பேசப்படுகிறது.
தனியார் பள்ளிகளுக்கான பாட புத்தகம் விலை 50 சதவீதம் உயர்வு: பள்ளிகள், பெற்றோர் அதிர்ச்சி
தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு வினியோகிக்கும் பாடப் புத்தகங்கள்
விலையை 50 சதவீத்திற்கும் மேல் உயர்த்தி தமிழ்நாடு பாடநூல் மற்றும்
கல்வியியல் பணிக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது உள்ள நடைமுறைக்கு ஏபில் அட்டை தேவையா? ஏபில் ஏன்?
1.மாணவர்கள் தன் சுய வேகத்தில் கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டது.
2. வகுப்புகளுக்கு முக்கியத்துவம் இல்லை. மாணவர்களின் அடைவுத்திறனே முக்கியம்
புதிய கல்விக் கொள்கை ஆலோசனை: 8வது வகுப்பு வரையில் கட்டாய தேர்ச்சிக்கு மாநிலங்கள் எதிர்ப்பு
மத்திய அரசின்
புதிய கல்விக்
கொள்கை ஆலோசனையில்,
8ம் வகுப்பு
வரையிலான கட்டாய
தேர்ச்சி முறைக்கு
பல்வேறு மாநில
அரசுகளும் எதிர்த்து
தெரிவித்துள்ளன. பள்ளிக் கல்வியிலும், உயர் கல்வியிலும்
பல்வேறு மாற்றங்களை
கொண்டு வந்து,
புதிய கல்விக் கொள்கை உருவாக்க
மத்திய அரசு
முடிவு செய்துள்ளது.
அடி, உதை மாணவர் காப்பி அடித்ததை கண்டித்த ஆசிரியருக்கு.............
ஜான்சி: பீகாரைத் தொடர்ந்து, உ.பி.,யிலும், 'பிட்' கலாசாரம் களைகட்டியுள்ளது. கல்லூரி தேர்வில் காப்பி அடித்ததை
கண்டித்த பேராசிரியரை, மாணவர்கள் சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Express Pay Order
பணியிட தொடர் நீட்டிப்பு ஆணை -2013 -2014 ம் ஆண்டில் தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்ட 250 BT ,50 ELE HM ,50 HS HM பணியிடங்களுக்கு 31.12.2015 வரை
பிளஸ்-2 பரீட்சை முறைகேட்டில் யார் யாருக்கு தொடர்பு?: கல்வி அதிகாரிகள் விசாரணை.
வாட்ஸ் அப் மூலம் பிளஸ்-2 கணித தேர்வு வினாத்தாளை அனுப்பிய
விவகாரத்தில் யார்-யாருக்கு தொடர்பு என்பது குறித்து கல்வி அதிகாரிகள்
விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தனியார் பள்ளி கண்காணிப்பாளர்கள் கூண்டோடு மாற்றம் செய்து அதிரடி!!
ஓசூரில், ப்ளஸ் 2 வினாத்தாளை, "வாட்ஸ்- அப்' மூலம் அனுப்பிய விவகாரத்தை தொடர்ந்து, தனியார் பள்ளி தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், கூண்டோடு
இடமாற்றம் செய்யப்பட்டனர்.
TET வெயிட்டேஜால் பாதிப்பு - பாதிக்கப்பட்டோரின் மனு உச்சநீதிமன்றம் சென்றடைந்தது.
எல்லாத்தகுதி இருந்தும் வெய்ட்டேஜால் ஆசிரியர் பணி இழந்தேன்; பாதிக்கப்பட்டோரின் மனு உச்சநீதிமன்றம் சென்றடைந்தது.
டில்லி:விரைவில் இ-ரேஷன் கார்டு
நாட்டிலேயே முதல் முறையாக அடுத்த வாரம் முதல் இ-ரேஷன் கார்டு முறையை
அறிமுகப்படுத்த ஆம்ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம்
ரேஷன்மற்றும் ஆதார் அட்டை திட்டங்கள் ஒன்றிணைக்கப்பட உள்ளன.
குடிமைப் பணிக்கான மாதிரி ஆளுமைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
2014-ம் ஆண்டிற்கான மத்திய தேர்வாணையத்தின் முதன்மை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், குடிமைப் பணிக்கான மாதிரி ஆளுமைத் தேர்வு எண். 163/1, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை-28 காஞ்சி வளாகத்தில் அமைந்துள்ள அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில் நடத்தப்படும்.
கண்காணிப்பு பணி ஆசிரியர்களுக்கு தேர்வுதுறை கடும் எச்சரிக்கை: மையங்களில் செல்போன் பயன்படுத்தக் கூடாது
மார்ச் 21-வாட்ஸ்-அப்பில் வினாத்தாள் அனுப்பிய
விவகாரம் கல்வித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தகவல் தொழில்
நுட்பம் வளர்ந்த இக்கால கட்டத்தில் வினாத்தாள் கசிவு பரிமாற்றம், காப்பி
அடித்தல் போன்ற முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க அரசு தேர்வுத்துறை பல்வேறு
நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் ஏதாவது ஒரு பிரச்சனை பூதாகரமாக கிளம்பு
விடுகிறது.
ஒரு ஆங்கில வார்த்தைக்கு 47 தமிழ் வார்த்தைகள்: நீதிபதி வியந்த வாசகி!
நீதிபதி பதவி, சமூகத்தின் மாண்புக்கும்
மரியாதைக்கும் உரிய பதவி. பொதுவாக அரசு அலுவலகப் பணி என்பது அலுவலக
அறைகளுடன் முடிந்து போகும். சற்று நீட்டித்தால் இல்லங்களில் சில மணி
நேரங்கள் கோப்புகளை புரட்ட வேண்டி இருக்கும். ஆனால் நீதிபதி பதவி என்பது
வழக்குகளின் தன்மைகளை ஆய்ந்து, சீர்தூக்கி, சொல்லப்போனால் அந்த வழக்குகளோடு
வாழவேண்டிய பணி.
ஏப்ரல் 19ல் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த ஜாக்டோ முடிவு
இன்று சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ உயர்மட்ட
பொறுப்பாளர்கள் கூட்டத்தில் ஏப்ரல் 19ல் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும்
உண்ணாவிரதம் போராட்டம் நடத்த ஜாக்டோ முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச்30ம் தேதி ஜாக்டோ மீண்டும் கூடவுள்ளது.
ஆதிதிராவிட/ கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணியிடங்களை விரைந்து நிரப்பகோரி தொடர் போராட்டம்
அனைத்து சகோதர / சகோதரிகளுக்கும் வணக்கம்...
தமிழக அரசின் ஆதிதிராவிட / கள்ளர் சீரமைப்பு நலப்பள்ளிகளில் இடைநிலை
ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. 2013 ம் ஆண்டுதான் சுமார் 669
இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஆதிதிராவிடநலப்பள்ளிகளிலும் சுமார் 74
இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் கள்ளர் நலப்பள்ளிகளிலும் அந்தந்த
சமூகத்தினற்கு முன்னுரிமை அளித்து நிரப்பப்படும் என்று 21.08.2014 அன்று
ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.
குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 346 பேருக்கு இன்று கலந்தாய்வு
பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறப்பட்டு உள்ளதாவது:-தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம்
உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு குரூப்-2-ல் பள்ளி
கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 346 பேருக்கு நியமன ஆணை
வழங்குவதற்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி
அலுவலகங்களில் அமைந்துள்ள கலந்தாய்வு மையத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 10
மணிக்கு நடைபெற உள்ளது.
முன்னுரிமை பாதிப்புகள்:தொடக்கக் கல்வித்துறையில் பணியில் 2004-ல் சேர்ந்த ஆசிரியர்களின் நிலை மிகவும் பரிதாபம்!
2004-ல் "கலந்தாய்வு இன்றி" வெவ்வேறு
மாவட்டங்களுக்கு மாநில அளவில் TRB தர எண் அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்... "நியமனம்(appointment)மாநில அளவில்"... "முன்னுரிமை(Seniorty)
மட்டும் ஒன்றிய
அளவிலா"????.
அரசுப் பள்ளிகளிலும் மே மாதமே பாடங்கள் நடத்த உத்தரவு: மாணவர்கள் ஆசிரியர்கள் அதிர்ச்சி
தனியார் பள்ளிக்ளைப் போல அரசுப் பள்ளிகளிலும் முன்கூட்டியே பாடங்களை நடத்த
கல்வி அதிகாரிகள் வற்புறுத்துவதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு யோகா
மத்திய அரசில் பணியாற்றும், 31 லட்சம் பணியாளர்களுக்கும், அவர்களின்
குடும்பத்தினருக்கும், இலவசமாக, யோகா பயிற்சி அளிக்கும் திட்டம், ஏப்ரல் 1
முதல், நாடு முழுவதும் துவங்க உள்ளது.
பள்ளியில் பகவத் கீதை: சுப்ரீம் கோர்ட் மறுப்பு
மகாராஷ்டிர மாநிலத்தில், பா.ஜ., கட்சியின் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான
ஆட்சி நடக்கிறது. கிழக்கு மும்பை பகுதியில் உள்ள, பள்ளி மாணவர்களிடையே
தார்மீக பலத்தை அதிகரிப்பதற்கு, பள்ளிகளில் பகவத் கீதையை கற்பிக்க முடிவு
செய்யப்பட்டது. இந்த முடிவை எதிர்த்து, டில்லி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல
மனு தாக்கல் செய்யப்பட்டது.
'வாட்ஸ் அப்'ல் பிளஸ் 1 வினாத்தாள்
பிளஸ் 1 மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்விற்கான வினா கேள்வித்தாள்கள், தேர்வுக்கு முதல் நாளே 'வாட்ஸ் அப்' ல் உலா வருகின்றன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி கல்வி மாவட்டங்களுக்கன
பிளஸ் 1 ஆண்டு இறுதித்தேர்வுகள் மார்ச் 11 முதல் நடந்து வருகிறது. பிற்பகல்
2 முதல் மாலை 5 மணி வரை தேர்வுகள் நடந்து வருகிறது.
பிளஸ் 2 வேளாண் தேர்வில் 59 மதிப்பெண் போச்சு
தொழிற்கல்வியில், வேளாண் செயல்முறை கள் பாடத்துக்கு, 'தியரி' தேர்வை,
தமிழகம் முழுவதும், 12 ஆயிரம் பேர் நேற்று எழுதினர். இந்தப் பாடத்தில் அதிக
மதிப்பெண் பெற்றால், பி.எஸ்.சி., அக்ரி மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரி
பட்டப்படிப்புக்கு செல்லலாம். ஆனால், வேளாண் செயல்முறைகள் பாட
வினாத்தாளில், 59 மதிப்பெண்களுக்கான, 13 வினாக்கள் மாணவர்களுக்கு புரியாத
வகையில் இடம் பெற்றுள்ளன.