Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
சூரிய ஒளியில் இயங்கும் விமானம் தனது உலக சுற்றுப்பயணத்தை இன்று காலை தொடங்கியது: நாளை இந்தியாவுக்கு வருகை
சூரிய ஒளியில் இயங்கும் விமானம் உலகளவிலான தனது முதல் சுற்றுப்பயணத்தை அபுதாபியிலிருந்து இன்று அதிகாலை தொடங்கியது. அங்கிருந்து ஓமன் செல்லும் இவ்விமானம் நாளை இந்தியாவுக்கு வந்து சேர்கிறது.
சான்றிதழ்களை பாதுகாக்க 'டிஜிட்டல் லாக்கர்' அறிமுகம்
பொதுமக்களின்
முக்கிய சான்றிதழ்கள், 'டிஜிட்டல்' முறையில் இருந்தால், அதை பாதுகாப்பாக
வைக்க, 'டிஜிலாக்கர்' என்ற இணைய வசதியை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
கல்விச் சான்றிதழ்கள், வங்கி டிபாசிட் சான்றிதழ்கள் போன்ற சான்றிதழ்களை,
வீடுகளில் பாதுகாப்பாக, தாள்களாக பத்திரமாக வைத்திருப்போம். அது போல, அந்த சான்றிதழ்களை, டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக வைக்கும் புதிய முறை அறிமுகம் இப்போது செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு தொடக்கம்
கேரள மாநிலத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி, வரும் 23-ம் தேதி வரை நடைபெறுகின்றன.
தேர்வு நடைமுறைகளை அடிக்கடி மாற்றுவதால் தேவையற்ற குழப்பங்கள்!
பிளஸ் 2 தேர்வுகள் நடந்து வரும் நிலையில்,
நடைமுறைகளை அடிக்கடி மாற்றுவதால், பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துவதாக,
தேர்வுப் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் தெரிவித்தனர்.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வர்கள் குழப்பம் தீர்க்க தகவல் மையம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான -
டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், பார்வை யாளர்களுக்கு தடை
விதிக்கப்பட்டுள்ளதால், தேர்வர்களின் சந்தேகங்களைத் தீர்க்க, புதிய தகவல்
மையம் அமைக்கப்பட உள்ளது.
வேலைநிறுத்தம்: 40 ஆயிரம் பேர் பங்கேற்க ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் முடிவு
காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 20
அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற உள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப்
போராட்டத்தில் 40 ஆயிரம் பேர் பங்கேற்பது என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை
அலுவலர் சங்கங்களின் போராட்டக் குழு முடிவு செய்துள்ளது.
ஆகஸ்டு 15–ந் தேதிக்குள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைக்கப்படும் தேர்தல் கமிஷன் நடவடிக்கை
ஆகஸ்டு 15–ந் தேதிக்குள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை தகவல்களை இணைக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது.
பார்வையற்ற பட்டதாரிகளுக்கு உதவிப் பேராசிரியர் பணி வழங்கக் கோரிக்கை
தகுதித் தேர்வு முடித்து நீண்ட காலமாகக்
காத்திருக்கும் பார்வையற்ற 100 பட்டதாரிகளுக்கு உதவிப் பேராசிரியர் பணி
வழங்க வேண்டும் என பார்வையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு : கோயிலில் கலை நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த கிராம மக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள
கொத்தமங்கலத்தில் பிளஸ் 2 தேர்வும் முடியும் வரை கோயிலில் கலை நிகழ்ச்சிகள்
நடத்துவதில்லை என கிராம மக்கள் தீர்மானித்துள்ளனர்.
சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூடியது பட்ஜெட் பற்றி முக்கிய ஆலோசனை
தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது. அந்த கூட்டத்தில் பட்ஜெட் பற்றி முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.
உச்சநீதிமன்ற டி.இ.டி. வழக்குகள் மார்ச் 9 கோர்ட் எண் 7ல் விசாரணைக்கு வருகிறது
CAUSELIST FOR Monday 9th March 2015
Court No. 7 HON'BLE MR. JUSTICE FAKKIR MOHAMED IBRAHIM KALIFULLA HON'BLE MR. JUSTICE SHIVA KIRTI SINGH.
"ஜாக்டோ' போட்டியாக "ஜாக்டா' நடவடிக்கை 2 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்கும் மாநில பேரணி.
மார்ச் 8- தமிழகம் முழுவதும், "ஜாக்டோ' அமைப்பின் சார்பில், இரண்டு
லட்சம்ஆசிரியர்கள் பங்கேற்கும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம், இன்று நடக்கும்
நிலையில், மேற்கண்ட அமைப்புக்கு போட்டியாக, "ஜாக்டா' அமைப்பு தனித்து
செயல்படுவதால், ஆசிரியர் சங்கங்கள் அதிர்ச்சியடைந்துள்ளன.
குழந்தைகள் நலக்குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிட நியமனம்
குழந்தைகள் நலக்குழுக்களுக்கு
தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்காக, தகுதி
வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கிராமப்புற பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க கூடுதல் நடவடிக்கை: கல்வித்துறை திட்டம்
வரும் கல்வியாண்டில், கிராமப்புற அரசு
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க
கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
ஏப்ரல் 15 முதல் சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல்
15-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு
சத்துணவு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் கே.பழனிசாமி சனிக்கிழமை தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டக் கல்வி அலுவலர், அவரே விரும்பி விடுப்பில் உள்ளார். - இணை இயக்குநர்
திருவாரூர் மாவட்டக் கல்வி அலுவலராக இருந்த ஜெ. அருள்மணி இருதய கோளாறு காரணமாக அவரே விரும்பி விடுப்பில் உள்ளார்.-பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் கார்மேகம் தகவல்
பதவி உயர்வு பட்டியலில் கல்வி தகுதி இல்லாதவர்கள்: புள்ளியியல் துறையினர் அதிர்ச்சி
புள்ளியியல் துறையில், உரிய கல்வித் தகுதி
பெறாதவர்களின் பெயர்கள், புள்ளியியல் அலுவலர் பதவி உயர்வு பட்டியலில் இடம்
பெற்றிருப்பதால், பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்கள் அதிர்ச்சி அடைந்து
உள்ளனர்.
மாணவர்கள் எண்ணிக்கை குறைவால் 7 பள்ளிகளை மூட பி.பி.எம்.பி., திட்டம்
பெங்களூரு: மாணவர்கள் எண்ணிக்கை குறைவால்,
தற்போதுள்ள மாணவர்களையும், ஆசிரியர்களையும் அருகிலுள்ள பள்ளிகளுக்கு
மாற்றி, ஏழு பள்ளிகளை மூட, பி.பி.எம்.பி., தீர்மானித்துள்ளது.
"தமிழக ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம்"
தமிழக ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என த.மா.கா. தலைவர் வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
'ஸ்மார்ட் கிளாஸ்' மூலம் கல்வி: அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள்
தர்மபுரி அருகே, அரசு நடுநிலைப் பள்ளியில்,
அரசு மற்றும் ஆசிரியர்களின் முயற்சியால், 'ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பில்,
மாணவர்கள் கற்கும் மற்றும் கற்பிக்கும் திறனை வளர்த்துள்ளனர்.