Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நாடு முழுவதும், பின்தங்கிய மாவட்டங்களில் எல்.கே.ஜி. முதல் முதுகலை பட்டம் வரை ஒரே இடத்தில் படிக்கும் வசதி : பட்ஜெட்டில் அறிவிக்க மத்திய அரசு பரிசீலனை

          நாடு முழுவதும், கல்விரீதியாக பின்தங்கிய மாவட்டங்களில், ஒரே வளாகத்தில் எல்.கே.ஜி. முதல் முதுகலை பட்டம் வரை படிக்கும் வசதியை அளிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

10th & +2 வினாத்தாள் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு : அரசு தேர்வுத்துறை முடிவு

            எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுக்கான வினாத்தாள் வைக்கப்படும் பாதுகாப்பு மையங்களில் ஆயுதம் தாங்கிய போலீஸ்பாதுகாப்பை பலப்படுத்த அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

CPS ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

             தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்டத்தலைவர் சி.முத்துச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
 

அண்ணாபல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூன் மாத இறுதியில் தொடங்கும் : துணைவேந்தர் மு.ராஜாராம் தகவல்

          அண்ணாபல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூன் மாத இறுதியில் தொடங்கும் என்று அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம் தெரிவித்தார்.

பி.இ. கலந்தாய்வு: 2.4 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கத் திட்டம்

            வருகிற 2015-16 கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வுக்கு 2.4 லட்சம் விண்ணப்பங்களை அச்சடிக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

பாலிடெக்னிக் மாணவர்களுக்கு கல்வி கட்டணம்: நீதிபதி குழு முடிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு

            பாலிடெக்னிக் மாணவர்களுக்கான கட்டண நிர்ணயம் குறித்து, நீதிபதி குழுவை அணுகும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு பணியில் ஆர்வம் காட்டாத சிறப்பு பிரிவு டாக்டர்கள்: 1,737 இடங்களுக்கு 433 பேர் மட்டுமே தேர்வு

                அரசு மருத்துவமனைகளுக்கு, 1,737 சிறப்பு பிரிவு டாக்டர்கள் இடங்களை நிரப்ப மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியமான எம்.ஆர்.பி., நேரடி ஆட்தேர்வு நடத்தியும் டாக்டர்கள் ஆர்வம் காட்டவில்லை. போதிய ஆட்கள் கிடைக்காததால் 433 பேரை மட்டுமே தேர்வு செய்ததாக வாரியம் அறிவித்துள்ளது.

மே துவக்கத்தில் விண்ணப்பம்; ஜூன் இறுதியில் இன்ஜி., கவுன்சிலிங்

            பொறியியல் படிப்பு விண்ணப்பங்களை, மே முதல் வாரத்தில் வினியோகிக்கவும், ஜூன் இறுதி வாரத்தில் இருந்து கவுன்சிலிங் நடத்தவும், அண்ணா பல்கலை முடிவெடுத்து உள்ளது.

200 மாணவர்கள் உடல்நல பாதிப்பு: தெலுங்கானாவில் பதற்றம்

                 தெலுங்கானாவில் பன்றிக்காய்ச்சலுக்கு மாத்திரை சாப்பிட்ட 200 மாணவ, மாணவியர் உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 700 மாணவர்கள் இந்த மாத்திரைகளை சாப்பிட்டுள்ளனர் என்று தகவலால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,அரசின் அலட்சிய போக்கே இதற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன.
 

கல்வி வளர்ச்சி நாள் பரிசாக பள்ளிகளுக்கு 80 லட்ச ரூபாய் ஒதுக்கீடு

            கல்வி வளர்ச்சி நாள் பரிசாக, பள்ளிகளுக்கு 80 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15, கல்வி வளர்ச்சி நாளாக, பள்ளிகளில் கொண்டாடப்படுகிறது. இதற்காக, 80 லட்சம் ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. தேர்வு செய்யப்படும் சிறந்த பள்ளிகளுக்கு, இத்தொகை பரிசு தொகையாக பகிர்ந்தளிக்கப்படும்.

விடைத்தாளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவிப்பு

          பொதுத்தேர்விற்கான விடைத்தாளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, கல்வித்துறை அறிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டின், பிளஸ் 2 பொதுத்தேர்விற்கான விடைத்தாள் தயார் செய்யும் பணிகள் தற்போது அனைத்து பள்ளிகளிலும், நடக்கிறது. இப்பணிகளில் கடந்தாண்டில் பின்பற்றிய வழிமுறைகளில், மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, விடைத்தாள்களை விரைவில் தயார்செய்யும்படி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இடைத்தேர்தலை முன்னிட்டு திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு விடுமுறை

            ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் இடைத்தேர்தல் நடப்பதால், வரும், 13ம் தேதி, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலை, நிறுவனங்கள், மற்றும் அலுவலகங்களுக்கு, ஒரு நாள் சம்பளத்துடன் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
 

IT Tax Form 2015 - Collection

             பாடசாலை வாசகர்கள் வருமான வரி கணக்கிட ஏதுவாக நம் வாசக ஆசிரியர்கள் வழங்கியுள்ள பல்வேறுவகையான படிவங்கள் தங்கள் பார்வைக்கு,


IT Forms Prepared By
Links
Mr. S.M. Thomas Antony,
B.T.Asst.,
St. Britto HSS, Madurai-16.
(Version 2.1)
Mr. K. Arunagiri,
PG Asst. in Maths,
GHSS Kasinayakkanpatti,
Vellore District. (Version 2.1)
Mr. P. Manimaran,
B.T.Asst., (Science),
GHS, P.Thottiyankulam,
Virudhunagar Dt.
Mr. K. Uduman Ali,
TAMS.
Download
Mr. S. Velavan,
P.G.Asst.,
Thiruvarur.

Download




TATA ஊதிய வழக்கின் நிலை

      ஊதிய பிரச்சனை மேல்முறையீடு வழக்கு W.P.(MD ) NO; 1612 / 2015. மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மாண்புமிகு நீதிபதி அவர்கள் நீங்கள் Hon'ble  Mr.Justice A.S.Venkatachalamoorthy Formerly Chief Justice of Chattishgarh High Court (Retd.)
The Chairman  of Pay Grievance Redressal Committeeக்கு 14.01.2015 அன்று அனுப்பிய மனு  

2,176 புதிய டாக்டர்களை நியமிப்பதில் சிக்கல் ஏன்?

              அரசு மருத்துவமனைகளுக்கு, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம், 2,176 டாக்டர்களை தேர்வு செய்து மூன்று மாதங்கள் ஆகியும், அரசு நியமனம் செய்யாமல் இழுத்தடித்து வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எது மாற்றுக்கல்வி? ஏன் மாற்றுக் கல்வி? எப்படி மாற்றுக்கல்வி?

மு தலில் கல்வி அல்லது கற்றல் என்றால் என்ன என்று பார்ப்போம்.

            கற்றல் என்பது தெரிந்துகொள்வது அல்லது புரிந்துகொள்வது அவ்வளவுதான். அதாவது "மனிதர்கள் கூட்டமாக வாழ்வது ஊர் எனப்படும்" என்று ஒருவர் சொன்னால் "ஓ அப்படியா" என்று தெரிந்துகொள்வது. மற்றபடி அதை தெரிந்து என்ன புண்ணியம்? என்பது "கற்றலின் வழி செயற்படல் அல்லது தேடல் அல்லது பகுத்தறிதல் " என்ற அளவுகோலில் வரும்.

பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் ஷூ பெல்ட் அணிய கூடாது: தேர்வு துறை ஆலோசனை

               பிளஸ் 2 வகுப்பு தேர்வு நடைபெறும் மையங்களுக்கு மாணவ, மாணவிகள் ஷூ மற்றும் பெல்ட் அணிந்து வர தடைவிதிப்பது குறித்து தேர்வு துறை  பரிசீலனை செய்து வருகிறது.
 

பொதுத்தேர்வை எதிர்கொள்ள ஆலோசனை: 104-இல் அழைக்கலாம்

               பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு பயம் ஏற்பட்டால் அவர்கள் தமிழக அரசின் 104 தொலைபேசி சேவையை அழைக்கலாம்.

'டிவிடி' பிளேயர் மற்றும் கணினி உபகரணங்கள் பழுது - பராமரிப்பு நிதியில் இருந்து பழுது நீக்கிக் கொள்ள அறிவுறுத்தல்

           ஆங்கில கல்வியை மேம்படுத்த அளித்த குறுந்தகடு... : 'டிவிடி' பிளேயர் மற்றும் கணினி உபகரணங்கள் பழுது - பள்ளி பராமரிப்பு நிதியில் இருந்து பழுது நீக்கிக் கொள்ள அறிவுறுத்தல்

அரசு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும், முதியோர் ஓய்வூதியம் பெறவும் ஆதார் கட்டாயம்

              "மத்திய அரசு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும், முதியோர் ஓய்வூதியம் பெறவும், ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும்,' என்ற உத்தரவால், பயனாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

1,078 சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வு அறிவிப்பை வாட்ஸ் அப்பில் வெளியிட்ட 2 போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை

              தமிழக காவல் துறையில் புதிதாக 1,078 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பை முன்கூட்டியே வாட்ஸ் அப்பில் வெளியிட்ட 2 போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

போட்டி தேர்வு: சிறப்பு ஆசிரியர்கள் அதிர்ச்சி

              அரசு பள்ளிகளில் இசை, ஓவியம், விளையாட்டு, தையல், உடற்கல்வி ஆகிய பாடப் பிரிவுகளுக்கு, ஆசிரியர் பற்றாக்குறை நிலவியதால், 2011ல், 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். மாதம், 5,000 ரூபாய் மதிப்பூதியத்தில், வாரத்தில் மூன்று அரை நாட்கள் வீதம் மாதத்தில், 12 அரை நாட்கள் பணிநாட்களாக வரையறுக்கப்பட்டன.

மனதின் குரல் நிகழ்ச்சி: மாணவர்களுடன் உரையாட பிரதமர் ஆலோசனை

             பொதுத்தேர்வு மற்றும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இம்மாதம் மனதின் குரல் வானொலி உரையில் ஆலோசனைகளை வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

BAVANISAGAR TRAINING LIST PREPARATION REGARDING

           தமிழ்நாடு அமைச்சுப் பணி - இளநிலை உதவியாளர் / உதவியாளர்களுக்கு பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் அடிப்படை பயிற்சி வழங்குதல் - நிலுவையிலுள்ள இளநிலை உதவியாளர் / உதவியாளர்கள் பெயர் பட்டியல் தொகுத்தல் சார்பான உத்தரவு

அறிவிப்பு வெளியிட்டும் அரசுப் பள்ளிகளில் இன்னும் சுத்தமான குடிநீர் இல்லை!

            அரசு அறிவித்தும், 1,001 பள்ளிகளில், மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படாததால், மாணவ, மாணவியரின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

ஆன்லைன் சேர்க்கையைத் துவக்கிய சென்னை சி.பி.எஸ்.இ. பள்ளிகள்

             சென்னை நகரிலுள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகள், ஆன்லைன் முறையிலான மாணவர் சேர்க்கையைத் துவங்கியுள்ளன. சென்னை நகரிலுள்ள எஸ்.பி.ஏ.ஓ பள்ளி மற்றும் ஜுனியர் காலேஜ், பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரம், அண்ணாநகர், கீழ்ப்பாக்கம் மற்றும் விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளிலுள்ள சின்மயா வித்யாலயா பள்ளிகள் மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி போன்ற பள்ளிகள் அவற்றுள் முக்கியமானவை.
 

மக்களை அலைய விடாத முன்மாதிரி வி.ஏ.ஓ.,க்கள்

               கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ.,), எங்கே இருக்கின்றனர் என்பதை கண்டுபிடிக்க முடியாமல், தினமும் அலுவலகங்களுக்கு அலையும் மக்களுக்கு மத்தியில், ஈரோடு மாவட்டத்தில், இரு வி.ஏ.ஓ.,க்கள், வித்தியாசமாக செயல்பட்டு வருகின்றனர்.

ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி அதிர்வு; நாடு முழுவதும் வெகுண்டு எழுமா?

            டில்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் வரலாற்று திருப்பமாக பார்க்கப்படுகிறது. கட்சி துவக்கி ஒரு ஆண்டிற்குள் மக்கள் மத்தியில் இவ்வளவு செல்வாக்கு பெற கெஜ்ரிவாலுக்கு எந்த ஆயுதம் உதவியது. இவரது முன்னேற்றத்திற்கு என்ன காரணம் ? மக்களை எப்படி கவர்ந்தார் என அரசியல் விமர்சகர்கள் தங்களின் விவாதங்களில் அலசி வருகின்றனர்.
 

தொடரும் அவலம்: விடுதியில் குழந்தை பெற்ற 6 ஆம் வகுப்பு மாணவி

                 ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரிலிருந்து 500 கி.மீ தொலைவில் உள்ள கோராபுட் மாவட்டத்தின் ஒரு பகுதியான ஜெய்போர் நகரில் அரசுக்கு சொந்தமான உமுரி ஆசிரம பள்ளி உள்ளது. இதன் அருகே தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கான விடுதியும் உள்ளது. இந்த விடுதியில் தங்கியிருந்த 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கர்ப்பமாக இருந்துள்ளார். பள்ளியின் தலைமை ஆசிரியரும் விடுதி கண்காணிப்பாளரும் இந்த விஷயத்தை நிர்வாகத்திடம் சொல்லாமல் மறைத்து வந்தனர்.

ஒரு வாரத்தில் சருமம் பொலிவடைய வேண்டுமா?

             வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு ஒரு வாரத்தில் அழகாக மாறலாம். முகத்தில் தூசிகள் படிந்திருப்பதால் முகம் பொலிவின்றி காணப்படும். எனவே அவ்வப்போது முகத்தை சுத்தமான நீரினால் கழுவினால், முகம் நன்கு சுத்தமாக பருக்களின்றி இருக்கும்.

             முகத்தில் உள்ள கருமையைப் போக்குவதற்கு நிறைய ஃபேஸ் மாஸ்க்குகள் உள்ளன. அத்தகைய மாஸ்க்குகள், ஸ்கரப்கள் போன்றவற்றை மேற்கொண்டால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி, சருமத்தின் நிறம் இயற்கையாகவே அதிகரிக்கும். எலுமிச்சை ஒரு சூப்பரான ப்ளீச்சிங் பொருள்.
 

10th Study Material - Science

Science Study Material


பொதுத் தேர்வுப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

          10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக பள்ளிக் கல்வி இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் அளவிலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive