திருச்சி, உறையூர் நாச்சியார் பாளையத்தை
சேர்ந்த ராஜா என்பவரது மகன் சந்தோஷ், 17, இவர், திருச்சி, தில்லைநகர்
கி.ஆ.பெ. விஸ்வநாதம் மேல்நிலைப் பள்ளியில், ப்ளஸ் 1 வகுப்பு படித்து
வருகிறார். பள்ளி வகுப்பறையில், மின் விளக்கு, மின் விசிறி உள்ளிட்டவை
செயல்படுவது இல்லை. குடிநீர் வசதி இல்லாததால், கடந்த மாதம், 9ம் தேதி,
பள்ளி உதவி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
உச்சநீதிமன்றத்தில் 5% மதிப்பெண் தளர்வு மற்றும் அரசாணை எண்.71 சார்பான வழக்கின் நிலை
SLP(C) NO. 29245 OF 2014
ITEM NO.51 & 66 COURT NO.8 SECTION XII
3100ம் ஆண்டு வரை தேதிக்கு கிழமை சொல்லும் சிறுவன் : அதிசயிக்கின்றனர் பெற்றோர், ஆசிரியர்கள்
கொளப்பாக்கத்தை
சேர்ந்த சேசுராம் என்ற 10 வயது சிறுவன், மொத்தம், 1090 ஆண்டுகளில் ஏதாவது
ஒரு தேதியை (3,97,850 நாட்கள்) கூறி, கிழமை கேட்டால், மறு நொடியே,
சம்பந்தப்பட்ட தேதிக்கான கிழமையை கூறுகிறான்.
அவனுடைய தனித்திறமை
குறித்து, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் மிகவும் பிரமிப்படைகின்றனர். ஆனால்,
சேசுராமுக்குள் ஒளிந்திருந்த இந்த திறமை, எப்படி உருவானது என, அவர்களால்
கண்டுபிடிக்க முடியவில்லை. என்ன நடந்தது?சேசுராமுக்கே அவனது திறமை குறித்து கேட்டால், தெரியவில்லை. 'தெரியும்' என்று மட்டுமே கூறுகிறான்.
பிளஸ்–1 மாணவர்கள் 35 சதவீத மதிப்பெண் எடுத்தால் தான் தேர்ச்சி பள்ளி கல்வித்துறை செயலாளர் த.சபீதா பேட்டி
பிளஸ்–1 மாணவர்கள்
ஒவ்வொரு பாடத்திலும் தலா 35 சதவீத மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி. அதற்கு
அதிகமாகவோ, குறைவாகவோ தேர்ச்சி என்று அறிவிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை
எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா
எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில்
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக
கருதப்படுகின்றன. பிளஸ்–1 வகுப்பில் நன்றாக படித்தால் தான் பிளஸ்–1
தேர்ச்சி பெற்று பிளஸ்–2 படிக்க செல்லமுடியும்.
பிளஸ்–1 வகுப்பில்
தேர்ச்சி பெற ஒவ்வொரு பள்ளியிலும் மாறுபட்ட மதிப்பெண் உள்ளது. ஒவ்வொரு
பள்ளியிலும் ஆசிரியர்களை கொண்ட தேர்வுக்குழு உள்ளது. அந்த தேர்வுக்கு குழு
பரிந்துரைத்த மதிப்பெண்ணை கொண்டுதான் தேர்ச்சியா? தோல்வியா? என்பதை அந்த
பள்ளி முடிவு செய்கிறது.
பள்ளி கல்வி இயக்குனரகத்திற்கு அறிக்கை
குறிப்பாக அரசு உதவி
பெறும் பள்ளிகளில் பிளஸ்–2 தேர்ச்சி விகிதம் 100–க்கு 100 இருக்கவேண்டும்
என்பதை கருத்தில் கொண்டு பிளஸ்–1 தேர்ச்சி சதவீதத்தை அதிக அளவில்
வைக்கிறார்கள்.
இதுகுறித்து
பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டு சீனியர் வக்கீல்
டி.முத்தரசன் அரசுக்கு குறிப்பாக பள்ளிக்கல்வி இயக்குனரகத்திற்கு கோரிக்கை
விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
அரசு பள்ளிகளில்
தேர்ச்சி சதவீத மதிப்பெண்ணை விட அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்ச்சி
மதிப்பெண் சதவீதம் அதிகமாக உள்ளது. அதுவும் பள்ளிக்கூடத்திற்கு
பள்ளிக்கூடம் மாறுபடுகிறது.
அரசு குறிப்பாக
பள்ளிக்கல்வி இயக்குனரகம் தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகள், அரசு உதவி
பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆகியவற்றில் பிளஸ்–1
மாணவ–மாணவிகளுக்கு தேர்ச்சி பெற ஒரே வித மதிப்பெண்ணை நிர்ணயிக்க வேண்டும்.
இல்லையென்றால் வருடந்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பெயிலாகி
விடுகிறார்கள். அதனால் அவர்கள் மனநலமும் பாதிக்கப்படுகிறது. மேலும்
பிளஸ்–2 படிக்காமல் படிப்பை நிறுத்திவிட்டு வேறு வேலைக்கு சென்றுவிடும்
நிலை உள்ளது.
இவ்வாறு அவர் கோரிக்கை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதாவிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:–
தமிழ்நாடு முழுவதும்
அரசு பள்ளிகளாக இருந்தாலும் சரி, அரசு உதவி பெறும் பள்ளிகளாக இருந்தாலும்
சரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகளாக இருந்தாலும் சரி எந்த பள்ளிகளாக இருந்தாலும்
ஒவ்வொரு பாடத்திலும் 35 மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி. இந்த மதிப்பெண்
ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு அமலில் உள்ளது.
35 சதவீதத்திற்கு
கீழ் தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயித்த பள்ளிகளாக இருந்தாலும் சரி, தேர்ச்சி
மதிப்பெண் சதவீதம் 35–க்கும் அதிகமாக நிர்ணயித்த பள்ளிகளாக இருந்தாலும் சரி
அந்த பள்ளிகள் எந்த பள்ளிகள் என்று தெரிந்தால் அந்த பள்ளிகள் மீது
நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு த.சபீதா தெரிவித்தார்.
இரண்டாம் இடைப்பருவ தேர்வு அட்டவணை திடீரென மாற்றம்
இரண்டாம் இடைப்பருவ
தேர்வு அட்டவணை திடீரென மாற்றப்பட்ட தகவல், மாணவர்களுக்கு
தெரிவிக்கப்படாததால், நேற்று தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் அதிர்ச்சி
அடைந்தனர். அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான
மாணவர்களுக்கு, இரண்டாம் இடைப்பருவ தேர்வு நேற்று துவங்கியது. இதற்கான
அட்டவணை, சில நாட்களுக்கு முன் வழங்கப்பட்டது.
அதிகரிக்கும் ஆங்கில மோகத்தால் அரசு தொடக்கப்பள்ளிகளில் குறைந்துவரும் மாணவர்கள்
அதிகரித்து வரும் ஆங்கில மோகத்தால் அரசு தொடக்கப் பள்ளிகளில் போதிய அளவில் மாணவர் சேர்க்கை இல்லாமல் குறைந்து வருகிறது. இதற்கு
அடிப்படை காரணம் மக்களிடையே வளர்ந்து வரும் ஆங்கில மோகம் தான்.
ஒற்றைப் பெண் குழந்தைக்கு கல்வி உதவித்தொகை: யுஜிசி அறிவிப்பு
சுவாமி விவேகானந்தா ஒற்றைப் பெண் குழந்தைக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தை யுஜிசி அறிமுகப்படுத்தியுள்ளது.
படிப்பறிவு இல்லாமல் 28 கோடிப் பேர்: ஆளுநர் கவலை
இந்தியாவில் 28
கோடிக்கும் அதிகமானோர் படிப்பறிவு இல்லாமல் இருப்பது வருத்தமளிப்பதாக
உள்ளது என்று ஆளுநர் ரோசய்யா கூறினார். கல்வி- சமூக ஆராய்ச்சி நிறுவனத்தின்
சார்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழை
மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட
உதவிகள் வழங்கி ஆளுநர் ரோசய்யா பேசியது:
ஓர் அரசு ஆரம்பப்பள்ளி - ஒரு ஆசிரியர் - ஒரு மாபெரும் புரட்சி
ஓர் அரசு ஆரம்பப்பள்ளி - ஒரு ஆசிரியர் - ஒரு மாபெரும் புரட்சி -ஒரு பதவி உயர்வு - ஒரு முழு கிராமம் - ஒரு பாராட்டுவிழா - மனதார வாழ்த்துவோம்
விண்டோஸ்: எளிதாகவும் விரைவாகவும் இயக்க டிப்ஸ்
கம்ப்யூட்டரில் நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன்
சாப்ட்வேர் தொகுப்புகளைப் போல, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அவ்வளவாக
ஆர்வமூட்டும் வகையில் இருப்பதில்லை. இருப்பினும் இதனை எளிதாகவும்,
விரைவாகவும் இயக்கி நமக்குத் தேவயானதைப் பெற, இங்கு சில உதவிக் குறிப்புகள்
தரப்படுகின்றன. இவை டெஸ்க்டாப் கம்ப்யூட்டர், லேப் டாப் கம்ப்யூட்டர்
மற்றும் அனைத்து விண்டோஸ் சிஸ்டங்களிலும் பயன்படுத்தக் கூடியவையே.
பள்ளிகளில் பரவும் வன்முறை கலாசாரம்.. முளையிலே கிள்ளி எறிய 'கவுன்சிலிங்'!
பள்ளி மாணவர்கள் மத்தியில், அதிகரிக்கும்
வன்முறைகளை தவிர்க்க, பிரச்னைகளுக்குரிய மாணவர்களை கண்டறிந்து தனித்தனியாக
சிறப்பு கவுன்சிலிங் வழங்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில்,
பள்ளி மாணவர்கள் மத்தியில், சினிமா, 'டிவி', மொபைல் போன், இன்டர்நெட்
உள்ளிட்ட, பல்வேறு காரணங்களால், வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளில், மாணவர்கள் ஈடுபடும் குற்றச்சம்பவங்கள், பெருமளவில்
அதிகரித்துவிட்டது.
பள்ளி மாணவன் இறப்பு எதிரொலி: ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி மறியல்
பள்ளி மாணவன் இறந்த
வழக்கில் வகுப்பு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இறந்த மாணவரின்
உறவினர்கள் ரோடு மறியலில் ஈடுபட்டதால் நிலக்கோட்டையில் பதட்டம் ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே விளாம்பட்டி அரசு கள்ளர்
மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த 11 ம் வகுப்பு மாணவர் சக மாணவர்
அடித்ததால் இறந்தார்.
தொழிற்கல்வி ஆசிரியர்களின் கூடுதல் சம்பளத்தை பிடித்தம் செய்ய கூடாது
திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களை சேர்ந்த 7
தொழிற்கல்வி ஆசிரியர்கள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில்
கூறியிருப்பதாவது: கடந்த 1990 முதல் 1994 வரை நாங்கள் 7 பேரும் அரசு
பள்ளிகளில் தொழிற்கல்வி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டோம். தொழிற்கல்வி
ஆசிரியர் என்பதால் பதவி உயர்வு இல்லை. அதனால், எங்களுக்கு பட்டதாரி
ஆசிரியர்களுக்குரிய சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.