Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
தொடக்கக் கல்வி - நிர்வாக காரணங்களால் விடுவிக்கப்படாதவர்களை 04.09.2014 அன்று விடுவிக்க உத்தரவு
தொடக்கக் கல்வி - பொது மாறுதல் - 2014ம் ஆண்டு கலந்தாய்வில் மாறுதல் பெற்றவர்களில், நிர்வாக காரணங்களால் விடுவிக்கப்படாதவர்களை 04.09.2014 தேதி விடுவித்து 05.09.2014 பணியில் இயக்குனர் உத்தரவு
புதியதாக நியமிக்கப்படவுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு பணியில் சேரும் நாளன்றே பணிப்பதிவேடு தொடங்கிட இயக்குனர் உத்தரவு
தொடக்கக் கல்வி - அரசு / ஊராட்சி தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் புதியதாக நியமிக்கப்படவுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு பணியில் சேரும் நாளன்றே பணிப்பதிவேடு தொடங்கிட இயக்குனர் உத்தரவு
அரசு மேல் நிலைப்பள்ளி கழிவறையில் மாணவி தீக்குளித்து தற்கொலை
பேரணாம்பட்டு பாகர் உசேன் வீதியை சேர்ந்த
கண்ணபிரான் மகள் ஹரிணி. இவர் அங்குள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் 6–ம்
வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை பள்ளி கழிவறை பகுதியில்
மாணவி ஹரிணி உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவியை
கண்ட ஆசிரியார்கள் மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி ஹரிணி உயிரிழந்தார்.
வதைக்கும் வாய்ப்புண்: விரட்ட வழிகள்
வாய்ப்புண்
வந்து விட்டால் 2, 3 நாட்களுக்கு கடுமையான அவஸ்தைதான். சாப்பிடும் போதும்,
பேசும்போது வலி ஏற்பட்டு பாடாய்படுத்தி விடும். தட்ப வெப்பம் மற்றும்
உடலின் தன்மைக்கு ஏற்ற உணவுகள் சாப்பிடுவது, உணவில் போதுமான சத்துகள்
இருக்கும்படி பார்த்துக் கொள்வது, நோயின் அறிகுறி தென்பட்டவுடன் டாக்டரை
அணுகுவது என இந்த மூன்று விஷயங்களில் கவனம் செலுத்தினால் வாய்ப்புண்
அவஸ்தையில் இருந்து விடுதலை பெறலாம் என்கிறார் டாக்டர் ராஜ்குமார்.
ஆசிரியர் தினத்தின் பெயரை மாற்றும் மத்திய அரசின் முடிவு : வைகோ கண்டனம்
ஆசிரியர் தினத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்ற
மத்திய அரசின் முடிவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம்
தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆசிரியராக
வாழ்க்கையைத் தொடங்கி, கல்லூரி பேராசிரியராகவும், கல்லூரி முதல்வராகவும்
திகழ்ந்து, தந்துவ மேதையாக உயர்ந்த சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், குடியரசுத்
தலைவராகவும் பொறுப்பேற்று அப்பதவிக்குப் பெருமை சேர்த்தார். செப்டம்பர் 5
ஆம் நாள் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்த நாள், ஆசிரியர் தினமாக
கொண்டாடப்பட்டு வருகிறது.
மாணவர்களை துன்புறுத்தக் கூடாது: மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவுறுத்தல்
மாணவர்களை
மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தக்
கூடாது என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள்
இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. பள்ளிக்கூடங்களுக்கு காலதாமதமாக வருதல், வீட்டுப் பாடத்தை எழுதிவராமல் இருத்தல், நன்றாக படிக்காதது, வகுப்பில்
பேசிக்கொண்டிருத்தல் என ஏதாவது தவறு
இழைக்கும் மாணவர்களை வெயிலில் மணிக்கணக்கில் நிற்க வைத்தல், பிரம்பால்
அடித்தல் உள்ளிட்ட பல வகையான தண்டனைகளை
ஆசிரியர்கள் கொடுத்து வந்தனர்.
புதியதாக நியமனம் ஆணை பெற்ற முதுகலை ஆசிரியர்கள் பணியில் சேர உத்தரவு
DSE - PG ASST JOINING REPORT FORMAT CLICK HERE...
30.08.2014 மற்றும் 31.08.2014 ஆகிய இரு நாட்களில் நடைபெற்ற முதுகலை ஆசிரியர்கள் கலந்தாய்வில் புதியதாக பணிநியமனம் பெற்ற ஆசிரியர்களை இயக்குநரின் 1 முதல் 12 முடிய அளித்துள்ள அறிவுரைகளின்படி அனைத்து விவரங்களையும் சரிபார்த்து வேலூர் மற்றும் இதர மாவட்டத்தில் இருந்து பணி நியமனம் பெற்றவர்களை பணியில் சேர்த்துக்கொள்ளவும், அதன் அறிக்கையினை இணைப்பில் கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து அன்றே இவ்வலுவலகத்திற்கும் இயக்குநருக்கும் தவறாமல் அனுப்புதல் வேண்டும்.அறிவியல் ஆசிரியர்களுக்கு செப்.,1 ல் கருத்தாளர் பயிற்சி
அனைவருக்கும்
இடைநிலைக்கல்வி திட்டம் சார்பில், 9 மற்றும் 10 ம் வகுப்பு அறிவியல் பாட
ஆசிரியர்களுக்கு, மண்டல அளவிலான கருத்தாளர் பயிற்சி முகாம், செப்.,1 முதல் 3
நாட்கள் நடக்கிறது.
'குரு உத்சவ்' என மாறுகிறது ஆசிரியர் தினம்:
ஆண்டுதோறும்
செப்டம்பர் 5ம் தேதி கொண்டாடப்படும், ஆசிரியர் தினம் இனிமேல், 'குரு
உத்சவ்' என்ற பெயரில் கொண்டாட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள, மத்திய
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி
உள்ளது.
எம்.எட். நுழைவு தேர்வு: வினாத்தாள் குறைவாக வந்ததால் பட்டதாரி ஆசிரியர்– மாணவர்கள் போராட்டம்..
திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான
எம்.எட். நுழைவு தேர்வு வேலூர் தனியார் கல்லூரியில் இன்று நடந்தது.
சுமார் 863 பட்டதாரிகள் இன்று தேர்வு எழுத வந்தனர்.
TET Paper 1 Posting: காலை 8.30மணிக்கு காலிப்பணியிட பட்டியல் ஒட்ட உத்தரவு
சுற்றறிக்கை: 4 - தொடக்கக் கல்வி - காலிப்பணியிடங்கள் பட்டியல் நாளை காலை 8மணிக்கு அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது, காலை 8.30மணிக்கு அனைத்து கலந்தாய்வு மையங்களில் காலிப்பணியிட பட்டியல் ஒட்ட உத்தரவு
ஆசிரியர் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ மாணவர்களுடன் உரையாற்ற ஏற்பாடு
ஆசிரியர் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பள்ளி மாணவர்களுடன் உரையாற்ற ஏற்பாடு
PARTICULARS OF KALLAR RECLAMATION SCHOOLS
|
PARTICULARS OF KALLAR RECLAMATION SCHOOLS
|
TET Weightage ரத்து செய்யக்கோரி சென்னையில் பேரணி
TET Weightage ரத்து செய்யக்கோரி 01.09.2014 அன்று சென்னையில் பேரணி நடைபெற இருக்கிறது. பேரணி நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரும் கடிதம்.
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 7 சதவிகிதம் உயர்த்த அரசு திட்டம்.
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 7 சதவிகிதம் உயர்த்த அரசு
திட்டமிட்டுள்ளது.
1675 புதிய நியமனம் செய்யப்படவுள்ள இடைநிலை ஆசிரியர்கள் 08.09.2014 அன்று பணியில் சேர இயக்குனர் உத்தரவு
ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி
பெற்று 1675 ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அவர்களுக்கான பணி நியமன
கலந்தாய்வு செப்டம்பர் 1 முதல் 2ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அக்கலந்தாய்விற்கான கால அட்டவணை கீழ்காணும் விவரப்படி நடக்கவுள்ளது.
இரட்டைப்பட்டம் வழக்கில் புதிய திருப்பம் - இரட்டைப்பட்டம் செல்லும் என் யு.ஜி;சி; அறிவிப்பு
இரட்டைப்பட்டடம் வழக்கு சென்னை உயர்நீதி
மன்றத்தில் தள்ளுபடியானதை தொடர்ந்து அதன் ஒருங்கிணைப்பாளர்கள் புது தில்லி
உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இவ்வழக்கு உச்ச நீதி மன்றம்
6வது அமர்வில் நீதியரசர்கள் இரதாகிருஷ்ணன் மற்றும் விக்ராம் சிங்சென்
முன்னிலையில் 25வது வழக்காக கடந்த 02.05.2014 அன்று விசாரணைக்கு வந்தது.
இதில் அரசு மற்றும் பல்கலைகழக மானியக் குழுவிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். வழக்கினை முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியும்,