Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கற்றல் - கற்பித்தல் நாள் பள்ளிகளுக்கு உயர்வு.

           கடந்த கல்வி ஆண்டை காட்டிலும், நடப்பு கல்வி ஆண்டில், மொத்த வேலை நாட்களை அடிப்படையாக கொண்டு, மொத்தகற்றல், கற்பித்தல் நாள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, 183 இருந்து, 186 நாட்களாக நிர்ணயம் செய்து, பள்ளி நாட்காட்டியை அரசு வெளியிட்டுள்ளது.

2.87 லட்சம் அரசு பணியிடங்கள் காலி:அரசு ஊழியர் சங்க செயலர் தகவல்.


          'தமிழகத்தில், 2.87 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன' என, தமிழக அரசு ஊழியர் சங்கமாநில பொதுச் செயலர் பாலசுப்ரமணியன் கூறினார்.

18,000 புதிய ஆசிரியர்கள் நியமனம் - பள்ளிக்கல்வி அமைச்சர்.

          15 நாட்களுக்குள் 18,000 புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. வீரமணி அவர்கள் இன்று பெருந்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அறிவிப்பு.


புதிய ஆசிரியர்கள் நியமனம் ,100 உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்வு -முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகின்றன

         புதிய ஆசிரியர்கள் நியமனம் ,100 உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்வு -முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகின்றன.தொகுப்பூதிய காலத்தை பணிகாலமாக அறிவிக்க வேண்டி கோரிக்கை .மேலும்


பாடம் நடத்தி பள்ளியை ஆய்வு செய்யுங்க': கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு

              'இன்று பள்ளி ஆய்வு செய்யப்பட்டது' என்று குறிப்பிடுவது மட்டும் ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் பணி அல்ல," என, கள்ளர் சீரமைப்பு துறை இணை இயக்குனர் அமுதவல்லி தெரிவித்தார்.

GROUP-IIA தேர்வு - விடை காணா வினாக்கள்-விழி பிதுங்கும் தேர்வர்கள்:

          நடந்து முடிந்த TNPSC GROUP II A தேர்வுக்கான உத்தேச விடைகளை பொதுத்தமிழுக்கு மட்டும் விடியல் பயிற்சி மையம் வெளியிட்டிருந்தது. அந்த விடைகள் TNPSC வெளியிட்ட விடைகளுடன் 100 சதவீதம் பொருந்தியிருந்தது என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இதர அலுவல்கள் காரணமாக பொது அறிவு வினாக்களுக்கான விடைகளை வெளியிட இயலவில்லை.


காமராஜர்

காமராஜர் மறைந்த அன்று வந்த பத்திரிக்கைகள் அரிய தொகுப்பு.


காமராஜரின் அரிய புகைப்படங்கள்

காமராஜர் வாழ்வில் ஏற்பட்ட சுவையான அனுபவங்கள்: கல்வி வளர்ச்சி நாளில் மாணவர்களுக்கு சொல்ல உதவும்(மிகவும் பயனுள்ள 66 பக்க புத்தகம்)

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை

           வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை | 2011, 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு

அழகப்பா பல்கலை., தேர்வு முடிவுகள்.

          காரைக்குடி அழகப்பா பல்கலை.,யில் 2014-மே தேர்வு எழுதியதொலைநிலைகல்வி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள், வெளியிடப்பட்டுள்ளன.
 

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்பில் 2 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர்.

       தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்பில் இந்த ஆண்டில்இதுவரை 2 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர். 
 

கருணை அடிப்படையில் பணி - தமிழக அரசு பிறப்பித்த ஆணை ரத்து.

          கருணை அடிப்படையில் பணி:திருமணமானபெண்ணுக்கு காலவரையறை நிர்ணயித்து தமிழக அரசு பிறப்பித்த ஆணையை ரத்து.

வேலைவாய்ப்பு அலுவலகங்களில்புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு.

           தமிழகத்தில், கடந்த, மூன்று ஆண்டுகளில், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை, புதுப்பிக்கத் தவறியவர்கள், தங்கள் பதிவு மூப்பை, மீண்டும் பெற, அவர்களுக்கு நடப்பாண்டு, சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும்' என, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மோகன் தெரிவித்தார்.
 

வேலைக்காக காத்திருப்போர் தமிழகத்தில் 84.78 லட்சம் பேர்.

          தமிழகத்தில், அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் உள்ள பதிவேடுகளின்படி, 84.78 லட்சம் பேர், வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.
 

காவல் துறை மானியக் கோரிக்கை மீது 2 நாள்கள் விவாதம்

          காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் 2 நாள்களுக்கு நடைபெறுகிறது. இதற்காக, பேரவை நிகழ்ச்சி நிரலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனை பேரவைத் தலைவர் ப.தனபால் வெள்ளிக்கிழமை அறிவித்தார். அதன் விவரம்:வரும் திங்கள்கிழமை காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுவதாக இருந்தது. இது, ஆகஸ்ட் 5ஆம் தேதி பிற்பகலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினமும், ஆகஸ்ட் 6ஆம் தேதியும் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும், அதற்கு முதல்வர் ஜெயலலிதாவின் பதிலுரையும் இடம்பெறும்.

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு வருகிற 18.7.2014 அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.


         இரட்டைப்பட்டம் வழக்கு எண்.529 சென்னை உயர்நீதிமன்றத்தில் 05.02.2014 அன்று தள்ளுபடி செய்யப்பட்டதால் அவ்வழக்கை நடத்தி வரும் திரு.கலியமூர்த்தி உள்ளிட்ட நபர்கள் உச்சநீதிமன்றத்தில் S.L.P எனப்படும் சிறப்பு விடுவிப்பு மனுவை தாக்கல் செய்தனர்.

கணிதவியலில் புதிய கண்டுபிடிப்பு: இந்திய அறிஞருக்கு பரிசு

                                      


          கணிதவியலில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்க முடியாமல் இருந்த சிக்கலான கோட்பாட்டுக்கு இந்தியாவைச் சேர்ந்த நிகில் ஸ்ரீவாஸ்தவா, அமெரிக்காவைச் சேர்ந்த ஆடம் மார்க்கஸ், டேனியல் ஸ்பீல்மேன் ஆகியோர் தீர்வு கண்டுபிடித்துள்ளனர்.
 

கல்வித்துறை 'கவுன்சிலிங்'கால் ஆசிரியர்கள் அதிருப்தியா?விசாரணையை துவக்கியது உளவுத்துறை

                   'தமிழக கல்வித் துறையில் நடந்து முடிந்த 'கவுன்சிலிங்' காலியிடங்கள் மறைப்பு, அரசியல் குறுக்கீடு போன்றவற்றால் ஆசிரியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்,' என்ற தகவலால், மாவட்டம் தோறும் உளவுத் துறை போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

ஆங்கில வழிக்கல்வி பாடப்புத்தகங்கள் கிடைக்கவில்லை! அரசுப்பள்ளி மாணவர்கள் கடும் பாதிப்பு

       அரசுப்பள்ளிகளில், செயல்பட்டு வரும் ஆங்கில வழிக்கல்வி முறை மாணவர்களுக்கு இதுவரை பாடப்புத்தகங்கள் கிடைக்கவில்லை. இதனால், இவ்வழியில் பயிலும் மாணவ, மாணவியர் அவதிப்பட்டு வருகின்றனர். 

10 வகுப்பு தேர்ச்சி குறைவுக்காக சம்பளம் கட்: ராமநாதபுரம் ஆட்சியரை கண்டித்து ஆசிரியர்கள் நாளை உண்ணாவிரதம்

           எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 90 சதவீதம் தேர்ச்சி பெறாத தனியார் பள்ளிகளின் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு சம்பளம் கிடையாது என்று உத்தரவிட்டுள்ளதற்கும், அரசு ஊழியர்களிடம் கெடுபிடியாக செயல்பட்டு வருவதற்கும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்தும், இட மாறுதல் செய்யக்ககோரியும், நாளை(சனிக்கிழமை) அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.

பகுதிநேர கணினி ஆசிரியர்களின் அவசியம்

         பகுதிநேர கணினி ஆசிரியர்களின் அவசியம் - பள்ளிகளில் முடங்கிய கணினி வழி கற்றல் திட்டத்தை மீட்டெடுக்க நடவடிக்கை

சரியான நேரத்தில் வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை

          மலைப்பகுதி பள்ளிகளில் சரியான நேரத்தில் வராத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் நந்தகோபால் எச்சரிக்கை விடுத்துள்ளார். வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் நந்தகோபால் தலைமை தாங்கினார். கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பொன்.குமார் முன்னிலை வகித்தார்.

நிதிநிலை அறிக்கை: பிரமாதமுமில்லை, மோசமுமில்லை

              நரேந்திர மோடி பிரதமரான ஒரே மாதத்தில் விலைவாசி குறைந்துவிடும், நிதிப்பற்றாக்குறை சரிகட்டப்படும், வேலைவாய்ப்பு அதிகரிக்கும், அரசு இயந்திரம் அசாதாரண வேகத்தில் செயல்படும் என்பதுபோன்ற அதீத எதிர்பார்ப்புகளின் பின்னணியில், நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது முதல் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார். முந்தைய அரசு தாக்கல் செய்த இடைக்கால நிதிநிலை அறிக்கையின் அடிப்படையில்தான் தனது முதலாவது நிதிநிலை அறிக்கையை அருண் ஜேட்லி தயாரித்தாக வேண்டிய கட்டாயம் இருந்ததை மறுப்பதற்கில்லை.

மத்திய பட்ஜெட்: மாதச் சம்பளதாரர்களுக்கு ரூ.40 ஆயிரம் வரை சேமிப்பு

          மத்திய பட்ஜெட்டில் கிடைத்துள்ள வரிச்சலுகையால் மாதச் சம்பளம் பெறும் பிரிவினருக்கு ரூ. 40 ஆயிரம் வரை சேமிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. 2014-15 பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு 60 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ. 2.5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

பிளஸ்–2 சிறப்பு துணைத்தேர்வு முடிவு நாளை வெளியீடு அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் தகவல்

          பிளஸ்–2 சிறப்பு துணைத்தேர்வு முடிவு நாளை (சனிக்கிழமை) வெளியிடப்படுகிறது என்று அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்தார். நாளை முடிவு தெரியும் கடந்த மார்ச் மாதம் தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள் மீண்டும் எழுதி உடனே கல்லூரியில் சேர்வதற்கு வசதியாக அரசு பிளஸ்–2 சிறப்பு துணைத்தேர்வை நடத்தி வருகிறது. அதன்படி இந்த வருடம் பிளஸ்–2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு துணைத்தேர்வு கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்டது.
 

உயர்கல்வித்துறை அமைச்சர் பெருமிதம்.

           தமிழகத்தில் 11 அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளும், 37 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் தொடங்கப்பட்டிருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பெருமிதம்.

உதவி பேராசிரியர் பணி: மத்திய பிரதேச பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு.

           மத்திய பிரதேச பணியாளர் தேர்வாணையம் 1646 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

600 மாணவியருக்கு ஒரே ஆசிரியர் சாதனை படைத்த பள்ளியின் அவலம்.

          ஜலகண்டாபுரம், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 600 மாணவியருக்கு ஒரே ஆசிரியர் பாடம் நடத்துவதால், கல்வித்தரம் குறையும் அபாயம் உள்ளதாக, பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
 

10 ஆம் வகுப்பில் மதிப்பெண் முறைக்கு பதிலாக CCE கிரேடு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

         மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க உடனடியாக 10 ஆம் வகுப்பில் மதிப்பெண் முறைக்கு பதிலாக CCE கிரேடு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.


ஆதார் அட்டை திட்டம் தொடரும் : மத்திய அரசு

          ஆதார் அட்டை திட்டத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மத்திய அரசின் கைவசம் இல்லை என்றும், ஆதார் அட்டை திட்டம் தொடரும் என்று லோக்சபாவில், திட்டக்குழு அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் அளித்துள்ள எழுத்துப்பூர்வமான பதிலில் கூறியுள்ளார்.  
 

2 ஆண்டுகளில் 6,82,000 பேருக்கு பணி வாய்ப்புகள்: அமைச்சர்

          கடந்த 2 ஆண்டுகளில், 6,82,000 பேருக்கு வேலைவாய்ப்பு அலுவலகங்களின் மூலம், பணி வழங்கப்பட்டுள்ளதாக மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மோகன் கூறியுள்ளார்.

பள்ளியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 2 மாணவர்கள் பரிதாப பலி

         காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே பள்ளி வளாகத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை தவறுதலாக மிதித்து 2 மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரதிதாசன் பல்கலை. தொலைக் கல்வி மையத்தில் எம்.எட். படிப்புக்கு அனுமதி

                     திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைக் கல்வி மையத்தில் எம்.எட். படிப்பை நடத்துவதற்கு தென் மண்டலத்திற்கான தேசியக் கல்விக் குழுமம் அனுமதி வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து 2014-15-ம் ஆண்டிற்கான முதுகலைக் கல்வியியல் (எம்.எட்) படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.எம். முத்துக்குமார் அண்மையில் தொடக்கி வைத்தார்.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive