மதுரையில்
இடைநிலை ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் மாவட்ட செயலாளர்
ஜெயக்கொடி தலைமையில் நடந்தது. சட்ட செயலாளர் வெங்கடேசன்,
தலைமையாசிரியர்கள் கிறிஸ்டோபர் ஜெயசீலன், நவநீதகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
பாரதியார் பல்கலை. இணையதளத்தில் இருந்து எம்.எட். படிப்பு பிரமாணப் பத்திர தகவல் நீக்கம்!
கோவை பாரதியார் பல்கலைக்கழகம் எம்.எட். படிப்பு
தொடங்குவதற்காக தேசிய ஆசிரியர் கல்வி
கவுன்சிலில் (என்.சி.டி.இ.) தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் போலியானது என்ற சர்ச்சை கிளம்பியதைத்
தொடர்ந்து, அது குறித்த செய்தி
தினமணி நாளிதழில் (ஜூன் 7) வெளியானது. இதைத்
தொடர்ந்து, தற்போது எம்.எட்.
படிப்பு குறித்த பிரமாணப் பத்திர
தகவல் இணையதளத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இனி வானமே எல்லை: வருகிறது 'நடமாடும் ஆலோசனை மையம்!'
அரசு
பள்ளி மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி, வாழ்க்கையிலும் வெற்றி இலக்கை
எட்டும் வகையில் ஆலோசனை வழங்க, வரும் 16ம் தேதி முதல்'நடமாடும் ஆலோசனை
மையம்' உடுமலையில் செயல்படதுவங்குகிறது. பள்ளி மாணவர்களின் குடும்ப
சூழ்நிலை, அவர்களை சுற்றியுள்ள சமூகப் பிரச்னைகள், மாணவர்களுக்கும்
ஆசிரியர்களுக்குமான இடைவெளி ஆகியவற்றால், மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். இதன் வெளிப்பாடு சமூகத்தின் மீதும், பள்ளியின் மீதும் வெறுப்பை ஏற்படுத்துகிறது.
அரசு உதவி பெறும் பள்ளியில் கட்டாய கட்டணம் வசூல்: அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை
அரசு
உதவிபெறும் பள்ளிகள், மாணவர் சேர்க்கை மற்றும் சான்றிதழ் வழங்குதல்
தொடர்பாக, மறைமுக கட்டாய கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வரும் நிலையில்,
சம்பந்தப்பட்ட மாணவர் அல்லது பெற்றோர் மாவட்ட நிர்வாகத்திடம் புகார்
அளிக்கலாம்" என, நாமக்கல் மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.
கட்டணத்திற்காக தண்டனை கூடாது: பள்ளிகளுக்கு இயக்குனரகம் எச்சரிக்கை
இலவச
கல்வி ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட குழந்தைகள் மற்றும் கட்டணம் செலுத்தாத
குழந்தைகளை, பிரித்து பார்த்தல், தரையில் அமரவைத்தல், வகுப்பறைக்கு வெளியே
நிற்க வைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும், மெட்ரிக் பள்ளிகள் மீது,
நடவடிக்கை எடுக்கப்படும்' என, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் எச்சரித்துள்ளது.
விளையாட்டுக்கு தனி நிதி ஒதுக்கீடு இல்லை: பள்ளி மாணவர்கள் பாதிப்பு
விளையாட்டுக்கென, பள்ளிக்கல்வி துறை சார்பில்,
தனியாக நிதி ஒதுக்கப்படாததால், பள்ளிகள் சார்பில் மாணவர்களின் பங்கேற்பு
குறைவாக இருக்கிறது. பள்ளிக் கல்வித் துறை மூலம், விளையாட்டு,
இளம்செஞ்சுருள் சங்கம், சாரணர், சாரணீயர் இயக்கம் உட்பட பல்வேறு
பிரிவுகளுக்கு சேர்த்து, பள்ளிகளுக்கு குறிப்பிட்ட தொகை அனுப்பப்படுகிறது.
இதில் விளையாட்டுக்கு இவ்வளவு தொகை என, தனியாக குறிப்பிடுவதில்லை.
நமக்கு பயனுள்ள போன் நம்பர்கள்!
1.தமிழகத்தில்
எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை
நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக்
கண்டால் உடனே RED Society...யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள்.
அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.
'ரமணா’ கதாபாத்திர திருச்சி பேராசிரியர் ஜான்குமார் ஓய்வுபெற்றார்!
'ரமணா’ கதாபாத்திர திருச்சி பேராசிரியர் ஜான்குமார் ஓய்வுபெற்றார்: சமூக வலைதளங்களில் அழுது புரண்ட அபிமானிகள்...!
வீடு, வணிக மின் இணைப்பு பெற விண்ணப்ப வழி முறை
வீடு அல்லது வணிக மின் இணைப்புக்கு விண்ணப்பப் படிவம் 1ல் விண்ணப்பிக்கவும்.
தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....
1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு...
தப்புங்க தப்பு,,,
ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு... இதாங்க
சரி...
தப்புங்க தப்பு,,,
ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு... இதாங்க
சரி...
புதிய அரசாணை டெட் தேர்வில் மதிப்பெண் தளர்வால் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற வாய்ப்பா?
2013 ஆகஸ்ட் மாதம் 17, 18 ஆம் தேதிகளில் புதிய ஆசிரியர்களை தேர்வுசெய்யும் பொருட்டு டெட் தேர்வு நடைபெற்றது. இதில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் என 27000 பேர் தேர்வு பெற்றனர். இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. பிப்ரவரியில் பணிநியமன ஆணை வழங்கப்படும் என எதிர்பார்த்த வேலையில் முதலமைச்சர் 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு அறிவித்தார். அப்போது கூடுதலாக 45000 ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர்.
உபரி பணியிட மாறுதல்களை கைவிட வலியுறுத்தி ஜூன் 12-ல் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
உபரி பணியிட மாறுதல்களை முற்றிலுமாக கைவிட
வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 12-ம் தேதி
தூத்துக்குடி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது
என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் முடிவு
செய்யப்பட்டது.
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை பி.எட். படிப்பு நாளை முதல் விண்ணப்பம்
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், பி.எட். சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் நாளை முதல் வினியோகம் செய்யப்பட உள்ளன.
மாணவரை கண்டித்த ஆசிரியர் மீது, மாணவியரை ஆபாச படம் பிடித்ததாக வீண்பழி! போலீஸ் விசாரணை!!
வேப்பங்கொட்டையை மாணவி மீது வீசிய, எட்டாம்
வகுப்பு மாணவனை கண்டித்ததே, மாணவியரை ஆபாச படம் பிடித்ததாக, ஆசிரியர் மீது,
வீண்பழி சுமத்தியது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பி.இ., 'ரேங்க்' பட்டியலுக்கு முன் பிளஸ் 2 மறு மதிப்பீடு முடிவு
வரும், 16ம் தேதி, பி.இ., 'ரேங்க்' பட்டியல்
வெளியிடப்படுகிறது. இதற்கு, மூன்று நாளுக்கு முன், பிளஸ் 2 மறு மதிப்பீடு
முடிவு வெளியிடப்படும்,'' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன்
தெரிவித்தார்.
10/6/14 அன்று.மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது
10/6/14 அன்று.மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னையில்
நடைபெற உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் ஆறு நாட்கள் வேலை: விரைவில் அமல்?
வாரத்தில்,
ஐந்து நாட்கள் மட்டுமே வேலைபார்த்து வந்த, மத்திய அமைச்சகங்களின்
அதிகாரிகள் மற்றும் ஊழியர் களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான
அரசு, கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. இனி, ஆறு நாட்கள் வேலை செய்ய வேண்டும்
என, அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆறு நாள் வேலை, இதர மத்திய அரசு
ஊழியர்களுக்கும், விரைவில் அமலாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சொந்தப்பணத்திலிருந்து வழங்கினார்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. கி. வீரமணி அவர்கள் தான் எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் பயின்று 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு தனது சொந்தப்பணத்திலிருந்து ரூ.5000 முதல் ரூ.1000 வரை ஊக்கத்தொகையை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறார்.
நடப்பு கல்வியாண்டு காலண்டர் வெளியீடு; 123 நாள் லீவு; மாணவர்களுக்கு"லக்'
கல்வித்துறை சார்பில், நடப்பு கல்வியாண்டு காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிமாணவர்களுக்கு மொத்தம் 123 நாட்கள் விடுமுறை கிடைக்கும். கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் கடந்த 2ம் தேதி திறக்கப்பட்டன. புதிய
கல்வியாண்டு உதயமாகியுள்ள நிலையில், பள்ளி கல்வித்துறை 2014-15ம்
கல்வியாண்டுக்கான காலண்டர் தயாரித்துள்ளது.