Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விரைவில் ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, தமிழகத்தில் தனிக்கட்சி தொடங்க திட்டம்-Dinamani News

         தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் ஒருங்கிணைந்து தனிக்கட்சி ஒன்றை விரைவில் தொடங்கவுள்ளது.தமிழகத்தில் உள்ள தனியார் உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள்,

TNTET-2013:விரக்தியின் விளிம்பில் 73,000 பேர்வழக்குகளின் பிடியில் தேர்வு வாரியம்


          கடந்த, 2013ல் நடந்த, ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றுள்ள 73 ஆயிரம் பேர், தங்களுக்கு வேலை கிடைக்குமா என்ற தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

TNTET - WEIGHTAGE - IN DETAIL


OMR விடைத்தாளில் பென்சிலும் பயன்படுத்த அனுமதி

          தேர்வு நாள் 25.03.2014 - கணினி அறிவியல் பாடம் - OMR  விடைத்தாளில் கறுப்பு அல்லது நீல நிற மை பந்துமுறை போனவினால் (Ball Point Pen)  வட்டங்களை Shade செய்வது - பென்சிலும் பயன்படுத்த அனுமதி - Click Here

பவர்கட்... படிப்பும் 'கட்!'; 10ம் வகுப்பு மாணவர்கள் தவிப்பு

         பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள், வரும் 26ம் தேதி துவங்க உள்ள நிலையில், தமிழகத்தில், பரவலாக துவங்கியுள்ள அறிவிக்கப்படாத மின்வெட்டு மாணவர்கள் மத்தியில் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

தனித்தேர்வர்களுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இணையதளத்தில் நுழைவுச் சீட்டு பதிவிறக்கம்

           இடைநிலைப்பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு சிறப்பு அனுமதித் திட்டத்தில் (தக்கல்) விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை இணைய தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள் திருத்தும் பணி - தேர்வுத்துறை உத்தரவு

           திண்டுக்கல்: "பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில், சீனியர் ஆசிரியர்களை ஈடுபடுத்தாமல், ஜுனியர்களை ஈடுபடுத்த வேண்டும் என, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளையுடன் (மார்ச் 25) முடிவடைகிறது. 
 

10ம் வகுப்பு தேர்வு: 40 ஆயிரம் பேர் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்

               பத்தாம் வகுப்பு தேர்வுகள் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. 10 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வை கண்காணிக்க 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 தேர்வுகள் வரும் 25ம் தேதி முடிகின்றன. அதை தொடர்ந்து 26ம் தேதியே 10ம் வகுப்பு பொது தேர்வு தொடங்குகிறது. தமிழகம் புதுச்சேரியை சேர்ந்த 6 ஆயிரம் பள்ளிகளில் இருந்து 10 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். 10ம் வகுப்பு பொது தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டு 9.15 மணிக்கு தேர்வுகள் தொடங்கி, 12 மணிக்கு முடிகிறது. பொது தேர்வுக்காக 3 ஆயிரம் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் 40 ஆயிரம் பேர் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 

இந்தாண்டு கோடை வெயில் அதிகமாக இருக்கும்: வானியலாளர்கள் கருத்து

         பகல் நேரம் அதிகரிப்பாலும், மழை பெய்யாததாலும், இந்தாண்டு கோடை வெப்பம், கடுமையாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக, வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த ஆண்டில் வடகிழக்கு, தென் மேற்கு பருவ மழைகள் பொய்த்தன; இந்தாண்டும், இதே நிகழ்வு தான் பதிவாகியுள்ளது. இதன் விளைவு, நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது.

+2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாயிற்கூட்டம் நடத்த தேர்வுத்துறை தடை.


              பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாயிற் கூட்டம் நடத்த தடைவிதித்து தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
 

தேர்தலுக்கு 5 நாட்கள் முன்பே ஓட்டு சாவடி சீட்டு: விநியோகிக்க தேர்தல் கமிஷன் உத்தரவு


          'ஓட்டுப் பதிவுக்கு, ஐந்து நாட்களுக்கு முன்பாக, வாக்காளர்களுக்கு, புகைப்படத்துடன் கூடிய, 'ஓட்டுச் சாவடிச் சீட்டு' வழங்கும் பணி, நிறைவு பெற வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
 

TNPSC GK IMPORTANT DAYS


ஜனவரி

12-தேசிய இளைஞர் தினம்

15-இராணுவ தினம்

TET-TNPSC :ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்


அ-சுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா
ஆ- பசு(ஆவு), ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம்
இ- சுட்டெழுத்து, இரண்டில் ஒரு பங்கு அரை என்பதின் தமிழ் வடிவம்.
ஈ- பறக்கும் ஈ, தா, குகை, தேனீ

புற்றீசல் போல் பெருகும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் சமச்சீர் கல்விக்கு சத்தமில்லாமல் மூடுவிழா


              கிராமப்புற பெற்றோரிடமும் பெருகிய ஆங்கில மோகத்தின் விளைவு கடந்த 1990ம் ஆண்டுக்கு பின்னர் ஆங்கில வழி நர்சரி பள்ளிகள் குக்கிராமங்களிலும் பிறப்பதற்கு வழிவகுத்தது.
 

உரிய அனுமதி பெறாமல் கல்விச்சுற்றுலா - ஆசிரியை 'சஸ்பெண்ட்'

          உரிய அனுமதி பெறாமல் கல்விச்சுற்றுலா அழைத்துச் சென்றதாக கூறி, தலைமையாசிரியை மற்றும் உதவி ஆசிரியை மதுரை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் 'சஸ்பெண்ட்' செய்தார்.

TNTET NEWS - தகுதி தேர்வில் விலக்கு: குழப்பத்தில் ஆசிரியர்கள்

 
        ஆசிரியர் தகுதி தேர்வில், விலக்கு அறிவிக்கப்பட்டும், தகுதி காண் பருவத்திற்காக அனுப்பப்படும் ஆசிரியர்களின், பணிப் பதிவேடுகள் (எஸ்.ஆர்.,கள்) பரிசீலிக்கப்படுவதில்லை, என சர்ச்சை எழுந்துள்ளது. இதனால், 18 ஆயிரம் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
 
 

பத்தாம் வகுப்பு தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்: 5,000 பேர் அடங்கிய பறக்கும் படை 'ரெடி'

           இன்னும் மூன்று நாட்களில், 26ம் தேதி துவங்க உள்ள பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான இறுதிகட்ட ஏற்பாடுகளை, தேர்வுத்துறை, தீவிரமாக செய்து வருகிறது. மாணவர்களை கண்காணிக்க, 5,000 பேர் அடங்கிய பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

பத்தாம் வகுப்பு தேர்வு: 9.15 மணிக்குத் தொடங்கும். மாற்றம் எதுவும் இல்லை, தேர்வுத்துறை வட்டாரங்கள்

       இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 3,200 மையங்களில் 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

2005–ம் ஆண்டு பணி நிரந்தரம் ஆனவர்களுக்கு புதிய ஓய்வூதிய விதிகள் பொருந்தாது ஐகோர்ட்டு உத்தரவு

          2005–ம் ஆண்டு பணி நிரந்தரம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு, 2 மத்திய அரசு கொண்டு வந்த புதிய ஓய்வூதிய திட்ட விதிகள் பொருந்தாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2 கணிப்பொறி அறிவியல் தேர்வு :பென்சிலை பயன்படுத்தி OMR தாளில் மாணவர்கள் Shade செய்யலாம்

பிளஸ் 2 கணிப்பொறி அறிவியல் தேர்வு :

        OMR தாளில் வட்டங்களில்  Shade  செய்ய  வேண்டிய  பகுதிகள்   அனைத்தும்    கருப்பு அல்லது நீல நிற பந்துமுனை  பேனாவை பயன்படுத்த  வேண்டும் என தேர்வுத்துறை அறிவுறுத்தி இருந்தது  . ஆனால் தற்போது    பென்சிலை  பயன்படுத்தி OMR தாளில்    மாணவர்கள்  Shade செய்யலாம் என அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார் .

1999 முதல் 2007 வரை பயின்ற மாணவர்கள் தனித்தேர்வு எழுத வாய்பு: நெல்லை பல்கலை அறிவிப்பு


          நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வாணையர் (பொறுப்பு) முனைவர் கண்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தோடு இணைந்த கல்லூரிகளை சேர்ந்த ஏப்ரல் 2014க்கான இளநிலை மற்றும் முதுநிலை தனித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வருகிற ஏப்ரல் 16ம் தேதி முதல் தேர்வுகள் நடைபெற உள்ளன. 
 

தலைமைச் செயலகம் உள்படஅரசு துறை அலுவலகங்களில் ஃபேஸ்புக், டிவிட்டருக்கு தடை.


          தலைமைச் செயலகம் உள்பட அரசுத் துறை அலுவலகங்களில் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றசமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

TNPSC GROUP 2, VAO Exam Material

                   தமிழிலக்கியத்தில் அறிவியல் செய்திகள்


         ஒவ்வொரு இலக்கியமும் தான் தோன்றிய சமுதாயத்தை உள்ளடக்கமாகக் கொண்டுதிகழ்கிறது. அறிஞர்களும், இலக்கியம் என்பது சமுதாயத்தைப் பிரதி பலிக்கும் கண்ணாடி
என்கிறார்கள். எந்த ஒரு இலக்கியமும் தான் தோன்றிய அச் சமுதாயத்தின் பண்பாட்டையும் நாகரிகத்தையும், பொருளாதாரத்தையும், அக்கால மக்களின்அறிவையும், பழக்கவழக்கங்களையும் நம்பிக்கைகளையும் எடுத்துரைப்பனவாய் விளங்குவதைக் காணலாம். இந்த அடிப்படையில்தான் நமது தமிழ் இலக்கியங்களும் விஞ்ஞானப்பூர்வமாக மிளிர்கிறது.

பள்ளி கட்டணம் செலுத்தவில்லை என வகுப்பறைக்கு வெளியே நிறுத்தியதால் மாணவி தற்கொலை தினத்தந்தி




          பள்ளி கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி வகுப்பறைக்கு வெளியே நிறுத்தியதால் மனம் உடைந்த மாணவி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர்.
 
 

TNTET Paper 2 CV | ஏப்ரல் 7 முதல் டி.இ.டி., – 2 சான்றிதழ் சரிபார்ப்பு


          ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஏப்,7 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது.

10ம் வகுப்பு தேர்வு : ஹால்டிக்கெட் வினியோகம் தொடங்கியது

          பத்தாம் வகுப்பு தேர்வுகள் 26ம் தேதி தொடங்குவதை அடுத்து பள்ளி மாணவர்களுக்கு நேற்று ஹால்டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.  அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் போட்டோவுடன் கூடிய ஹால்டிக்கெட்டுகள் தேர்வுத்துறையில் இருந்து நேற்று பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  

'விலங்கியல்' விடைத்தாள் பகுதியில் 'தாவரவியல்' விடை எழுதியதால் குழப்பம் : அச்சத்தில் மதுரை மாணவிகள்

          மதுரையில், பிளஸ் 2 உயிரியல் தேர்வில், விலங்கியல் பகுதி விடைத்தாளில், தாவரவியல் பகுதிக்கான பதில் எழுதிய சம்பவத்தால், மாணவிகள் சிலர் அச்சத்தில் உள்ளனர்.
 
 

அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீடு : தமிழக அரசு உத்தரவு

           அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு கண்டிப்பாக 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய-மாநில அரசுகளின் வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த 3 சதவீத இடஒதுக்கீடு அரசு உதவி பெறும் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
 

ஐ.ஏ.எஸ். நேர்முகத் தேர்வு ஏப்ரல் 9-ல் தொடங்குகிறது : முதல்கட்டமாக 1,281 பேர் பட்டியல் வெளியீடு.


              ஐ.ஏ.எஸ். நேர்முகத் தேர்வு ஏப்ரல் 9-ம் தேதி தொடங்குகிறது. முதல்கட்டமாக 1,281 பேர் அடங்கிய பட்டியலை யூ.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.

சர்வதேச சி.பி.எஸ்.இ., பற்றி விழிப்புணர்வு தேவை: யு.ஜி.சி., அறிவுறுத்தல்

 
          வெளிநாட்டு பல்கலைகளில், இந்திய மாணவர்கள் சேர சி.பி.எஸ்.இ., சர்வதேச பாடத் திட்டத்தில் படித்திருப்பது அவசியம் என்பதால், இப்பாடத் திட்டம் குறித்து உறுப்பு கல்லூரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது.

குழந்தை வளர்ப்பு - சவால் நிறைந்த தொடர்ச்சியான முயற்சி!

பிள்ளையை பெற்றால் மட்டும் போதுமா? பேணி வளர்க்க வேண்டாமா? என்பது பலரும் அறிந்த ஒரு கருத்து. குழந்தை வளர்ப்பு என்பது சவால்கள் நிறைந்த ஒரு போராட்டம் என்பதும் பலரின் எண்ணம். மிருகங்கள், ஏதோ குட்டிப் போடுகின்றன, சிலகாலம் பராமரிக்கின்றன. அவற்றின் பணி அவ்வளவுதான். ஆனால், மனிதனின் நிலை அப்படியில்லை. அவன் ஏற்படுத்திய உலகம், வாழ்க்கை முறை மற்றும் சமூகம் ஆகியவற்றில் வாழும் திறமையையும், தகுதியையும் வளர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது.


எனவே, குழந்தை வளர்ப்பு என்பது ஒரு திட்டமிட்ட மற்றும் நீண்டகால பணியாகிறது. இக்கட்டுரையில், குழந்தை வளர்ப்பு தொடர்பான சில ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

பிறரிடம் பகிர்ந்து கொள்ளுதல்

          தான் வைத்திருக்கும் விளையாட்டு சாமான்கள் உள்ளிட்டவற்றை, இதர குழந்தைகளிடமும், விளையாடும்போது பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மையை, அதிக பொறுமையுடன் குழந்தைகளிடத்தில் கற்றுக்கொடுக்க வேண்டும். மேலும், கூட்டாக சேர்ந்து விளையாடுகையில், தனது முறை வரும்வரை பொறுமையாக காத்திருந்து வாய்ப்பை பெற வேண்டுமெனவும், பிறர் கையிலிருக்கும் பொருளை அவசரப்பட்டு பிடுங்கக்கூடாது என்றும் கூற வேண்டும்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive