Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
தண்டித்தால் தவறில்லை...
பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை கண்டிக்கும்
ஆசிரியர்களை மிரட்டும் பெற்றோர்களால் மாணவர்கள் தவறான பாதைக்கு செல்லும்
நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. புராணங்களில் கல்வி பயில குருகுல முறையைப்
பின்பற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இதன்படி, ராஜா மகன் முதல் சாதாரண
பாமரன் வரை அனைவரும் சரிசமமாக குருவால் பராமரிக்கப்பட்டு, அவர்களுக்கு
அனைத்து வேலைகளும் சரிவிகிதமாக பங்கிட்டு செய்ய கட்டளையிடப்பட்டு வந்தது.
தொடர்ந்து வந்த காலங்களில் கல்விமுறை பல்வேறு கட்டங்களில் திசை
மாறியுள்ளது.
10th Revision Test Model Questions
Revision Test Model Questions
- 2nd Revision Test Questions - 2014 | Krishnagiri Dt | English Medium - Click Here
- 2nd Revision Test Questions - 2014 | Krishnagiri Dt | Tamil Medium- Click Here
HR.SEC.EXAMINATIONS 2014 - NEW QUESTION PAPER CODES
HR.SEC.EXAMINATIONS 2014 - NEW QUESTION PAPER CODES - Click Here
டி.இ.டி., மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வலியுறுத்தல்
ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) மதிப்பெண் அடிப்படையில்,
ஆசிரியர் பணி நியமனம் செய்ய வேண்டும் என, வலியுறுத்தி, டி.இ.டி.,
தேர்வர்கள், நேற்று, ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) அலுவலகம் முன்,
ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை, கல்லூரி சாலையில் உள்ள, டி.ஆர்.பி.,
அலுவலகம் முன், டி.இ.டி., தேர்வர்கள், நேற்று காலை, ஆர்ப்பாட்டம்
நடத்தினர். அப்போது, அவர்கள் கூறியதாவது:
ஏழாவது ஊதியக் குழு அமைப்பது மற்றும் ஊழியர்களின் பரிசீலினைகளை ஆராய்வதற்கான அதிகாரப் பூர்வ அறிவிக்கை வெளியீடு
Government of India Published the Gazette Notification for Seventh Central Pay Commission
Ministry Of Finance
வன்முறையை தூண்டும் பேச்சு, ஆசிரியர் சங்க நிர்வாகி மீது நடவடிக்கை: மாவட்ட நிர்வாகம் உத்தரவு
சிவகங்கையில், வன்முறையை தூண்டும் அளவிற்கு
பேசியதாக, ஆசிரியர் சங்க நிர்வாகி மீது, நடவடிக்கை எடுக்க, கல்வித்துறைக்கு
மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு,
திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவரால், அதே பள்ளியின்
ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்து, ஆசிரியர்
சங்கத்தினர் சிவகங்கை முதன்மை கல்வி அலுவலகம் முன், கண்டன ஆர்ப்பாட்டம்
நடத்தினர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு மொழிப்பாடம் எளிது: தேர்வு எழுதிய மாணவர்கள் மகிழ்ச்சி
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.
மத்திய பல்கலைகளில் 5,707 ஆசிரியர் பணியிடங்கள் காலி
தமிழகம் உட்பட, நாடு முழுவதும் உள்ள, மத்திய
பல்கலைகளில், 5,707 பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக
உள்ளன. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழுள்ள, மத்திய உயர்கல்வித்
துறையின் கட்டுப்பாட்டில், நாடு முழுவதும், 42 மத்திய பல்கலைக்கழகங்கள்
இயங்கி வருகின்றன. தமிழகத்தில், கடந்த, தி.மு.க., ஆட்சியில், திருவாரூரில்
மத்திய பல்கலை துவக்கப்பட்டது.
அரசு ஆணை வெளியீடு
தொடக்கக் கல்வி - 2013-2014ஆம் கல்வியாண்டில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் சதுரங்கப் பலகைகள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்கு செலவினம் அனுமதித்து தமிழக அரசு ஆணை வெளியிடப்பட்டு உள்ளது.
NEWS UPDATE TODAY( 03.03.2014 )TRB PG COURT CASE DETAIL
NEWS UPDATE TODAY( 03.03.2014 )TRB PG வழக்குகள்சென்னை உயர்நீதி மன்றத்தில் TRB. PG வழக்குகள் நீதியரசர் எஸ். நாகமுத்து அவர்கள் முன்னிலையில் விசாரணிக்காக பட்டியலிடப்பட்டிருந்தன..நேரமின்மை காரணமாக வழக்குகள் விசாரணை நிலையை எட்டவில்லை. எனவே அனைத்து வழக்குகளும் ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
தொடக்கக் கல்வி இயக்குனர் உறுதி
தொடக்கக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு, அரசின் ஆணை பெற்றவுடன் நடத்த தயார் - தொடக்கக் கல்வி இயக்குனர் உறுதி
முதுகலை ஆசிரியர் நியமன இறுதி பட்டியல் இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்பு
இன்று காலை சுமார் 10.30 மணியளவில் 150க்கும்
மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்வு வாரியத்தின் முன் குவிந்தனர். அப்பொழுது
முதுகலை ஆசிரியர் நியமனம் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்
திரு.ஆறுமுகம் அவர்கள் கூறும் போது சென்ற வெள்ளிக்கிழமையே பட்டியல்
தயாராகிவிட்டது எனவும் ஆனால் COMMUNAL ROASTERல் சில தவறுகள் இருப்பதால்
அவற்றை சரிசெய்து புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை வெளியிடப்படும் என்று உறுதியளித்ததாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
TET தேர்வு எழுதிய மாணவர்கள் டி.ஆர்.பி., முன் ஆர்ப்பாட்டம்
இன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முன் சுமார்
150க்கும் மேற்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்
குவிந்தனர். அவர்கள் 5% மதிப்பெண் தளர்த்தி வழங்கிய அரசாணையை இரத்து செய்ய
கோரிக்கை வைத்தனர். காலை 10.30மணிக்கு அவர்கள் அனைவரும் அங்கிருந்து
வெளியேற உத்தரவிடப்பட்டது, ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை.
மூன்று நபர் குழு விசாரணை
ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி வெங்கடாசலம் அவர்கள் தலைமையில் அமைக்கப்படும் மூன்று நபர் குழு விசாரணை செய்ய உள்ள துறைகள் மற்றும் பணியிடங்கள் விபரம்
1. AGRICULTURE DEPARTMENT
2. AGRICULTURAL ENGINEERING DEPARTMENT
Group 4 Expected Cutoff
குரூப் -4 தேர்வு எழுதியவர்களின்
மதிப்பெண்கள் , ஒட்டுமொத்த ரேங்க் மற்றும் இனவாரியான ரேங்க்-ம்
வெளியிடப்பட்டுள்ளன . இதில் மொத்த காலிப் பணியிடங்கள் இளநிலை
உதவியாளர்களுக்கு மட்டும் 3469 உள்ளது. எனவே ஒட்டுமொத்த ரேங்க் 3469க்குள்
இருந்தால் பணி கிடைத்துவிடும் என சிலர் தவறாக
எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். முக நூலிலும் அவ்வாறே பதிவிடுகிறார்கள்.
முதுகலை ஆசிரியர்த் தேர்வு சார்பான வழக்குகள் இன்று விசாரணைக்கு வருகிறது.
முதுகலை ஆசிரியர்த் தேர்வு தமிழ் சார்பாக 4வழக்குகளும் மற்ற பாடம் சார்பாக 4வழக்குகளும் நீதியர்சர் நாகமுத்து அவர்கள் முன்னிலையில் இன்று காலை விசாரணைக்கு வருகிறது.
பிளஸ்–2 தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது :மாணவர்களுக்கு தேர்வுத்துறை அறிவுரை
பிளஸ்–2 தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது :தேர்வுத்துறை அறிவுரை
பிளஸ்–2 தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. மாணவர்கள் தேர்வு எழுதும்போது செய்யக்கூடிவை பற்றியும் செய்யக்கூடாதவை பற்றியும் தேர்வுத்துறை அறிவுரை வழங்கி உள்ளது. இதுதொடர்பாக தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது:–
பிளஸ்–2 தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. மாணவர்கள் தேர்வு எழுதும்போது செய்யக்கூடிவை பற்றியும் செய்யக்கூடாதவை பற்றியும் தேர்வுத்துறை அறிவுரை வழங்கி உள்ளது. இதுதொடர்பாக தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது:–
தனியார் பள்ளி ஆசிரியர்களை அரசு பள்ளி ஆசிரியர்கள் மூலம் ஆய்வு செய்தால் நன்மதிப்பு பாதிக்கும்
சென்னை
உயர் நீதிமன்றத்தில், தனியார் மெட்ரிக் பள்ளிகள் சங்க தலைவர் மனோகர்
ஜெயக்குமார் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது: மெட்ரிக் பள்ளிகளை
ஆய்வு செய்ய, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் உள்ளது. இந்த இயக்குனரகத்தில்
இருந்து, அதிகாரிகள் நேரில் மெட்ரிக் பள்ளிகளுக்கு வந்து ஆய்வு செய்து
அரசுக்கு அறிக்கை அனுப்புவர். ஆனால் தற்போது, தனியார் மெட்ரிக் பள்ளிகளில்
பணியாற்றும் 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு ஆசிரியர்கள், அங்கு
தான் பணியாற்றுகிறார்களா என்று அரசு பள்ளி ஆசிரியர்கள் நேரில் சென்று ஆய்வு
செய்து, அதன் அறிக்கையை பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு, மாவட்ட கல்வி
அதிகாரிகள் அனுப்ப வேண்டும் என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
100 சதவீத, இ-கல்வியறிவு: கேரள மாநில பள்ளிச்சால் தேர்வாகியுள்ளது
கேரள மாநில தலைநகர், திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள, பள்ளிச்சால்
பஞ்சாயத்து, அந்த மாநிலத்தின், முதல், 100 சதவீத, "இ-கல்வியறிவு' கிராமமாக
தேர்வாகியுள்ளது. இந்த கிராமத்தில் உள்ள அனைவரும், இணையதளத்தை பயன்படுத்துவது,
இணைய தளம் மூலம், புதிய தகவல்களை பெற்றுக் கொள்வது போன்ற
கல்வியறிவை பெற்றுள்ளனர்.
7–வது சம்பள கமிஷனின் யோசனைப்படி, அகவிலைப்படியில் 50 சதவீதத்தை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் இணைக்கவும் மந்திரிசபை ஒப்புதல் - தினந்தந்தி
மத்திய மந்திரிசபை கூட்டம்
பிரதமர் மன்மோகன்சிங்
தலைமையில் நேற்று
நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள்
எடுக்கப்பட்டன. மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்குவது
என்று மந்திரிசபை
கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனால் மத்திய
அரசு ஊழியர்கள்
பெறும் அகவிலைப்படி
90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு பணி பறக்கும்படை :ஆசிரியர்கள் நேர்மையாக செயல்படவேண்டும்
பிளஸ் 2 தேர்வு கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும்,
பறக்கும் படை ஆசிரியர்கள், பாரபட்சமின்றி பணியாற்ற வேண்டும்,'' என,
கலெக்டர் ராஜாராமன் தெரிவித்தார். சிவகங்கையில், பிளஸ் 2 அரசு பொதுதேர்வு
நடத்துவது குறித்த, ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ராஜாராமன் தலைமை
வகித்தார். தமிழ்நாடு அரசு பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் மகேஷ்வரன்
முன்னிலை வகித்தார்.
டிட்டோஜாக் போராட்டம் மார்ச் 6 திட்டமிட்டபடி நடைபெறும்
தற்போது உச்சநீதிமன்றம் அமைத்திருக்கும் குழுவிற்கும் இடைநிலை ஆசிரியர் பிரச்சிணைக்கும் சம்மந்தமில்லை.
ஆசிரியர்களிடம் பென்ஷனுக்காக பிடித்த ரூ.2 ஆயிரம் கோடி எங்கே : ஆசிரியர் சங்கங்கள் கேள்வி
"பங்களிப்பு பென்ஷன் திட்டத்திற்காக,
ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த, ரூ.2 ஆயிரம் கோடி எங்கே போனதென,''
சிவகங்கையில் நடந்த உண்ணாவிரதத்தில், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர்
கூட்டணி, பொதுக்குழு உறுப்பினர் பிரடெரிக் எங்கல்ஸ் பேசினார்.
சிவகங்கையில், ஆசிரியர் உரிமை இயக்கம் சார்பில், உண்ணாவிரதம் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் இளங்கோ தலைமை வகித்தார். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்
கழக மாவட்ட தலைவர் மாரிராஜன், முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக பொருளாளர்
இளங்கோவன், உயர், மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக, மாநில பொது
செயலாளர் சேதுசெல்வம், நகராட்சி தலைவர் அர்ச்சுனன் முன்னிலை வகித்தனர்.