"கருகும் தாவரம்"
- தாவரவியல் பட்டதாரிகளின்
கண்ணீர் கதை.
முதுகலை தாவரவியல்
பட்டதாரிகளின் பணிநியமனம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் தாவரவியல் பட்டதாரிகள் கண்ணீர்
சிந்தி வருகின்றனர்.
இவர்களின் கண்ணீர்
கதை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.
கல்லூாரியில் சேரும்
போதே பி.ஏ போன்ற மற்ற பட்டங்களை விட பி.எஸ்.சி போன்ற பட்டங்களில் சேர கடும் போட்டி
அதிகம். மேலும் படிப்பு கட்டணமும் அதிகம். மூன்று வருடங்கள் முடிக்கும் போது அரியர்
இல்லாமல் தேர்ச்சி பெற்று வருவதே மிகவும் கடினம். அதிலும் 80 சதவீதத்திற்கு மேல் இருந்தால்
தான் அரசு பி.எட். கல்லூரிகளில் சேர வாய்ப்பு கிடைக்கும். இல்லையேல் தனியார் பி.எட்
கல்லூரிகளில் சேர கட்டணமும் அதிகம், நன்கொடை வேறு.