Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முதுகலை ஆசிரியர்களுக்குமார்ச் 5 ல் கவுன்சிலிங்



      ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய, முதுகலை ஆசிரியர் பணிக்கு, இரண்டாவது பட்டியலில் தேர்வு பெற்றவர்களுக்கு, இம் மாதம் 5ல் கவுன்சிலிங் நடக்கிறது.ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், கடந்தாண்டு முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டு, 2308 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் பெற்றனர். 

தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணிமாறுதல் கலந்தாய்வு 08.03.2013 அன்று சார்ந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் காலை 10.00 மணியளவில் இணையதளம் வாயிலாக நடைபெறவுள்ளது.



    தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணிமாறுதல் கலந்தாய்வு 08.03.2013 அன்று சார்ந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் காலை 10.00 மணியளவில் இணையதளம் வாயிலாக நடைபெறவுள்ளது. 

How to Conduct PG Counselling?


How to Conduct PG Counseling? - Instruction will Publish Today Evening

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகள் துவக்கம்


         நாடு முழுவதும், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுகளும், நேற்று துவங்கின. 10ம் வகுப்பு தேர்வு, வரும் 15ம் தேதி வரையும், பிளஸ் 2 தேர்வுகள், 17ம் தேதி வரையும், தொடர்ந்து நடக்கின்றன.

இரு தேர்வுகளையும் சேர்த்து, சென்னை மண்டலத்தில், ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.


பள்ளி மாணவியருக்கு தற்காப்பு பயிற்சி: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்


         பள்ளிகளில், மாணவியருக்கு எதிரான, பாலியல் பலாத்காரம் மற்றும் வன்முறை களைத் தடுக்க, நடுநிலைப் பள்ளிகளில் இருந்து மாணவியருக்கு, தற்காப்பு பயிற்சிகளை அளிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

திருட்டை தடுக்க புதிய முறை: பிளஸ் 2 வினாத்தாளில் வரிசை எண்


        பிளஸ் 2 பொதுத் தேர்வு வினாத்தாளில், முதன் முறையாக வரிசை எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. வினாத்தாள் திருடப்படுவதை தடுக்க இந்த புதிய முறையை கல்வித்துறை இந்த ஆண்டு அமல்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் முதல் தாள் மிக எளிது: மாணவர்கள் மிகழ்ச்சி


       பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது என, மாணவர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். மேலும், அரையாண்டு தேர்வில் தமிழ் முதல்தாள் கேள்வித்தாளில் இடம்பெற்றிருந்த 29 மதிப்பெண்களுக்கான 8 கேள்விகள், நேற்று நடந்த பொதுத்தேர்வில் வரிசை எண் மாறாமல் இருந்ததால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழ் முதல் தாள் தேர்வு: முறைகேடு செய்த 6 மாணவர்கள் சிக்கினர்


         தமிழகம் முழுவதும், பிளஸ் 2 பொதுத் தேர்வு, நேற்று துவங்கியது. 8.5 லட்சம் மாணவ, மாணவியர் உற்சாகத்துடன், மொழி முதல் தாள் தேர்வில் பங்கேற்றனர். மொழிப் பாடமான தமிழ்த் தேர்விலும், பிட் அடித்த 6 மாணவர்கள், பறக்கும் படை குழுவினரிடம் சிக்கினர்.

        

நம்பிக்கை விதைத்த பிளஸ் 2 மாணவ, மாணவியர்


      விபத்தில் சிக்கி, உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும், மனஉறுதியுடன் பிளஸ் 2 தேர்வு எழுதினார், தேனி மாணவர் தனசேகரன்.

         தேனி அருகே முத்துதேவன்பட்டியை சேர்ந்த இவர், மேலப்பேட்டை இந்து நாடார் மெட்ரிக் பள்ளியில் படிக்கிறார். நேற்று முன்தினம் காலை, நண்பர்களுடன் அங்குள்ள கண்மாய் கரைக்கு சென்றார். அறுந்து கிடந்த மின் ஒயரை மிதித்ததால், மின்சாரம் பாய்ந்து செயல் இழந்தவரை, நண்பர்கள் காப்பாற்றினர்.

11 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு விரைவில் புதிய கட்டணம்


       "வரும் மே மாதத்துடன், பழைய கல்வி கட்டணம் முடிவுக்கு வரும் நிலையில், 11,626 தனியார் பள்ளிகளுக்கு, ஆகஸ்ட் 26ம் தேதிக்குள், அடுத்த மூன்று கல்வி ஆண்டுகளுக்கான புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படும்" என, கட்டண நிர்ணயக் குழு தலைவர் சிங்காரவேலு தெரிவித்தார்.


TNTET 2013 EXAM DATE - பரவும் புரளி குருஞ்செய்திகள்...



சமூகத்தில் புரளிகளுக்கு என்று ஒரு இடம் எப்போதும் உள்ளது என்பது உண்மைதான்.

அதற்காக எதற்கெல்லாம் புரளியை கிளப்புவது என்பது  கிடையாது போல...

அதற்குள்ளாக TNTET தேர்வுநாள்... ஆன்லைன் அப்லை செய்ய நாள் என்று ஒரு பட்டியலுடன் பரவிக் கொண்டிருக்கிறது அந்த குறுஞ்செய்தி.. அதில்..



ஆசிரியர் தகுதித் தேர்வு 2013
ONLINE APPLY DATE :- 13.03.2013   - 23.4.2013
EXAM DATE :- 9.6.2013
VACANT POSITION  
D.TEd - 2639 
TAMIL - 891
 ENGLISH -2654
MATHS -4096
SCIENCE - 6518
SOCIAL SCIENCE - 1530 

என்று தட்டி விட்டிருக்கிறார்கள் யாரோ..


இது புரளி என்பதற்கான காரணங்கள்...
ஆன்லைனில் பதிவு செய்வதால்  இடையில்  இரண்டு மாத இடைவெளி என்பது தேவையில்லாத ஒன்றாக மாறிவிடும்.

 

பெட்ரோல் விலை உயர்வு லிட்டருக்கு ரூ.1.40 உயர்த்தப்பட்டது


          பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.40 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
          சென்னையில் தற்போது பெட்ரோல் விலை லிட்டர் ஒன்று ரூ.72.15க்கு விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வை அடுத்து இனி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.73.65க்கு விற்கப்படும்.
 
 

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம், மக்களிடையே ஆசிரியர்கள் விழிப்புணர்வு


         அரசுப்பள்ளிகளில், கல்விக்கானஅனைத்து தேவைகளையும் அரசுஇலவசமாக வழங்க உள்ளது குறித்துமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கை அதிகரிக்க பள்ளி ஆசிரியர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
 
 

மாணவர்களை திட்டினால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை


            மாணவ-மாணவிகளை கன்னத்தில் அறையக்கூடாது. கம்பால் அடிக்கக் கூடாது என்று ஏற்கனவே சட்டம் உள்ளது. மாணவர்களை உடல் ரீதியாக துன்புறுத்த கூடாது என்று தடை விதித்து இருப்பது போல மனதளவிலும் துன்புறுத்தக்கூடாது என்று தற்போது புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
 
 

தேர்வு நேரத்தில், "மெடிக்கல் லீவ்' : அரசு பள்ளி மாணவர்கள் பாதிப்பு


          தேர்வு நேரத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள் பலர், தங்கள் குழந்தைகளுக்காக, "மெடிக்கல் லீவ்' போடுவதால், பள்ளியில் படிக்கும் மற்ற மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.
 
 

எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை அவசியம்


           அரசு தொடக்கப்பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இருந்தும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
          மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொடக்க பள்ளிகளின் நிலை நாளுக்கு நாள் மாறி வருகிறது. பெரும்பாலான தொடக்க பள்ளிகளில் புதிய வகுப்பறை, காம்பவுண்ட் சுவர், கம்ப்யூட்டர், விளையாட்டு உபகரணம் என எஸ்.எஸ்.ஏ., நிதியில் கீழ், அனைத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மட்டக்கண்டி அரசு தொடக்க பள்ளியில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் மாணவர்கள் குறைந்து வருவது ஆசிரியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது.

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் அலுவலர்களுக்கும் கவுன்சிலிங் முறையில் இடமாறுதல் வழங்க வேண்டும் மாநில சங்க கூட்டத்தில் தீர்மானம்


                 பள்ளிக்கல்வித்துறையில் கற்பித்தல் பணியையும், நிர்வாக பணியையும் ஒரே அலுவலர் மேற்கொள்வதால் ஏற்படும் பிரச்சினைகளையும் தேக்க நிலையையும் களைய ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் கல்வி அதிகாரிகள்
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அமைச்சு பணியாளர்களை கொண்ட சீரமைப்புக்குழுவை ஏற்படுத்த அரசை கேட்டுக்கொள்வது.
 

10ம் வகுப்பு தேர்வு: மாணவர்களை விட மாணவியர் குறைவு


           வரும், 27ம் தேதி முதல், ஏப்., 12 வரை நடக்க உள்ள, 10ம் வகுப்பு பொதுத்தேர்வை, 10.68 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். கடந்த ஆண்டை விட, 17,916 பேர், கூடுதலாக எழுதுகின்றனர். இவர்களில், 16,362 பேர் மாணவர்; மாணவியர், 1,554 பேர்.

       

7,91,924 மாணவர்கள் எழுதும் பிளஸ் 2 தேர்வு துவங்கியது!


         தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்று துவங்கியது. தமிழகத்தில், 7 லட்சத்து, 91 ஆயிரத்து, 924 மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர்.
இந்த தேர்வு , மார்ச், 27ம் தேதி வரை நடக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 2,020 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


பிளஸ் 2 தேர்வில் மின்தடைக்கு தடா: மின்வாரியம் சிறப்பு ஏற்பாடு


         பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர், மின்தடையின்றி தேர்வெழுத, தேர்வு மையங்கள் அமைந்துள்ள பள்ளிகளில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

சென்னை பல்கலை தொலைதூர கல்வி இளங்கலை தேர்வு முடிவு


       சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியின், இளங்கலை தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளன.


ஆரம்ப கல்வியில் அறிவியல் ஊக்குவிப்பு அவசியம்


        ஆரம்ப கல்வியிலேயே அறிவியலை போதித்தால் ஆர்வம் அதிகரிக்கும் என, தேசிய அறிவியல் தின நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது.

      ஊட்டி ரேடியோ வானியல் மையத்தில், நேற்று, தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. மைய தலைவர் டாக்டர் மனோகரன் வரவேற்று பேசுகையில், "மாணவ, மாணவியர் மத்தியில் அறிவியல் விழிப்புணர்வு குறைவாக உள்ளது. அறிவியல் ஆராய்ச்சியில் அதிகளவு மாணவர்கள் ஈடுபட வேண்டும்.


அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ரூ.2,000 கோடியில் தனி நிதியம்


          மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்று தாக்கல் செய்த நிதியறிக்கையில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைக்கு, வரும் நிதியாண்டில், 6,275 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்வெளித் துறைக்கு, 5,615 கோடியும், அணுசக்தித் துறைக்கு, 5,880 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் 2013 - 14 : முக்கிய அம்சங்கள்


          நாடாளுமன்றத்தில் 2013-14ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர்  ப.சிதம்பரம்  இன்று தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
வருமான வரிவிதிப்பில் மாற்றமில்லை; ரூ. 2000 சலுகை

* வருமான வரிவிதிப்பில் மாற்றமில்லை; அதேசமயம் ரூ. 2 முதல் 5 லட்சம் வரையிலான வருவாய்தாரர்களுக்கு, அவர்க்ளுக்கு வரி விதிப்பு தொகையில் ரூ. 2000 தள்ளுபடி
*ஆண்டு வருவாய் ரூ.1 கோடிக்கு மேல் ஈட்டுபவர்களுக்கு 10 சதவீத கூடுதல் வரி.

வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை!


         அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த வருமான வரி உச்சவரம்பு உயர்வு இந்த ஆண்டு இல்லை என்று அறிவித்துள்ளார் சிதம்பரம்.

ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதி.




      2013-14 ஆம் ஆண்டுக்கான பொது ப‌ட்ஜெட் இன்று நாடாளும‌ன்ற‌‌த்த‌ி‌ல் ‌நி‌தியமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்ப‌ர‌ம் இ‌ன்று தா‌க்க‌ல் செ‌ய்தா‌ர். ‌அ‌தி‌ல் ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதி அரசு வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.

வீட்டு கடன் வாங்குவோருக்கு ரூ.1 லட்சம் வட்டி தள்ளுபடி




         ரூ.25 லட்சத்திற்கு மேல் வீட்டு கடன் வாங்கும் முதல் முறை கடனாளிகளுக்கு, அவர்களின் வீட்டு கடன் வட்டியிலிருந்து ஒரு லட்ச ரூபாய் ரத்து செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிக்கப்பட்டுள்ளது.

.

6 முதல் 10ம் வகுப்பு வரை கம்ப்யூட்டர் பாடம் அறிமுகம்


       அரசு பள்ளிகளில், 6 முதல், 10ம் வகுப்பு வரை, கம்ப்யூட்டர் பாடத்தை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான, ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
 
 

அறிவியல் இன்றி ஆற்றல் உண்டா? பிப்., 28 தேசிய அறிவியல் தினம்


       ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், அறிவியல் வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவர்களிடம் அறிவியல் மீதான ஆர்வத்தை உருவாக்கும் விதமாக, ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினம், பிப். 28ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
 
      அறிவியல் என்பது, வாழ்க்கையோடு தொடர்புடையது. இதன் பயன்பாடு விஞ்ஞானிகள், படித்தவர்கள் மட்டுமின்றி, சாதாரண மக்களுக்கும் சென்றடைய வேண்டும். அப்போதுதான், அந்த கண்டுபிடிப்பு முழுமை பெறும். அறிவியலை படிப்பதோடு நின்று விடாமல், செயல் வடிவிலும் கொண்டு வர வேண்டும்.

கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு


      கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தது.
* கல்வித் துறைக்கு இந்த பட்ஜெட்டில் 17 சதவீதம் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
* விவசாயத்துறைக்கு நிதி ஒதுக்கீடு 22 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
* கிராமப்புற வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு 46 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.


எய்ம்ஸ் மாதிரியிலான 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்


        எய்ம்ஸ் மருத்துவக் கல்வி நிறுவனத்தைப் போன்று, அமைக்கப்பட்ட புதிய 6 மருத்துவக் கல்வி நிறுவனங்கள், இந்த 2013ம் ஆண்டு முதல் செயல்படத் துவங்கும்.

இதோ! வந்தேவிட்டது பிளஸ் 2 பொதுத்தேர்வு!


     பிளஸ் 2 மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அரசுப் பொதுத்தேர்வுகள், இதோ வந்தேவிட்டது. மார்ச் 1ல் துவங்கும், தமிழ்நாடு மாநில கல்வி வாரிய தேர்வுகள், மார்ச் 27ம் தேதி முடிவடைகிறது. அதற்கான கால அட்டவணை, மாணவர்கள் வசதிக்காக, மீண்டும் ஒருமுறை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive