டி.என்.பி.எஸ்.சி., மூலம், 10 ஆயிரத்து, 105
காலி பணியிடங்களுக்கு, இந்த ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. கடந்த ஆண்டை
காட்டிலும், 8,000 பணியிடங்கள் குறைந்துள்ளன.
சமச்சீர் கல்வி நடைமுறைக்குப் பின், கடந்த
ஆண்டில் இருந்து, 10ம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவ, மாணவியருக்கும்,
அறிவியல் பாடத்தில், செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது.
2009-10 ல் ஆர்.எம்.எஸ்.ஏ
மூலம் தரம் உயர்த்தப்பட்ட 200 உயர்நிலைப்பள்ளிகளுக்கு 200 ஆய்வக உதவியாளர் பணியிடம்
அரசாணை 67 நாள் 16.03.2012 மூலம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
2010-11 ல் ஆர்.எம்.எஸ்.ஏ
மூலம் தரம் உயர்த்தப்பட்ட 344 உயர்நிலைப்பள்ளிகளுக்கு 344 ஆய்வக உதவியாளர் பணியிடம்
மற்றும் 344 இளநிலை உதவியாளர் பணியிடம் அரசாணை 67 நாள் 16.03.2012 மூலம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
தொடக்கப்பள்ளி
மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் வழங்கப்பட்டுவரும்
10 நாள் உறைவிடமில்லா பயிற்சி மாநில திட்ட இயக்குநர் உத்தரவின் பேரில் தற்காலிகமாக
இரத்து செய்யப்பட்டுள்ளது.
9 மற்றும் 10ஆம் வகுப்பு பாடம் நடத்தும் பட்டதாரிகளுக்கு
தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமுக அறிவியல் ஆகிய பாடங்களில்
04.02.2013 முதல் 23.02.2013 வரை நடக்க வேண்டிய பணியிடைப் பயிற்சி
தற்காலிகமாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்
என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான மாணவர்கள் தன்னை பற்றி மனதில் நான்
இப்படி தான்? எனக்கு திறமையில்லை? என்னால் முடியாது? .... என்ற தாழ்வான
கருத்து மனதில் ஆழமாக பதிந்திருக்கும்.
பெண்களின் கல்வி உரிமைக்காக, குரல் கொடுத்ததால், தலிபான்களால்
சுடப்பட்டு, உயிர் பிழைத்த பாகிஸ்தான் சிறுமி, மலாலாவின் பெயர், நோபல்
பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள், பருவநிலை மாற்றம் குறித்து அறிவதற்கு, உலக இயற்கை
நிதியம், ஆசிரியர்களுக்கான புதிய கையேடு தயாரித்துள்ளது. இதில், எளிய
வகையில், மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், செய்முறை பயிற்சிகள்
கொடுக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர் பணி நியமனத்துக்கான தகுதி தேர்வில்,
தகுதி மதிப்பெண்ணை தளர்த்தக் கோரிய மனுக்களை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி
செய்தது. நிர்ணயிக்கப்பட்ட தகுதியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்; அதை
மீறி நடக்கும் நியமனங்கள் செல்லாது என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆண்டு, ஜூன் மாதம், பள்ளி துவங்குவதற்கு
முன், மூன்றாவது, டி.இ.டி., தேர்வை நடத்தி, அதன் வழியாக, 15 ஆயிரம்
ஆசிரியர்களை, புதிதாக தேர்வு செய்ய, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.
தமிழ்ப்பள்ளி என்பது ஒரு கழகம் (Institution)
இங்கிருந்துதான் தமிழ், தமிழர் சம்பந்தப்பட்ட அனைத்து சமாச்சாரங்களும்
உருவாக்கப்பட்டு வியாபித்து ஆலமரமாய் உருவெடுக்கின்றன.
அரசு ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர்
சம்பளத்திற்கும், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி இடைநிலை மற்றும்
சிறப்பாசிரியர்களுக்கும் உள்ள சம்பள முரண்பாட்டை நீக்க வழிவகை செய்யும்,
அரசாணை 216ஐ,கல்வித்துறை அமல்படுத்த வேண்டும் என,
உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பணி ஓய்வு இடைநிலை மற்றும் சிறப்பாசிரியர்
சங்கம் வலியுறுத்தி உள்ளது.
தமிழகத்தில், புதிதாக தேர்வு செய்யப்பட 29 ஆயிரம் பட்டதாரி ஆசிரிய,
ஆசிரியைகளுக்கு இன்று (1ம் தேதி) பயிற்சி ஆரம்பமாகிறது. இதற்காக அரசு 2
கோடியே 39 லட்சத்து 10 ஆயிரத்து 880 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஐகோர்ட் உத்தரவின் அடிப்படையில், சிறப்பு தேர்வு எழுதியவர்களில்
இருந்து, 120 பேரை தேர்வு செய்து, அவர்களின் பட்டியலை, நேற்றிரவு, ஆசிரியர்
தேர்வு வாரியம் (டி.ஆர்.பி) வெளியிட்டது.
கருவூலகங்கள் கம்ப்யூட்டர் மயமாவதால், பழைய அரசு ஆணைகள் தேவைப்படுகிறது.
இது, இல்லாத பட்சத்தில், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்
ஏற்படும் நிலை உள்ளது.
அடுத்த கல்வி ஆண்டில், பிளஸ் 1 வகுப்பிற்கு, புதிய பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், தற்காலிக வரைவு பாடத் திட்டங்கள், பிப்., 13ம் தேதி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
தமிழ்நாடு
அமைச்சுப் பணி, பள்ளி கல்வித்துறை - இளநிலை உதவியாளர் நேரடி நியமனம்
TNPSC GROUP IV மூலம் 2007 - 2008 முதல் 2012 -2013 தேர்வாணையம் மூலம்
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 02.02.2013 அன்று நடைபெறும் கலந்தாய்வு மூலம்
நியமன ஒதுக்கீடு ஆணை வழங்க உத்தரவு.
பள்ளிக்கல்வி
- இடைநிலைக் கல்வி - அரசு உதவிபெறும் பள்ளிகளில் 01.08.2012 அன்றைய
நிலையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையில் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம்
செய்ய உத்தரவு.