www.Tndse.Com வலைத்தளத்தில் சிறப்பு ஊக்கத்தொகை பெறுவதற்காக 12 ஆம் வகுப்பு மாணவர்களை தொடர்ந்து 10 ஆம் வகுப்பு மாணவர்களின் வங்கி கணக்கு எண் போன்ற விவரங்களை பதிவு செய்ய 31.01.2013 இறுதி நாளாக இயக்குனரகம் அறிவித்துள்ளது.
01.01.2013 நிலவரப்படி வணிகவியல் பாட முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு 31.12.1992 ஆண்டு வரை தகுதி பெற்ற ( ஒரே பாடம் ) தொழிற் கல்வி ஆசிரியர்களின் விவரம் முதன்மை கல்வி அலுவலகத்தில் சமர்பிக்கவேண்டும் என இயகுனரகதால் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அடுத்த கல்வி ஆண்டில், பிளஸ் 1 வகுப்பிற்கு, புதிய பாடத் திட்டம்
அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், தற்காலிக வரைவு பாடத் திட்டங்கள்,
பிப்., 13ம் தேதி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இணையதளத்தில்
வெளியிடப்படுகிறது.
அகில இந்திய அளவில், சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் தேர்வில், முதலிடம்
பிடித்த, தமிழகத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மகள் பிரேமாவுக்கு, தி.மு.க.,
தலைவர் கருணாநிதி, 1 லட்சம் ரூபாய், மத்திய அமைச்சர் வாசன், 5 லட்சம்
ரூபாயும் பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில்
வேலைவாய்ப்புகளை வழங்கும் புதிய படிப்புகள் தொடங்கப்படும் என்று அந்தப்
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெ.சந்திரகாந்தா கூறினார்.
காமராஜர் பல்கலைக்கழகம், 2 வருட தொலைநிலைக் கல்வி முறையில், பி.எட்.,
படிப்பை, 2013-15 கல்வியாண்டில், வழங்குகிறது. அதற்கான விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு தகவல்கள்
பதிவேற்றும் பணியில், பள்ளி கணினி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால்,
தேர்வுநேரத்தில், மாணவர்களின் கல்வி பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டு
உள்ளது.
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மிலாடி நபி
நாளன்று வாக்குச்சாவடி உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஆசிரியர்கள் வர
வேண்டும் என கல்வித்துறை செயலாளர் சபிதா உத்தரவிட்டுள்ளார்.
அரசு நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 250 தலைமை ஆசிரியர்
பணியிடங்கள் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு பணியிடங்கள்
ஆகியவை, விரைவில் நிரப்பப்படும் என, தொடக்க கல்வித்துறை வட்டாரங்கள்
தெரிவித்தன.
"தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் படித்து, அரசுப் பணிகளில்
சேர்ந்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், 107வது அரசாணையை நீக்குமாறு,
முதல்வரிடம் வலியுறுத்துவேன்" என, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின் புதிய
துணைவேந்தர் சந்திரகாந்தா கூறினார்.
அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு, கல்வி மென்பொருள் மேம்பாட்டு பயிற்சி
அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அரசு அளிக்கும் இலவச மடிக்கணினி மூலம்,
வகுப்பு நடத்தும் வகையில், இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
மதுரையில் ஐந்து மாவட்ட அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி
பிரிவு பள்ளிகளின் அங்கீகாரங்களை புதுப்பித்தல் முகாம், ஓ.சி.பி.எம்.,
பள்ளியில் நேற்று துவங்கியது. பள்ளிக் கல்வி இணை இயக்குனர் ராஜ ராஜேஸ்வரி
இதை பார்வையிட்டார்.
அரசு பள்ளி மாணவர்களில், 40 சதவீதம் பேருக்கு, பல் சம்பந்தமான நோய்கள்
இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், இவர்களுக்கு, பல் பரிசோதனை மற்றும்
சிகிச்சை வழங்க, சுகாதார துறை திட்டமிட்டுள்ளது.
கட்டாயக் கல்வி சட்டத்திற்கு முரணாக, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில்
பணியில் சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை, பணியில் இருந்து
நீக்குவதற்கு, கல்வித்துறை முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பேராசிரியர் பற்றாக்குறையால், தத்தளிக்கும் சென்னை பல்கலையில்,
எமிரேட்ஸ் பேராசிரியர் திட்டத்தை, மீண்டும் செயல்படுத்த வேண்டும் என, புதிய
துணைவேந்தருக்கு, பேராசிரியர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
"பேரிடர்கள் குறித்த தகவல்களை, மக்களுக்கு முன்கூட்டி தெரிவிக்க, மொபைல்
போனில் வரைபடம் அனுப்பும் வசதியை பயன்படுத்த வேண்டும்,&'&' என,
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா பேரிடர் மேலாண்மை ஆராய்ச்சியின்,
ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
2013ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி நடத்தவுள்ள தேர்வு அட்டவணை
மற்றும், அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்படவுள்ள பணியாளர்களின் எண்ணிக்கைக்
குறித்த விபரங்கள், இம்மாதம் 28ம் தேதி வெளியிடப்படும் என தேர்வாணையத்
தலைவர் நட்ராஜ் தெரிவித்தார்.
தமிழ்நாடு
தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி - ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு /
மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 30.06.2012 முதல்
31.12.2013 முடிய பணி ஓய்வுபெற்ற / ஒய்வு பெறுபவர்களின் விவரம் கோரி
இயக்குநர் உத்தரவு.