பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மாணவர்களுடன் உரையாடினார்.
கேள்வி: நதிகள் தேசியமயமாதல் குறித்து?
அப்துல்கலாம்: நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆறு, குளம், ஏரி உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் இணைக்கும் போது, பல மடங்கு நீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்க முடியும். நாட்டின் வளர்ச்சிக்கும் பயனுள்ளதாக இருக்கும்.