பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும்
மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை
வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதால், பள்ளி, கல்லூரிகளுக்கு
இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா
பட்நாயக் இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
பிளஸ் 2 உடனடித்தேர்வு முடிவு வெளியாவதில், இந்த ஆண்டு, கால தாமதம்
ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் தான், முடிவு
வெளியாகும் என, கூறப்படுகிறது. இதனால், மாணவர்கள், உயர் கல்வியில்
சேர்வதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பொறியியல் பொதுப் பிரிவு சேர்க்கை கலந்தாய்வு முடிந்த, 18 நாட்களில்
மட்டும், 20 ஆயிரம் மாணவர்கள், "ஆப்சென்ட்" ஆகியிருப்பது, அண்ணா பல்கலையை,
அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தலைமை ஆசிரியர்கள் ஓய்வு பெறும் முன், அவர்கள்
பணியாற்றிய அனைத்து பள்ளிகளிலும், நிதி இழப்பு இருந்தால், அதை சரி செய்ய
வேண்டும். இல்லை எனில், அவர் ஓய்வூதியம் பெறுவதற்கு பரிந்துரை செய்த,
மாவட்ட கல்வி அலுவலர்களே, முழு பொறுப்பாவார்கள், என பள்ளி கல்வி
இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
இரவில் தமது பிள்ளைகள் நேரத்தோடு படுக்கைக்குச்
செல்கிறார்களா என்பது பற்றி கவலைபடாத பெற்றோர்கள், தமது இளம்பிள்ளைகளின்
மூளைத் திறன் பாதிக்கப்படுவதற்கு இடமளித்துவிடுகிறார்கள் என புதிய ஆய்வு
ஒன்று சுட்டிக்காட்டுகிறது.
ஆசிரியர் கல்வி டிப்ளமோ படிப்புக்கு மிக மிக
குறைவாகவே மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ளதால், கவுன்சலிங்குக்கு
வருபவர்களுக்கு அரசு நிறுவத்னத்திலேயே வாய்ப்பு கிடைப்பதால், தனியார்
ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் மாணவர்கள் யாரும் சேர முன்வரவில்லை.
இன்டக்ரேட்டட் அல்லது இரட்டைப் பட்டப்
படிப்புகள், நேரத்தை மிச்சப்படுத்தி, குறிப்பிட்ட துறைகளில், ஆராய்ச்சித்
திறன்களை மேம்படுத்த உதவுகிறது என்பதை இன்றைய மாணவர்கள் பலபேர் புரிந்து
கொண்டிருக்கிறார்கள்.
ஒரு வேலையை தடையின்றி, குறித்த நேரத்தில்
செய்வதற்கு, நேரத்தை நிர்வகிக்க கற்றுக் கொள்ள வேண்டும். கொடுக்கப்பட்ட
நேரத்தை எப்படி செலவழிப்பது என்பது பற்றி அறிந்து கொண்டால், பெரும்பாலும்
நமக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கு, எளிதில் தீர்வு காணலாம்.
தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக, உதவி
பேராசிரியர் நியமனம் குறித்து, டி.ஆர்.பி., வெளியிட்ட அறிவிப்பு திரும்ப
பெறப்பட்டது. உதவி பேராசிரியர் நியமனம் குறித்து நேற்று வெளியிட்ட
அறிவிப்பில், பி.எச்டி., குறித்து எந்தவித தகவலும் வெளியிடவில்லை.
அவர்களின் பணி அனுபவம் எவ்வாறு எடுத்து கொள்ளப்படும் என்பது குறித்தும்
தெரிவிக்கப்படவில்லை.
"அரசிடம் நிதி பெறாமல், நடத்தப்படும் தனியார்
பள்ளிகளில், வசூலிக்கப்படும் கட்டண முறையை கட்டுப்படுத்தும் அதிகாரம்,
அரசுக்கு இல்லை" என மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான அறிவிக்கை
வெளியாகும் முன்பே பட்டதாரி ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு
முடிந்தவர்கள் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை என்று உயர் நீதிமன்றம்
தீர்ப்பளித்துள்ளது.
இந்தத் தீர்ப்பின் மூலம் வழக்குத் தொடர்ந்த 94 பட்டதாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
ஆசிரியர்களுக்கு காபி, வடை "கட்': நிதி பற்றாக்குறையால் பயிற்சிகளும் குறைப்பு - நாளிதழ் செய்தி
நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதால்,
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், அளிக்கப்படும் பயிற்சி வகுப்பில்
வழங்கப்பட்ட காபி, வடை, பிஸ்கட் , "கட்' ஆனது, ஆசிரியர்களிடையே அதிருப்தியை
ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியிலோ, கல்லூரியிலோ தலை சிறந்த மாணவராக
இருப்பது பெரிய மந்திர வித்தையல்ல. அர்ப்பணிப்பு உணர்வுடன், சில பயிற்சிகளை
மேற்கொண்டாலே போதும், நீங்களும் தலை சிறந்த மாணவர் தான். இதோ அந்த
ரகசியங்கள்:
* புத்தக புழுவாக இல்லாமல், பல்வேறு அறிவுசார் விஷயங்களை, மாணவர்கள் தெரிந்து கொள்ள முற்பட வேண்டும்.
32 ஆயிரம் ஆசிரியர்கள் பணியிடம்: கோர்ட்
உத்தரவு 2010-ம் ஆண்டு 32,000 ஆசிரியர்கள் பணிக்கான சான்றிதழ்
சரிபார்க்கப்பட்டது. 2011-ல் ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால்
இவர்களுக்கு பணி நியமனம் வழங்கவில்லை. இதனை எதி்ர்த்து சென்னை
ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் உடனடியாக பணி
ஆணை வழங்க உத்தரவிட்டார்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை
ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வு, வரும், 21ம் தேதி, 422
மையங்களில் நடக்கிறது. தேர்வெழுத உள்ள, 1.67 லட்சம்
விண்ணப்பதாரர்களுக்கும், டி.ஆர்.பி., இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகள்
வெளியிடப்பட்டன.
நாடு முழுவதும் உள்ள, அரசு மருத்துவக்
கல்லூரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளில்,
எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, 50 இடங்களை அதிகரிக்க, மத்திய சுகாதார
அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தின்கீழ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து நான்கு நாட்கள் பணியிடைப்பயிற்சி இரு கட்டங்களாக பாடவாரியாக 10.07.2013 முதல் 30.07.2013 வரை இணைப்பில் உள்ளவாறு நடைபெறுகிறது. தெரிவு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் இருந்து ஒரு பாடத்திற்கு ஒரு ஆசிரியர் அவசியம் கலந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்களை பயிற்சி மையங்களுக்கு உரிய நேரத்தில் பயிற்சியில் கலந்து கொள்ள ஏதுவாக பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பெயர் பதிவு: காலை 9.30 முதல் 10.00 மணி வரை பயிற்சி நேரம்: காலை 10.00 முதல் மாலை 5.00 மணி வரை
இந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்
மொத்தம் 18,205 ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்வி அலுவலர்கள்
நியமிக்கப்பட உள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில்
வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் மட்டும் 12,295 பட்டதாரி ஆசிரியர்கள்
தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதித் தேர்வுக்குப் பிறகு மாநில பதிவு
மூப்பின் அடிப்படையில் 817 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 2,881
காலி பணி இடங்களுக்கு ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 657 ஆசிரியர்கள் போட்டி
போடுகிறார்கள். தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆசிரியர் தேர்வு
வாரியத்தின் இணையதளத்தில் ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது.