Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இன்னும் 2 வாரம்தான் இருக்கு... மறந்துடாதீங்க.... ரிட்டர்ன் தாக்கல் செய்யாவிட்டால் அபராதம், சிறை


வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வரும் 31ம் தேதி கடைசி தேதி. நிறுவனங்கள் டிடிஎஸ்) கணக்கு தாக்கல் செய்ய கடைசி தேதி ஜூன் 30ம் தேதியில் இருந்து ஜூலை 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

படிவம் 16 வழங்க தாமதம் ஆகும் என்பதுதான் இதற்கு காரணம். அதற்காக இதை காரணம் காட்டி வருமான வரி கணக்கு தாக்கல் தேதியை தாமதம் செய்யக்கூடாது. கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க வேண்டும் என்றும் வருமான வரித்துறை அறிவுறுத்தி உள்ளது. எனவே, வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்னும் 2 வாரம்தான் உள்ளது. கெடு தேதிக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டால், காலதாமதமாகவருமான வரி கணக்கை அடுத்த ஆண்டு (2020) மார்ச் 31 வரையில் தாக்கல் செய்யலாம். அல்லது வருமான வரித்துறை மதிப்பீடு செய்வது எப்போது நிறைவுபெறுகிறதோ அதற்கு முன்னர், இதில் எது முன்னதாக இருக்கிறதோ அதற்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

உரிய காலத்திற்குள் வருமான வரி கணக்கு தாக்கல்செய்யாமல் அதன் பின்னர் 2019 டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு காலதாமதமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால் அவர்களுக்கு 5,000 அபராதம் விதிக்கப்படும். 2019 டிசம்பர் 31ம் தேதிக்குபின்னர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால் அபராதம் 10,000 விதிக்கப்படும். ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் மட்டும் அபராதம் 1,000 விதிக்கப்படும். காலதாமதமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் அபராதம் செலுத்தாமல் தப்பித்துவிடலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. 

அபராதம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் வரையில் செலுத்த வேண்டிய வரிக்கு வட்டியும் செலுத்த நேரிடும். மேலும், வருமான வரி சலுகைகள் பெறுவதற்கும் அனுமதி அளிக்கப்படமாட்டாது.நீங்கள், உங்களது வருமான வரி கணக்கை உரிய தேதிக்குள் தாக்கல் செய்துவிட்டால், உங்களுக்கு வருமான வரி பிடித்தம்போக மீதம் உள்ள தொகை (ரீபண்ட்) பெற விண்ணப்பித்தால், ரீபண்ட் தொகை வட்டியுடன் வழங்கப்படும்.  மதிப்பீடு செய்யப்பட்ட ஆண்டில் உங்களது வருமானத்திற்கு அதிகமாக பிடித்தம் செய்யப்பட்டவரியை திரும்பப் பெற வருமான வரி சட்டம் 1961 பிரிவு 244ன்கீழ்  விண்ணப்பம் செய்கிறீர்கள். அப்போது, நீங்கள் காலதாமதமாக வருமான வரி கணக்குதாக்கல் செய்திருந்தீர்கள் என்றால், ரிபண்ட் தொகைக்கு வட்டியைப் பெற முடியாது.

அதை இழக்க நேரிடும். தாமதமாக கணக்கு தாக்கல் செய்தால், சட்ட விதிகளின்படி குறைந்தபட்சம் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படலாம். இது 2 ஆண்டுகள் வரையிலும் நீடிக்கப்படலாம். உங்களது வரி பாக்கி 25 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் சிறை தண்டனை 7 ஆண்டுகள் வரையில் நீடிக்கப்படலாம் என்றும் வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

தமிழகம் முழுவதிலும் உள்ள 10,000 பட்டதாரி ஆசிரியர் பணியிறக்கம்: கல்வித்துறை அதிரடி முடிவு


தமிழக அரசுப்பள்ளிகளில்  10 ஆயிரம் உபரி பட்டதாரி ஆசிரியர்களை, இடைநிலை ஆசிரியர்களாக பணி இறக்கம் செய்ய பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் 37 ஆயிரத்து 211 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 2 லட்சத்து 60 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதேநேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை படிப்படியாக சரிந்து  வருகிறது.

 இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், அரசுப்பள்ளிகளில் உபரி ஆசிரியர் என்ற நிலை நீடித்து வருகிறது.எனவே, உபரி ஆசிரியர்களை கணக்கெடுத்து அவர்களை பணி நிரவல் மூலம் வேறுபள்ளிகளுக்கு  மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்காக உபரி ஆசிரியர்கள் தொடர்பான கணக்கெடுப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தது. இதில் 16 ஆயிரத்து 110 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக தெரிய வந்தது. இவர்களை வேறு பள்ளிகளுக்கு கவுன்சலிங் மூலம் பணிநிரவல் செய்வதற்கான  முறையான அரசின் உத்தரவு கடந்த மாதம் 20ம் தேதி முடிவானது. இவர்களில் 14 ஆயிரம் பேர் பட்டதாரி ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களில் 4 ஆயிரம் பேர் வரை பணி நிரவல் மூலம் வேறு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம்  செய்யவும், மற்றவர்களுக்கு மாற்றுப்பணி வழங்கவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 10 ஆயிரம் பேரை இடைநிலை ஆசிரியர்களாக பணியிறக்கம்செய்ய பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 16.07.19

திருக்குறள்

PG TRB 2019 - தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாள்: கால அவகாசம் நீட்டிக்கப்படுமா?

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாள் என்ற நிலையில், காலநீட்டிப்பு செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 50 சதவீதம் பதவி உயர்வு மூலமும் மீதமுள்ள 50 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வு மூலமும் நிரப்பப்பட்டு வருகிறது. இப்போட்டித் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தி வருகிறது. கடந்த 2014, 2017ம் ஆண்டுகளில் இத்தேர்வுகள் நடந்த நிலையில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை 1 பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் நிரப்ப தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூன் 12ம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தது. இதில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இன்று (15ம் தேதி) கடைசிநாளாகும். இதையொட்டி தகுதியான பல்லாயிரக்கணக்கானோர் இணைய தளம் மூலம் தங்களது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

அரசு கல்வியியல் கல்லூரிகள், அரசு நிதியுதவி பெறும் தனியார் கல்வியியல் கல்லூரிகள், சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் கடந்த மே, ஜூன் மாதங்களில் பிஎட் தேர்வு எழுதிய பல்லாயிரக்கணக்கானோர் தேர்வு முடிவுக்காக காத்திருக்கின்றனர். இவர்களுக்கான தேர்வுத்தாள்களை திருத்தி முடிவுகளை வெளியிடும் பணியை தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் முதுகலைப் பட்டங்களுக்கான தேர்வு நடந்து முடிந்த நிலையில், பல்வேறு பல்கலைக்கழகங்கள் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ள போதும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வெளியிடவில்லை. இதனிடையே தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக பிஎட் தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்களும், இளங்கலைப் பட்டப்படிப்பை தொடர்ந்து பிஎட் முடித்து, தற்போது முதுகலைப்பட்ட தேர்வு எழுதி, தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்களும், இந்த ஆண்டு நடைபெறும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் தாங்களும் கலந்துகொள்ளும் வாய்ப்புக்காக, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலம் நீட்டிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர்.

அரசு பள்ளிகளில் மாணவர்களின் நலன் கருதி மகப்பேறு விடுமுறையின் போது தற்காலிக ஆசிரியை நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளிகளில் மகப்பேறு விடுமுறையில் உள்ள ஆசிரியைகளுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியைகள் நியமிக்கலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். குமரி மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் 2019-ம் கல்வியாண்டில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான இலவச லேப்டாப் வழங்கும் விழா நாகர்கோவில் அருகே சுங்கான்கடை வின்ஸ் பொறியியல் கல்லூரி கலையரங்கில் நேற்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், `தமிழகத்தில் மட்டுமே மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 54 லட்சத்து 44 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கி இருக்கிறோம். இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். மாணவர்கள் நல்ல முறையில் படித்து, தமிழகத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

மூச்சு நின்றால் மட்டும் மரணம் அல்ல, முயற்சி நின்றாலும்கூட மரணம்தான். எனவே முயற்சி செய்து நீங்கள் படித்து வெற்றி பெற வேண்டும்’ என்று கூறினார். மகப்பேறு காலத்தில் மாற்று ஆசிரியைகள்: நிகழ்ச்சிக்குபின் நிருபர்களிடம் செங்கோட்டையன் கூறுகையில், தமிழகத்தை பொறுத்தவரை இரு மொழி கல்வி கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. இதுதொடர்பாக ஏற்கனவே தமிழக முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். மகப்பேறு விடுமுறையில் உள்ள ஆசிரியைகளுக்கு பதிலாக மாதந்தோறும் ₹10 ஆயிரம் ஊதியத்தில், தற்காலிக ஆசிரியர்கள் நியமித்து கொள்ளலாம். அந்தந்த பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர்கள் சங்கங்கள் இதை முடிவு செய்யலாம். இதற்கான நிதியை தமிழக அரசு வழங்கும்’’ என்று அறிவித்தார்

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்:-

நாமும் தெரிந்துகொள்வோம்

July 3rd Week Lesson Plans

July 3rd Week Lesson Plans


  • 4th Standard - July 3rd Week Lesson Plans 

Daily English

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 15.07.19

திருக்குறள்

12th Chemistry - Unit 7 Study Material

12th New Study Materials (As Per New Book 2019-2019):
  • 12th Chemistry - Unit 7 Study Material

12th Physics - Unit 3 Model Question Paper 1

12th New Study Materials (As Per New Book 2019-2019):
  • 12th Physics - Unit 3 Model Question Paper 1

12th Physics - Unit 3 Model Question Paper

12th New Study Materials (As Per New Book 2019-2019):
  • 12th Physics - Unit 3 Model Question Paper

12th Physics - First Mid Term Model Question Paper

12th New Study Materials (As Per New Book 2019-2019):
  • 12th Physics - First Mid Term Model Question Paper

Quarterly Examination Time Table 2019 - 2020 ( Tamilnadu & Puducherry)

DSE –Examination Cell – Conduct of Common Quarterly Examination

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive