கியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’
என்பது எல்லோருக்கும்
தெரிந்ததே. ‘வாரண்ட்டி’ என்பதும் கிட்ட த்தட்ட
அதே பொருளைக்
குறிக்கும் சொல்தான். ஆனால் சட்டத்தின் பார்
வையில் ‘கியாரண்டி’ என்றால் ‘பொருளை
மாற்றிக் கொடுப்பது,’
வாரண்டி என்றால்
‘சர்வீஸை’க்
குறிப்பது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
தமிழகத்தின் கல்வி முன்னேற்றத்துக்கு மதிய உணவு திட்டமே காரணம்
தமிழகத்தின் கல்வி முன்னேற்றத்துக்கு மதிய உணவு திட்டமே காரணம்: 'நம் கல்வி நம் உரிமை' நூல் வெளியீட்டு விழாவில் என்.ராம் தகவல்
தி இந்து' தமிழ் நாளிதழும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்திய 'நம் கல்வி நம் உரிமை' நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் பங்கேற்றோர் (இடமிருந்து): பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, எழுத்தாளர் எஸ்.வி.வேணுகோபாலன், அறிவியல் இயக்க மாநிலத் தலைவர் எஸ்.மோகனா, 'தி இந்து' குழுமத் தலைவர் என்.ராம் | படம்: க.ஸ்ரீபரத்.தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு மதிய உணவுத் திட்டமே காரணம் என ‘தி இந்து' குழுமத்தின் தலைவர் என்.ராம் தெரிவித்தார்.
ABDUL KALAM BIRTHDAY CELEBRATE ON 15.10.2015
தொடக்கக்கல்வி-அப்துல் கலாம் பிறந்த நாளான அக்டோபர்-15ஆம் நாளை "இளைஞர் எழுச்சி நாளாக கடைப்பிடிக்கவும் பள்ளிகளில் பேச்சுப்போட்டி&கட்டுரைப்போட்டி நடத்திடவும் இயக்குநர் உத்தரவு!!!
ஆயிரம் திரைபடங்கள் கண்ட'கின்னஸ் நாயகி' ஆச்சி மனோரமா காலமானார்
அதிக படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்த நடிகை மனோரமா, 72,
மாரடைப்பால் நேற்று இரவு மரணம் அடைந்தார். பிரபல நடிகை மனோரமா சென்னை,
தி.நகரில் வசித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே அடிக்கடி உடல்நலக்
குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு, மனோரமாவுக்கு
மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள
தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில்,
மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர். நள்ளிரவு, 11:20 மணிக்கு, சிகிச்சை
பலனின்றி இறந்தார்.
பல்கலை பேராசிரியர்கள் மூலம் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி
மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு,
பல்கலை பேராசிரியர்கள் மூலம், பயிற்சி அளிக்கும் புதிய திட்டம் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், பள்ளிக் கல்வி துறையின் கீழ் உள்ள, அரசு
பள்ளிகளில் மட்டும், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 42 லட்சம் மாணவர்கள்
படிக்கின்றனர். சென்னை தவிர, மற்ற மாவட்டங்களில், தனியார் பள்ளிகளை விட,
அரசு பள்ளிகளில் தான் மாணவர்கள் எண்ணிக்கை அதிகம். ஆனால், தேர்வுகளில்
தேர்ச்சி சதவீதம், தனியார் பள்ளிகளை விட குறைவாக உள்ளது.
இன்று வாக்காளர் சிறப்பு முகாம்
''அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், இன்று வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற
உள்ளது,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா
தெரிவித்தார். இது குறித்து, அவர் கூறியதாவது: வாக்காளர் பட்டியலில்
பெயர்களை சேர்த்தல், நீக்கல் போன்ற பணிகளுக்காக, ஏற்கனவே இரண்டு சிறப்பு
முகாம்கள் நடந்துள்ளன. இன்று அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், மூன்றாவது
சிறப்பு முகாம், நடைபெற உள்ளது.
அரசு கலைக்கல்லூரிகளில் நீடிக்கும் ஆசிரியர் பற்றாக்குறை
தமிழகத்தில்
உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், ஆமை வேகத்தில் நடக்கும்,
உதவி பேராசிரியர் பணி நியமனத்தால், 40 சதவீத ஆசிரியர் பணியிடங்கள்
காலியாகவே உள்ளன. 'கெஸ்ட் லெக்சரர்' பணியிடங்களும் முழுமையாக நிரப்பாததால்,
கற்பித்தல் பணிகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஆன்–லைன் விற்பனைக்கு எதிர்ப்பு: மருந்து கடைகள் 14–ந்தேதி அடைப்பு
ஆன்–லைனில் மருந்துகள் விற்பனை செய்வதற்கு தற்போது தடை உள்ளது. இந்த
சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.ஆன்–லைனில்
மருந்து விற்பனையை அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தி வருகிற 14–ந்தேதி
(புதன் கிழமை) நாடு முழுவதும் மருந்து கடைகள் அடைக்கப்படுகிறது.தமிழகத்தில்
40 ஆயிரம் மருந்து கடைகள் உள்ளன.
பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் இலவச அடிப்படை இணைய வசதி: ஏர்செல் நிறுவனம் அறிமுகம்
ஏர்செல் தொலைதொடர்பு சேவை நிறுவனம் இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை,
தமிழ்நாடு வட்டத்தை சேர்ந்த அனைத்து பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கும்
இலவச அடிப்படை இணைய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
உங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்களை இனி 'கூகுள் ட்ரைவ்'வில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்
ஐபோன் பயனாளிகள் தங்களது 'ஐகளவுட்'டில் தங்களது வாட்ஸ்அப் மெசேஜ்களை
சேமித்து வைத்துக்கொள்வதை போல ஆண்ராய்டு பயனாளிகள் இனி தங்களது வாட்ஸ்அப்
மெசேஜ்கள் அனைத்தையும் 'கூகுள் ட்ரைவ்'வில் பரிமாற்றம் செய்து சேமித்து
வைத்துக்கொள்ளலாம்.
TNPSC: டிசம்பர் 27-ல் குரூப்- 2ஏ எழுத்துத் தேர்வு
தமிழக அரசு துறைகளில் உதவியாளர் மற்றும் அதற்கு இணையான பதவிகளை
நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வு நடத்தப்படுகிறது.
இத்தேர்வினை பட்டதாரிகள் எழுதலாம். எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றாலே
போதும். ஏதேனும் ஒரு துறையில் அரசு பணி உறுதி. காரணம், நேர்முகத்தேர்வு
எதுவும் கிடையாது.
தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு முடிவுகள் அக்.12-இல் வெளியீடு
தட்டச்சு, சுருக்கெழுத்து உள்ளிட்ட தொழில்நுட்பப் பாடங்களின் தேர்வு
முடிவுகள் திங்கள்கிழமை (அக். 12) வெளியிடப்படும் என, தொழில்நுட்பக் கல்வி
இயக்ககம் அறிவித்துள்ளது.
அரசு பள்ளிகளில் கணினி கல்வி சாத்தியமா...!!!
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில்
பயிலும்ஏழை,எளிய,கிராமப்புற மாணவர்களை கருத்தில் கொண்டு ஒன்று முதல்
பத்தாம் வகுப்புவரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாயப்படமாக கொண்டுவர
வேண்டும்.அரசு பள்ளியில் பயிலும் ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் கல்வித்
தரத்தை உயர்ந்தும் நோக்கிலும் அரசு பள்ளி மற்றும் மாணவர்களின் எதிர்
காலத்தை கருத்தில் கொண்டு "ஆரம்ப கல்வி முதல் (ஒன்றாம் வகுப்பிலிருந்து
பத்தாம்வகுப்பு வரை)கணினி கல்வியாக கட்டாயக்கல்வியாக கொண்டுவர வேண்டும் .
பி.எட். படிப்பில் சேர 2-வது கட்ட கலந்தாய்வு: 14 முதல் 16-ந்தேதி வரை நடக்கிறது
பி.எட். படிப்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகளில்
சேருவதற்கு மாணவ-மாணவிகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு முடிந்தது. 2-வது
கட்ட கலந்தாய்வு சென்னை காமராஜர் சாலையில் உள்ள லேடி வெலிங்டன் பி.எட்.
கல்லூரி வளாகத்தில் 14-ந் தேதி தொடங்குகிறது. அன்று காலை 9 மணிக்கு
மாற்றுத்திறனாளிகளுக்கும், முன்னாள் ராணுவத்தினர்களுக்கும், கணிதம் படித்த
மாணவிகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.
வாக்காளர்கள் பெயர் சேர்க்க 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தகவல்
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விண்ணப்பங்களை இம்மாதம் 24-ம் தேதி
வரை அளிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா
தெரிவித்தார்.வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தற்போது
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நவீன வசதிகள் குறித்தும் தமிழக தலைமை தேர்தல்
அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியதாவது:
உதவி பேராசிரியர் ஆக எழுதுங்கள் ’நெட்’!
உதவி பேராசிரியர் பணி மட்டுமின்றி, ஆராய்ச்சி படிப்பிற்கான ஊக்கத்தொகை
(ஜே.ஆர்.எப்.,) பெறவும் இத்தேர்வில் தகுதி பெற வேண்டும். பல்கலைக்கழக
மானியக்குழு (யு.ஜி.சி.,) சார்பாக, இடைநிலை கல்வி வாரியத்தால்
(சி.பி.எஸ்.இ.,) நடத்தப்படும் இத்தேர்வை லட்சணக்கானோர் எழுதுவதில்
இருந்தேஇத்தேர்வின் முக்கியத்தை உணர்ந்துகொள்ளலாம்.
செல்வமகள் திட்டம்: டிசம்பர் 2-ந் தேதி வரை 11 வயது குழந்தைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்
உலக தபால் தினம் மற்றும் அஞ்சல் மன்றத்தின் 25-வது ஆண்டு விழாவையொட்டி,
சிறப்பு தபால் உறை மற்றும் சிறப்பு தபால் முத்திரை வெளியிடும் விழா, சென்னை
அண்ணா சாலையில் உள்ள தபால் அலுவலகத்தில் நடைபெற்றது.விழாவில், தலைமை
அஞ்சல் துறை தலைவர் சார்லஸ் லோபோ, சென்னை மண்டல அஞ்சல் துறை தலைவர்
மெர்வின் அலெக்ஸாண்டர், அஞ்சல் துறை தலைவர் (தபால் மற்றும் விற்பனை
மேலாண்மை) வெங்கடேஷ்வரலு ஆகியோர் சிறப்பு தபால் உறை மற்றும் முத்திரையை
வெளியிட அஞ்சல் மன்ற உறுப்பினர்கள் திருக்குறள் பாஸ்கரன், ராமசாமி ஆகியோர்
பெற்றுக் கொண்டனர்.
கிஷோர் வைக்யானிக் பிரோட்சகன் யோஜனா
கல்வித்தகுதி
அறிவியல்:
* பத்தாம் வகுப்பு தேர்வில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க
வேண்டும். பிளஸ் 2வில் அறிவியல் பாடத்தை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.
அரசு உதவித்தொகையில் விதிமீறல்; மீண்டும் ஆய்வு நடத்த கோரிக்கை
ரெட்டியார்சத்திரம்: மணமாகாத, கணவருடன் வசிப்போருக்கு விதவை உதவித்தொகை,
இறந்தவர்கள் பெயரில் வினியோகிக்கப்பட்ட உதவித்தொகை குறித்த புகார்கள் மீது
மறு ஆய்வு செய்ய வேண்டுமென, முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
தேர்வில் காப்பி அடிக்க உதவும் நூதன கருவி உடை விற்பனை: தனியார் உளவு நிறுவன இயக்குநர்கள் கைது
தேர்வுகளில் காப்பி அடிக்க உதவும் வகையில் நவீன கருவிகள் பொருத்தப்பட்ட
உடைகளை தயாரித்து விற்றதாக, டெல்லியில் இருவர் சிக்கியுள்ளனர்.
சமூக வலைதளங்களை கண்காணிக்க தயாராகும் மத்திய அரசு
வெறுப்புப் பிரச்சாரங்கள், மதச்சாய கருத்துகள் பரவாமல் தடுக்க சமூக
வலைதளங்களை கண்காணிக்க மத்திய அரசு தயாராகி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரியில் பக்ரீத் பண்டிகையன்று வீட்டில்
மாட்டிறைச்சி சாப்பிட்டதாக பரவிய வதந்தியையடுத்து முகமது இக்லாக் என்ற
முதியவர் அடித்துக் கொல்லப்பட்டார்.
நீலகிரி: முன்மாதிரியாகத் திகழும் குக்கிராம அரசுப் பள்ளி
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள குக்கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி
மாணவர்கள், அனைத்து செயலிலும் பிற பள்ளிகளுக்கு முன்மாதிரியாகத்
திகழ்கின்றனர்.
ஆங்கிலம் கற்பது அவசியமாகியதால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழக
அரசு ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்தியது. அரசுப் பள்ளிகளை ஆங்கில வழி
பள்ளிகளாக மாற்றியமைத்தது.
Hike Messenger புதிய புரட்சி - இனி இன்டர்நெட் இல்லாமல்வீடியோ, படங்கள், செய்திகள் அனுப்பலாம்
சென்ற
செவ்வாய் கிழமை Hike Messenger புதிய மேம்படுத்திய பதிப்பை வெளியீட்டு
இருந்தது. இதில் Hike Direct என்ற புதிய வசதியை அறிமுகம் செய்து இருந்தது.
இந்த Hike Direct ஆப்சன் மூலம் நம் நண்பர்களுடன் இணையம் இல்லாமல் சாட்
செய்யலாம், படங்கள் அனுப்பலாம், பைல்களை கூட அனுப்பமுடியும் மற்றும் 70MB
வீடியோவை 10 வினாடிகளில் அனுப்பலாம்.
மாணவர்களுக்கு போதை ஊசி!
நாகர்கோவிலில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, போதை ஊசி சப்ளை செய்த மூவரை, போலீசார் கைது செய்தனர்.