பரமக்குடி அரசு பள்ளி மாணவர், மாற்றுத்திறனாளிகள் மின் சாதனங்களை இயக்க
உதவும் வகைணயில் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்து தேசிய அளவிலான அறிவியல்
கண்காட்சிக்கு தேர்வாகியுள்ளார்.பரமக்குடி அருகே உள்ள கலையூர் அரசு
உயர்நிலைப் பள்ளியில் 9 ம் வகுப்பு படிக்கும் மாணவர் வி.அருண்பிரகாஷ்.
இவர், மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையே நடந்த புத்தாக்க அறிவியல் ஆய்வு
விருதுக்கான (2014-15) கண்காட்சியில் சாதனை படைத்து, தேசிய கண்காட்சிக்கு
தேர்வு கொள்ளவுள்ளார்.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
தமிழகத்தில் பரிசோதனை அடிப்படையில் தொடக்கம்: 522 அஞ்சலகங்களில்ஆன்லைன் ஷாப்பிங் வசதி - பொதுமக்களிடம் வரவேற்பு
தமிழகத்தில் பரிசோதனை அடிப் படையில் 522 அஞ்சலகங்களில் ஆன்லைன் மூலம்
ஷாப்பிங் செய் யும் திட்டம் நடைமுறைக்கு வந் துள்ளது.அஞ்சல் துறையை
லாபத்தில் இயக்குவதற்கான முயற்சிகளை மத்திய அரசு
மேற்கொண்டுள்ளது.இதையொட்டி, தமிழகத்தில் உள்ள அஞ்சலகங்களில் ஆன்லைன் மூலம்
பொருட்களை விற்பனை செய்யும் திட்டத்தை, எம்விகர்ஷா என்ற நிறுவனத்துடன்
இணைந்து தொடங்கியுள்ளது.
அரசு துறைகளில் ஊழலை ஒழிக்க தமிழகத்தில் லஞ்ச புகார் மையம் அமைக்கக் கோரிய மனு தள்ளுபடி
தமிழகத்தில் அரசு துறைகளில் ஊழலை ஒழிக்க, 'லஞ்ச புகார் மையம்' அமைக்க
அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.மதுரை
திருமலாபுரம் டி.கொடிமங்கலத்தைச் சேர்ந்த பி.சடையாண்டி, உயர் நீதிமன்ற
மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
Special TET / PGTRB - PET Exam Study Material
PET - Study Materials Model Question Paper & Answer Keys.
12th Computer Science Study Materials
New Materials:
Prepared byMr. P.CHANRASEKARAN M.C.A, B.ED.,[PG ASST IN COMPUTER SCIENCE] &
Mr. T.SANKARA SUBBU M.SC, B.ED.,[PG ASST IN COMPUTER SCIENCE]
பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை - திறந்தவெளி கழிப்பிடங்களை ஒழிக்க தெருவுக்கு ஒரு மாணவரை சுகாதார தூதராக நியமிக்க உத்தரவு
பள்ளிக்கல்வித் துறை பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகம் முழுவதும்
திறந்தவெளி கழிப்பிடமில்லா ஊராட்சிகளை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி
தலைமையாசிரிகள் பள்ளிகளில் காலை, மாலை இறைவணக்கத்தில் திறந்தவெளி
கழிப்பிடத்தால் உருவாகும் சுகாதார கேட்டினை மாணவ, மாணவியருக்கு விளக்க
வேண்டும். பள்ளிகளில் உள்ள கழிப்பறையை மாணவ, மாணவியர் பயன்படுத்த செய்ய
வேண்டும்.
TNPSC சார்பில் மகப்பேறு, குழந்தைகள் நல சுகாதார அலுவலர் தேர்வு
மகப்பேறு, குழந்தைகள் நல சுகாதார அலுவலர் பதவிக்கான தேர்வு தமிழகம்
முழுவதும் 3 மாவட்டங்களில் வருகிற 20ம் தேதி நடக்கிறது. தமிழ்நாடு
அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) மகப்பேறு மற்றும் குழந்தை நல
சுகாதார அலுவலர் பதவியில் காலியாக உள்ள 89 காலி பணியிடங்களை
நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூலை 31ம் தேதி வெளியிட்டது.
எம்.பி.பி.எஸ்., 'சீட்' கிடைத்தும் நெசவு தொழிலாளி மகள் தவிப்பு
சென்னை அரசு மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., 'சீட்' கிடைத்தும்,
கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் செலுத்த முடியாமல், நெசவுத்
தொழிலாளியின் மகள் தவிக்கிறார். சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அடுத்த,
நரியம்பட்டியை சேர்ந்த நெசவுத் தொழிலாளி முருகேசன் மகள் கவிதா. இவர், 6ம்
வகுப்பிலிருந்து, 10ம் வகுப்பு வரை, ஜலகண்டாபுரம் அரசு பள்ளியில்
படித்தார். 10ம் வகுப்பு தேர்வில், 480 மதிப்பெண் பெற்றார்.இதனால்,
மேட்டூரிலுள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பை இலவசமாக
வழங்கியது.
இன்ஜி., கல்லூரியில் எது 'டாப்?' வெளியானது 'ரேங்க்' முறை
பொறியியல்
கல்லுாரிகளின் செயல்பாடு அடிப்படையில், அவற்றை தரம் பிரித்து, மோசமாகச்
செயல்படும் கல்லுாரிகளை தர வரிசைப்படுத்துவதற்கான வரைவு பட்டியலை, தேசிய
அங்கீகார வாரியமான, என்.பி.ஏ., வெளியிட்டுள்ளது.பொறியியல் கல்லுாரிகளில்,
ஆராய்ச்சி படிப்பு முடித்தவர்கள் மட்டுமே பேராசிரியர்களாக நியமிக்கப்பட
வேண்டும்; ஆனால், முதுநிலை பட்டம் முடித்தவர்கள், பேராசிரியர்களாக
நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், கல்வித் தரம், தேர்ச்சி விகிதம்
பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
பிரிட்டானியா பிஸ்கட்களுக்கு நடுவில் செத்துக் கிடந்த ஒரு பல்லி: அதிர்ச்சியில் உறையும் பொதுமக்கள்
இதை கண்டு
அதிர்ச்சியுற்ற அவர் பெற்றோரிடம் கூற அந்த மாணவியின் பெற்றோர்
பிரிட்டானியா நிறுவனத்தின் சென்னைப் பிரிவைத் தொடர்பு கொண்டபோது,
இதுகுறித்து கருத்துக் கூற அவர்கள் மறுத்துவிட்டனர். இதையடுத்து மாவட்ட
ஆட்சியரிடம் புகார் கூற அந்த மாணவியின் பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.
தற்காலிக பணியிடங்கள் : ஏழு மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆலோசனை
கல்வித் துறையில் தற்காலிக பணியிடங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி
தொடர்பாக, ஏழு மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆலோசனை, மதுரையில் நேற்று முன்
தினம் நடந்தது. மதுரை முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி வரவேற்றார்.
இணை இயக்குனர் (என்.எஸ்.எஸ்.,) பொன்னையா தலைமை வகித்து, கணக்கெடுக்கும் பணி
குறித்து விளக்கினார்.
குறைந்த ரத்த அழுத்தம் மாரடைப்பைத் தடுக்கும்: ஆய்வு வெளியீடு
கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த கொழுப்பு இதயத்துக்கு நல்லது என நம்பப்பட்டுவந்தது. அது சமீபத்தில் ஊர்ஜிதம் ஆனதைப் போல, குறைந்த ரத்த அழுத்தமும் இதயப் பிரச்சனைகளிலிருந்து தடுக்கும் என தற்போதைய ஆய்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது.
வினாத்தாள் கட்டணம் என்ற பெயரில் அரசு பள்ளிகளில் கட்டாய வசூல்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், வினாத்தாள் செலவாகமாணவர்களிடம்,
குறிப்பிட்ட தொகை கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது; ரசீதும் வழங்குவதில்லை என,
பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். தேர்வுக்கான 'வினாத்தாள் கட்டணம்' என்ற
வாய்மொழி உத்தரவின்படி, கட்டாய வசூல் வேட்டை நடத்துவதாக பெற்றோர்
குமுறுகின்றனர்.
கல்வித்துறை தூக்கம்: மாணவர்கள் தவிப்பு.
திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற, கிராம பகுதி மாணவர்களுக்கு,
கடந்தஇரண்டு ஆண்டுகளாக, கல்வி உதவித் தொகை வழங்கவில்லை. இந்த ஆண்டு, தேர்வு
முடிவுகளையும் முறையாக வெளியிடாததால், மத்திய அரசின் திட்டம் கிடப்புக்கு
போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தேசிய புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது போட்டி: அரசு பள்ளி மாணவர் உட்பட 3 பேர் தேர்வு
டெல்லியில் நடைபெறவுள்ள தேசிய அளவில் பள்ளி மாணவர்களுக்கான புத்தாக்க
அறிவியல் ஆய்வு விருது போட்டிக்கு, விருதுநகர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப் பள்ளி மாணவர் உட்பட 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.