Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிழைப்புக்கு அரசு பள்ளி; படிப்புக்கு மெட்ரிக் பள்ளி?

         அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் எத்தனை பேர் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்துள்ளனர் என்பதற்கான புள்ளி விவரம்:

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்: என்ஜினீயர்கள் நியமனத்திற்கு நேர்காணல் 22–ந் தேதி தொடங்குகிறது

           என்ஜினீயர்களின் நியமனத்திற்கு நேர்காணல் 22–ந் தேதி தொடங்குகிறது என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இன்ஜினியர், அரசு வழக்கறிஞர் பணி: டி.என்.பி.எஸ்.சி., முக்கிய அறிவிப்பு

         இன்ஜினியர் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர் பட்டியல், மற்றும் அரசு உதவி வழக்கறிஞர் தேர்வில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டுள்ள விண்ணப்ப தாரர் பட்டியல் ஆகியவற்றை, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) வெளியிட்டு உள்ளது.

வரிச்சலுகைகள் அறிவிக்கப்படுமா? இன்று மத்திய பட்ஜெட் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்கிறார்:

         பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார்.இதில், வருமான வரி விலக்கு வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ராணுவத் துறை உள்பட பல்வேறு முக்கிய துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு முக்கியத்துவம் தரப்படும் எனத் தெரிகிறது.
 

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. பட்ஜெட் தாக்கல்:

           2014-15-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த பிப்ரவரி 13-ந் தேதி தாக்கல் செய்தார். இது இந்த ஆட்சியில் 4-வதாக தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டாகும்.அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் சில நாட்கள் நடந்தது. பாராளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் நிலையில், அந்த பட்ஜெட் கூட்டத்தொடரின், துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம், வாக்கெடுப்பு போன்ற தொடர் நிகழ்ச்சிகள், சட்டசபையில் ஒத்திவைக்கப்பட்டன.
 

TNPSC GROUP II 4;வது கட்டகலந்தாய்வுக்கு 632 பேர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

          தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்குரூப்;2 தேர்வை கடந்த 2012-ம்ஆண்டு நவம்பர் மாதம் நடத்தியது. இதில் அதிகமதிப்பெண் பெற்றவர்களுக்கு 3 கட்டகலந்தாய்வு நடத்தப்பட்டு 4;வது கட்டகலந்தாய்வுக்கு 632 பேர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

DSE & DEE - All CPS Account Details submit to DATA Center.

          அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் "அரசு பங்களிப்பு ஒய்வூதியத் திட்டம்" சம்பந்தமான பணிகள் அனைத்தும் தமிழக தகவல் தொகுப்பு மையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

ஆசிரியர் பயிற்றுநர்கள் மாறுதல் - உச்சநீதிமன்றத்தில் முறையிட சங்கம் முடிவு

         வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மாறுதல் சார்பான மேல்முறையீட்டு மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது, இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் முறையிட சங்கம் முடிவு

பள்ளிகளின் பெயர்களை மாற்ற பரிசீலனை: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

          தமிழகத்தில் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் போன்ற பெயர்களில் இயங்கும் பள்ளிகளின் பெயர்களை மாற்றம் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தொடக்கப்பள்ளிகளில் குறைகிறது மாணவர்கள் எண்ணிக்கை

           கடந்த ஏழு ஆண்டுகளில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் துவக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 48 குறைந்துள்ளது. இது கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கல்வி உதவித்தொகை: லட்சக்கணக்கில் மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு

           விசைத்தறியாளர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையில் லட்சக்கணக்கில் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியா முழுவதும் 44 விசைத்தறி சேவை மையங்கள் செயல்படுகிறது. மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் விசைத்தறி தொழிலாளர்களுக்கான குரூப் இன்சூரன்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 

பள்ளிகளில் முடங்கியது கணினி வழி கற்றல் திட்டம்

            நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை கம்ப்யூட்டர் திறனை வளர்க்க கணினி வழி கற்றல் முறைக்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்ட லேப் டாப் மற்றும் கம்ப்யூட்டர்களை இயக்க போதிய பயிற்சி இல்லாததால இத்திட்டம் முடங்கியுள்ளதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கல்விக்கடன் வழங்க மறுக்கும் வங்கிகள்: நடவடிக்கை எடுக்க மாணவர்கள் கோரிக்கை

            வங்கிகள் மாணவ மாணவிகளுக்கு கல்விக்கடன் கொடுக்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. மாணவ மாணவிகளின் நலன்கருதி மாவட்ட நிர்வாகம் உடனடியாக கல்விக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாழ்வில் சாதிக்கும் துடிப்பு இருக்கும் நபர்களுக்கு என்றுமே போரடிப்பதில்லை

            இன்றைய இளைஞர்கள் அதிகமாகப் பயன்படுத்தும் ஒரு வார்த்தை "போரடிக்கிறது" என்பதாக இருக்கிறது. எதுவும் அவர்களுக்கு சீக்கிரமே போரடித்துப் போகிறது. ஆரம்பத்தில் சுவாரசியமாக இருப்பதாக அவர்கள் நினைக்கும் விஷயங்கள்கூடக் காலப்போக்கில் போரடிக்கும் விஷயங்களாக மாறி விடுகிறது. சொல்லப் போனால் பழையவை எல்லாம் போரடித்துப் போகும் சமாச்சாரங்களாக மாறி விடுகிறது.
 

TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று(09.07.14) மேலும் பல அவமதிப்பு வழக்குகள்

           TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு தொடுத்த ஏராளமானோருக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில்ஐகோர்ட் உத்தரவை கல்வி செயலாளரும், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரும் அமல்படுத்தவில்லை. 
 

TNTET- ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் 10 நாளில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு - தினத்தந்தி செய்தி

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் 10 நாளில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டோர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் 10 நாட்களுக்குள் வெளியிட ஏற்பாடு செய்து வருகிறது.

மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் விடுப்பில் கைவைப்பு

பள்ளி வேலை நாட்களில் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு "ஆன் டியூட்டி" இன்றி தற்செயல் விடுப்பு நாளாக கணக்கிடப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

TNTET Relaxation regarding Supreme Court Order

         TNTET - 2013 ல் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நகல்.

TRB PG TAMIL வழக்குகள் இன்று (09.07.14) விசாரணை

         TRB PG TAMIL: சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மீண்டும் இன்று (09.07.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை


TRB,PG, TET மதுரையில் நீதியரசர் கே.கே சசிதரன் விசாரிப்பார்

       07.07.2014 திங்கள் முதல் TRB,PG, TET,மற்றும் service தொடர்பான வழக்குகள் ,புதிய வழக்குகளை, மதுரையில் நீதியரசர் கே.கே சசிதரன் அவர்கள் விசாரிப்பார்கள்

2014-15 CRC / BRC Tentative Training List

         அகஇ - 2014-15ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில் நடத்தவுள்ள தொடக்க / உயர்நிலை ஆசிரியர்களுக்கான தற்காலிக பயிற்சி அட்டவணை

02.11.2007க்கு முன்னர் அனுமதி இன்றி எம்.பில் - விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

           02.11.2007க்கு முன்னர் அனுமதி இன்றி எம்.பில் படிப்பில் சேர்ந்து 02.11.2007க்கு பின்னர் தேர்ச்சி பெற்ற முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்குபுதிய சிக்கலா???

ரோட்டோர குழந்தைகளுக்கு கைக்கு எட்டியக் கல்வி!

       மதுரையில் ரோட்டோரத்தில் பொம்மை தொழில் செய்யும் ராஜஸ்தானை சேர்ந்த குடும்பங்களின் 22 குழந்தைகளுக்கு, கல்வி கற்பிக்கும் பணி நேற்று துவங்கியது.

மாநகராட்சி பள்ளி ஆசிரியைக்குஅமெரிக்க நிறுவனத்தின் உயரிய விருது

          கற்பித்தலில் சிறந்து விளங்கியதற்காக, மாநகராட்சி பள்ளி ஆசிரியை ஒருவருக்கு, அமெரிக்க நிறுவனத்தின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.முதல் இந்தியர்இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பு:
 

பாரதியார் பல்கலை. எம்.எட். நுழைவுத் தேர்வு தேதி மாற்றம்?

            பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்விக் கூடத்தின் எம்.எட். நுழைவுத்தேர்வு தேதி ஜூலை 27-ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகளில் யோகா : சுப்ரீம் கோர்ட்டில் மனு

         பள்ளிகளில், யோகா கற்பிப்பதை கட்டாயமாக்க வேண்டும் எனக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.டில்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் சேத் என்பவரும், பத்மபூஷன் விருது பெற்ற, டாண்டன் என்பவரும், பள்ளிகளில், யோகா போதிப்பதை கட்டாயமாக்கும்படி உத்தரவிட வேண்டும் எனக்கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
 

வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணியில் விடுவிக்க கோரிக்கை

     வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணியிலிருந்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை விடுவிக்க வேண்டுமென தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: அரசுப்பள்ளி ஆசிரியர்கள் முழு நேரப் பணியாளர்களாக கல்விப் பணி ஆற்றி வருகின்றனர்.

தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது

         தமிழக சட்டப் பேரவை வியாழக்கிழமை (ஜூலை 10) கூடுகிறது. அரசுத் துறைகளுக்கு நிதி ஒதுக்க வகை செய்யும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் அன்றைய தினத்தில் இருந்து தொடங்குகிறது. ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை மொத்தம் 22 நாள்கள் கூட்டத் தொடர் நடைபெறும். இதை பேரவைத் தலைவர் பி.தனபால் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

'டல்' அடிக்குது ஆசிரியர் பயிற்சி 'கவுன்சிலிங்'! அனைத்து இடங்களும் நிரம்புமா

          மதுரையில் நடக்கும் ஆசிரியர் பட்டய பயிற்சி படிப்பு சேர்க்கைக்கான 'கவுன்சிலிங்', மாணவர்கள் அதிகம் பங்கேற்காததால் எதிர்பார்த்த நேரத்திற்கு முன்பே முடிந்து விடுகிறது. இப்படிப்பு மீது மாணவர்களுக்கு ஆர்வம் இல்லாததால் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களும் நிரம்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இரண்டாண்டு படிப்பாகிறது பி.எட்.,ஓராண்டு படிப்பு முடிவதால் மவுசு

           கல்வியியல் பட்டப்படிப்பு (பி.எட்.,) அடுத்த ஆண்டு முதல், இரண்டாண்டு படிப்பாக மாற்றப்படுவது உறுதியாகி உள்ளதால், நடப்பாண்டு, பி.எட்., படிப்பிற்கு கூடுதல் மவுசு ஏற்பட்டுள்ளது.ஆசிரியர் படிப்புகளில் ஒன்றான, பி.எட்., பட்டப்படிப்பு, ஓராண்டு படிப்பாக இருந்து வருகிறது. மத்திய அரசால், பள்ளி மாணவர்களின் கல்வி கற்கும் திறன், கல்வியால் பெற்ற அவர்களின் அறிவுத்திறன் ஆகியவை, நுண்ணிய ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில், தமிழக மாணவர்களின் அறிவுத்திறன் மிக குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.எனவே, கல்வி கற்பித்துத் தரும் ஆசிரியர்களின் தரத்தை உயர்த்துவதற்காக, பி.எட்., படிப்பை, அடுத்த ஆண்டு முதல், இரண்டு ஆண்டு படிப்பாக மாற்ற திட்டமிடப்பட்டது.

இந்த பலி போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

இந்த பலி போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா?
 
        பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 10 வருடங்களுக்கு முன்பு வரை 450 மதிப்பெண் பெறுவது சாதனையாக இருந்தது. ஆனால் தற்போதோ 490 மதிப்பெண் பெறுவது கூட பெரிய சாதனையாக மதிக்கப்படுவது இல்லை. 

        சமீப காலங்களில் பல மாவட்டங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதற்கே சிரமப்பட்ட மாணவர்கள் அல்ல. 480 மதிப்பெண்களுக்கும் மேல் பெற்ற மாணவர்கள் என்பது தான் இதில் ஆச்சரியம். பிறகு ஏன் தற்கொலை முயற்சி? மாநில அளவில் முதல் இடம் பிடிக்க வில்லை எனும் வருத்தமும், பிரபல பள்ளிகளில் 11 ஆம் வகுப்பில் நடத்தப்படும் கல்வி முறைக்கு பொருந்திப் போவதில் உள்ள சிக்கலும் தான் இவர்களை தற்கொலை முயற்சியில் ஈடுபட வைத்துள்ளது.

         மாணவர்களின் இந்த மனப்போக்கை மாற்ற நாம் முன் வைக்கும் சில யோசனைகள் -

  1. உடனடியாக 10 ஆம் வகுப்பில் மதிப்பெண் முறைக்கு பதிலாக CCE கிரேடு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
  2. மனப்பாடம் செய்து தேர்வில் கக்கும் முறையை ஒழித்து மாணவர்களின் புரிதல் திறனை சோதிக்கும் வகையில் வினாத்தாள் மதிப்பீடு இருக்க வேண்டும்.
  3. பள்ளிகளில் முன்னதாகவே நடைமுறையில் இருக்கும் ”புத்தக பூங்கொத்து” திட்டத்தினை வலுவூட்டி அவற்றில் இருந்து கேள்விகள் பொதுத் தேர்வில் கேட்கப்பட வேண்டும். உதாரணமாக 6 ஆம் வகுப்பு மாணவர்களின் தமிழ் புத்தகத்திலேயே ”Reference Books” என்ற தலைப்பில் பல புத்தகங்களின் பெயரை அச்சடித்து தர வேண்டும். குறிப்பிட்ட அத்தகைய புத்தகங்களை புத்தக பூங்கொத்து திட்டத்திற்காக மாணவர்கள் பார்வையிட ஏதுவாக உடனுக்குடன் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். இதே போல் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உட்பட அனைத்து பாடங்களிலும் முப்பருவத்திலும் பயில வேண்டிய நூலக புத்தங்களின் பட்டியலை வழங்கி மாணவர்கள் குறிப்பிட்ட புத்தகங்களை பள்ளி நூலகத்திலிருந்து தேடிப்படிக்க வாய்ப்பு வழங்க வேண்டும். இம் முறை முன்னதாகவே நடைமுறையில் இருந்தாலும் பெரிதாக வெற்றி பெற ஒவ்வொரு தேர்விலும் 25 மதிப்பெண்கள் இத்தகைய Referece நூல்களில் இருந்து கேட்கப்பட்டால் மட்டுமே மாணவர்களிடம் நூலக வாசிப்பு மற்றும் புரிந்து படித்தல், நல்ல கருத்துகளை தேடிப்படித்தல் ஆகிய குணங்கள் வளரும். படிப்படியாக இம்முறை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். (முன்னதாகவே இம்முறை சி.பி.எஸ.இ திட்டத்தில் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது)

         எங்கள் மாணவர்கள் அதிக படியான மன நெருக்குதலுக்கு உட்பட்டு புத்தி பேதலிக்கும் நிலைக்கு முந்தைய நிலையில் உள்ளனர். அதனால் தான் அவர்கள் வருடம் தோறும் விட்டில் பூச்சிகளாய் இறந்து வருகின்றனர். மவுலிவாக்கம் கட்டிட விபத்து போன்று 60 க்கும்  மேற்பட்ட உயிர்கள் பலியானாலோ அல்லது 90க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்த கும்பகோணம் பள்ளி தீ விபத்து போன்ற அசாதாரண எண்ணிக்கைக்கு மட்டும் அரசு உடனடியாக தீர்வு காணாமல் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெற்று வரும் எம் மாணவர்களின் தற்கொலை முயற்சியையும், உயிர் பலியையும் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இன்றைய கல்வி முறை மற்றும் மதிப்பீடு முறையில் உடனடியாக மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள நமது கருத்துக்கள் குறித்து கல்வியாளர்களுடன் விவாதித்து நல்லமுறையில், விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

கட்டுரை ஆக்கம் -

திரு. K. மோகன், பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலைபள்ளி, அச்சமங்கலம், வேலூர் மாவட்டம்.

இறங்க வேண்டிய இடம் வரும்போது பயணிகளை எஸ்.எம்.எஸ். அனுப்பி ரயில்வே எழுப்பும்!

      ரயிலில் பயணிக்கும் பயணிகள் தாங்கள் இறங்க வேண்டிய இடம் வரும்போது அவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அலர்ட் மெசேஜ் அனுப்பும் வசதியை ரயில்வே அமைச்சர் சதானந்த கெளடா அறிவித்துள்ளார். 
 

அரசுப் பள்ளி வேலை நாள் பட்டியல் வெளியீடு மொத்த கற்றல் கற்பித்தல் நாள் 186 ஆக உயர்வு!

       கடந்த கல்வி ஆண்டை காட்டிலும், நடப்பு கல்வி ஆண்டில், மொத்த வேலை நாட்களை அடிப்படையாக கொண்டு, மொத்த கற்றல், கற்பித்தல் நாள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு, 183 இருந்து, 186 நாட்களாக நிர்ணயம் செய்து, பள்ளி நாட்காட்டியை அரசு வெளியிட்டுள்ளது. 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive