தருமபுரி மாவட்டத்தில் 3 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 9 மாணவிகள்,
எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் தலா 499 மதிப்பெண்கள் பெற்று மாநில
அளவில் முதலிடத்தைப் பிடித்தனர்.
தமிழக
'நோட்ஸ்' தயாரிப்பு நிறுவனங்கள், மூலப்பொருட்களின் விலை உ-யர்வை காரணம்
காட்டி, நோட்ஸ்களின் விலையில், கடந்த மாதம், 25 சதவீதம் அதிகரித்த
நிலையில், நோட்ஸ்களுடன் 'சிடி'யும் வழங்குவதாக கூறி, மேலும், 15 சதவீத
விலையை உயர்த்தி உள்ளன.
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில், கேட்கப்பட்ட
தமிழ் வினாக்களில், ஏராளமான பிழைகள் இருந்தன. இதனால், தேர்வர்கள்
சிரமப்பட்டனர்.
இந்தியா போஸ்ட் என்று அழைக்கப்படும் இந்திய
தபால் துறை இந்தியாவில் வங்கிகளை திறக்க ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பம்
செய்திருந்தது நாம் அனைவரும் அறிந்ததே. இதற்கான உரிமத்தை நிதியமைச்சகம்
மறுத்தும், தற்போது ரிசர்வ் வங்கி வழங்க முடிவு செய்துள்ளது. இதனால்
இந்தியா தபால் துறை மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளது.
NEW HEALTH INSURANCE SCHEME FOR PENSIONERS (INCLUDING SPOUSE)/ FAMILY PENSIONERS, 2014
2014ம் ஆண்டின் பொதுத்தேர்வு முடிவுகளில், கணிதப் பாடத்தில் சென்டம் எண்ணிக்கை குறைந்துள்ளது.
10th (SSLC ) Result Direct Links
10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடம்: கடைசி இடத்தில் திருவண்ணாமலை.
தமிழ் அல்லாத பிற மொழிப்
பாடங்களை படித்தவர்களில் 3 பேர் 500-க்கு 500 முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மதுரை டி.வி.எஸ்.
மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜி.துர்கா தேவி (சமஸ்கிருதம்).
பொன்னேரி, வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி ஜி.ஹேமவர்ஷினி (பிரென்சு) மற்றும் கோவை ஜி.ஆர்.ஜி.எம்.
மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.வி.கிருஷ்ணமூர்த்தி (பிரென்சு)
ஆகியோர் முழு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
* 19 பேர் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்
*125 பேர் 498 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த 19 பேரில் 10பேர் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்தாண்டு பத்தாம் வகுப்பு தேர்வில், மொத்தமாக
அனைத்து பாடங்களிலும் சேர்த்து, 1 லட்சத்து 15 ஆயிரத்து 728 சென்டம்
பெறப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு இது அதிகபட்ச சாதனையாகும்.
எந்தெந்த பாடங்களில் எத்தனை மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்
என்பதை இங்கே காணலாம்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று
காலை வெளியானது. 499 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தை 19 பேர்
பிடித்துள்ளனர். இதில் 18 பேர் மாணவிகள், ஒருவர் மட்டுமே மாணவர் என்பது
குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு
தேர்வு முடிவுகளில், மொத்தம் 19 பேர் 499 பெற்று, மாநில முதலிடம்
பெற்றுள்ளர். இது ஒரு புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 23) காலை 10 மணிக்கு
வெளியிடப்பட உள்ளன. மாணவர்கள் தேர்வு முடிவுகளை இணையதளங்கள் மூலமாகவும்,
எஸ்.எம்.எஸ்.மூலமாகவும் அறிந்துகொள்ளலாம். அதேபோல், தாங்கள்
பயின்றபள்ளிகளிலும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஜூன் மாதம் 16-ந்தேதி காலை கிராம
நிர்வாக அலுவலர் பதவிக்கு எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.
TET (ஆசிரியர் தகுதி தேர்வு) சான்றிதழ் வாங்காத தேர்வர்கள், தங்களது
விவரங்களை, ஜூன், 7ம் தேதிக்குள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம்
தெரிவிக்க வேண்டும்' என, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) அறிவித்து
உள்ளது.
நீதித்துறை பணியிடத்திற்கான எழுத்துத்தேர்வு முடிவு இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
பிரதமராகப் பொறுப்பேற்கும் நரேந்திர மோடிக்கு பாரதகுடியரசு முன்னாள் தலைவர்
அப்துல் கலாம் தொலைபேசியில்வாழ்த்து தெரிவித்தார். அப்போது அதனைப்
பொறுமையாகக் கேட்டுக் கொண்ட மோடி, அதனைத் தாம் நிறைவேற்றுவதாக உறுதி
அளித்தார். ''உங்கள் தலைமையில் இந்தியா அமைதி, வளம், வளர்ச்சியைப்பெற்று
சாதனை படைக்க வாழ்த்துகிறேன்'' என்று கூறிய அப்துல் கலாம்,புதிதாக
அமையவிருக்கும் பா.ஜ.க. அரசு எந்தெந்ததிட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க
வேண்டும் என்றும் பட்டியலிட்டார்.
கோடை
விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை திறக்கும் தேதியை ஒத்தி வைக்க வேண்டும் என்று
தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அரசு கோரிக்கை வைத்துள்ளது.
ஆனால், குறிப்பிட்ட நாளில் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்
கல்வித்துறை தெரிவித்துள்ளது. தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள்
சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் நந்தகுமார் கூறியதாவது: கோடை
விடுமுறைக்கு பிறகு ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு
அறிவித்துள்ளது. தனியார் பள்ளிகளை பொறுத்தவரை மாணவர் சேர்க்கை நடக்க
வேண்டியுள்ளது.
மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் தேசியஇளந்திரு விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த 8 சிறுவர்கள்தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர்
மாவட்டத்தில், அரசு உயர்நிலைப்பள்ளிகளை, மேல்நிலைப்பள்ளிகளாக தரம்
உயர்த்த, பட்டியல் தயாரிக்கும் பணியில், கல்வித்துறை அதிகாரிகள் மும்முரமாக
உள்ளனர்.
தேர்வு
முடிவுகளால், மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவர்கள், பெற்றோர், '104'
மருத்துவ உதவிக்கு தொடர்பு கொண்டால், தேவையான ஆலோசனைகள் கிடைக்கும்.பத்தாம்
வகுப்பு தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. எதிர்பார்த்த மதிப்பெண்
கிடைக்காவிட்டாலோ, தேர்ச்சி பெறாவிட்டாலோ, மாணவர்கள், மன உளைச்சலுக்கு
ஆளாகி, தவறான முடிவு எடுப்பது வழக்கமாக உள்ளது.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வந்தபோதும், இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தன.
நடுநிலைப்
பள்ளித் தலைமையாசிரியர் பணியிடத்திலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்
பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு உதவி
தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில்
உள்ள, 570 பொறியியல் கல்லுாரிகளின் கல்வி செயல்பாடுகளை, தேர்ச்சி சதவீத
அடிப்படையில் வெளியிட, அண்ணா பல்கலை, ஏற்பாடு செய்துள்ளது. 2011 முதல்,
2013 வரையிலான, மூன்று ஆண்டு தேர்ச்சி விவரம் வெளியிடப்படும் என,
எதிர்பார்க்கப்படுகிறது.சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட
பொதுநல மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி (பொறுப்பு) அக்னி ஹோத்ரி, நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய, 'முதல் பெஞ்ச்', நேற்று முன்தினம், அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
சிகரெட்
மற்றும் புகையிலை பொருட்கள் உபயோகிப்பவர்களுக்கு வேலை வழங்குவது இல்லை என
ராஜஸ்தான் அரசின் மின் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. சிகரெட் மற்றும்
புகையிலை பொருட்கள் பயன்படுத்துபவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டாம் என
மாநில அளவிலான புகையிலை கட்டுப்பாட்டு குழு ராஜஸ்தான் அரசுக்கு கடந்த
2012ல் பரிந்துரை செய்தது. தற்போது இந்த பரிந்துரையை அமல்படுத்த ராஜஸ்தான்
மின் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இது தொடர்பான உத்தரவு விரைவில்
வெளியிடப்படவுள்ளது. அரசு வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் சிகெரெட் பிடிக்க
மாட்டேன், புகையிலை பொருட்கள் எதையும் பயன்படுத்தமாட்டேன் என உறுதிமொழி
அளிக்க வேண்டும். ராஜஸ்தான் மின் நிறுவனங்களின் இந்த முடிவை, ஜெய்ப்பூரில்
உள்ள இனயா பவுன்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் வரவேற்றுள்ளது.
தமிழ்நாட்டுப்
பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில் ரூ.260 கோடியில்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகப் பை,
காலணிகள் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட உள்ளன.
அரசுப்
பள்ளிகளில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக ஒரு லட்சம்
உயர் கல்வி வழிகாட்டி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
கல்வி
உரிமை சட்டத்தின் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இலவச கல்வி ஒதுக்கீடு
பெறுவதில் பல்வேறு இடர்பாடுகள் உள்ளதால், சுயநிதி பள்ளி நிர்வாகத்தினரும்,
பெற்றோர்களும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
என்ஜினீயரிங்
படிப்பில் சேருவதை விட கலை அறிவியல் படிப்பில் சேர மாணவ–மாணவிகள் ஆர்வம்;
ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்களுக்கு உடனடி வேலை
பத்தாம்
வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், தங்கள் பிள்ளைகள்
எவ்வளவு மார்க் எடுப்பார்களோ? அவர்களை எந்தப்பள்ளியில் பிளஸ் 2 சேர்க்க
போகிறோ மோ? என கணக்குகள் போட்ட படியேஇருப்பர் பெற்றோர். சமீபத்தில் வெளியான
பிளஸ் 2 முடிவுகளை ஒப்பிடும் போது 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு களும் 90
விழுக்காடுகளுக்கு மேல் தேர்ச்சியிருக்குமென ஊகிக்க முடிகிறது.
பெற்றோர்களைப் போலவே இந்த முடிவு களை எதிர்பார்த்து நாமக்கல் வாழ் கல்விச்சேவகர்களும், தங்களின் கல்லாவை கணிசமாக நிரப்ப தயாராகி வருகிறார்கள்.
தொடக்கக்
கல்வி - ஊராட்சி / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகள்
01.09.2013ல் உள்ள மாணவர்கள் எண்ணிக்கையின்படி உபரி இடை நிலை மற்றும்
பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட நிர்ணயம், பணி நிரவல் 24.05.2014 முதல்
26.05.2014 மேற்கொள்ள இயக்குனர் உத்தரவு
Airtel, Aircel, Vodafone, Docomo போன்ற
அனைத்து வினியோகஸ்தகர்களும் Internet Package விலையை அதிகப்படுத்தி
இருப்பது நாம் எதிர்பார்த்திடாத ஒன்று
TNPSC: HIGH COURT EXAM Result Released