பள்ளிகள் மீதான கட்டண புகார்களை விசாரிக்க, 32 மாவட்டங்களிலும்,
முதன்மைக் கல்வி அதிகாரிகள் தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு,
ஒவ்வொரு மாதத்திலும், முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமை கூடி, பள்ளிகள்
மீது வரும் புகார் குறித்து, விசாரணை நடத்தி, சம்பந்தபட்ட துறைகளுக்கு,
பரிந்துரை அறிக்கையை அனுப்பும்.
சிறுபான்மை மொழிப்பாடங்களில் தேர்வுபெற்ற பட்டதாரி ஆசிரியர் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவிப்பு:பட்டதாரி, சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கு நடந்த சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில், தேர்வு பெற்ற, 36 பேரின் பெயர் பட்டியல், டி.ஆர்.பி., அலுவலக, அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.
"குரூப்-2 தேர்வு முடிவு, மிக விரைவில் வெளியிடப்படும்; இதற்கான
நேர்காணல், 22ம் தேதி முதல், தேர்வாணையத்தில் நடக்கும்" என,
டி.என்.பி.எஸ்.சி., தலைவர், நடராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில் அடிப்படை வசதிகள்,
ஆசிரியர், மாணவர்கள் விகிதம் குறித்து கணக்கெடுக்க, பள்ளிக் கல்வித் துறை
உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும், 6 முதல்
பிளஸ் 2 வரை உள்ள அரசு பள்ளிகளில், முதன்மை கல்வி அலுவலரின் ஆலோசனையின்
பேரில், மாவட்ட கல்வி அலுவலர்கள், நேர்முக உதவியாளர்கள், உள்ளிட்ட
அதிகாரிகளின் கீழ் பல்வேறு குழுக்கள் அமைக்க வேண்டும்.
கட்டாயக் கல்வி சட்டம் காரணமாக பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கான
நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளதால், சீட் வழங்குவதற்கு, தனியார்
பள்ளி நிர்வாகங்கள், ஏகப்பட்ட கெடுபிடிகளை விதிக்க திட்டமிட்டுள்ளன.
இதனால், அட்மிஷன் எளிதில் கிடைக்குமா என்பது, கேள்விக்குறியாக உள்ளது.
இலவச மற்றும் கட்டாயக் கல்வி
சட்டம் அமலாவதற்கு முன்வரை, தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., அல்லது முதல்
வகுப்பு சேர்க்கைக்கு, நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. வசதியான
குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் என்றில்லாமல், அனைத்து தரப்பு
குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளும், நுழைவுத் தேர்வில் பங்கேற்றன.
தமிழ் வழி ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தாவரவியல் பாடத்திற்கான,
முதுகலை ஆசிரியர் பட்டியல் வெளியாவதில், தொடர்ந்து, இழுபறி ஏற்பட்டுள்ளது.
போட்டித் தேர்வு அடிப்படையில்,
தேர்வு பெற்ற முதுகலை ஆசிரியர் 2,300 பேர், கடந்த டிசம்பரில், பணி நியமன
உத்தரவுகளை பெற்றனர். இவர்கள், பணியில் சேர்ந்து, இரண்டு மாதம், சம்பளமும்
பெற்றுவிட்டனர். ஆனால், இவர்களுடன் தேர்வெழுதிய தாவரவியல் பாட
தேர்வர்களுக்கு, இதுவரை, இறுதிப்பட்டியல் வெளியிடப்படவில்லை.
தமிழகத்தில், அடுத்த கல்வியாண்டில் பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள்
மாற்றப்படுகின்றன. இதுதொடர்பாக பெற்றோர், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள்,
கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கும் கருத்துக் கேட்பு
கூட்டங்களை நடத்தி, அறிக்கை சமர்பிக்கும்படி, பள்ளிக்கல்வித் துறை
உத்தரவிட்டுள்ளது.
"மரபணு அறிவியலை புறக்கணிக்கும் நாடுகள், வளர்ச்சியில் பின்தங்க நேரிடும்" என, நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் மேரி லேன் பேசினார்.
புதுச்சேரி பல்கலைக்கழக இயற்பியல்
துறை சார்பில், "பொருளிலிருந்து உயிர், அதற்கு காரணம் வேதியியலா" என்ற
தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு, பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்தது.
டி.எஸ்.பி., - ஆர்.டி.ஓ., உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள, 25
பணியிடங்களை நிரப்ப, 16ம் தேதி, குரூப்-1, முதல்நிலைத் தேர்வு நடக்கிறது.
மிக குறைந்த காலி இடங்கள் என்ற போதும், இந்த தேர்வுக்கு, எப்போதும் இல்லாத
அளவிற்கு, 1.26 லட்சம் பேர், போட்டி போடுகின்றனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மேல்நிலைப் பள்ளிகளுக்கு,
டி.ஆர்.பி., மூலம் தேர்வு செய்யப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு,
20ம் தேதி, சென்னையில் கலந்தாய்வு நடக்கிறது.
சீனாவில், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகே பொழுதுபோக்கு மையங்கள் அமைக்க, அந்நாட்டு அரசு, தடை விதித்திருக்கிறது.
சீனாவில், பொழுதுபோக்கு மையங்கள்
அமைப்பதில், அந்நாட்டு கலாச்சார அமைச்சகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி, பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் இருக்கும் இடங்களில் இருந்து,
பொழுதுபோக்கு மையங்கள் நீண்ட தொலைவில் அமைக்கப்பட வேண்டும்.
கல்பாக்கம் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், முதல் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பம், வினியோகம் துவங்கியது.
கல்பாக்கத்தில், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், சென்னை அணுமின்
நிலையம், பாபா அணு ஆராய்ச்சி மையம், பாவினி அணுமின் திட்ட நிறுவனம் உட்பட,
அணுசக்தி தொடர்பான, பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
"கண்டபடி, தேவையற்றதை எல்லாம் படிக்காமல், தேவையானதை, தேர்வில் எந்த
மாதிரியான கேள்விகள் வரும் என்பதை நன்றாக புரிந்துகொண்டு, அதற்கேற்ப
படித்தால், கண்டிப்பாக போட்டித் தேர்வுகளில் சாதிக்க முடியும்,&'&'
என, குரூப்-1 தேர்வில், முதலிடம் பெற்ற, மதுராந்தகி கூறினார்.
பள்ளித் தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில்
பொதுத்தேர்வினர் மட்டுமின்றி அனைத்து தரப்பு மாணவ, மாணவிகளும் அதிக
மதிப்பெண் பெற எளிய வழிமுறைகளை விளக்குகிறார் கோபாலாபுரம் டி.ஏ.வி.,
பள்ளியின் முன்னாள் முதல்வரும், பாவை பள்ளிக் குழுமத்தின் இயக்குநருமான
சதிஷ்:
மத்திய, மாநில அரசுகள் தங்களது
பள்ளி பாடத்திட்டத்தில் சி.சி.இ., (தொடர் மதிப்பீட்டு முறை) பின்பற்றி
வருவது வரவேற்கத்தக்கது. மாணவர்களின் மன அழுத்தத்தை இம்முறை மாற்றிவிடும்.
தர்மபுரி மாவட்டத்தில், 100 அரசு தொடக்கப் பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பெற்றோர்கள் மத்தியில் ஆங்கில வழி கல்வி மீது மோகம் ஏற்பட்டதால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு, ஆண்டு சரிந்து வருகிறது.
தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் மாதந்தோறும்
சம்பளம் பெறுவதில் சிரமம் நிலவுகிறது. பல ஆண்டுகளாக காலியாக இருந்த
கம்ப்யூட்டர், ஓவியம், உடற்கல்வி, இசை உட்பட பணியிடங்களுக்கு, மாதம்
ரூ.5000 சம்பளம் அடிப்படையில் 15 ஆயிரம் பேரை பகுதிநேர ஆசிரியர்களாக சில மாதங்களுக்கு முன் அரசு நியமித்தது.
கவுன்சில் ஆப் ஆர்கிடெக்சர் என்ற நிறுவனமானது, ஆர்கிடெக்டுகளின்
பதிவேட்டைப் பராமரிப்பதோடு, இத்துறை தொடர்பான கல்வி மற்றும் தொழிலை,
இந்தியாவில் முறைப்படுத்துகிறது. ஒருவர் ஆர்கிடெக்டாக தொழில்புரிய
வேண்டுமெனில், இந்த கவுன்சிலில் பதிவுசெய்ய வேண்டும்.
இதுவரை உருது மொழிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்த, வட மாநில
முஸ்லிம்களின் முக்கியமான, தருல் உலூம் தியோபந்த் வக்ப் அமைப்பு, உத்தர
பிரதேசத்தில், ஆங்கில கல்வி முறை பள்ளி துவக்க அனுமதி கோரியுள்ளது.
"தன்னாட்சி கல்லூரிகளும், அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒரே நேரத்தில்
தேர்வு முடிவுகளை வெளியிட்டால் மட்டுமே, ஒற்றை சாளர முறையில், மாணவர்கள்
குழப்பமின்றி விண்ணப்பிக்க முடியும். இதுகுறித்து, தமிழ்நாடு உயர்கல்வி
மன்றம் விரைந்து முடிவெடுக்க வேண்டும்" என, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்
வேண்டுகோள் விடுத்துள்ளது.
அரசு நிதி உதவி பெரும் பள்ளிகளில் தாளாளரின் முடிவே இறுதியானது. உரிய கல்வி தகுதி மற்றும் பனி அனுபவம் இருப்பின் மாவட்ட கல்வி அலுவலர் அதனை ஏற்பளிக்க வேண்டும். - பள்ளி கல்வி இயக்குனர்.
RTI மூலமாக பெறப்பட்ட தகவலை நமக்கு ஈமெயிலில் அனுப்பி வைத்த திரு.கமல் கண்ணன், சென்னை அவர்களுக்கு நன்றி.!
ஒரு குறிப்பிட்ட துறை என்றில்லை. அனைத்திற்குமே, பிரசன்டேஷன் மற்றும்
கேள்வி-பதில் திறன்கள் ஆகியவை பிரதான அம்சங்களாகிவிட்டன. ஒருவரின் பணி
வெற்றிக்கு, பிரசன்டேஷன் திறனும், கேள்வி-பதில்களை எதிர்கொள்ளும் திறன்
ஆகியவை தீர்மானிக்கின்றன என்றால் அதில் மிகையில்லை.
பிளஸ் 2 மாணவர்களுக்கு எழுத்து தேர்வுகள் மார்ச் 1ல் துவங்குகிறது.
முன்னதாக, அறிவியல், கணக்கு பதிவியல் உள்ளிட்ட பிரிவுகளுக்கான செய்முறை
தேர்வு பிப்.,1 ல் துவங்கியது. தற்போது நடக்கும் செய்முறை தேர்வில்,
இயற்பியல் பாடத்தில் அளவீடுகளை குறிக்கவும், கம்ப்யூட்டர் அறிவியல்
பாடத்திற்கும் மின்சாரம் அவசியம்.
"தமிழகத்தில் உள்ள, அனைத்து அரசு பள்ளிகளிலும், கட்டாய கல்வி
சட்டத்தில் உள்ளபடி, அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்" என,
கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவின் மறைந்த பிரபல தொழிலதிபர் ஜே.என்.டாடாவின் எண்ணத்தில் உதித்ததுதான் இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் எனப்படும் ஐஐஎஸ்சி.
கடந்த 1896ம் ஆண்டே இந்நிறுவனத்தை
துவங்குவதற்கான அடிப்படைகள் உருவாகிவிட்டாலும், முழுமையாக
செயல்படுவதற்குரிய அரசின் சட்டம் 1909ம் ஆண்டுதான் வெளியானது. ஆனால்,
1904ம் ஆண்டே, ஜே.என்.டாடா இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்குவங்கத்தில், கல்லூரி மாணவர் பேரவை தேர்தல் தொடர்பான பிரச்னையில்,
திரிணமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் மாணவர்களுக்கு இடையே, நேற்று பயங்கர
மோதல் வெடித்தது.