Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

எஸ்பிஐ வட்டி குறைப்பு

          பாரத ஸ்டேட் வங்கி அடிப்படை கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.15% குறைத்துள்ளது.9.85 சதவிகிதத்தில் இருந்து 9.7 சதவிகிதமாக வட்டி குறைக்கப்பட்டுள்ளது.
 

தேர்வுப்பட்டியல் வெளியீடு

       162 உரிமையியல் நீதிபதிகளுக்கான தேர்வுப்பட்டியலை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.தேர்வுப்பட்டியலை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.உரிமையியல் நீதிபதிகளுக்கான எழுத்துத்தேர்வை கடந்த நவம்பரில் 9,337 பேர் எழுதினர்.சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வுக்குப் பின் தேர்வானோர்பட்டியல் இணையதளத்தில் வெளியீடு.

ஆண்டாய்வு,பள்ளிகள் பார்வை சார்ந்து தொடக்க கல்வி இயக்குனரின் அறிவுரைகள்

        தொடக்க கல்வி-உதவி தொடக்க கல்வி அலுவலர்/கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் ஆண்டாய்வு,பள்ளிகள் பார்வை சார்ந்து தொடக்க கல்வி இயக்குனரின் அறிவுரைகள்

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்: மொத்த இடங்களை மூன்று நாள்களில் இணையதளத்தில் வெளியிட ஆணை

        இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள 25 சதவீத இடங்களில், பல்வேறு கல்வி நிறுவனங்களில் உள்ள மொத்த இடங்கள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அதன் இணையதளத்தில் மூன்று நாள்களுக்குள் வெளியிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியோர் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம்: தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

        பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியோர் மதிப்பெண் சான்றிதழ்களை தாங்களே பதிவிறக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தேர்வுகள் இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
 

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு இணைய வழி கலந்தாய்வு தேதி அறிவிப்பு

        தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு ஒற்றைச் சாளர முறை மாணவர் சேர்க்கைக்கு இணையவழி மூலம் கலந்தாய்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
 

'மேகி நூடுல்ஸ்' பாதுகாப்பற்றது!

          பன்னாட்டு நிறுவனமான, 'நெஸ்லே இந்தியா'வின் பிரபல தயாரிப்பான, 'மேகி நுாடுல்ஸ்'சில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக அலுமினியம் கலந்து உள்ளது என, டில்லி உணவு தரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

நர்சிங் கல்லூரிகளில் ஆய்வு: அரசு உத்தரவு

        தமிழகத்தில் தனியார் நர்சிங் கல்லுாரிகளின் தரத்தை ஆய்வு செய்து அறிக்கை வழங்க, சுகாதார துறை இணை இயக்குனர்களுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு, சுகாதார துறை மாவட்ட இணை இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
 

மாணவர்களை தேடி ஆசிரியர்கள் நடைபயணம்:அரசு பள்ளி சேர்க்கைக்கு புது திட்டம்

        அரசுப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, பள்ளி செல்லா குழந்தைகளை அழைத்து வர, மாணவர்களை தேடிச் செல்லும் நடைப் பயணத்தை, பள்ளிக்கல்வித் துறை துவங்கி உள்ளது.தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மீண்டும் திறக்கப் பட்டுள்ளன. பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் புதிய உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.

மின் கட்டணம் இனி 'ஈசி'

       மின் கணக்கீடு எடுத்த 20 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தும் முறை இப்போது உள்ளது. இதில் நுகர்வோரின் சிரமத்தை குறைக்க 'முன் வைப்பு தொகை' மூலம் மின்கட்டணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
 

Tamilnadu Lab Asst Exam 2015 - Key Answer

      ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான தற்காலிக கீ ஆன்சர்கள் இன்று (31.5.2015) தேர்வு முடிந்தவுடன் பிற்பகல் முதல் உடனுக்குடன் படிப்படியாக பாடசாலை வலைதளத்தில் வெளியிடப்படும். தொடர்ந்து இணைந்திருங்கள் பாடசாலையோடு!

 Key Answers

அரசு பள்ளியில் பிளஸ் 1 மாணவர்கள் 'அகதி'களான அவலம்! கலைப்பாட பிரிவுக்கு திடீர் 'மூடுவிழா'

         குறிச்சி அரசு பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாததால், கலைப்பாடப்பிரிவு நடப்பு கல்வியாண்டில் மூடப்பட்டுள்ளது. அப்பள்ளியில், பிளஸ் 1 படித்த மாணவர்கள், பிளஸ் 2 சேர முடியாமல் கண்ணீருடன் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மருத்துவம், பொறியியல் படிப்பில் சேர ஜூன் 5 வரை கால அவகாசம் நீட்டிப்பு-புதுச்சேரி அரசு

     மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் சேருவதற்கு ஜூன் 5-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 

பள்ளி மாணவர்களுக்கு இன்னும் ஒரு வாரத்தில் புதிய இலவச பஸ் பாஸ்: போக்குவரத்து துறை அறிவிப்பு

     பள்ளி மாணவர்களுக்கு ஒருவாரத்தில் புதிய பயண அட்டை வழங்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
 

தடையின்மைச் சான்று கோருதல் சார்பாக இயக்குனர் உத்தரவு

       தமிழ்நாடு அமைச்சுப் பணி - பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் உதவியாளர்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பெறும் தொகுதி-I மற்றும் தொகுதி-IIக்கான தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க, தேர்வெழுத மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பில் கலந்துகொள்ள அனுமதி, தடையின்மைச் சான்று கோருதல் சார்பாக இயக்குனர் உத்தரவு

ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சிலிங்கை வெளிப்படையாக நடத்த கோரிக்கை

       ‘ஆன்-லைன்’ முறையில், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதை தவிர்த்து, மாவட்ட அளவில், வெளிப்படையான கலந்தாய்வை நடத்த வேண்டும்’ என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டுதோறும், மே மாதத்தில், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவது வழக்கம்.

சொர்க்கமே என்றாலும் அரசுப்பள்ளி போல வருமா!! அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு!



ஏழை எளிய மக்களின் கல்வி தரத்தை உயர்த்தும் நோக்கத்தோடும், அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோர்களை ஊக்கப்படுத்தும் முயற்சியிலும் தமிழ் ஆர்வலர்கள், கல்வியாளர்கள் களம் இறங்கியுள்ளனர். 

அடிப்படை வசதியில்லா அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை திணிப்பதா? ராமதாஸ் கண்டனம்


பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் இதுவரை ஆங்கில வழிக் கல்வி  அறிமுகப்படுத்தப்படாத அரசு பள்ளிகளில் நடப்புக் கல்வியாண்டில் ஆங்கில வழிப் பாடப்பிரிவுகளை உடனடியாகத் தொடங்கும்படி தலைமை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. தொலைநோக்கில்லாத, தாய்மொழி வழிக்கல்வி வாய்ப்பை பறித்து மாணவர்களின் சிந்தனைத் திறனை மழுங்கடிக்கும் இச்செயல் கண்டிக்கத்தக்கது.

"கொள்ளை' போகும் கூகுள் கணக்குகள்: பாதுகாப்பது எப்படி?

       தற்போது கூகுளின் பல செயலிகளும், வலைதளங்களும் "ஹாக்' செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. ஒருவரின் கூகுள் கணக்கை ஹாக் செய்யும் முயற்சியில் இறங்குபவர்கள், மற்றவர்களின் "லாக் இன்' விவரங்களை, அவற்றை உபயோகிக்கும் மற்றொரு கம்ப்யூட்டரிலிருந்தோ அல்லது செயலியில் இருந்தோ திருடி விடுகிறார்கள். 

மாணவர்களின் மகத்தான கண்டுபிடிப்பு !!!

        ‘ரயில் இப்போது மாம்பலம் ஸ்டேஷனில் நிற்கிறது’ என நவீன ரயில் பெட்டிகளில் எல்.இல்.டி திரை சொல்கிறது. ஆனால் ரயிலுக்குள் இருக்கும்  பயணிகளுக்குத்தானே இது பயன்படும்? சைதாப்பேட்டை ஸ்டேஷனில் நிற்கும் ஒரு பயணிக்கு தான் ஏறவேண்டிய ரயில் இப்போது மாம்பலம் ஸ்டேஷனில்  நிற்கிறது... இன்னும் 2 நிமிடத்தில் வந்துவிடும் என்பது தெரியுமா? 

வெளிநாட்டுக் கல்வி மாய மான் வேட்டையா?

           நடுத்தரக் குடும்பத்திலேயே, ‘என் பையன் உக்ரைன்ல படிக்கிறான்’, ‘ரஷ்யாவுல படிக்கிறான்’ என்று சொல்லும் அளவுக்கு வெளிநாட்டுக் கல்வி எளிமையாகி விட்டது. ‘50% மதிப்பெண் போதும். உலக ரேங்கிங் கல்லூரியில் குறைந்த செலவில், பகுதிநேர வேலை, இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளோடு படிக்கலாம். முடிந்ததும் லட்சங்களில் மாதச் சம்பளம். குடியுரிமையும் வாங்கலாம்’ என்றெல்லாம் விளம்பரங்கள்் மயக்குகின்றன. ஆண்டுக்கு ஆண்டு வெளிநாடு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்கிறது. இந்தக் கல்வியாண்டில் தமிழகத்திலிருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளிநாடு் செல்ல இருக்கிறார்கள். 

கோடை விடுமுறையில் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு 1 மாத ஊதியம் 'கட்'

         கோடை விடுமுறையால், 15 ஆயிரம் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு, ஒரு மாத ஊதியம் கிடைக்கவில்லை. இதனால், சிறப்பாசிரியர்கள் பலர், பள்ளி திறந்த முதல் நாளிலேயே, கண்ணீரும், கவலையுமாக பணிக்கு வந்து சென்றனர்.

'சஸ்பெண்ட்' ஆசிரியர்களுக்கு மீண்டும் வேலை

         பிளஸ் 2 தேர்வின் போது, 'வாட்ஸ் அப்'பில் வினாத்தாள், 'லீக்' ஆன விவகாரத்தில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, இரண்டு பள்ளிக்கல்வி அலுவலர்கள் மற்றும், 'பிட்' பிரச்னையில் சிக்கிய ஐந்து ஆசிரியர்களின், சஸ்பெண்ட் உத்தரவு, திரும்பப் பெறப்பட்டுள்ளது; ஏழு பேரும் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளனர்.
 

அரசு புது மருத்துவ கல்லூரியில் 100 இடங்கள் தயார்

         தமிழக அரசு புதிதாக துவக்கியுள்ள, ஓமந்துாரார் தோட்ட அரசு மருத்துவக் கல்லுாரியில், மாணவர் சேர்க்கைக்கு, இந்திய மருத்துவக் கவுன்சிலான எம்.சி.ஐ., பரிந்துரைத்து உள்ளது. மத்திய அரசு அனுமதி, சில நாட்களில் கிடைக்கும் என்பதால், திட்டமிட்டபடி, 100 எம்.பி.பி.எஸ்., இடங்களில் மாணவர் சேர்க்கப்பட உள்ளனர்.

சமச்சீர் கல்வியில் படித்தவர்களுக்கு ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு கடினம்?

        அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வில், சமச்சீர் கல்வியில் படிக்காதவர்களுக்கு, வினாத்தாள் கடினமாக இருந்தது. வினாத்தாளில், ’பேஸ்புக்’கை உருவாக்கியவர் யார் என்ற கேள்வியும் இடம் பெற்றிருந்தது.


காலி பணியிடங்கள் கவுன்சிலிங்: பள்ளிக்கல்வித்துறை முடிவு

           இடமாறுதல் கவுன்சிலிங்கிற்கு முன் பணி நிரவல் மூலம் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஆன்லைன் இடமாறுதல் கவுன்சிலிங் விரைவில் நடக்க உள்ளது. 
 

விண்டோஸ் 10 இயங்கு தளம் வரும் ஜூலை மாதம் 29ல் அறிமுகம்

         மைக்ரோசாப்டின் விண்டோஸ்-10 அடுத்த மாதம் அறிமுகம்: விண்டோஸ்-7, 8 வைத்திருப்பவர்கள் இலவசமாக அப்டேட் செய்யலாம்

 

திரிசங்கு நிலையில் ஆசிரியர் கல்வி: ஓராண்டு பி.எட். படிப்பு தொடருமா? - காத்திருக்கும் கல்வியியல் கல்லூரிகள்

          ஆசிரியர் கல்வி (பி.எட்.) படிப்பை 2 ஆண்டுகளாக உயர்த்தும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் சூழலில், ஓராண்டு பி.எட். படிப்பு இந்த ஆண்டு தொடருமா என்று கல்வியியல் கல்லூரிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன  

ஏடிஎம்களில் பணம் எடுப்பவர்களுக்கு இனி ரசீது வழங்கப்படாது: எச்டிஎஃப்சி வங்கி அறிவிப்பு

         எச்டிஎஃப்சி வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுப்பவர்களுக்கு இனி காகித வடிவிலான ரசீது வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக வாடிக்கையாளரின் செல்ஃபோன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் மட்டும் தகவல் தெரிவிக்கப்படும்.

425 ஆரம்ப பள்ளி ஆசிரியர் நியமனம்: போட்டித் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

             புதுச்சேரி மற்றும் காரைக்கால் அரசு ஆரம்ப பள்ளிகளில் காலியாக உள்ள 425 ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு திங்கள் (ஜூன் 1) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2,500 பள்ளி கட்டடங்களை இடிக்க உத்தரவு!

        தமிழகத்தில், இடிந்து விழும் நிலையில், மாணவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள, 2,500 தொடக்கப் பள்ளிக் கட்டடங்களை, உடனே இடித்துத் தள்ளும்படி, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive