தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ்., விண்ணப்பங்களைப் பெற வியாழக்கிழமை (மே 28) கடைசி நாளாகும்.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
சமச்சீர், சி.பி.எஸ்.இ., 'கட் - ஆப்' கணக்கீடு எப்படி?அண்ணா, கால்நடை மருத்துவ பல்கலை அதிகாரிகள் தகவல்
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
வந்துள்ள நிலையில், இன்ஜினியரிங், கால்நடை மருத்துவ படிப்புகளில், பல்வேறு
முறைகளில், 'கட் - ஆப்' மதிப்பெண் கணக்கிடப்படுகிறது.
இலவச மாணவர் சேர்க்கை நிதியை பெற்றோருக்கு தரலாம்! தனியார் பள்ளிகள் புது முடிவு
கட்டாயக் கல்வி சட்ட மாணவர் சேர்க்கை
நிதியை, சமையல் காஸ் மானியம் போல், பெற்றோரிடமே ஒப்படைக்கவும்,
சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும் மானியம் தரவும், தனியார் பள்ளிகள் கோரிக்கை
விடுத்துள்ளன.
விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் விபரங்களை வெளியிட்ட பல்கலை
காரைக்குடி அழகப்பா பல்கலையில் விடைத்தாள்
மதிப்பீடு செய்யும் ஆசிரியர்கள் பெயர், மதிப்பீடு செய்யப்படும் நாள்
மற்றும் இடம் ஆகியவை பல்கலை கழக அதிகாரபூர்வ இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திட்டமிட்டபடி திறப்பு; பள்ளிக்கல்வித்துறை தகவல்-தினத்தந்தி
தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 1-ந்தேதி திட்டமிட்டபடி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
உஷாரய்யா உஷாரு...
அதிகாலையிலே எழுந்து, சமையல் வேலைகளை எல்லாம்
பார்த்து, கணவரை அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டு, நாளிதழை பிரித்து அவள்
படிக்கத் தொடங்கியபோது செல்போன் சினுங்கியது.
பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்க தமிழக அரசு முடிவு: ஜூன் 8–ந்தேதி பள்ளிகள் திறப்பு என விரைவில் அறிவிப்பு?-MALAIMALAR ONLINE
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரலாறு காணாத வகையில் கோடை வெயில் வறுத்து
எடுத்து வருகிறது. தொடர்ந்து அனல் காற்று வீசுவதால் மக்கள் வீடுகளிலேயே
முடங்கி கிடக்கின்றனர். இரு சக்கர வாகனங்களிலும், பஸ்களிலும் போக முடியாத
அளவிற்கு வெயில் சுட்டெரித்து வருகிறது.
சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கு ஜூன் 27-ல் இடைத்தேர்தல்
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்கு ஜூன் 27-ம் தேதி
இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.ஜூன் 3-ம் தேதி வேட்பு மனுத் தாக்கல்
செய்யப்படுகிறது. ஜூன் 10-ம் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாளாக
அறிவிக்கப்பட்டுள்ளது.ஜூன் 11-ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது.
Tamilnadu Lab Assistant Exam Study Materials Collection.
Tamilnadu Lab Assistant Exam Study Materials Collection.
26.5.2015
FLASH NEWS: திட்டமிட்டபடி ஜுன் 1-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என சென்னையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபீதா தகவல் - Dinakaran News Paper
திட்டமிட்டபடி ஜுன் 1-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என சென்னையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபீதா தகவல் தெரிவித்துள்ளார். கொளுத்தும் வெயிலால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் மாற்றமில்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஆய்வக உதவியாளர் தேர்வு நுழைவு சீட்டு
TO DOWNLOAD HALL TICKET CLICK HERE...
அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக்கூட அனு மதிச்சீட்டு பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு தேர்வுத் துறை இயக்குநர் கே.தேவராஜன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பள்ளி ஆய்வக உதவியாளர் பணி தேர்வு மாதிரி வினா-விடை:K.K. தேவதாஸ்
பள்ளி ஆய்வக உதவியாளர் பணி தேர்வு மாதிரி வினா-விடை:K.K. தேவதாஸ் M.Sc., M.A., M.Phil., M.Ed., M.B.A.
அஞ்சல் துறையில் 932 பணிகள்
இந்திய அரசின்
தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சக்கத்தின் கீழ்
செயல்பட்டும் வரும் அஞ்சல் துறையின் உத்திரப் பிரதேச வட்டத்தில்
நிரப்பப்பட உள்ள 932 Postman, Mail Guard, Multi Tasking Staff போன்ற
பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சி.பி.எஸ்.இ. 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு: நாளை வெளியீடு
சி.பி.எஸ்.இ.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு புதன்கிழமை (மே 27) வெளியிடப்படும் என்று
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அறிவித்துள்ளது.
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில் 9 வகை கிரேடு மதிப்பெண்
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில், மாணவ, மாணவியருக்கு மதிப்பெண்களுடன், கிரேடு முறை என்ற மதிப்பெண் தர வரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வியாபாரிகளுக்கு பள்ளி பாடப்புத்தகம் கிடைக்குமா? தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் விளக்கம்
பள்ளிப்பாட புத்தகங்கள் விற்பனை செய்யும்
வியாபாரிகளுக்கு இந்த ஆண்டு, புத்தகம் விற்பனை செய்ய தமிழ்நாடு பாட நூல்
கழகம் புத்தகங்களை வழங்கவில்லை. இதனால் போட்டித்தேர்வு எழுதுவோர்,
தனித்தேர்வர்கள், டுட்டோரியல் முறையில் தேர்வு எழுதுவோர் கடும்
அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஆதார் எண் இல்லை என்றால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படாது: சந்தீப் சக்சேனா தகவல்
வாக்காளர் பட்டியலில் கூடுதல் விவரங்களை
இணைக்க ஆதார் எண் அவசியம் இல்லை என்றும், ஆதார் எண் இல்லை என்றால்
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படாது என்றும் தமிழக தலைமை
தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
"டிஸ்டோனியா' குறைபாடு காரணமாக நீண்ட நேரம் எழுத முடியாத நிலையிலும் சென்னை மாணவி சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வில் சாதித்துள்ளார்.
இவருக்கு "டிஸ்டோனியா' என்ற குறைபாடு காரணமாக இவரது விரல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இவரால் நீண்ட நேரம் எழுத முடியாது. இந்தக் குறைபாடு கண்டறியப்பட்டதால் கடந்த ஆண்டு இவரால் தேர்வு எழுத முடியவில்லை. இந்த ஆண்டு கூடுதல் நேரத்துடன் அவர் தேர்வு எழுதினார்.
ஆதங்கத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான பின்னர், தமிழகத்திலுள்ள ஊடகங்கள், இதழ்கள் போன்றவை தனியார் பள்ளிகள்தான் திறமை மிக்கவை, அவற்றில் படித்த மாணவர்கள்தான் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கிவருகின்றன.
பயன்கள் 01.06.2009 முதல் வழங்கிட கூடாது என இயக்குனர் உத்தரவு
பள்ளிக்கல்வி - மேல்நிலைக் கல்வி - தலைமையாசிரியர்களுக்கு 01.01.2006 முதல் 31.05.2009 வரை உள்ள கால கட்டங்களில் தேர்வுநிலை / சிறப்புநிலை பதவி உயர்வு பெறும் நிகழ்வுகளில், கணக்கிட்டு முன் தேதியிட்டு தேர்வு நிலை / சிறப்பு நிலை திருத்திய ஊதியக் குழு ஊதிய நிர்ணயத்திற்கு வழங்கலாம் எனவும், இப்பயன்கள் 01.06.2009 முதல் வழங்கிட கூடாது என இயக்குனர் உத்தரவு
500ஆசிரியர்பயிற்றுநர்கள் பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியர்களாகப் பணியிடமாறுதல் செய்யப்படவுள்ளனர்.
தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் கோரிக்கையினை ஏற்று 500ஆசிரியர்பயிற்றுநர்கள் பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியர்களாகப் பணியிடமாறுதல் செய்யப்படவுள்ளனர்.
கற்பித்தல் பணி மட்டும் செய்யவிடுவீர்
ஆசிரியர் பணியென்பது சமுதாயம் சார்ந்த அறப்
பணியாகும். அதற்கு அர்ப்பணிப்பு உணர்வும், பல்துறை சார்ந்த அறிவும்
இன்றியமையாதவை.