Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

FLASH NEWS: திட்டமிட்டபடி ஜுன் 1-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என சென்னையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபீதா தகவல் - Dinakaran News Paper

      திட்டமிட்டபடி ஜுன் 1-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என சென்னையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபீதா தகவல் தெரிவித்துள்ளார். கொளுத்தும் வெயிலால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் மாற்றமில்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

ஆய்வக உதவியாளர் தேர்வு நுழைவு சீட்டு

TO DOWNLOAD HALL TICKET CLICK HERE...

          அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக்கூட அனு மதிச்சீட்டு பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு தேர்வுத் துறை இயக்குநர் கே.தேவராஜன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பள்ளி ஆய்வக உதவியாளர் பணி தேர்வு மாதிரி வினா-விடை:K.K. தேவதாஸ்

பள்ளி ஆய்வக உதவியாளர் பணி தேர்வு மாதிரி வினா-விடை:K.K. தேவதாஸ் M.Sc., M.A., M.Phil., M.Ed., M.B.A.

அஞ்சல் துறையில் 932 பணிகள்

       இந்திய அரசின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சக்கத்தின் கீழ் செயல்பட்டும் வரும் அஞ்சல் துறையின் உத்திரப் பிரதேச வட்டத்தில்  நிரப்பப்பட உள்ள 932 Postman, Mail Guard, Multi Tasking Staff  போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சி.பி.எஸ்.இ. 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு: நாளை வெளியீடு

     சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு புதன்கிழமை (மே 27) வெளியிடப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அறிவித்துள்ளது.
 

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில் 9 வகை கிரேடு மதிப்பெண்

         சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில், மாணவ, மாணவியருக்கு மதிப்பெண்களுடன், கிரேடு முறை என்ற மதிப்பெண் தர வரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 

வியாபாரிகளுக்கு பள்ளி பாடப்புத்தகம் கிடைக்குமா? தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் விளக்கம்

           பள்ளிப்பாட புத்தகங்கள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு இந்த ஆண்டு, புத்தகம் விற்பனை செய்ய தமிழ்நாடு பாட நூல் கழகம் புத்தகங்களை வழங்கவில்லை. இதனால் போட்டித்தேர்வு எழுதுவோர், தனித்தேர்வர்கள், டுட்டோரியல் முறையில் தேர்வு எழுதுவோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பள்ளித் தலைமை ஆசிரியை மூளைச்சாவு: 6 உடலுறுப்புகள் தானம்

           மூளைச்சாவு அடைந்த மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியையின் 6 உடலுறுப்புகள் தானமளிக்கப்பட்டன.  சென்னை மேடவாக்கம் கங்கா நகரைச் சேர்ந்தவர் ஜீவரத்தினம் (56). இவர் சைதாப்பேட்டையில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.

ஆதார் எண் இல்லை என்றால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படாது: சந்தீப் சக்சேனா தகவல்

         வாக்காளர் பட்டியலில் கூடுதல் விவரங்களை இணைக்க ஆதார் எண் அவசியம் இல்லை என்றும், ஆதார் எண் இல்லை என்றால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படாது என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

"டிஸ்டோனியா' குறைபாடு காரணமாக நீண்ட நேரம் எழுத முடியாத நிலையிலும் சென்னை மாணவி சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வில் சாதித்துள்ளார்.

         மாற்றுத்திறனுடைய மாணவர்களில் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியைச் சேர்ந்த மாணவி விதி மகேஷ்வரி 500-க்கு 490 மதிப்பெண் பெற்று முதல் மதிப்பெண் பெற்றுள்ளார்.
        
இவருக்கு "டிஸ்டோனியா' என்ற குறைபாடு காரணமாக இவரது விரல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இவரால் நீண்ட நேரம் எழுத முடியாது. இந்தக் குறைபாடு கண்டறியப்பட்டதால் கடந்த ஆண்டு இவரால் தேர்வு எழுத முடியவில்லை. இந்த ஆண்டு கூடுதல் நேரத்துடன் அவர் தேர்வு எழுதினார்.

ஆதங்கத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

        பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான பின்னர், தமிழகத்திலுள்ள ஊடகங்கள், இதழ்கள் போன்றவை தனியார் பள்ளிகள்தான் திறமை மிக்கவை, அவற்றில் படித்த மாணவர்கள்தான் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கிவருகின்றன.

பொறியியல் கல்லூரி மாணவர் தேர்ச்சி விவரம் வெளியீடு: 19 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் தேர்ச்சி விகிதம்

       பொறியியல் கல்லூரிகளின் 2014-ஆம் ஆண்டு இரு பருவத் தேர்வுகளின் மாணவர் தேர்ச்சி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 19 கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் ஒற்றை இலக்கத்திலேயே இருப்பது தெரியவந்துள்ளது. 
 

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க 29-ம் தேதி கடைசி நாள்

            பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க 29-ம் தேதி கடைசி நாள் ஆகும். இதுவரை 65 ஆயிரம் பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்திருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பயன்கள் 01.06.2009 முதல் வழங்கிட கூடாது என இயக்குனர் உத்தரவு

         பள்ளிக்கல்வி - மேல்நிலைக் கல்வி - தலைமையாசிரியர்களுக்கு 01.01.2006 முதல் 31.05.2009 வரை உள்ள கால கட்டங்களில் தேர்வுநிலை / சிறப்புநிலை பதவி உயர்வு பெறும் நிகழ்வுகளில், கணக்கிட்டு முன் தேதியிட்டு தேர்வு நிலை / சிறப்பு நிலை திருத்திய ஊதியக் குழு ஊதிய நிர்ணயத்திற்கு வழங்கலாம் எனவும், இப்பயன்கள் 01.06.2009 முதல் வழங்கிட கூடாது என இயக்குனர் உத்தரவு

500ஆசிரியர்பயிற்றுநர்கள் பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியர்களாகப் பணியிடமாறுதல் செய்யப்படவுள்ளனர்.

          தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் கோரிக்கையினை ஏற்று 500ஆசிரியர்பயிற்றுநர்கள் பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியர்களாகப் பணியிடமாறுதல் செய்யப்படவுள்ளனர்.

கற்பித்தல் பணி மட்டும் செய்யவிடுவீர்

             ஆசிரியர் பணியென்பது சமுதாயம் சார்ந்த அறப் பணியாகும். அதற்கு அர்ப்பணிப்பு உணர்வும், பல்துறை சார்ந்த அறிவும் இன்றியமையாதவை. 
 

பி.எட்,எம்.எட் நாடு முழுதும் இரண்டாண்டு அமல்

          நாடு முழுவதும் பி.எட், எம்.எட். படிப்புகள் இரண்டாண்டுகளாக உயர்த்தப்பட்டு, நிகழாண்டு முதல் நடைமுறைக்குக் கொண்டு வரப்படுவதாக தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர் சந்தோஷ் பண்டா திங்கள்கிழமை கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

மாற்றுத்திறனாளி பணியிடம் விரைந்து நிரப்ப உத்தரவு

மாற்றுத்திறனாளி பணியிடம் விரைந்து நிரப்ப உத்தரவு
பொதுத் துறை மற்றும் அரசு துறைகளில், மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டின் கீழ், காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனப் பணிகளில், வகுப்பு வாரியான இடஒதுக்கீடு, பெண்களுக்கான இடஒதுக்கீடு, விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு உள்ளது போல், மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீடும் உள்ளது.

45 ஆயிரம் ஆசிரியர்களின் பிரச்னைக்கு தீர்வு - பள்ளிக்கல்வித் துறை தீவிரம்


தி.மு.., ஆட்சியில் பணி நிரந்தரம் செய்யப்பட்டாலும்பணி முறிவுஎன்ற
 பிரச்னையை சந்தித்து வந்த, 45 ஆயிரம் ஆசிரியர்களின்பிரச்னைக்கு தீர்வு 
ஏற்பட்டு உள்ளதுஜெயலலிதா முதல்வராகபதவியேற்றுள்ளதால்இதற்கான உத்தரவை பிறப்பிக்க,பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக பணியாற்றி வருகிறது.

அரசு கலைக் கல்லூரிகளில் இன்று கலந்தாய்வு : ஜூன் 1ல் திறக்க உத்தரவு

அரசு கலைக் கல்லூரிகளில் இன்று கலந்தாய்வு : ஜூன் 1ல் திறக்க உத்தரவு

அரசு கலை கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. 
மே 29-க்குள் முடித்து, ஜூன் ஒன்றாம் தேதி முதல் வகுப்புகளை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் மறு கூட்டல், உடனடி தேர்வு எழுதும் மாணவர்கள் இக்கல்லூரிகளில் சேர முடியாத நிலை உள்ளது.பிளஸ் 2 தேர்வு முடிவு மே 7-ம் தேதி வெளியானது.

சப் - இன்ஸ்பெக்டர் பதவிக்கான தேர்வு சட்டம், காவல் துறை கேள்விகள் அதிகம்

தமிழகம் முழுவதும், நேற்று நடந்த எஸ்.ஐ., தேர்வில், பெரும்பாலான கேள்விகள், சட்டம், காவல் துறை சம்பந்தப்பட்டதாக இருந்தன.

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 'ரிசல்ட்' இன்று வெளியீடு

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 'ரிசல்ட்' இன்று வெளியீடு



சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று பகல் 12:00 மணிக்கு வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், மாநிலப் பாடத்திட்டத்துக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி, 10ம் வகுப்பு முடித்தோருக்கு, பிளஸ் 1 சேர்க்கையும், பிளஸ் 2 முடித்தோருக்கு,  மருத்துவம், இன்ஜினியரிங், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான சேர்க்கை  நடவடிக்கைகளும் துவங்கியுள்ளன.

மாணவர் குறைந்துள்ள தொடக்க பள்ளிகளில் ஆட்குறைப்பு : ஆசிரியர் இடங்களை சரண் செய்ய கல்வித்துறை உத்தரவு

தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால்,ஆட்குறைப்பு நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.

கட்டாய கல்வியில் சிறுபான்மை பள்ளிகள் குளறுபடி : அந்தஸ்து பெறாத பள்ளிகளின் பட்டியல் தயாரிப்பு

சட்டப்பூர்வ சிறுபான்மை அந்தஸ்து பெறாமல் பல பள்ளிகள், கட்டாய கல்விச்சட்டத்தை பின்பற்றாமல் குளறுபடி செய்துள்ளன. பெற்றோரின் புகாரால், விதிமீறல் பள்ளிகள் பட்டியலை தயாரிக்கும் பணி துவங்கி உள்ளது.நலிந்த பிரிவுகள்மத்திய அரசின் கட்டாய கல்விச்சட்டப்படி, ஆறு முதல், 14 வயது வரை, நலிந்த பிரிவினர், 25 சதவீதம் பேருக்கு கட்டணமின்றி சேர்க்கை தர வேண்டும்; அதற்கான நிதியை மத்திய அரசு வழங்கும்.

SI Exam 2015 Answer Key

SI Exam 2015 Answer Key - Click Here For Download

Thanks to Sri Malar Academy, Harur

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க விரைவில் வருது...விருட்சுவல் கிளாஸ்

       அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, கற்றல் திறன், தேர்ச்சி விகிதத்தைஅதிகப்படுத்த தமிழக அரசு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளது. முதல் கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 25 அரசு பள்ளிகளில் ‘விருட்சுவல் கிளாஸ் ரூம்கள்’ அமைக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் ‘மாடர்ன்பள்ளியாக’ அரசு பள்ளிகள் செயல்பட உள்ளன.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive