Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் 06.05.2015 (புதன்கிழமை) அன்று தொடங்குகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 60 விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் நாளை (புதன்கிழமை)
தொடங்குகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 60 விற்பனை மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை மறுநாள் (7-ம்
தேதி) வெளியாகிறது. பள்ளிப் படிப்பை முடிக்கும் பெரும்பாலான மாணவ,மாணவிகள் பொறியியல் படிப்பில் சேரவே
ஆசைப்படுகின்றனர்.
மாதிரிப் பள்ளிகள் திட்டத்தை கைவிடுகிறது மத்திய அரசு:
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பள்ளிகள்
உள்பட நாடு முழுவதும் 3,453 மாதிரிப் பள்ளிகள் அமைக்கும் திட்டத்தைக் கைவிட
மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
ஆறு நாட்களாக முடங்கியதுவேலைவாய்ப்பக 'வெப்சைட்'
வேலைவாய்ப்புத்துறை 'வெப்சைட்' 6 நாட்களாக முடங்கியதால் பதிவுதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு வருகின்றனர்.
ஆய்வக உதவியாளர் பணி 5 லட்சம் பேர் விண்ணப்பம்
அரசு
பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க, நாளை கடைசி நாள். நேற்று
மாலை வரை, 5.25 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அரசு உயர்நிலை மற்றும்
மேல்நிலைப்பள்ளி ஆய்வகங்களில் உதவியாளர் பணிக்கான, 4,362 பணியிடங்களை
நிரப்ப, பள்ளிக்கல்வித் துறை சார்பில் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் சேர்க்கை கல்லூரிகளுக்கு கட்டுப்பாடு
தமிழக
அரசு, அரசு உதவி, சிறுபான்மை மற்றும் தனியார் சுயநிதி கலை மற்றும்
அறிவியல் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை தொடர்பாக, 35 புதிய விதி முறைகளை
உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பி.எல்., படிப்பு எல்.எல்.பி.,யாக மாற்றம்8ம் தேதி முதல் விண்ணப்ப வினியோகம்
அம்பேத்கர்
சட்டப் பல்கலைக் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில், மே, 8ம் தேதி முதல்
விண்ணப்பம் வழங்கப்படுகிறது. வரும் கல்வியாண்டு முதல், பி.எல்., பட்டப்
படிப்பு எல்.எல்.பி.,யாக
மாற்றப்படுகிறது.
பி.இ., - பி.டெக்., விண்ணப்பம்வினியோகம் நாளை துவக்கம்
தமிழகத்தில்,
பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில், பொறியியல்
படிப்புக்கான விண்ணப்பம், நாளை முதல், 60 மையங்களில் வினியோகம்
செய்யப்படுகிறது. அண்ணா பல்கலையில், 20 சிறப்பு கவுன்டர்கள்
அமைக்கப்பட்டுள்ளன.பி.இ., - பி.டெக்., படிப்புக்கு விண்ணப்பம்
வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை, அண்ணா பல்கலை நேற்று
வெளியிட்டது. தமிழகம் முழுவதும், மொத்தம், 60 மையங்களில் விண்ணப்பங்கள்
வழங்கப்படும்.
Latest Lab Asst Exam Study Material Collection & Model Question Papers
4.5.2015
- Lab Asst Study Material | Full Test Question Paper (TNTET & PGTRB Facebook Group) - Click Here
- Lab Asst Study Material | Model Question Paper Download - Click Here
- Lab Asst Study Material | Physics Study Material Download - Click Here
- Lab Asst Study Material | Important Questions Part 2 Download - Click Here
- Lab Asst Study Material | Important Questions Part 1 Download - Click Here
- Lab Asst Study Material | EVS Chemistry Material Download - Click Here
- Lab Assst Study Material | Science Chemistry Part 2 (Standard 9 to 12) - Click Here
- Tamilnadu School Education Department Lab Assistant Exam Study Material Science Chemistry Part 1 (Standard 9 to 12)- Click Here
முடிவு அறிவிக்கப்பட்ட பின் எஸ்.எஸ்.எல்.ஸி. சிறப்பு வகுப்புகள்
முடிவு அறிவிக்கப்பட்ட பின், எஸ்.எஸ்.எல்.ஸி., சிறப்பு வகுப்புகள் துவங்கி நடக்க உள்ளது.
வேலைவாய்ப்பு பதிவு அட்டைகளை மாணவர்களுக்கு தபாலில் அனுப்ப ஆலோசனை
பத்தாவது
மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான, வேலைவாய்ப்பு பதிவு அட்டைகளை, மாணவ,
மாணவியருக்கு தபாலில் அனுப்புவது குறித்து, பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை
நடத்தி வருகிறது.
விளையாட்டு விஷயத்திலும் கவனம் செலுத்துமா பள்ளி கல்வித்துறை?
கல்வி
அறிவுபெற்ற சிறந்த மாணவர்களை உருவாக்க பள்ளி வகுப்பறைகள் உள்ளது போன்று,
அந்த மாணவர்களை உடல் ரீதியாகவும்; உற்சாகமாகவும் இருக்க வைப்பது பள்ளிகளில்
உள்ள மைதானங்கள்தான்.
கலைக் கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்ப விநியோகம்
கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை (மே 4) முதல் தொடங்குகிறது.
கத்திரி வெயில் இன்று தொடக்கம்: 26 நாள் வாட்டி வதைக்கும்
அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி
வருகிற 29–ந்தேதி வரை 25 நாட்கள் நீடிக்கிறது. இந்த கால கட்டத்தில் வெயில்
வாட்டி வதைக்கும்.
'க்யூசெட்' நுழைவு தேர்வுவிண்ணப்பிக்க நாளை கடைசி
மத்திய பல்கலையில், மாணவர் சேர்க்கை பொது நுழைவுத் தேர்வான, 'க்யூசெட்'
தேர்வுக்கு விண்ணப்பம் அளிக்க, நாளை கடைசி நாள். பொது நுழைவுத் தேர்வு
ஜூன், 6, 7ம் தேதிகளில் நடக்கிறது. தமிழகம், கேரளா, ஜார்க்கண்ட், கர்நாடகா
உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படும், எட்டு மத்திய பல்கலை.,களுடன் இணைந்து,
இந்த நுழைவுத்தேர்வு நடக்கிறது.
பள்ளி மாணவியருக்கு விழிப்புணர்வு பயிற்சி
பள்ளி மாணவியருக்கு தற்கொலை தடுப்பு மற்றும் பாலியல் தொந்தரவுகளில் இருந்து
தங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம், கிண்டி மற்றும்
பரங்கிமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் சார்பாக நேற்று முன்தினம்
நடந்தது. தேர்வில் தோல்வி அடைந்தாலோ, மதிப்பெண் குறைந்தாலோ மனமுடைந்து
தற்கொலை செய்து கொள்வது தவறு.
விண்ணப்பம் விநியோகம் தொடங்கவில்லை : பொதுமாறுதல் கலந்தாய்வு தாமதம் பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம்
தமிழகத்தில்
ஆண்டுதோறும் ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு தொடர்பான அறிவிப்புகள்
ஏப்ரல் மாதம் வெளியாகும். மே மாதம் கலந்தாய்வுக்கான கால அட்டவணை
வகுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கும்.
சிறுநீரகக் கற்களை கரைப்பது எப்படி?
தமிழகத்தில்
வெயில் கொளுத்தி வருகிறது. வெயில் காலத்தில் ஏற்படும் நோய்களுள்
சிறுநீரகக் கற்கள் முக்கியமானவை. `உடலின் துப்புரவுத் தொழிலாளி’ என்று
அழைக்கப்படும் சிறுநீரகத்திலும், அதனுடன் அமைந்துள்ள சிறுநீரகக் குழாய்,
சிறுநீர்ப்பை, சிறுநீர்க் குழாய் ஆகியவற்றிலும் சிறுநீரகக் கற்கள் உருவாவது
வாடிக்கை.
ராணுவ மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்.
AFMC
என்று சுருக்கமாக அழைக்கப்படும் ராணுவ மருத்துவக் கல்லூரியில், இந்தக்
கல்வி ஆண்டுக்கான MBBS படிப்பில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கு
AIPMT 2015 என்ற நுழைவுத் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும்.
ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸில் ஆயிரம் படிப்புகள்...
என்ன
கோர்ஸ் படித்தாலும் இங்கே வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன. ஆனால், எந்த
நிறுவனத்தில் படிக்கிறோம் என்பதுதான் முக்கியம். தமிழ்நாட்டில்
பெரும்பாலான மாணவர்கள் கல்லூரிப் படிப்பை வீட்டுக்குப் பக்கத்தில்
இருக்கின்ற கல்லூரிகளிலேயே படித்து முடித்துவிடுகிறார்கள். வெளிவாய்ப்புகள்
பற்றிய தேடல் இல்லாமலே வாழ்க்கையை நகர்த்திவிட்டு நகரத்துக்கு வந்து
கஷ்டப்படுகிறார்கள்.
நீண்டகாலமாக அங்கீகாரத்தை புதுப்பிக்காத பள்ளிகள் மற்றும் பிளே ஸ்கூல்ஸ் மீதும் நடவடிக்கை
நடப்பு
கல்வியாண்டில், அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மூடப்பட்டுள்ளதை தொடர்ந்து,
நீண்டகாலமாக அங்கீகாரத்தை புதுப்பிக்காத பள்ளிகள் மற்றும் பிளே ஸ்கூல்ஸ்
மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி
எச்சரித்துள்ளார்.