ஒரே நாளில் வங்கி, 'குரூப் 2' தேர்வுகள்:சிக்கலில் பட்டதாரிகள்
தமிழகத்தில் ஜூன் 29 அன்று வங்கி மற்றும் டி.என்.பி.எஸ்.சி., 'குரூப்' 2
தேர்வு நடப்பதால், எந்த தேர்வை எழுதுவது எனத் தெரியாமல் பட்டதாரிகள்
தவிக்கின்றனர்.தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள 2800
உதவியாளர் பணிக்கு, டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் 2' எழுத்துத்தேர்வு, ஜூன்
29 காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.வங்கித் தேர்வு: பாரத ஸ்டேட்
வங்கிக்கு இந்திய அளவில், 1897 'புரபேஷனரி ஆபீசர்' பணியிடங்களுக்கான
எழுத்து தேர்வும், ஜூன் 29 காலை, பிற்பகலில் சென்னை உட்பட 14 நகரங்களில்
நடக்கிறது. ஒரே நாளில் வங்கி, 'குரூப் 2' தேர்வுகள் நடப்பதால் இரண்டிற்கும்
விண்ணப்பித்தவர்கள் எந்ததேர்விற்கு செல்வது என புரியாமல் தவிக்கின்றனர்.