சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, செப்.,
5ம் தேதி, "டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' வழங்கப்பட உள்ளது. இதற்கு,
வரும், 12ம் தேதிக்குள், ஆசிரியர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என, கல்வித்
துறை உத்தரவிட்டு உள்ளது.
இரைப்பைப் புற்றுநோய்க்கு, சர்வதேச அளவில், ஒரே
விதமான சிகிச்சை அளிப்பதற்குரிய வழிமுறைகளை வகுக்கும் நிபுணர் குழுவில்,
சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் சந்திரமோகன் இடம் பெற்று உள்ளார்.
"பட்டப்படிப்பு முடித்து, உயர்கல்விக்குச்
செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது," என,
காரைக்குடி அழகப்பா பல்கலை பதிவாளர் மாணிக்கவாசகம் பேசினார்.
2011 முதல் வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள்
என நிதிச் சேவையோடு தொடர்புடைய அனைத்து நிறுவனங்களும் தங்களது நிதி
மேலாண்மை மற்றும் செயல்பாடு குறித்த தகவல்களை பன்னாட்டு நிதிச் செய்தியாக்க வரையறைகளின் படியே தர வேண்டும் என இந்திய
சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் இன்ஸ்டிடியூட் நிறுவனம் நடைமுறைப்படுத்தியது.
எனவே இத்துறையில் சிறப்பான வாய்ப்புகள் உள்ளன.
அரசாங்க பள்ளிகளின் அழிவிற்கு காரணம் என்ன? மற்றும் தனியார் பள்ளிகளின் ஆக்கத்திற்கு காரணம் என்ன?
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்க
மற்றும் உயர் தொடக்கநிலை பள்ளி ஆசிரியர்களுக்கான, புத்தாக்கப்பயிற்சி
முகாம், நாமக்கல் அடுத்த புதுச்சத்திரம் வட்டார வளமையம் மற்றும்
தத்தாத்திரிபுரம் ஊராட்சி துவக்கப்பள்ளியில் நடந்தது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்க
மற்றும் உயர் தொடக்கநிலை பள்ளி ஆசிரியர்களுக்கான, புத்தாக்கப்பயிற்சி
முகாம், நாமக்கல் அடுத்த புதுச்சத்திரம் வட்டார வளமையம் மற்றும்
தத்தாத்திரிபுரம் ஊராட்சி துவக்கப்பள்ளியில் நடந்தது.
தாயனூர், அவலூர்பேட்டை பகுதியில் பள்ளியில் இடை நின்ற மாணவர்களை சேர்க்கும் பணி நடந்தது.
தமிழகத்தில், 2007 ஜூலைக்கு முன் அனுமதியின்றி
கட்டப்பட்ட கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்திக் கொள்ள, புதிய
அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது; இதில், கட்டமைப்பு மற்றும் அடிப்படை
வசதிகள் கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
பூதலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு போதிய
ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும்மென
வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு போதிய வகுப்பறைகள் இல்லாததால், மாணவர்களின்
கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் ஐம்பது அரசு பள்ளிகளில்,
ஆங்கில வழி கல்வி துவக்கப்பட்டுள்ள நிலையில், இப்பள்ளிகளில் குழந்தைகளை
சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மாநிலம் முழுவதும், 100 உயர்நிலைப் பள்ளிகள்,
மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. தரம் உயர்த்தப்பட்ட
பள்ளிகளின் விவரம், சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு
தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில்
மேற்படிப்பு மற்றும் அமெரிக்கா குறித்த, பல்வேறு சந்தேகங்களைப் போக்கும்
வகையில், தினமலர் வாசகர்களுக்கு, ஒவ்வொரு மாதமும், அமெரிக்க துணைத் தூதரக
அதிகாரிகள் பதிலளிக்கிறார்கள்.
மே 2013 மாதத்தின் மத்திய தொழிலாளர் துறை மூலம்
வெளியிட்ட இந்திய நுகர்வோர் குறியீட்டு எண் (AICPIN) அத்தியாவசிய
பொருட்கள் விலை ஏற்றத்தின் காரணமாக ஜனவரி 2013 மாதத்திலிருந்து மே 2013 வரை
8.97 புள்ளிகள் அதிகரித்து 88.97ஆக உள்ளது. அதேபோல் வருகிற ஜூன்
மாதத்திற்கான விலை ஏற்றத்தில் எந்த மாற்றமும் இல்லாததால் AICPIN புள்ளிகள்
10-ற்கும் அதிகமாக 90.00 கடக்க வாய்ப்புகள் உள்ளதால், ஜூலை
மாதத்திற்கான அகவிலைப்படி 10% ஆக உயரக்கூடும்
என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு
டி.என்.டி.இ.டி (TNTET -Tamil Nadu Teachers Eligibility Test) என்பது
இரண்டு தாள்களைக் கொண்டது. 3 மணி நேரம் கொண்ட இந்தத் தேர்வுகளை ஆசிரியர்
தேர்வு வாரியமான டி.ஆர்.பி (TRB-Teachers Recruitment Board) நடத்துகிறது.
இத்தேர்வு, இரண்டு தாள்களாக நடத்தப்படும்.
தமிழகம் முழுவதும் 100 உயர்நிலைப்பள்ளிகள்
மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. இதற்கான முதற்கட்ட பணிகள்
அரசு மேற்கொண்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் 10 க்கும் குறைவான
மாணவர்கள் படிக்கும் (சுமார் அல்லது ஏறத்தாழ எல்லாம் இல்லை) துல்லியமாக
1849 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. அவற்றில் பணிபுரிந்த ஆசிரியர்கள்
வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டு விட்டனர்.
தமிழகம் முழுவதும் உள்ள
பொறியியல் கல்லூரிகளில்
நடத்தப்படும் பொறியியல் இளநிலை பட்டப் படிப்புகளுக்கான
புதிய பாடத்
திட்டத்தை
சென்னை
அண்ணா பல்கலைக்கழகம்
வெளியிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில்,
தேர்வுத் துறை அதிகாரியின் கையெழுத்தை பெற முடியாமல் போராடிய மாணவர்,
நேற்று இயக்குனர் அலுவலகம் முன் நின்று கதறினார். இதையடுத்து, சான்றிதழில்,
அதிகாரி, கையெழுத்திட்டு கொடுத்தார்.
உடுமலை அருகே அரசுப்பள்ளி வளாகத்தில்,
மாணவர்களே அங்காடி அமைத்து நிர்வாக பணிகளையும் மேற்கொள்வது அனைவரையும்
வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
வேதியியலின் முக்கிய ஒரு உட்பிரிவாக விளங்குவது
ஆய்வக வேதியியல். இதன் மூலம் இயற்கையிலிருக்கும் வேதிப்பொருட்களை
ஆராய்ந்து, அதிலிருந்து தேவையான பொருட்களை பெற முடிவது இதன் சிறப்பு.
ஒரு செயலை செய்யும் போது, அதற்கான சூழல்
இல்லையெனில் அச்செயல் வெற்றி பெறாது. அதே போல படிக்கும் அறையும், ஒழுங்காக
இல்லையெனில் ஆர்வம் ஏற்படாது.
2013-14ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மான்யம் தொடக்கப்பள்ளிகளுக்கு
ரூ.5000/-, நடுநிலைப்பள்ளி -களுக்கு ரூ.12000/-, உயர்நிலை /
மேல்நிலைப்பள்ளி -களுக்கு ரூ.7000/- விடுவித்து அனைவருக்கும் கல்வி இயக்க
மாநில திட்ட இயக்குநர் உத்தரவு
Thanks to MR. Velu,
Vivekanadha Tution Centre,
Palakode,
Dharmapuri Dt.
2013-14ஆம்
கல்வியாண்டிற்கான பள்ளி மான்யம் தொடக்கப்பள்ளிகளுக்கு ரூ.5000/-,
நடுநிலைப்பள்ளி -களுக்கு ரூ.12000/-, உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி -களுக்கு
ரூ.7000/- விடுவித்து அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர்
உத்தரவு
அரசு நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும், 12
லட்சம் மாணவ, மாணவியரின், தனிப்பட்ட விளையாட்டுத் திறனை அறிவதற்காக,
அவர்களுக்கு, உடல் திறன் கண்டறியும் போட்டியை நடத்த, தொடக்க கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.
அரசு உரிய கட்டணம் செலுத்தாததால், தமிழகத்தில்
உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர்நிலை,
மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள பிராட்பேண்ட் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால்
இ,மெயில் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
படித்தவர்களுக்கு உண்டான பண்பிலும்
நடத்தையிலும் எந்த அளவுக்கு நாம் உயர்ந்திருக்கிறோம் என்று கேள்வி
எழுப்பினால், அதில் அடிப்படை நிலையை கூட நாம் அடையவில்லை என்பதே பதிலாக
இருக்கும். உண்மையில் சொல்லப் போனால், இப்போது இருப்பதை போல கடந்த
காலங்களில் கல்வியறிவு அதிகம் இல்லை.
தமிழக அரசின் நலத்திட்ட பொருட்கள் வினியோகம்
மற்றும் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்ய, பள்ளி
கல்வித்துறை இணை இயக்குனர்கள், பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றுள்ளனர்.
"நாட்டில் கல்வியறிவு உயர்ந்துள்ளது; எனினும்,
நம் கல்வி முறை குறிக்கோளை எட்டவில்லை; எனவே, கல்வி முறையை சீரமைக்க
வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஐ.ஐ.டி., மற்றும் ஐ.எஸ்.எம்., (தன்பாத்) கல்வி
நிறுவனங்களில் உள்ள, 9,900 இடங்களுக்கு, 14 ஆயிரம் பேர்
போட்டியிடுகின்றனர். ஐ.ஐ.டி., சென்னையில் மொத்தம், 838 இடங்கள் உள்ளன.
"ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்
மாணவர்கள், கல்லூரிகளில் எந்த கட்டணத்தையும் செலுத்த வேண்டாம்" என்ற
அரசாணையை அமல்படுத்துவதில், ஆதிதிராவிடர் நலத்துறை, புது நடைமுறையை
பின்பற்றுகிறது.