பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள 2200 புரொபேஷனரி அதிகாரி காலிப் பணியிடங்களில் சேர விரும்புவோர் 24-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
பிளஸ்-2 தேர்வு முடிவை வெளியிட தடை கோரி வழக்கு.
மதுரை, வேதியியல் பாடத்துக்கு கருணை மதிப்பெண் வழங்கக்கூடாது என்று
உத்தரவிட வேண்டும் என்றும், அதுவரை பிளஸ்-2 தேர்வு முடிவை வெளியிட தடை
விதிக்க வேண்டும் என்றும் தொடர்ந்த வழக்கில் அரசு தேர்வுத்துறை இயக்குனர்
பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
‘பூத் சிலிப்’ இன்று முதல் வினியோகம் வாக்குச்சாவடி அதிகாரி வீடு, வீடாக வந்து வழங்குவார்.
தமிழக சட்டசபைக்கு வருகிற 16-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.அனல் பறக்கும்
பிரசாரம்மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் 3,794 வேட்பாளர்கள்
போட்டியிடுகிறார்கள்.
உடம்பு எப்படி இருக்கிறது? - வாக்குச் சாவடி அலுவலர்களை சோதனை செய்ய புதியமுறை
தமிழக சட்டப்பேரவைத் தேர் தலை முன்னிட்டு
தமிழ்நாடு முழு வதும் வாக்குச்சாவடி அதிகாரி களுக்கு கடந்த மாதம் 24-ம்
தேதி பயிற்சி அளிக்கப்பட்டது.
கருணை மதிப்பெண்ணுக்கு எதிராக வழக்கு: பிளஸ் 2 தேர்வு முடிவுகளை நிறுத்திவைக்க உயர் நீதிமன்றம் மறுப்பு.
வேதியியல் பாடத்தில் இரு கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்குவதற்கு
எதிரான மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் விடுமுறை கால அமர்வு, பிளஸ் 2
பொதுத்தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்து விசாரணையை ஜூன்
மாதத்துக்கு ஒத்திவைத்தது.
பிளஸ் 2 தேர்வு முடிவு எப்போது?
பிளஸ் 2 தேர்வு முடிவு தேதி வெளியாவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இன்னும் வெளியிடப்படவில்லை.
மே 9-இல் எம்.பி.பி.எஸ். விண்ணப்ப விநியோகம் தொடங்குமா?
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான
விண்ணப்பம் திங்கள்கிழமை (மே 9) முதல் விநியோகிக்கப்பட உள்ளன.
746 பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க அனுமதிக்கக் கூடாது ஐகோர்ட்டில் வழக்கு.
விதிமுறைகளை பின்பற்றாத 746 பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்த
அனுமதிக்கக்கூடாது என்றும், அந்த பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கக்கூடாது
என்றும் தொடரப்பட்ட வழக்கிற்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு
நோட்டீசு அனுப்பியுள்ளது.
தபால் ஓட்டு அனுப்பும் பணி சென்னையில் துவக்கம்.
சென்னை மாவட்டத்தில் தேர்தல் பணி செய்ய உள்ள ஊழியர்களுக்கான, தபால் ஓட்டு
அனுப்பும் பணி நேற்று(மே 4) துவங்கியது.
ஓய்வூதியர்களுக்கு ஆதார் அட்டை சென்னையில் சிறப்பு ஏற்பாடு.
சென்னை ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தில், ஓய்வூதியர்கள் ஆதார் அட்டை பெற,
சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது' என, கருவூலம் மற்றும் கணக்கு துறை
இயக்குனர் முனியநாதன் தெரிவித்துள்ளார்.
10 ஆண்டுகளுக்கு பிறகு வானில் அரிய நிகழ்வு சூரியனை புதன் கோள் 9-ந்தேதி கடக்கிறது.
10 ஆண்டுகளுக்கு பிறகு சூரியனை புதன் கோள் கடக்கும் அரிய நிகழ்வு 9-ந்தேதி நடக்கிறது. இதனை வெறும் கண்ணில் பார்க்கக் கூடாது.
தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் பற்றி புகார் அளிக்கலாம்.
தேர்தல் தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள்
குறித்து புகார் தெரிவிக்கலாம் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி
தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் மே 16-ம் தேதியன்று
நடைபெற உள்ளது.
தேனா வங்கியில் காலிப்பணியிடம்: 13-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.
தேனா வங்கியில் உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களில் சேர விரும்புவோர் 13-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
TS EAMCET 2016 பொது நுழைவுத்தேர்வு தேதி மாற்றம்.
ஹைதராபாத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தால்
நடத்தப்படும் TS EAMCET 2016 நுழைவுத்தேர்வு தேதி
மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
செல்போன் கதிர்வீச்சால் மனிதர்களுக்கு எந்த தீங்கும் கிடையாது ஆய்வில் தெரிய வந்து இருப்பதாக மத்திய மந்திரி தகவல்.
செல்போன் கதிர்வீச்சால் மனிதர்களுக்கு எந்த தீங்கும் கிடையாது என்று
ஆய்வில் தெரிய வந்து இருப்பதாக மத்திய மந்திரி கூறினார்.
தேர்தல் பயிற்சியில் பங்கேற்காத 2700 ஊழியர்களுக்கு நோட்டீஸ்: மறுபயிற்சிக்கு சிறப்பு ஏற்பாடு.
சென்னை மாவட்டத்தில் முதல்கட்ட தேர்தல் பயிற்சியில் பங்கேற்காத 2 ஆயிரத்து 707 ஊழியர்களுக்கு, மாவட்ட தேர்தல் நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியில் 2200 காலிப்பணியிடம்: 24-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள 2200 புரொபேஷனரி அதிகாரி காலிப் பணியிடங்களில் சேர விரும்புவோர் 24-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
10-ம் வகுப்பு ஐசிஎஸ்இ, 12-ம் வகுப்பு ஐஎஸ்சி தேர்வு முடிவுகள்: மே 6-ல் வெளியாகிறது...!!
10-ம் வகுப்பு ஐசிஎஸ்இ, 12-ம் வகுப்பு ஐஎஸ்சி தேர்வு முடிவுகள்: மே 6-ல் வெளியாகிறது...!!
இன்று முதல் 'அக்னி நட்சத்திரம்' ஆரம்பம்
'அக்னி நட்சத்திரம் என்ற கடும் கோடை காலம், இன்று துவங்கி மே, 28ம்
தேதி முடிகிறது. தமிழகம் முழுவதும் இயல்பை விட, 3 டிகிரி, 'செல்சியஸ்'
வெப்பம் அதிகரிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
"கூடுதல் கட்டணம்: ரூ.300 கோடியை 535 பள்ளிகள் திருப்பி அளிக்க வேண்டும்'
தில்லியில் 535 பள்ளிகள் மாணவர்களிடம் கூடுதலாக வசூலித்த கல்விக் கட்டணம்
ரூ.300 கோடியை திருப்பி அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற உத்தரவின்
பேரில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு பரிந்துரைத்துள்ளது.
அகவிலைப்படிவீதம், தனி உயர்வு - ஆணைகள்
G.O.No.130 Dt: May 02, 2016 படிகள் - பழைய ஊதிய விகித அகவிலைப்படி - 01.01.2016 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படிவீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
வாட்ஸ்அப்-க்கு தடைகோரி உச்ச நீதிமன்றத்தில் மனு!
வாட்ஸ்அப்-க்கு தடை விதிக்கக்கோரி, கதிர் யாதவ் என்பவர் உச்ச
நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
EMIS பதிவு செய்வதில் சிக்கல்கள்: அரசு பள்ளி ஆசிரியர்கள் கடும் அவதி.
கல்வி மேலாண்மை தொகுப்பில், மாணவர்களின் விவரங்களை பதிவு செய்வதில்,
பல்வேறு சிக்கல்கள் உள்ள நிலையில், அவசர அவசரமாக அவற்றை செய்து முடிக்க
உத்தரவிட்டுள்ளதால், ஆசிரியர்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்ப விநியோகம்
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம்
திங்கள்கிழமை முதல் தொடங்குகிறது.
தனியார், மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு இன்று முதல் விண்ணப்பம.
தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு இடங்களுக்கு
இன்று முதல் வரும் 9ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
முதுகலை, எம்பில் படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு.
சென்னை பல்கலைக்கழகத்தின் முதுகலை, எம்பில் மற்றும் டிப்ளமா, சான்றிதழ்
படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ்-2 தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட பெற்றோர், ஆசிரியர்கள் கோரிக்கை.
உயர் கல்விக்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி தொடங்கியதையடுத்து, பிளஸ்-2
பொதுத் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என பெற்றோர்களும்,
ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுவாக ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல்
25-ஆம் தேதிக்குள் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி
அறிவிக்கப்பட்டு விடும்.
"பார்வையற்றோர் யுபிஎஸ்சி தேர்வு எழுத உதவியாளரை பயன்படுத்தலாம்!'
பார்வையற்றோர்கள், உடல் இயக்கக் குறைபாடுள்ளவர்கள், மூளை முடக்குவாதத்தால்
பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் உதவியாளரின் துணைக் கொண்டு மத்தியத்
தேர்வாணையத் தேர்வுகளில் பங்கேற்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எம்.பி.ஏ., சுற்றுலா படிப்பு விண்ணப்பம் வரவேற்பு.
மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தன்னாட்சி பெற்ற சுற்றுலா
மற்றும் பயண மேலாண்மை நிறுவனத்தில், 2016 - 17ம் ஆண்டு மாணவர்
சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னைப் பல்கலை: தொலைநிலை கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு.
சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில்வழங்கப்படும் அனைத்துப்
படிப்புகளிலும் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் மே 15-ம் தேதி வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.